Sunday 31 March 2024

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய நபித்தோழர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி (ஸல்) அவர்கள் பாராட்டிய  நபித்தோழர்கள்

                                  (1)

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை இறுதி தூதராக தேர்ந்தெடுத்ததற்கு முன்னரே அவர்களின் குணம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டி கூறும் அளவிற்கு தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவே நபிகள் நாயகம் அவர்களுக்கு வியாபாரத்தில் இருந்த விசுவாசம், நியாயமான கட்டமைப்பு, வாக்குறுதியில் நேர்மை என அனைத்தும் பார்த்து தான் மணமுடித்து கொண்டார்கள். அதேப் போன்று நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்த பல நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். அந்த இனிமையான தருணங்களை பார்போம்..

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அனைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர் (ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும், அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : புகாரி-3294 

அபூஉபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே!, நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-3744 

நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்த நம்பிக்கையாளர் அபூஉபைதா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்’ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல் : புகாரி-3745 


தனியார் கல்விக் கூடங்களில் சேர்ந்து படிக்க - ஒர் அரிய வாய்ப்பு.,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தனியார் கல்விக் கூடங்களில் சேர்ந்து படிக்க    வசதியற்றவர்கள்...  
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும்...   

ஒர் அரிய வாய்ப்பு., 

தேவையுள்ளவர்கள் முயற்சிகள் செய்யலாம். 
அரசு உதவிகளையும் பெறலாம்.

அல்லாஹ் போதுமானவன்

Thursday 28 March 2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

தொழிலாளி குடும்பத்துக்கு அரசு வேலையும் நிவாரணமும் தமிழக அரசு அளிக்க வேண்டும்..

மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோரிக்கை....


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகமாக கூட்டமாக இருக்கும் இடத்தில் அபாயகரமாக தாறுமாறாக பேருந்தை ஓட்டி வந்ததன் விளைவாக...

 தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற தொழிலாளி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்...

இந்நிகழ்வுஅந்தப் பகுதியில் மிகுந்த பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது மிகுந்த ஏழ்மையான கறிக்கடை  தொழிலாளியான இவரது வருமானத்தை நம்பி அவர் குடும்பம் இருந்துள்ளது. மிகுந்த கஷ்டமான குடும்பம்...

குர்ஆனில் துஆக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனில் துஆக்கள்
தொடர் 17

رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 

“இறைவா! 
கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

அல்குர்ஆன் : 20:114

 رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 

“என் இறைவா! 
என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 

அல்குர்ஆன் : 23:39

رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ

“என் இறைவனே! 
என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”.

அல்குர்ஆன் : 23:94

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)
             
ஹிஜ்ரி 1445 , ரமலான்  பிறை 18
      
(29-03-2024 , வெள்ளிக்கிழ‌மை)

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.                                                     
                               அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழாலிமீன் ...
 
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ...

பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன்ஃபில் அர்ளி வலா ஃபஸ்ஸமாஇ வஹீவஸ்ஸமீஉல்அலீம்.

யா முகல்லியல் குலூப் தப்பித் கல்பி அலா தீனிக்.  

(யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே
உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக )

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர்  ராஹிமின்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் கப்ர்

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஹஸ்ர்

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபக்ர்

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மீஸான்

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் கர்ழ்

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மர்ழ்

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஆfபாத்

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் சக்ராத்

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் மௌத்

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

யா அல்லாஹ்! 
மீண்டும் உயிர் தந்து அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்

இரட்சகனே எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

யா அல்லாஹ்! 
இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

யா அல்லாஹ்! 
குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

யா அல்லாஹ்! 
 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

யா அல்லாஹ்! 
 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

யா அல்லாஹ்! 
 சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

யா அல்லாஹ்! 
எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் உன் அருளை புரிவாயாக!

 யா அல்லாஹ்! 
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்! 
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்குப் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்! 
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! 
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஅலா  ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள். 

பாராளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறைதான்.
 எல்லோரும் இந்திய நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், நம்மில்  545 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் நமக்காக, நம் அனைவரின் குரலாக , நம் அனைவரையும் பாதுகாக்கும் கேடயமாக , நாமே வாக்களித்து தேர்ந்தேடுத்து அனுப்பும் சக்தி, ஆற்றல், வாக்கு நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது. 

 கடந்த பத்தாண்டு காலம் பிஜேபியின் இருண்ட ஆட்சிக் காலம் .

முகலாயர்களை, ஆங்கிலேயர்களை எல்லாம் மிஞ்சி, நம் நாட்டை அடிமைப் படுத்த நினைத்த துரோகிகளின் ஆட்சிக் காலம்.

 வரலாற்றில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் பல மொழி, பல நிறம் உள்ள மக்கள் ஒற்றுமையாக உருவாக்கிய இந்த இந்திய தேசத்தை சுரண்டி, நம் ஒவ்வொரு இந்தியரையும் ஏமாற்றிய ஒரு அயோக்கிய, காமவெறி பிடித்த, பணத்தாசை கொண்ட ஒரு கும்பல்தான் ‌பிஜேபி கும்பல் .


 இவர்களை ஆட்சியிலிருந்து விரட்டா விட்டால் நம் தேசம் நாசமாகி விடும் .

 இந்திய தேசத்தின் ஒவ்வொரு மாநில மக்களும் இந்த பிஜேபியை, இந்த பெருமை பிடித்த மனிதப் பேய்களை அழிக்க, 

 வாக்களியுங்கள் இந்தியா கூட்டணிக்கு , இதுவே நம் இந்திய தேசம் காக்கும் கூட்டணி. 

 இதுவே நம் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் கூட்டணி. 

 வாக்களிப்பீர்! 

 நம் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது 

 எனவே இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வீர்! 

 நாம் இந்தியர்கள்! நாமே ரத்தம் சிந்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்கள்! 
 
பிஜேபி கூட்டணி துரோகிகளிடமிருந்து மீட்போம் நம் இந்திய தேசத்தை! 
 வளர்ப்போம் நம் தொப்புள் கொடி பாசத்தை! 
 
ஜெய் ஹிந்த்! 

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. 

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். 

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். 

ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. 

எனவே நண்பர்களே, 

1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 

எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
நடந்து செல்லுங்கள்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 எனவே, நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
தினமும் நடைபயிற்சி.
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
நடந்து செல்லுங்கள் 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 10,000 அடிகள் / நாள்
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. 

ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.

 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 நடங்கள்.

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள் 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

10,000 அடிகள் நடக்க
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

365 நாட்கள் நடைபயிற்சி 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
 

அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

 

நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

 

நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

Tuesday 26 March 2024

#2024_தேர்தல்.. சின்னதா ஒரு கணக்கு போடலாமா..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#2024_தேர்தல்..

சின்னதா ஒரு கணக்கு போடலாமா..

39  தமிழ்நாடு
1    பாண்டிச்சேரி
20  கேரளா
28  கர்நாடக
25  ஆந்திரா
17  தெலுங்கானா
21  ஒரிசா

தென்மாநிலம் மொத்தம் 151 சீட்டு ( பழைய மெட்ராஸ் பிரசிடண்சி ) இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 20 முதல் 30 பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 121 முதல் 131 பெறும்.

14  அசாம்
2    அருணாசலபிரதேசம்
2    மணிப்பூர்
1    சிக்கிம்
1    நாகாலேன்டு
1    மிசோரம்
2   திரிப்புரா 
2   மேகாலயா

வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 4 முதல் 5 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு  20 முதல் 21 பெறும்.

13  பஞ்சாப்
10  ஹரியானா
7    டெல்லி

மொத்தம் 30 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 5 முதல் 10 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 20 முதல் 25 பெரும்.

48  மஹாராஸ்டா
40  பீகார்
42  மேற்குவங்கம்

மொத்தம் 130 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேறும் ?

அதிகபட்சம் 30 முதல் 50 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 80 முதல் 100 சீட்டு பெறும்.

80  உத்திரபிரதேசம் 
29  மத்தியபிரதேசம்
25  ராஜஸ்தான்
26  குஜராத்ப

மொத்தம் 160 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 100 முதல் 120 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிககு 60 முதல் 80 சீட்டு பெறும்.

11  சட்டிஸ்கர்
14  ஜார்கண்ட்

மொத்தம் 25 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 10 முதல் 12 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 13 முதல் 15 சீட்டு பெறும்.

5  உத்திகான்ட்
4  ஹிமாசல்பிரதேசம்
6  ஜமு காஷ்மீர்

மொத்தம் 15 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 5 முதல் 7 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 8 முதல் 10 சீட்டு பெறும்.

கோவா மற்றும் யுனியன் பிரதேசங்கள் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி தவித்து   7 சீட்டு.

இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 4 முதல் 5 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 2 முதல் 3 சீட்டு பெறும்.

இதில் #பாஜக_கூட்டணி மொத்தம் 178 முதல் 239 வரை மட்டுமே வெற்றி பெறும்.

இதில் #இந்தியா_கூட்டணி மொத்தம் 324 முதல் 385 வரை வெற்றி பெறலாம்

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

கன்னியாகுமரி
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்

திருநெல்வேலி
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா

தென்காசி
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்

தூத்துக்குடி
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்

இராமநாதபுரம்
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்

விருதுநகர்
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்

தேனி
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்

மதுரை
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி

சிவகங்கை
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி

தஞ்சாவூர்
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்

நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா

மயிலாடுதுறை
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்

சிதம்பரம்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி

கடலூர்
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்

பெரம்பலூர்
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி

திருச்சிராப்பள்ளி
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்

கரூர்
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா

திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்

பொள்ளாச்சி
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்

கோயம்புத்தூர்
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்

நீலகிரி
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்

திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி

ஈரோடு
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்

நாமக்கல்
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி

சேலம்
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்

கள்ளக்குறிச்சி
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்

விழுப்புரம்
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்

ஆரணி
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி

திருவண்ணாமலை
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு

தருமபுரி
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா

கிருஷ்ணகிரி
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்

வேலூர்
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்

அரக்கோணம்
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்

காஞ்சிபுரம்
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்

மத்திய சென்னை
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்

தென் சென்னை
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி

வட சென்னை
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி

திருவள்ளூர்
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்

புதுச்சேரி
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா.  

Monday 25 March 2024

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும், 25.03.2024 

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!’ என்று வாதிடுகின்றனர்.

உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுததாகவே வைத்துக் கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் செய்துள்ளார்கள் என்று தெரிந்து, அதற்கு மாற்றமாக நபித் தோழர்கள் சிலர் செய்ததாகத் தெரியும் போது இரண்டில் எது சிறந்தது?

உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் தேவையா?

நபியா? நபித்தோழரா? என்று கேள்வி வரும் போது நபியைப் புறக்கணித்து விட்டு நபித் தோழரைத் தூக்கிப் பிடிப்பது இஸ்லாத்தை விட்டும் நம்மை அப்புறப்படுத்தாதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் வஹீ வரும். நபித்தோழருக்கு வஹீ வராது என்பதைக் கூட அறிய வேண்டாமா?

நன்மை செய்வதில் நபித் தோழர்கள் நபிகள் நாயகத்தையும் மிஞ்சியவர்களா?

நபியவர்கள் மூலம் மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கியிருக்கும் போது அவர்கள் கற்றுத் தராததை நபித் தோழர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால் மார்க்கத்தை நபிகள் நாயகம் முழுமையாக்கவில்லை என்ற கருத்து வருமே! இது சரி என்கிறார்களா?

அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை மறைத்து விட்டார்கள்; அதை நபித் தோழர்கள் அம்பலமாக்கி விட்டார்கள் என்பது இவர்களின் எண்ணமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து தன் தூதராக நியமித்தான். முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அவர்கள் மூலம் இறைவன் கற்றுத் தந்தான் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நம்பக் கூடியவர்களுக்கு நபிவழியே போதுமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி போதாது; அது சரியில்லை; அதற்கு முரணாக நபித் தோழர்கள் காட்டியது தான் சரியானது என்று நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?

நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.

ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.

அறிவிப்பு 1

மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7682 .

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!

உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.

உமர் (ரலி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் – பைஹகீ, பைஹகீ, ஷரஹ் மஆனில் ஆஸார், முஅத்தா, அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா – நஸாயீ, முஅத்தா, ஷரஹ் மஆனில் ஆஸார், பைஹகீ, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார்

உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.

அறிவிப்பு 2

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.

நூல்: பைஹகீ ஸகீர்-821 .

இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.

மேலும் இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (ரலி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.

மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (ரலி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.

மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நூல்: முஅத்தா

ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.

அறிவிப்பு 3

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.

நூல்: முஅத்தா மாலிக்-303 ,பைஹகீ 

இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) காலத்தவர் அல்ல! உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

உமர் (ரலி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் பெயரால்…

உமர் (ரலி) அவர்கள் பெயரால் இருபது ரக்அத்களை நியாயப்படுத்துவதுடன் அலீ (ரலி) அவர்கள் பெயரைப் பயன்படுத்தியும் நியாயப்படுத்துகின்றனர்.

ஐந்து இடைவெளியுடன் இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபுல் ஹஸனா என்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்கள்: குப்ரா பைஹகீ-4292 .

அபுல் ஹஸனா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர், தஹபீ உள்ளிட்ட அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். இவரது நம்பகத் தன்மையை எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது

ரமளான் மாதத்தில் அலீ (ரலி) அவர்கள் அறிஞர்களை அழைத்து, அவர்களில் ஒருவரை 20 ரக்அத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள். வித்ரு தொழுகையை அலீ (ரலி) அவர்கள் தாமே தொழுவிப்பார்கள். 

அறிவிப்பவர்: அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி, நூல்: குப்ரா பைஹகீ-4291 ,

இதன் அறிவிப்பாளரான அபூ அப்துர்ரஹ்மானிடமிருந்து அறிவிப்பவர் அதா பின் ஸாயிப் ஆவார்.

அதா பின் ஸாயிப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் ஹம்மாத் பின் ஷுஐபு ஆவார்.

தஹபீ, இப்னு மயீன், புகாரி, நஸாயீ, இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை (ஹம்மாத் பின் ஷுஐபை) பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.

எனவே அலீ (ரலி) அவர்கள் 20 ரக்அத் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

Sunday 24 March 2024

வட்டி ஷைத்தானின் பிடியாகும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வட்டி ஷைத்தானின் பிடியாகும் 

 அல்லாஹ்வின் பெயரால் 

மக்கள் கஷ்டத்தில், பண உதவி என்ற பெயரில் நாள் வட்டியாகவோ, வார வட்டியாகவோ, மாத வட்டியாகவோ இன்னும் பல முறையில்
உதவி செய்வதைப் போல செய்து, கொடுத்த தொகையை மொத்தமாக  திருப்பி வாங்கும் வரை,
 கடன் வாங்கியவருக்கு அபராதமாக, கடன் கொடுத்தவருக்கு  ஆதாயமாக ஒரு சிறு தொகையை வாங்கி வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டனர் .

ஆதாரம்: அல்குர்ஆன் இது இறைவாக்கு 2 : 275 

"வட்டி வாங்கி சாப்பிடுபவர்கள், 
வாழும் காலத்தில் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டவரைப் போலவே அல்லாமல் வாழவில்லை. ஏனென்றால் நிச்சயமாக வட்டி வாங்கி சாப்பிடுவதும், வியாபாரம் செய்து சாப்பிடுவதைப் போன்றதுதான் என்று இவர்கள் சொன்னார்கள்.

 அல்லாஹ் வியாபாரத்தின் மூலமாக சாப்பிடுவதைத் தான் ஹலாலாக ( ஏற்றுக் கொள்ளப்பட்டதாக) ஆக்கி விட்டான் ஆனால் வட்டி வாங்கி சாப்பிடுவதை ஹராமாக ( விலக்கப்பட்டதாக) ஆக்கி விட்டான்.
இது இறைவனிடமிருந்துள்ள உபதேசமாகும். இதை யார் ஏற்று வட்டித் தொழிலை விட்டு விட்டாரோ, அவர் கொடுத்த மொத்த தொகையை மட்டும், கொடுத்தவரிடமிருந்து வாங்கிக் கொள்ளவும் இவ்வாறாக இவருடைய விஷயம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் யார் மீண்டும் வட்டித் தொழிலை விடாது செய்வாரோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதிலேயே நிரந்தரமாக வாழப் போகிறவர்கள்".

 அல்லாஹ் நம் அனைவரையும் நரக நெருப்பிற்குள் வாழ்வதிலிருந்து பாதுகாப்பானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .

 அல்லாஹ் 
நம் அனைவரையும் இன்று காற்றுக்குள் நிம்மதியாக வாழ வைப்பது போலவே சுவன வாழ்வில், பூஞ்சோலையில், நீர் வீழ்ச்சிக்கு அருகில் மகிழ்ச்சியாக  நிரந்தரமாக வாழ வைப்பானாக! ஆமீன்
 யா ரப்பல் ஆலமீன். 


இது இறைவாக்கு, மனித குலத்தின் வாழ்க்கைக்கான நிறைவாக்கு.

சிறுவர்கள் நோன்பு நோற்பது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறுவர்கள் நோன்பு நோற்பது

இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.

தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும்.

அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை. ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம்.

அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி)

நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒரு நாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும். ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சிறுவர்கள் நோற்றதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சிறுவர்கள் நோன்பு நோற்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்களையும் நோன்புக்குப் பயிற்றுவிக்கலாம்.

2024 தேர்தல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு........

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் குறித்த ஒரு  முக்கிய அறிவிப்பு........

நமக்கு  தேவையான ஆட்சி இந்தியாவில்  வரவேண்டும். அதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது:

 🇮🇳 இந்திய தேசம்  மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது, இன்னும்  சுமார் 60 நாட்கள்...? இந்தியா  ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ? 

🙏தயவுசெய்து உங்கள் குழுக்கள், தெரிந்த மற்றும் தொடர்புடைய நபர்கள் அனைவருக்கும் அனுப்பவும். தயவு செய்து ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு பகிரவும்

🇮🇳ஒரு வாரத்தில் 1 கோடி பேரையும், மூன்று வாரங்களில் 10 கோடி மக்களையும், 60 நாட்களில் 100  கோடி  மக்களையும்  சென்றடையும் வகையில் அனுப்பி அதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

😥மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது,பல ஆயிரம்  வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும்...

🇮🇳உலக அளவில்  இந்தியாவை  தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிரவாதிகளை தேச நலனுக்காக, இந்த  தேர்தலில் தோற்பதை நாம்  உறுதி செய்ய வேண்டும். 

 🇮🇳 3வது முறையாக மோடி வெற்றி பெற்றால்  நிச்சயமாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கலைக்கப்பட்டு  ஒரே நாடு...ஒரே தேர்தல்...ஒரே அதிபர் ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

🇮🇳இலங்கையில்  ராஜபக்சே சர்வாதிகாரியாக ஆனது போல... பாகிஸ்தானில் முஷ்ரப் சர்வாதிகாரியாக  ஆனது போல மோடியும்   நிச்சயமாக  சர்வாதிகாரியாக மாறுவார் என்று  அரசியல் வல்லுனர்கள் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்

🇮🇳ஏன் ஏனென்றால்.... இன்றைய இந்தியாவின் நிலை, பொருளாதாரம் அதாள... பாதாளத்தில் உள்ளது, உதாரணம் :- 2014ல் 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா இந்த 9 வருடத்தில் 205 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரடைந்து 67 வருடங்கள் (1947 to 2014 வரை) 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா, மோடி ஆட்சியில்  இந்த 9 வருடத்தில்  மட்டும் 151 லட்சம் கோடி கடனில் உள்ளது (2014 to 2023 வரை)

 🇮🇳உலக  அரங்கில் ஐநா அங்கீகரித்த 193-ல் நாடுகளில் இந்தியா தான் அதிகமான கடன் உலக வங்கியில் 205 லட்சம் கோடி அதிக கடன் வாங்கி உள்ளது  என்று  உலக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது

🇮🇳 உலகில் மதசார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே...

🇮🇳 இன்று பாஜக அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது இதை மூடி மறைக்க  அப்பாவி மக்களை தூண்டி விட்டு, நாம் இந்து...ராமர் கோயில்....ஜெய் ஸ்ரீ ராம்...என்று  மதவாத அரசியல் செய்வது...

🇮🇳இந்தியாவின் செல்வத்தை அம்பானி, அதானி கையில் விற்றது  மற்றும்  குஜராத்தி பணக்கார முதலாளிகள்  கைகளில் மட்டுமே  குவித்தது...

🇮🇳நீதித்துறை,CBI, ED-அமலாக்கத்து றை மற்றும் தேர்தல் அதிகாரிகளை  விலைக்கு வாங்கியது,EVM மிஷின் கோல்மால்கள்...
 
🇮🇳  நேரு காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம்  உருவாக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை   எல்லாம் தனியார்  நிறுவனங்களுக்கு  விற்றது...

🇮🇳வேலையில்லா  திண்டாட்டம், வருடத்திற்கு 2 கோடி பேர்களுக்கு  வேலை என்று இந்திய மக்களை ஏமாற்றியது...

🇮🇳பெட்ரோல் விலை உயர்வு(Rs.58 இருந்து Rs.103), கேஸ் விலை உயர்வு (Rs.400  இருந்து Rs.1130), எல்லா பொருட்களின் விலையும் இந்த 10 வருடங்களில் பல  மடங்கு உயர்ந்து இருக்கிறது

🇮🇳தமிழகத்திற்கு தர வேண்டிய  நிதியை தராமல்... நாம் செலுத்திய வரிப்பணத்தை  எடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுப்பது... தமிழர்களை வஞ்சிப்பது...

🇮🇳கறுப்புப் பணத்தை மீட்டு  எல்லா  குடும்பத்துக்கும் 15 லட்சம்,  கொடுப்பேன் என்று பொய் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது...

 🇮🇳இந்தியாவை நாசமாக்கிது....

 🇮🇳ஊடகத்தை  கைப்பற்றியது....

🇮🇳பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை பறிப்பு...

🇮🇳ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக சீரழித்து,  ஹிட்லர்,சதாம், ராஜபக்சே போல் சர்வாதிகாரியாக செயல்படுவது... 

🇮🇳குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளால் நிரப்பப்பட்ட அரசியல்... 

🇮🇳காவிமயமாக்கப்பட்ட வரலாறு... காவிமயமாக்கப்பட்ட கல்வி...

🇮🇳திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு அடுத்தடுத்த குழப்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள்... 

🇮🇳திட்டமிடப்படாத லாக் டெளன், குழப்பங்கள்,  அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள்....
 
 🇮🇳சிறுபான்மை மக்கள் வீடுகள்  மற்றும், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது, சிறுபான்மை மக்களை தாக்குவது, வெறுப்பு பேச்சுகள, மதக் கலவரங்கள், கொலைகள்....

🇮🇳மகாத்மா காந்தி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வெளிப்படையாகப் புகழ்ந்து வணங்குதல்...

🇮🇳பெண் மல்யுத்த வீரர்களை  நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்து அவமானப்படுத்தப்பட்டது...

🇮🇳டெல்லியில் விவசாய மக்களை   போராட வைத்து... தற்கொலை செய்ய வைத்தது...  ஜிப் ஏற்றி  கொலை செய்தது...

 ஏனெனில்.... 

🇮🇳காந்தியவாதிகள்& அம்பேத்கர்வாதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳அரசியலமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳மதச்சார்பற்ற இந்தியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳தலித்துகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பட்டியலினத்தோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பழங்குடியினர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

 🇮🇳ஆதிவாசி மக்கள் பாஜக  தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳பிற்படுத்தப்பட்டோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳சீக்கியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳கிறிஸ்தவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று  விரும்புகிறார்கள்

🇮🇳இஸ்லாமியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது... 

🇮🇳உங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 10 பேருக்கு புரிதலை ஏற்படுத்தி, தேசியவாத வாக்காளர்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள் 

🤝அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நம் குழந்தைகள் பார்க்க வேண்டும்

👍நமது கடமையை நாம் செய்ய வேண்டும்

👍பாதுகாப்பான சமூகம் பாதுகாப்பான வாழ்க்கை பாதுகாப்பான எதிர்காலம் போன்றவற்றை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்

👉இதைப் புரிந்துகொண்டு வெவ்வேறு வட்டாரக் குழுவில் பகிரவும்🙏

✋தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து, அவசியத்தை விளக்கவும்🙏

 நன்றி! நன்றி! நன்றி🙏
 
இந்திய நலனின் அக்கறையோடு...  ஒரு  இந்திய குடிமகனாக...

மகத்தான அர்ஷின் அதிபதியே !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புடையவனே !
மகத்தான அர்ஷின் அதிபதியே !
பரக்கத்தான ரமளான் மாத ஜுமுஆ நாளில் அதிகாலையில் 
உன்னை வணங்கித் துதிக்கிறோம்.
எங்கள் கரங்களை உன்மேல்  உள்ள நம்பிக்கையில் உன் பால் உயர்த்தி விட்டோம்.

நீ மிகவும் சங்கைக்குரியவன்.
எங்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்கமாட்டாய் என நம்புகிறோம்.
எங்கள்தேவைகளை நிறைவேற்றுவாயாக !

துன்பங்களைப் போக்குபவனே !
கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவோரின்
கவலைகளைப் போக்குவாயாக !
அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களின் மீது கருணை கொள்வாயாக !

திருமண வயதில் இருப்போருக்கு நல்ல சாலிஹான வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுப்பாயாக !
குழந்தைப் பேறுக்காக ஏங்குவோருக்கு
நல்ல வாரிசைத் தருவாயாக !
ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளிடம் பாசத்தோடும் நேசத்தோடும் பரிவுடன் நடந்திடச் செய்வாயாக !

எங்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக !
எங்களின் பாவங்களை பொருட்படுத்தாமல் மன்னித்து எங்களின் ஏட்டிலிருந்து அழித்து விடுவாயாக !

எங்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பு செலுத்துபவர்களாக ஆக்கி வைப்பாயாக ! அவர்கள் சந்ததிகளும் எங்களின்மீது பாசம் நிறைந்தவர்களாக மாற்றி வைப்பாயாக !
எங்கள் உள்ளங்களை விரிவாக்குவாயாக ! எங்க நிலைமைகளை சிறந்த நிலைமைக்கு மாற்றுவாயாக ! எங்களின்எதிர்பார்ப்புகளை நிதர்சனமாக்குவாயக !
எங்களின் நோய்களை குணப்படுத்துவாயாக ! 
நோய் நொடிகளை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக !
பூரணசுகத்தை எங்களுக்கு வழங்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க  வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக !

அல்லாஹ் ! உள்ளங்களை மாற்றுபவனே ! எங்கள்  உள்ளத்தை
உன்னுடைய ஈமானின்பால் உறுதியாக்கி வைப்பாயாக !

நாங்கள் எதன் பால் ஆர்வமாக இருக்கிறேமோ அதிலிருந்து எங்களை  மீட்டெடுப்பாயாக !
நீ எதனை செய்வதின் பால் ஆர்வப்படுவாயோ அதன் பால் எங்களை  ஆர்வமடையச் செய்திடுவாயாக !

யா அல்லாஹ் ! இப்பூமி விசாலமாக இருந்தாலும் எனக்கு நெருக்கடி யாக மாறினால் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபிக்கு உதவியது போல் எனக்கு உதவுவாயாக !
 
எங்கள் இறைவனே ! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே ! 
நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாக இருக்கிறாய்.

பித்னாவும் ஃபஸாதும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்களுக்கு சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசாத்தியம் எனவும் தெளிவுறக் காட்டுவாயாக !

அதில் குழப்பமடையச் செய்துவிடாதே ! நாங்கள் வழி தவறிவிடுவோம்.
நேர்வழியிலேயே எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத் !

யா அல்லாஹ் ! 
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !
நீ விதித்த கடமைமைகளை நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளை பேணுபவர்களாக !
ஜகாத்தை கொடுப்பவர்களாக !
உன்னிடம் இருப்பவைகளைத்  தேடுபவர்களாக !
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக !
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக !
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக !
இவ்வுலகின் மீது பற்றற்றவர்களாக !
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக !
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக !

அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக !
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக !
மறுமை நாளில் உன்னுடைய நபியும், தூதரும்,
தூய்மையான நண்பரும், நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம் வருபவர்களாக !
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக !
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக !
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக !
பாலையும், சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்திக்கீன்கள் சத்தியவான்கள் ஷுஹதாக்கள் உயிர்த்தியாகிகள் ஸாலிஹீன்கள் நற்கருமங்கள் செய்தவர்கள் ஆகியோருடன் உடன் இருப்பவர்களாக ஆக்குவாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

தன்னுடைய சொல்லாலும் செயலாலும் எங்களுக்கு வழிகாட்டிய ரஹ்மத்துல் ஆலமீன் அண்ணல் நபிமீது உன் ஸலவாத்தைப் பொழிவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லங்களை மகிழ்ச்சி, குதூகலம் அன்பு, மனநிறைவு, மனநிம்மதி, அமைதி,  பாதுகாப்பு, மற்றும் உன் அருட்கொடைகளால்
நிரப்புவாயாக !
பொருளாதாரம் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கையில் 
பரக்கத் செய்வாயாக !

அருளாளனே ! எங்கள் இதயங்களை அன்பால் ஒன்றிணைப்பாயாக !
எங்களுக்கிடையே சமரசம் நிலவச்செய்வாயாக ! அமைதியின் பாதையில் எங்களை வழி நடத்துவாயாக !
ரஹ்மானே ! எங்கள் தவறுகளை மறைத்து, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக !

எங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் மீது கருணை காட்டுவாயாக ! அவர்களின் பிழை பாவங்களை மன்னித்தருள்வாயாக !
எங்களில் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவாயாக !
நேர்வழியில் செல்லாமல் இருப்பவரை இன்னும் வழிதவறியவர்களை
நேர்வழியின் பால்
இழுத்து வருவாயாக !

தயாளனே ! நாங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் ரிஜ்கை வழங்குவாயாக !
ரப்புல் ஆலமீனே ! நாங்கள் உன்னை சந்திக்கும் வரை, நீ எங்கள் மீது திருப்தி அடைந்தவனாக எங்களை ஆக்குவாயாக !ஆமீன் ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து அய்மான் சங்கத்திற்கு கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவு நாள் : 23-03-2024.

அபுதாபி :

 கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து  அய்மான் சங்கத்திற்கு  கோரிக்கைகள் வைத்தார்கள். .

 என்னவென்றால் அபுதாபி முஸ்ஸபா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் உணவில்லாமல் தங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் அவரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 

 அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அந்த நபருக்கு  உடனடியாக  தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்  கொண்டார்கள் 

 நான்கு நாட்களாக தேடுதல்  பணியில் இருந்த அய்மான் சங்கத்தின்  நிர்வாகிகளுக்கு இன்று காலை ஒரு தொலைபேசியின் மூலம் கடையநல்லூர் அருகே உள்ள சுரண்டை என்கின்ற ஊரைச் சேர்ந்த  சகோதரர் வின்சென்ட் அவர்கள் தொடர்பு கொண்டு  நீங்கள் தேடிக் கொண்டிருக்க கூடிய நபர்  இங்கு இருக்கிறார் என்று சொன்னதும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் இந்திய தூதரகத்தின் மூலமாக  தமிழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்  என்று சொன்னோம்.

 தற்காலிகமாக  சகோதரர் வின்சென்ட் அவர்களின்  பராமரிப்பில் அவரைத் தங்க வைத்துள்ளோம்.

அய்மான் சங்கத்தின் சார்பாக  நன்றிகளை  சகோதரர் வின்சென்ட். அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டோம் 

 விரைவில் இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழகம் திரும்ப அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் அனைத்து உதவிகளும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இறைவனை பிரார்த்திப்போம்.

அய்மான் சங்கம்
அபுதாபி

 மேலும் விவரங்களுக்கு அய்மான் MAK - 00971553038066.

பொறுமை_ஒரு_இபாதத்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமை_ஒரு_இபாதத்!

اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்).

(அல்குர்ஆன் : 23:111)

அல்லாஹ் அவர்கள் தொழுததினால், நோன்பு நோற்றதினால் தர்மம் வழங்கினதினால் என்று கூறவில்லை பொறுமையாக இருந்து சகித்துக் கொண்டதினால் என்றுதான் குறிப்பிடுகிறான்.

பொறுமை என்பது ஒருவர் வலி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை அவர் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பது என்பது ஒரு இபாதத்தாக மாறுகிறது (வணக்க வழிபாடாக ஆகும்)

📚ததப்ருல் குர்ஆன் : 2021

காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

 பிளாசம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மு

ஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் 32 பேருக்கு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவர் 
ரமேஷ் அவர்கள் 
தமுமுக  மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் அவர்களும் 32 குடும்பஙகளுக்கு ஒரு குடும்பத்திற்க்கு 700 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கிழக்கு மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரகத்துல்லா மாவட்ட துணை செயலாளர் சுலைமான் ஜாஹிர் பாபு பனைக்குளம் தமுமுக நிர்வாகிள் ஹாஜா  நஜிமுதீன் பாலகிருஷ்ணன் அர்ஜீனா குமார் பிளாசம் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

தகவல்/ செய்தி
தமுமுக இராமநாதபுரம்

அபூ மூஸா அல் அஷ்அரி ரழி and அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 https://youtu.be/c4oVKFAz5S8 
அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 24-03-2024 

https://youtu.be/G_GMIKHf34M
அபூ மூஸா அல் அஷ்அரி ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 23-03-2024



இராமநாதபுரம் & பரமக்குடியில் நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

1)பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
லுஹர் தொழுகைக்கு பின் கோடை வெப்பமும் நரகமும்  என்ற தலைப்பிலும், 

2)பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 5 மணிக்கு நோன்பாளிகள் பேண வேண்டிய பண்புகள் என்ற தலைப்பிலும்

3)இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் அபூதர் அல் கிஃபாரீ ரழி 
அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி தாஹா புகாரி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

4)பரமக்குடி மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 3 மணிக்கு பெண்களுக்கு குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து ஓதுவது எப்படி என்ற தலைப்பில் முபல்லிகா மர்யம் புஸ்ரா வகுப்பெடுத்தார்கள்.

இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  சகோதரிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம் & பரமக்குடி

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' 

என்று ஓதுவார்கள். 

பொருள்:

கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) 
ஸஹீஹ் புகாரி : 6346

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்..?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


#சமுதாயமா..?
#சச்சிதானந்தமா..?

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து  ஏன் வெளியேறினார்..?

தமிழக நலனுக்கு எதிராக மோடி அரசு செயல் படுவதாலா..?

சிறுபான்மையினர் மீது  மோடி அரசு செய்துவரும்  வெறுப்பு நடவடிக்கைகளை கண்டித்தா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தா..?

முத்தாலக் தடை சட்டத்தை எதிர்த்தா..?

பொது சிவில் சட்டத்தை எதிர்த்தா..?

அவருக்கும் ,பாஜக விற்கும் என்ன கருத்து வேறுபாடு...?

2026 முதல்வர் வேட்பாளர் யார் என்பதே எடப்பாடிக்கும், பாஜக விற்குமான  மோதல்..

ஏதோ மோடியை கொள்கை ரீதியாக எடப்பாடி எதிர்தார் என இஸ்லாமிய  சமூகத்தை  நம்பவைக்க முயற்சி நடக்கிறது 

இஸ்லாமிய சமூக மக்கள் ஏமாந்து விடக்கூடாது...

இந்தியா கூட்டணியை 40/40 என்றவகையில் வெற்றிபெற செய்ய வேண்டும்...

இந்த சமூகம் குடியுரிமையை காப்பாற்ற வீதியில் நின்றபோது  நம்முடன் நின்றவர்கள் யார் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் நாடுமுழுவதும் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் சட்டம் இயற்றும் அதிகார அவையில் கேரள சட்டமன்றத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது..

உங்கள் வாக்கு யாருக்கு..?

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் வாக்களித்து  முஸ்லிம்கள் வாழ்வுரிமையை கேள்விக்குறி  ஆக்கிய இரட்டை இலைக்கா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கா..? 

எடப்பாடியால் நிறைவேறிய சட்டம் எடப்பாடியின் கூட்டணி முறிவால் ரத்தாகுமா..? 

சமுதாயமா..?
சச்சிதானந்தமா..? என பார்ப்பதற்கு இது சட்டமன்ற தேர்தல் அல்ல ...

பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் இணைத்து நடத்துகின்ற இரண்டாவது விடுதலை யுத்தம்..

இது வாக்குசதவிகிதம் காட்டும் தேர்தல் அல்ல 
 வாழ்வுரிமையை மீட்கும் தேர்தல் 
என்பதை புரிந்து,அனைத்து தரப்பு மக்களும் தோழர் #சச்சிதானந்தம் அவர்களுக்கு  அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்....

                  பழனி M.I. பாருக் 
       மாநில அமைப்பு செயலாளர்,
           மனிதநேய மக்கள் கட்சி

திருக்குர்ஆன் காட்டும் சிந்தனைகள் என்ற தலைப்பில் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


https://youtu.be/wOp9V1kuEJ8?si=BhU8uPrCS8EXjFvr  



Wednesday 20 March 2024

காரைக்கால் மாவட்ட காவல்துறை புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

காரைக்கால் மாவட்ட காவல்துறை  புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!

முத்தவல்லிகள், பஞ்சாயத்தார்கள், மற்றும் ஜமாத்தார்களுக்கு...

தெரிவிப்பது யாதெனில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்தும், இறைவழிபடுவது யாவரும் அறிந்ததே! அதேபோல இந்த வருடமும் ரமலான் மாதம் தாங்கள் நோன்பு இருந்து இறைவழிபாடு செய்வதற்கு ஆவலாக உள்ளீர்கள். அதே நேரத்தில் இரவில் கண் விழித்து இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இரவில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் வாலிபால் விளையாடுவதும், பேட்மிட்டன் விளையாடுவதும், ஃபுட்பால்
விளையாடுவதும் வாடிக்கையாக செய்து வருகிறார்கள். இது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.

மேலும் வாகனங்களில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் செல்கிறார்கள். சாலைகளிலும் தெருக்களிலும் அதிக சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது வயது முதிர்ந்தவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும் காலாவதியான பதிவு எண் கொண்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது போன்று 18.3.2024 அன்று இரவு T.R. பட்டினம் மாப்பிள்ளை தெருவில் சில இளைஞர்கள் PRANK என்ற பெயரால்  உயிருடன் உள்ளவரை, இறந்தது போல்  பைக்கில் வைத்து விளையாடி தெரு முழுவதும் சுற்றி வந்தது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் விரட்டிச் சென்று தகுந்த அறிவுரை கூறியது. இதுபோன்ற அறிவீனர்களை காரை மாவட்ட காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. மீறும் பட்சத்தில் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை  எடுக்கப்படும். இதற்கு பஞ்சாயத்தார்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 

இவன் காரைக்கால் மாவட்டம் காவல் துறை 

ந. ஜெகபர் ஷரிப்,
7810084829

மனசொலி ரிப்போர்ட்டர்

Tuesday 19 March 2024

ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை / இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ


பாராளுமன்ற தேர்தல் தேதி இன் ஷா அல்லாஹ் தமிழகத்தில் 
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை எனவும், கேரளத்தில் ஏப்ரல் 26 மறு வெள்ளிக்கிழமை
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இதுபோல வெள்ளிக்கிழமைநாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையே நாம் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும்.
 நமக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்றி விட வேண்டும். மறவாதீர்.

ஜும்மா தொழுகைக்கு முன்னதாகவே காலையில் இருந்து மதியம் 12 மணிக்குள் நமது வாக்குகளை பதிவு செய்வோம்.

மதியம் ஜும்மா தொழுகையை  வாக்களிப்பவர்கள் வசதிக்காக பயான் இல்லாமல் அரை மணி நேரத்தில் முடித்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் கூட இது போல் சுருக்கமாக நாம் தொழுது இருக்கின்றோம்.

இந்திய தேசத்தை விஷமிகளிடமிருந்து பாதுகாக்க இஸ்லாமியர்களாகிய நம்முடைய வாக்கு மிகவும் முக்கியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும். எனவே நாம் 
100 சதவீதம் கண்டிப்பாக வாக்களிப்போம்.

அதே போல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்போம்.
அதுபற்றி எல்லாம் கவலைப்பட இது சரியான நேரம் அல்ல.

நாம் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் மதவாத கட்சிக்கு எதிராக உங்கள் வாக்குகளை மொத்தமாக பதிவு செய்யவும்.

வெள்ளி கிழமை தேர்தல் வைத்து விட்டார்கள் என புலம்புவதை விட்டு விட்டு அதையே நமக்கு சாதகமாக துஆக்கள் ஏற்றுக்கொள்ளும் நாளாக சிறப்பான துஆவோடு  நாம் சென்று வாக்களித்தால் மதவாத சக்தியை வீட்டிற்கு அனுப்பி விட்டு நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தலாம்.

வல்ல இறைவன் அல்லாஹ் படித்ததன் பிரகாரம் அமல் செய்யக்கூடிய பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்து அருள் புரிவானாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.


இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உலக அரங்கில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதை பறைசாற்றுவோம்..

விழிப்புடன் வாக்களிப்பீர். நன்றி.

2024. நாடாளுமன்றத் தேர்தல். திருப்பெரும்புதுர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


[10:06 am, 20/03/2024] நாடாளுமன்றத் தேர்தல். திருப்பெரும்புதுர் நாடாளுமன்ற
தொகுதிக்கான பொறுப்பாளர்கள்.


தலைமை ஒருங்கிணைப்பாளர் தாம்பரம் யாக்கூப் M.C
துணை பொதுச் செயலாளர் மனிதநேய  மக்கள் கட்சி.


J சலீம் கான்.மாவட்டதலைவர்
நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்.
9677271567

எம் அப்துல் ரவூப் 
துணைப் பொறுப்பாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினர். 9940335004.
..............................................




திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி.

என் அமீத்கான்
மாவட்ட செயலாளர். 9884340043.


R .குர்ஷித்அகமது
மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர். 9092826156.

J .இத்ரீஸ் கான்
மாவட்ட துணைச் செயலாளர்.தமுமுக
.735637737


A.K.R அமீர் பாஷா 
மாவட்ட துணைச் செயலாளர் ம .ம. க.  98849 61251 

...............................................

நகர பொறுப்பாளர்கள்.

மாங்காடுநகரம் 

ஏ கே ஜாகிர் உசேன்
. மாங்காடு நகரத் தலைவர். 7339152441.

T .முபாரக் அலி 
நகரச் செயலாளர்  9150178959.


முகமது ரஃபி 
நகரச் செயலாளர். ம.ம.க
...........................................
குன்றத்தூர் நகரம். 

சாகுல் ஹமீது
மாவட்ட பிரதிநிதி
8778496768

பாருக் அகமது
மாவட்ட வழக்கறிஞர் செயலாளர்.
99417818810

நிசார் அஹம
நகர 
தலைவர் 9952080852.
.....................................

குன்றத்தூர் ஒன்றியம்.


தமிம் அன்சாரி
ஒன்றிய தலைவர்.
9941852289

R .ராஜா முஹம்மது 
மாவட்ட பிரதிநிதி.
9962365900


திருமுடிவாக்கம் அப்பாஸ் ஒன்றிய செயலாளர்.


புரோஸ் கான்
ஒன்றிய பொருளாளர்.

9940334615

...............................................

திருப்பெரும்புதூர் ஒன்றியம்.

K.S .தாஜுதீன்
மாவட்ட துணைச் செயலாளர் 9790304484.
(திருப்பெரும்புதூர்)


அப்துல் ரகுமான். மாவட்ட துணைச் செயலாளார்  (S.V.சத்திரம்)
9443265301 

இஸ்மாயில் 
ஒன்றிய தலைவர் 
(திருப்பெரும்புதுர்)

R. முஹம்மதுரபீக் 
ஒன்றிய செயலாளர் மமக
(S.Vசத்திரம்)

அசரபுஅலி 
நகரதலைவர் திருப்பெரும்புதுர்
...............................

ஆலந்தூர் தொகுதி 
(வடக்கு ஒன்றியம்)

பொருப்பாளர் 

A.K.அஹமது உசேன் 
மாவட்டதுனை
செயலாளர் மமக 9940407286

பரனிபுத்தூர் செய்யது 

மௌலிவாக்கம் முஸ்தபா 

தவ்லத்பேகம் M.C




ஆகியதோழர்கள் மனிதநேயமக்கள் கட்சி பொருப்பாளர்களாக
 நியமிக்கபட்டனர் 

ஒப்பம் J .சலீம்கான் 
மாவட்டதலைவர் 
காஞ்சிமாவட்டம் 
9677271567 

19 /3 /2024
[10:06 am, 20/03/2024] +91 96772 71567: 2024. நாடாளுமன்றத் தேர்தல். காஞ்சிபுரம் நாடாளுமன்ற
தனி தொகுதிக்கான பொறுப்பாளர்கள்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் தாம்பரம் யாக்கூப் M.C
துணை பொதுச் செயலாளர் மனிதநேய  மக்கள் கட்சி.


J சலீம் கான்.மாவட்டதலைவர்
நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்.
9677271567

A அமீத்கான்.
மாவட்டச் செயலாளர்  மனிதநேய மக்கள் கட்சி. துணைப் பொறுப்பாளர்.


காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி
.....................................................
. L .S முன்னா
மாவட்ட செயலாளர் தமுமுக. 7904943346.



அப்துல் சமது 
மாவட்டத் துணைச் செயலாளர் தமுமுக
9944323786.

A ஜாஃபர் அலி 
மாவட்டத் துணைச்
செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி 9080507126.


எஃப் தாஜுதீன் மாநகரத் தலைவர் மனிதநேய மக்கள் கட்சி 96294220790.


உவைஸ் மீரான் மாநகரச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி.

.......,..............................,..............
உத்திரமேரூர்
சட்டமன்றத் தொகுதி. .

ஜாகிர் உசேன்
மாவட்ட பொருளாளர் மனிதநேய மக்கள் கட்சி.
99 40 85 86 05 

சாதிக்
மாவட்டமனித உரிமை அணி. செயலாளர் 
9894646090.


தாஜுதீன் மாவட்ட. 
சுற்றுச்சூழல் அணி செயலாள
ர்.  989438641.

முகமது அலி 
உத்திரமேரூர் பேரூர் தலைவர்.
9894251952.

ஆகிய தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பணியாற்ற இக்குழு அமைக்கப்படுகிறது.


ஓப்பம்  J. சலீம் கான்
மாவட்ட தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம். 9677271567. 

19 /3 /2024

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது திராவிட ஆட்சியில்  குற்றமா.?

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

திராவிட மாடல் ஆட்சியில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் அவல நிலை.!
**********

திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தொகுதியில் உள்ள  கல்லணை ரோட்டில், வேங்கூர் பகுதியில் உள்ள இந்திரா நகர் 2 வது தெருவில் 22 ஆண்டுகளாக முறையாக பத்திரம் போட்டு,2024 வரை மாநகராட்சி வரி கட்டிய ஆவணங்களுடன் இருக்கும் பள்ளிவாசல் நிலத்தில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிவாசல் பேஸ் மட்டம் வரை போடப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் இடத்திற்கு எதிராக உள்ள பிஜேபி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் இந்த இடம் பூங்காவிற்கு சொந்தமானது இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து பள்ளி கட்டுமான பணியை நிறுத்திவிட்டார்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்களையும் மற்றும் ஆளும் அரசின் முக்கிய பொறுப்பாளர்களையும் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து எந்தவித செவியும் சாய்க்காமல் காலத்தை கடத்திவிட்டனர்.

முன்னாள் திமுகவின் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பள்ளியை கட்டுமான பணிகள் செய்யாமல் இருந்து வந்தனர், ஆனால் அவரும் கையை விரித்து விட்டார்.

ஆனால் ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் தொழுகையும் இப்தார் நிகழ்வுகளும் நடந்து வந்தன அதே போன்று இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்று நேற்று அந்த இடத்தை சுத்தம் செய்ய போனபோது வழக்கம் போல பிஜேபி ஒன்றிய செயலாளர் கொலை செய்து விடுவேன்பள்ளிவாசலை கட்ட முடியாது இது உத்தரகாண்ட்,ஜார்கண்டு  போல கலவரம் செய்து விடுவேன் என்றும் மிரட்டியும் காவல்துறை முன்பும் அதே வார்த்தைகளை கூறியபோதும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று 17.03.2024 லுஹர் தொழுகைக்கு பிறகு சென்று  களத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகளும், SDPI கட்சி, மமக கட்சி ஆகிய நிர்வாகிகளும்,அந்த பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். 

ஆனால் காவல்துறை அதிகாரிகளும், தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர், துணை தாசில்தரும் அந்த இடத்தில் அசர் தொழுகை கூடாது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று தொழுகையை நடத்தக் கூடாது என்று மிரட்டி வந்தனர்.

ஆனால் பலமுறை அஸர் தொழுகை நிறைவேற்ற முயற்சித்தும் காவல்துறை  தடுத்து வந்தனர்.

 இறுதியாக அஸர் தொழுகையை நிறைவேற்றினோம். அஸர் தொழுகையை தொழுதது குற்றம் என்று அனைவரையும் கைது செய்ய வாகனங்களை வரவழைத்தது காவல்துறை.

இந்த சம்பவம் அறிந்து அந்தப் பகுதியில் பொதுமக்களும், SDPI , மமக கட்சியினுடைய நிர்வாகிகளும் பெருந்திரளாக திரண்டதன் விளைவாக கைது செய்வதை கைவிட்டது காவல்துறை.

முறையாக பத்திரப்பதிவு செய்து வரி கட்டிய ரசீதுடன் இருக்கும் பள்ளிவாசலை கட்ட விடாமல் தடுக்கும் பிஜேபியின் ஒன்றிய செயலாளருக்கு இசைவு கொடுக்கும் தமிழக அர


சின் காவல் மற்றும் மற்ற துறையை வன்மையாக கண்டிக்கிறோம் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இது உத்தரப்பிரதேசமா.? இல்ல தமிழ்நாடா? என்ற ஐயம் திராவிட மாடல் ஆட்சியில் நடக்கின்றது.

DMK வேட்பாளர்கள் பட்டியல்... எந்தெந்த தொகுதிகளில் யார், யார் போட்டி?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20.03.2024 

DMK வேட்பாளர்கள் பட்டியல்... எந்தெந்த தொகுதிகளில் யார், யார் போட்டி?



தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்கள் சந்தித்து, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். உடன் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ மற்றும் திமுக அமைச்சர்கள்.




#mmkitwing #MKStalin #jawahirullahmla #INDIAAlliance #abdhulsamadmla

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0pQ9HRiZ9YZyguJNq8ZtXEkG5DhEjKmZDxSsZZXxvhreXHxE6sWk3QbB4G1EPwgZAl&id=100064421633072&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

MMK TWITTER X
👇👇👇
https://twitter.com/mmkhqofficial/status/1770080571999531150?t=nLe-nrL3yRNfLFSgsFQxQA&s=19

MMKITWING

தேர்தல் ஒரு பக்கம் நடக்கட்டும். புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20.03.2024 தேர்தல் ஒரு பக்கம் நடக்கட்டும். புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது. 

நமது நிர்வாகிகள் அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் உங்கள் அருகில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்று கலந்தாய்வு செய்யலாம். குறைகளை கேட்டறிந்து தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு மனுச் செய்யலாம் / நிறைவேற்றக்கோரலாம் அல்லது நமது தலைமையின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

கட்டாயக் கல்விச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளியில் பயில, ஏழ்மைநிலையில் உள்ள மாணவ மாணவிகளை கண்டறிந்து கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து கொடுக்கலாம். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகள் அதிகம் சேர்ப்பதற்கு நமது நிர்வாகிகளே முழு முயற்சி மேற்கொள்ளலாமே?




பள்ளியில் வசதிகள் குறைவாக இருந்தால் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை மேம்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யலாமே?