Showing posts with label MMK. Show all posts
Showing posts with label MMK. Show all posts

Wednesday, 28 May 2025

IWF தன்னார்வலர்களுடன் இணைந்த ஆலிம்கள்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

IWF தன்னார்வலர்களுடன் இணைந்த ஆலிம்கள்...

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் தன்னார்வலர்களுடன் இணைந்து தமிழ்நாட்டிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு 
ஜித்தா விமான நிலையத்தில் களத்தில் நின்று சேவையாற்றிய
கண்ணியமிகு உலமாக்கள்.
👇👇👇
https://www.facebook.com/share/v/1AFvh5pmT6/

தமுமுக தகவல் தொழில்நுட்ப அ

Wednesday, 2 April 2025

வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் 

இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு சட்டரீதியான மற்றும் ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தலாம். இந்திய அரசியல் சட்டம் மத, மொழி, மற்றும் சமூக அடிப்படையில் யாருக்கும் ஊனமின்றி சமத்துவ உரிமைகளை வழங்குகிறது. எனவே, சட்டத்திற்குள் இருந்து எவ்வாறு போராடலாம் என்பதற்கான முக்கியமான வழிகள் இங்கே:


1. வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் சட்டரீதியான நடவடிக்கைகள்

(i) வக்ஃப் வாரியம் (Waqf Board) மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள்

  • மாநில மற்றும் தேசிய வக்ஃப் வாரியங்களுக்கு முறையிட்டு வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க மனு தாக்கல் செய்யலாம்.
  • The Waqf Act, 1995 ன் கீழ் வக்ஃப் சொத்துக்கள் தனிப்பட்ட அல்லது அரசாங்க கட்டுப்பாட்டிற்கு வராது என்பது சட்டத்தில் உள்ளது.
  • உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழியாக நியாயப்பூர்வமான வழக்கு தொடரலாம்.

(ii) சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு

  • முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மற்றும் வேறு மதத்தைச் சேர்ந்த நீதி உணர்வு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் இது குறித்து உரையாடலாம்.
  • வாக்களிக்க அதிகாரம் பயன்படுத்தி முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க முனையும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.

(iii) கல்லூரி மற்றும் பள்ளி நிலங்களை பாதுகாக்குதல்

  • பல வக்ஃப் நிலங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டவை.
  • அரசு மாறுபட்ட அடையாளங்கள் காட்டி தனியாருக்கு விற்கும் முயற்சி செய்தால், நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்.
  • RTI (Right to Information) சட்டத்தை பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளின் நிலைமை பற்றி தகவல் கோரலாம்.

2. அரசியல் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக வழிகள்

(i) வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பு (Voting Rights)

  • வாக்குச்சீட்டு ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். எந்த ஒரு கட்சியும் மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது.
  • முஸ்லிம்கள் அதிகமாக வாக்களிக்கும் பகுதிகளில் ஒருமித்த வாக்குகளை செலுத்த, அவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.
  • புதிய தலைமுறையை அரசியலில் ஈடுபடுத்த முஸ்லிம் இளைஞர்களை தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்க வேண்டும்.

(ii) சட்ட மற்றும் நீதிமன்ற வழிகள்

  • Article 14, 19, 25-30 ஆகிய சட்டங்கள் முஸ்லிம்களுக்கு சமத்துவ உரிமை, மதச்சார்பற்ற உரிமை, கல்வி நிறுவன உரிமை ஆகியவற்றை வழங்குகின்றன.
  • நீதிமன்ற வழிகளை சரியாக பயன்படுத்த, உச்ச நீதிமன்ற வழக்குகளை தொடர சட்ட ஆலோசனைக்குட்பட்டு அணுக வேண்டும்.
  • நீதி மற்றும் மனித உரிமை அமைப்புகளின் உதவியை பெறலாம்.

(iii) உரிமை பாதுகாப்பு மற்றும் சமூக செயற்பாடு

  • முஸ்லிம் அமைப்புகள், பள்ளிகள், தர்க்குகள் (Debates), போராட்டங்கள், சட்டக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • ஊடகங்களில் (Media) உரிமை மீறல் தொடர்பாக புகார் அளிக்க வேண்டும்.
  • அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்கத்துறை மீது கண்காணிப்பு வைத்து அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுப்பது முக்கியம்.

3. பண பலத்துடன் சமாளிக்க பொருளாதார முன்னேற்றம்

(i) கல்வி மற்றும் தொழில்நுட்பம்

  • முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறினால், அதிகாரத்திற்குள் சென்று தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
  • தொழில் முனைப்பை (Entrepreneurship) ஊக்குவித்து தனியார் நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

(ii) இஸ்லாமிய பொருளாதார அடிப்படைகள்

  • வங்கிப் பொறுப்பில் ரிபா (சலுகை வட்டி) தவிர்த்து, இஸ்லாமிய நிதி முறைகளை (Islamic Finance) வளர்த்தால், முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள்.
  • தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க சமூக வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை சட்டரீதியாக, அரசியல் மற்றும் சமூக ரீதியாக பாதுகாக்க முடியும். உண்மையான ஜனநாயக செயல்பாடுகளிலும், சட்டத்தின் நடைமுறையிலும் முழுமையாக ஈடுபட்டு, வக்ஃப் சொத்துக்களையும் அரசியல் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

Wednesday, 15 January 2025

ஆம்புலன்ஸ் - பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இன்று நள்ளிரவு 16-01-2025-செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டவுடன் அவரை செம்பாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற பொழுது

பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் யாருக்கும் எந்த விதமான சேதாரமும் இல்லை செம்பாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் மட்டும் சேதாரமடைந்தது அல்லாஹ்வுடைய கிருபை கொண்டு அந்த ஆம்புலன்ஸுக்கு அனைத்து பேப்பர்களும் சரியான முறையில் இருந்த காரணத்தினால் விபத்து ஏற்படுத்திய இன்னொரு காருடைய ஓனர்  சரி செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தார் மேலும் முதல் தவணையாக ரூபாய் 10,000 கொடுத்து விட்டார்

விபத்து ஏற்பட்டவுடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஐ ஜமால் அவர்களும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டனர் அவர்கள் செல்லும் பொழுது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பகுதி தலைவர் சாதிக் அவர்களை  தொடர்பு கொண்டார் சாதிக்கும் துரிதமாக செயல்பட்டு இவர்கள் போவதற்குள் ஆம்புலன்ஸ் எடுத்து வந்து அந்த நோயாளியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி ஆம்புலன்சில் நோயாளியை  மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்

துரிதமாக செயல்பட்ட செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளுக்கும் பம்மல் பகுதி நிர்வாகிகளுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

துணைப் பொதுச்செயலாளர் மாமன்ற  உறுப்பினர் அண்ணன் யாக்கூப் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பதிவு போடப்பட்டுள்ளது

S.K.ஜாஹிர் உசேன் மாவட்ட தலைவர் செங்கல்பட்டு வடக்கு

Thursday, 9 January 2025

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல் பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார் வசீமா என்ற மாணவி.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக கல்வியிலும் முன்னணி மாணவியான அவர் இறுதி பருவத் தேர்வை எழுத இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவியாகிய வசீமா ஒரு சாதாரண தொழிலாளியின் மகளாகப் பிறந்து, கல்வி நிறுவனங்களும் குடும்பத்தினரும் தந்த ஊக்கத்தால் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ரோல் பால் என்பது மிகுந்த சிரமம் உடைய ஒரு விளையாட்டு ஆகும். உருளைகள் வைத்த காலணிகளை அணிந்து ஆடப்படும் இந்த விளையாட்டில் ஆசியாவின் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.

கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான நான்காவது ரோல் பால் சாம்பியன் பட்டத்துக்கான விளையாட்டில் இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டு இந்திய ரோல்பால் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ரோல்பால் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்ட வென்ற வசீமாவும் ஆண்கள் பிரிவில் சிவச்சந்திரனும் பாராட்டு பெற்றுள்ளனர். இருவரும் தமிழ்நாட்டினர் என்பது நமக்கு கூடுதல் சிறப்பாகும். இருவருக்கும் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா 
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Wednesday, 8 January 2025

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

M. H. ஜவஹிருல்லா: அரசியல்வாதி.

M. H. ஜவஹிருல்லா (1959-ம் ஆண்டு பிறந்தவர்) இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியாவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் (MMK) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 1959-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளங்குடியில் பிறந்த ஜவஹிருல்லா, தன்னுடைய வாழ்க்கையை புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மறுக்கப்பட்ட உரிமைகளையும், நலன்களையும் ஊக்குவிப்பதில் அர்ப்பணித்துள்ளார்.

ஜவஹிருல்லாவின் ஆரம்பக் கல்வி பாரம்பரிய இஸ்லாமிய படிப்புகளிலும், நவீன கல்வியிலும் அடிப்படை பெற்றுள்ளதுடன், அவர் பொருளாதாரம் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார், அதே துறையில் முதுகலைப்படிப்பை முடித்து, பின்னர் இஸ்லாமிய படிப்புகளில் பிஏச்.டி. பெற்றார். இந்த கல்விப் பின்னணி சமூக செயற்பாட்டிலும், அரசியலிலும் அவரது சமூக சமுதாயப் பணிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது.

2009-ஆம் ஆண்டு, ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியை நிறுவினார், இது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சி. அவரது தலைமையில், MMK தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் பங்காற்றும் கட்சியாக உயர்ந்துள்ளது, முக்கிய அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் பேணவும், அதற்காக வாதிடவும் பல முறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜவஹிருல்லாவின் அரசியல் வாழ்க்கை, 2011 முதல் 2016 வரை ராமநாதபுரம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த காலத்தை மையமாக கொண்டது. அவற்றில், சமூகநீதி, சமய ஒற்றுமை, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு அவர் திறம்பட தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார். சட்டப்பேரவையில் அவர் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வாழ்க்கைத்துணைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டன.

அரசியலுக்கு அப்பால், ஜவஹிருல்லா பல சமூக நலத்திட்டங்களில் சோம்பலின்றி ஈடுபட்டு வருகின்றார். அவர் சமய ஒற்றுமைக்கு வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்களுக்கிடையே இடைவெளியை குறைக்கும் பணியில் கஷ்டப்பட்டு வருகின்றார்.

M. H. ஜவஹிருல்லா இன்று தமிழ்நாட்டின் அரசியல் பரப்பில் முக்கியமான தலைவராகத் தொடர்ந்தும் செயல்படுகின்றார், அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் அதிகாரம் என்பவற்றுக்காகப் போராடி வருகின்றார்.

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது / மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

09.01.2024 Chennai 

https://youtu.be/56qaH3wk7e0?si=TELGpAb-rY28ggO_&sfnsn=wiwspwa

சீமான் பேச்சு கண்டிக்கதக்கது, தமிழ்நாட்டின் வரலாற்றை புரியாமல் யாரையோ திருப்தி படுத்துவதற்கு ஆற்றிய உரை - 

மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்

திருமண பதிவுகளை எளிதாக்க, தமிழக அரசு புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. 

இதன் மூலம் வீட்டிலிருந்தே திருமணத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த முடியும். 

பத்திரிக்கை அடித்து, உறவினர்களை கூப்பிட்டு  விருந்து வைத்து திருமணமானது விஷேசமாக நடந்தாலும் அந்த திருமணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே செல்லுபடியாகும். 

எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மனமகள் போட்டா, ஆதார் ஆவணங்கள், வயது சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. 




தற்போது உள்ள சூழலில் பாஃபோர்ட் போன்ற காரணங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் அவசியமாக உள்ளது. 

எனவே இதற்காக மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் முன்பாக கையெழுத்திட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறும்.

திருமண பதிவு - பத்திரபதிவு அலுவலகம்

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு சட்டத்தின் படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைபதிவு செய்ய முடியும். 

இது சட்டம் மாற்றப்பட்டு 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டுவந்தது. 

அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பெரும்பாலானவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று அலைய விரும்பாத நிலையே உள்ளது. 

இதனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்

லஞ்சமாக கைமாறும் பணம்

மேலும் பத்திர பதிவு அலுவலங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள்களோடு லஞ்சமாக பல ஆயிரத்தில் பணமும் கைமாறுவது தெரியவந்தது. 

இதனையடுத்து திருமணத்தை பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பதிவு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

அதன் படி  பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் இருந்தே திருமணத்தை பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். 

திருமணம் செய்துகொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் திருமண பதிவு

தமிழக பத்திர பதிவுத்துறையில் பல்வேறு பணிகள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டார்-2 மென் பொருள் மூலமாக எளிமையாக சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் அடுத்தக்கட்டமாக ஸ்டார்-3 மென் பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

எனவே திருமண பதிவுகள் பொதுமக்களே வீட்டில் இருந்து மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, 7 January 2025

புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான பதவி காலம், 2025 ஜனவரி 5ந்தேதியோடு நிறைவடைந்த நிலையில் 28 மாவட்டங்களுக்கான ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “பொதுமக்கள் புகார் பதிவேடு” முறை பின்பற்றிட கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கையின் அடிப்படையில் எங்கள் ஊரில் பொதுமக்கள் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டுள்ளது. 

நமது நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அதிகாரியை சந்தித்து தங்களது கிராமத்திற்குத் தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்து எழுத்துப் பூர்வமாகமனுக் கொடுத்து பொதுமக்களின்  தேவைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மு. உசைன் கனி
மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
மாநில பொறுப்பாளர்.

Monday, 6 January 2025

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுரை சிக்கந்தர் தர்ஹா பிரச்சினையில் தமுமுக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா பாதுஷா தர்காவில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஒரு ஆட்டுக்கடாவுடன் கந்தூரி ஆக்குவதற்காக 
25/12/2024 அன்று காலை 6 மணிக்கு மலையில் மேல் உள்ள தர்காவிற்கு செல்ல வந்துள்ளனர். வந்த மக்களையும் ஆட்டுக்குட்டியையும் அந்த குடும்பத்தினரையும்
மதுரை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் அவர்கள் தடுத்து நிறுத்தி மேலே பலி கொடுக்கக் கூடாது மேலும் அசைவம் சமைக்க கூடாது என்று தடை உத்தரவு போட்டு பிரச்சனை செய்துள்ளார்.  (எந்த விதமான அரசு ஆணையோ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ) அவர் தன்னிச்சையாக அறிவித்து பிரச்சினை செய்திருக்கிறார்
அதற்கு பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்து  உள்ளூர் மக்களும், இடதுசாரி தோழர்கள் சில நபர்கள் சேர்ந்து ஒரு சிறு குழுவாக போராட்டம் செய்துள்ளார்கள் அவர்களை கைது செய்து மாலை விடுவித்து விட்டார்கள். 

காலங்காலமாக நடைப்பெறும் இந்த சடங்கை காவல்துறை திடீரென தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை குறித்து தர்ஹா நிர்வாகம் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து களத்திற்கு சென்று பார்வையிட்ட நிர்வாகிகள் தமுமுக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

தர்ஹா பிரச்சினை குறித்து விவாதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை 26/12/2024 அன்று மாலை 7 மணிக்கு கூட்டினர். அந்த கூட்டத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் காதர்மெய்தீன் தலைமையில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தர்ஹா பிரச்சினை குறித்து தமுமுக மாநிலத் தலைமையின் கவனத்திற்கு எடுத்து சென்றருப்பதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் உறுதுணையாக இருப்போம் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து 31/12/2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கும் நிகழ்விலும் தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா பள்ளிவாசல் மலைக்குச் செல்லவும் நேர்த்திக்கடன் நிறைவேற்றவும் தடை விதிக்கும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து 05/01/2025 அன்று நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது மற்றும் தெற்கு வடக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைதாயினர். காவல்துறைக்கும் போராடிய மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்கள் உரிமையை காக்க போராடிய எங்களை காவல்துறை தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை விடுதலையாவதில்லையென தெரிவித்தனர். காவல்துறை வேறு வழியின்றி விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். 

06/01/2025 இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் மதுரை சிக்கந்தர் தர்ஹா  பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தனி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் முன்மொழிந்துள்ளார். 

06/05/2025 இன்று தமுமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. மதுரை சிக்கந்தர் மலை தர்ஹா மற்றும் பள்ளிவாசல் வழிபாட்டு உரிமைக்காக போராட்டம் செய்த ஜமாத்தார்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அத்துமீறிய காவல்துறையை கண்டித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை 10/01/2025 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சமுதாய கொந்தளிப்பு பிரச்சினைகளை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போராடுவதே உரிமையை மீட்டு தரும் என்பதை நம் சமுதாயத்தை சேர்ந்த சிலர் புரிந்துக்கொள்வது அவசியம்.

Sunday, 5 January 2025

மதுரை திருபரங்குன்றம் மலை தர்கா மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை - MMK

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


06.01.2025 மதுரை திருபரங்குன்றம் மலை தர்கா மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,MLA அவர்கள் மனு அளித்தார்.

https://www.facebook.com/share/p/18PUkueBnX/  

கறம்பக்குடி அரசு மருத்துவமனை சம்பந்தமாக திமு கழக நகர செயலாளருடன் தமுமுக நிர்வாகக் குழு சந்திப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கறம்பக்குடி அரசு மருத்துவமனை சம்பந்தமாக திமு கழக நகர செயலாளருடன் தமுமுக நிர்வாகக் குழு சந்திப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் மருத்துவர் செவிலியர் வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்கள் கடந்தாண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மக்களின் கோரிக்கை சட்டப்பேரவையில் விவாதத்துக்குள்ளானது!  

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர், சின்னதுரை திரு,விஜயபாஸ்கர் கறம்பக்குடி அரசு மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் Ma Subramanian அவர்கள் பேசியதை திமுகழக நகர செயலாளர் அண்ணன் முருகேசன் அவர்களிடம் சுட்டக்காட்டி விவரித்தோம்  

மேலிட பார்வைக்குச் சென்று விரைவில் பணி ஆவணம் செய்ய வலியுறுத்த கேட்டுக் கொண்டோம் 

நிற்க,

இதற்கிடையில் திமு கழக நகர செயலாளர் முருகேசன் அவர்கள் நம்மிடத்தில்  எம் பி  அப்துல்லா அவர்களின் நிதியானது பிப்ரவரி [அடுத்த] மாதம் கிடைக்க பெறும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் சின்னதுரை அவர்களின் நிதியானதை விரைவில் கிடைக்க வலியுறுத்துகிறேன் மேலும் புதுக்கோட்டை மாவட்ட திமு கழக செயலாளர் செல்ல பாண்டியன் அவர்களிடம் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு சுப்பிரமணி அவர்களை சந்தித்து மருத்துவமனை சம்பந்தமாக முறையிட வேண்டுகிறேன் என்றார்,,

தமுமுக& மமக நகர தலைவர் எம். முகமது புகாரி அவரின் தலைமையிலான இந்த சந்திப்பில்...
புதுக்கோட்டை மாவட்ட  மமக  செயலாளர் 
அ. முகமது சுலைமான், தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர், ச. சேக் தாவூது மாவட்ட துணை செயலாளர் மமக முகமது முபாரக், மமக  ஒன்றிய செயலாளர் 
 நூருல் அமீன் மாவட்ட துணை செயலாளர் தமுமுக அ. முகமது சுபேர், காதர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 
புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு

Tuesday, 24 September 2024

நபிகளின் நாள்: ஓா் அயலானின் பாா்வை! - பழ. கருப்பையா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தினமணி முகப்பு கட்டுரை

நபிகளின் நாள்: ஓா் அயலானின் பாா்வை!
வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்!
 

Updated on: 
16 - 09-2024
பழ. கருப்பையா

வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்!
அந்த அரபுச் சொல்லின் பொருள் ‘நிறுத்துவது; தடைசெய்வது; ஒரு நிலைக்குக் கொண்டுவருவது’ என்பதாகும்!
வசதியானவா்களுக்கிடையே இடைவிடாமல் கைக்குக் கை மாறும் தன்மையுடையது சொத்து! அஃது ஓரிடத்திலேயே நிலையாக நிற்கும் தன்மை உடையதன்று!
ஆனால் ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகத்தின் காலத்திலேயே சொத்தின் ஒரு பகுதியையாவது கைக்குக் கை மாறுவதை நிறுத்தி, அதை ‘நிலைப்படுத்துவது’ குறித்த எண்ணம் இசுலாத்தில் ஏற்பட்டிருக்கிறது!
ஆகவே குா்ஆன் அந்தச் சொத்தை வக்பு செய்யுமாறு சொல்கிறது.
வக்பு செய்வதென்பது, இந்தப் பூமியைப் படைத்த அதன் உடைமையாளனான அல்லாவிடமே, அதன் சிறுபகுதியை ஒப்படைத்துவிடுவது!
அல்லாவிடம் கொடுத்துவிட்டால், அதைத் திரும்பப் பெற முடியாது! ஆகவே அந்தச் சொத்து கை மாறுவது தடுக்கப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டுவிடுகிறது. அதுவே வக்பு!
சொத்து கைமாறல் இன்றி ‘நிலைப்படுத்தப்படுவது’ என்பது யாருக்காக? பூமியையே படைத்தவனுக்கு, வெறும் ஒன்றே முக்காலே அரைக்கால் ஏக்கரை வக்பு செய்துவிடுவதால், அல்லாவுக்கு ஆகப் போவதென்ன?
அல்லா அதைத் தன் பரிவுக்குரிய மக்களுக்காகப் பெறுகிறான்! வாய் உலா்ந்து, வயிறு ஒட்டி, அடுத்த வேளை உணவைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத ஒரு கூட்டம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறதே!
கணவனால் கைவிடப்பட்டு, வயதாகி மறு வாழ்க்கைக்கும் வழியற்றுத் திருப்பத்தூா் பேருந்து நிலைய வாசலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, அகத்திக் கீரை விற்றுக் கொண்டு, அரை வயிற்றுக் கஞ்சியோடு, தன் ஒரு மகளை எப்படிக் கரையேற்றப் போகிறோம் என்று கதி கலங்கி நிற்கிறாளே பாத்திமா, அவளுக்காக! அவளைப் போன்ற மூன்றில் ஒரு பகுதி மக்களுக்காக அல்லா தோற்றுவித்துக் கொண்டதுதான் இந்த வக்பு!
நாம் பொதுவாக அறிந்திருக்கிற ‘அறக்கட்டளை’ போன்ன்று வக்பு! பொதுவாக அறக்கட்டளைகளோடு, சில கடமைகள் இணைக்கப்பட்டிருக்கும்! அந்தக் கடமைகளோடு சோ்த்து, அந்தச் சொத்தின் உரிமையைக் கை மாற்றலாம். அவன் உயிரோடிருக்கும் வரை எந்தக் கட்டளையையும், உயிலையும் மாற்றிக் கொண்டே இருக்கலாம். வக்புவில் அதெல்லாம் நடக்காது! கொடுத்தால் கொடுத்ததுதான்!
மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அவன் யாருக்கும் கைமாற்ற முடியும். மீதியுள்ள இரண்டு பங்கு சொத்து, அவன் கால்வழியினா்க்குப் பங்கிடப்பட வேண்டும்.
ஈட்டுவது மட்டுமே இவன் பொறுப்பு! அதில் மூன்றில் இரண்டு மடங்கு இவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை!
அவனுடைய உடைமையில் மூன்றில் இரண்டு மடங்கு அவன் கால்வழியினா்க்கிடையே இப்படித்தான் பங்கிடப்படும் என்பதையும் இசுலாம் விதிகள் தீா்மானிக்கின்றன.
பெருந்தன்மையான பெருஞ்செல்வன் ஒருவன் நபிகள் நாயகத்திடம் உரையாடுகிறான்!
அப்போது தனது முழுச் சொத்தையும் வக்பு செய்வது பற்றி அவரிடம் சொல்கிறான்!
அது நல்லதுதானே என்று நாம் நினைப்போம்! ஆனால் நபிகள் நாயகம் அதற்கு உடன்படவில்லை. ‘உன் கால்வழியினா் நீ வாழ்ந்த அதே பெருமையோடு, மேட்டிமையோடு வாழ வேண்டாமா? அவா்கள் உன் சந்ததியினா் அல்லரோ?’ என்று கேட்கிறாா்!
பிறகு அந்தச் செல்வந்தன் ‘சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை வக்பு செய்யவா?’ என்று கேட்கிறான்! நபிகள் நாயகம் அமைதி காக்கிறாா்!
‘ஒரு பங்கை?’ என்று அந்தச் செல்வந்தன் கேட்க, நபிகள் நாயகம் தலையசைக்க, அதிலிருந்து மூன்றில் ஒரு பங்கை வக்பு செய்யும் நிலை ஏற்படுகிறது!
ஒருவன் தானாக முயன்று ஈட்டிய பொருளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இந்துச் சட்டம் சொல்கிறது! ஒரு நாய்க்குட்டிக்குக் கூட எழுதி வைக்கலாம்! அஃது அவன் முயன்று ஈட்டியது! ஆகவே அவனுடைய விருப்பமே முக்கியம்! இதை நபிகள் நாயகம் ஏற்கவில்லை! அது போல் இசுலாத்தில் செய்ய முடியாது.
தானே ஈட்டியிருந்தாலும் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு இவன் தருமம் செய்வதை நபிகள் நாயகம் உடன்படவில்லை. இரண்டு பங்கு கால்வழியினா்க்கு! ஒரு பங்கை மட்டுமே இவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!
அதை வக்பு செய்வது மேலானது!
வக்பு செய்யப்பட்டுவிட்டால் அந்தச் சொத்து அல்லாவுக்குரியது! இனிமேல் அவனுக்காக அந்த வக்பை நிருவகிக்கப் போகும் முத்தவல்லிக்கும் அதை விற்க உரிமை இல்லை. எவனுக்கும் ‘பவா் ஆப் அட்டா்னியை’ அல்லா கொடுப்பதில்லை!
அல்லாவின் பேரிலேயே வைத்துக் கொண்டு, அல்லா பரிவு கொண்ட ஏழைகளுக்காக அதைப் பயன்படும்படிச் செய்வதே முத்தவல்லியின் வேலை!
தனி மனிதனுக்கு இறையச்சத்தை ஊட்டி, அவனை ஒழுங்குபடுத்த வந்ததே இசுலாம்! தீா்ப்பு நாளை அவன் அச்சமின்றி எதிா்கொள்வதற்கான வாழ்க்கை முறையைக் கற்பிக்கவே அல்லாவால் நபிகளின் வாயிலாக ‘வகி’ மூலம் இறக்கப்பட்டதுவே திருக்குா்ஆன்!
தனி மனிதனுக்குத்தான் தீா்ப்பு நாள் உண்டு, சமூகத்திற்கு மொத்தமாக இல்லை!
தீா்ப்பு நாளைச் சொல்லி, சமூக அக்கறை உடையவனாக ஒவ்வொரு இசுலாமியனையும் மாற்றுவதையே நபிகள் நாயகம் முதன்மையாகக் கருதுகிறாா்!
தீா்ப்பு நாளில் விசாரிக்கப்படும்போது, ஒருவன் ஐந்து வேளைகளும் தொழுததாகச் சொன்னாலும், ஐம்பெருங் கடமைகளிலிருந்து வழுவியதில்லை என்று சொன்னாலும், தீா்ப்பு நாளைக்கு அதிபதியான அல்லா கேட்பானாம்:
‘வசதியோடு வாழ்ந்தாயே! உன் பக்கத்தில் ஒட்டிய வயிறும், உலா்ந்த கண்களும், காய்ந்து உதடுகளுமாக வாழும் ஏழைகளை நீ நேரடியாகவே அறிந்திருந்தும், அவா்களிடம் பரிவு காட்டினாயா? அவா்களின் பசியிலும் துயரத்திலும் பங்கு கொண்டாயா?’ என்று அல்லா நிறுத்தி வைத்து விசாரிப்பானாம்!
‘இதற்கு என்ன விடை வைத்திருக்கிறாய்?’ என்று நபிகள் நாயகம் கேட்கிறாா்!
சொந்தச் சகோதரா்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ! கிளியே!
செம்மை மறந்தாரடீ!”
இப்படி இங்கே பாராமுக வாழ்க்கைக்குக் கண்டனம் மட்டுமே உண்டு! அங்கே இசுலாத்தில் தீா்ப்பு நாளில் தண்டனையே உண்டு!
செய்தவற்றிற்காகத் தண்டிப்பதை நாம் அறிவோம்! செய்யத் தவறியவற்றிற்கும் தண்டனை உண்டு என்பதை நாம் கேட்டிருக்கிறோமா?
இசுலாத்தின் சிந்தனை தனிப் பெரும் சிந்தனை! எல்லாச் சமயங்களும் தனிமனித மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, நபிகளின் சமயம் அதோடு நிற்கவில்லை! மொத்த மக்களில் மூன்றில் ஒரு பகுதியினா் வறியவா்களாக இருப்பதை அதனால் ஒப்ப முடியவில்லை!
பெரும்பெரும் செல்வந்தா்கள் மூன்றில் ஒரு பகுதிச் செல்வத்தை வக்பு செய்தால் போதும் என்று வரையறை செய்வதன் நோக்கம், மக்களில் மூன்றில் ஒரு பங்கினா் வறுமையை நீக்க அது போதும் என்பதுதான்!
இசுலாத்தில் செய்தே ஆக வேண்டும் என்பதும் உண்டு; செய்தால் நல்லது என்பதும் உண்டு!
உன் பக்கத்தில் உள்ள வறியவனுக்கு நீ ஏன் உதவவில்லை என்பது தீா்ப்பு நாளில் ஒருவனின் மீது சாட்டப்படும் குற்றம் என்னும்போது, இது செய்தே தீர வேண்டிய கடமை ஆகிறது!
பொதுவுடைமைச் சமுதாயம் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமப்படுத்த முயன்றது நிகரற்ற சிந்தனைதான்! ஆனால் பணக்காரனை முற்றாக ஒழித்த அந்தச் சமூகத்தில், ஆட்சியாளா்கள் ‘சலுகை பெற்ற புதிய வா்க்கத்தினராக’ உருவானதால், அது தோற்றது!
ஆனால் இசுலாம் தேவையான அளவு மட்டுமே மேட்டைச் சரிக்கிறது!
அதனால் பட்டாடை அணிபவா்களும், பரிமள கந்தங்களில் மிதப்பவா்களும், படகுக் காா்களில் பயணம் செய்பவா்களும், பகட்டு வாழ்க்கையினரும் இருப்பாா்கள்! ஆனால் பட்டினி கிடப்பவா்கள், படிக்க வழியில்லாதவா்கள், முதுமையைக் கடக்கத் தவிக்கும் விதவைகள், கன்னி கழிய வகையற்ற இளம் பெண்கள் என இத்தகையோா் இருக்க மாட்டாா்கள்! தேவையான அந்த அளவுக்கே மேடு சரிக்கப்படும்!
அவா்கள் அளவிலா அன்புடையோன் நிகரற்ற அருளாளனான அல்லாவின் வக்பு பாதுகாப்பில் இருப்பாா்கள்!
சீனன் ஆண்டாலும், சிங்களவன் ஆண்டாலும், எந்த ஆட்சியாளனையும் நம்பி எந்த இசுலாமியனும் வாழத் தேவையில்லாத, ஒரு பசியற்ற தன்னிறைவுச் சமூகத்தை உருவாக்கவே அல்லா, மிக எளிய முகம்மதுவைக் கையிலெடுத்தான்!
எளிய முகம்மது அல்லாவின் கட்டளைப்படியான அத்தகைய சமூகத்தைக் கட்டமைத்து நபிகள் நாயகமாகப் போற்றப்படும் நிலையை அடைகிறாா்!
நான்கு கலிபாக்களின் ஆட்சியில் அத்தகைய சமூக அமைப்புக்கு முன்னோட்டமும் பாா்க்கப்பட்டது!
தனி மனித உய்வு இசுலாத்தின் ஒரு பகுதி; சமூகமாக அதைத் தன்னிறைவு அடையச் செய்வது, இசுலாத்தின் இன்னொரு போற்றத்தக்க புதிய பகுதி!
இந்தியாவில் பாதிச் சொத்து வக்பு சொத்து; ஆனால் பாதி ஏழைகள் இசுலாமியா்கள்!
எங்கெங்கோ வாழ்கிறோம்; யாா் யாரோ ஆள்வாா்கள்; சைத்தான்கள் கூட ஆளட்டுமே! எந்த அரசின் தயவும் தேவைப்படாத ஒரு தன்னிறைவுச் சமூகம்தானே நபிகளாரின் வழிகாட்டல்! அதைக் கட்டமைக்க ‘தன்னலமற்ற வயிரம் பாய்ந்த தலைமை’ வேண்டும் உமா்போல!
முகம்மது சல்லல்லாகூ அலைகி வசல்லத்தின் நாளில், ஓா் அயலானின் எளிய பாா்வை இது!

கட்டுரையாளா்:
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்.

கம்ப்யூட்டரில் அழிந்த தரவுகளை மீட்க முடியுமா? -மு. உசைன் கனி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கம்ப்யூட்டரில் அழிந்த தரவுகளை மீட்க முடியுமா?
-மு. உசைன் கனி

 தரவுகள் என்பது எல்லாத் துறைகளிலும் மிக முக்கியமானவை. குறிப்பாக நம் கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை, கோப்புகளை (files), புகைப்படங்களை, மற்றும் ஆவணங்களைத் தற்செயலாக இழந்துவிட்டால், அல்லது அழிந்து விட்டால் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
                                                 https://www.suttuviral.com/news/394

Tuesday, 10 September 2024

உணவு முறைப் பழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு முறைப் பழக்கம்
~~~~~~~~

இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே ஏன் தெரியுமா....?

 இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் அலுவலகம், தொழில்,   வேலை, வணிகம், குடும்பம்   என நிறைய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

இதையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேருவதற்குள் தாமதமாகி விடுகிறது. 

எனினும்  இரவு நாம் உண்ணும் உணவை முடிந்த வரை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அப்படி இரவில் சீக்கிரம் உணவை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பற்றித்தான்  இந்தப் பதிவு


இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் அதை சரி செய்ய உடலுறுப்புகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும். 

இதனால் செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகுக்கும். 

ஆனால் பலரும் இரவில் தாமதமாக உண்பதால் செரிமான உறுப்புகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 

இதனால் இரவு உணவு செரிமானமாக தாமதமாகும்.

இரவு தாமதமாக உண்பதன் மூலம் தூக்கம் தடைப்படும்.

உணவை ஜீரணிக்க உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் தூக்கம் நிச்சயம் தடைப்படும். 

இதுவே உணவை நேரத்தோடு உண்ணும்போது சீக்கிரமே ஜீரணமாகி நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு தூங்கும் போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடும். 

ஆனால் இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதுமே உணவை ஜீரணிக்கவே செலவாகிவிடும்.

இதனால் அடுத்த நாள் மந்தமான, சோர்வான உணர்வை கொடுக்கும்.

சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடுவதால், அடுத்த நாள் எந்த மந்தத்தன்மையும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயலாற்றலாம்.

உணவிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்க வேண்டும்.

இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் அதிக நேரம் கிடைக்கும். 

இதனால் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும்.

அதேசமயம் உணவை தாமதமாக உண்ணும் போது இந்த செயல்முறையும் தாமதமாகும்.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக உணவை எடுத்துக்கொண்டால் உடலில் சக்கரையை அதிகரிக்கும்.

இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு நேரமே உண்பதால் சீக்கிரம் செரிமானம் ஆவதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு இரவு நேரங்களிலும் மாலை நேரங்களிலும் குறைந்து விடும்.

இதனால் இரவு தாமதமாக உண்பதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். 

இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் உணவை சீக்கிரம் உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்!

இரவு நேரம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் தாமதமாக சாப்பிடும் பழக்கம் மாறிவிடும்.

நிறைவாக உணவை மருந்தாக்குவோம்..! மருந்தை உணவாக்க வேண்டாம்...!

                                     ~ அமுதம் புக்ஸ்

முக்கிய அவசர உதவி எண்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது ஒவ்வொரு கைபேசியுலும் (Mobile phone),  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும் — 112

2.வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல் — 09383337639

5.போலீஸ் SMS — 9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS — 9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS — 98400 00103

8.போலீஸ் — 100

9.தீயணைப்புத்துறை — 101

10.போக்குவரத்து விதிமீறல — 103

11.விபத்து — 100, 103

12. ஆம்புலன்ஸ் — 102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி – 1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098

15. அவசர காலம் மற்றும் விபத்து — 1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி — 1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

18.கடலோர பகுதி அவசர உதவி — 1093

19. ரத்த வங்கி அவசர உதவி — 1910

20.கண் வங்கி அவசர உதவி — 1919

21.விலங்குகள் பாதுகாப்பு — 044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண் .

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்கு SMS - 95000 99100

இதனை அனைவருக்கும் பகிருங்கள், நன்றி!

Monday, 9 September 2024

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

▪️கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் , ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் , அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.. 

▪️இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து , சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு  வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்.. 

▪️இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில  தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களிடம் தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களையும் துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக இவருக்கு எக்ஸிட் அடிக்க சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்து நேற்று இரவு சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர்.

▪️ அதனைத் தொடர்ந்து நேற்று 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமான மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம் அவர்கள் பயண துணையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.. 

▪️இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாதில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும்.. 

▪️மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் , அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

▪️மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது

▪️கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய RT தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவர் ரீதியாக உதவிய மரு. அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர். ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகை இல்லை. இதற்கு உதவிய அனைவருக்கும் இதய அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..

▪️ கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் , நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்... 

▪️இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது , 
பிறர் நலன் பேணுவது தான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும் , தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும்  இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம்... 

என்றென்றும் மனிதநேய சேவையில்..

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா

Thursday, 15 August 2024

பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி



பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி: 15.08.2024 

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்ச்சி பரமக்குடி சிறுவர் பூங்கா அருகில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தக்வா மதரஸா சிறுவர்கள் தேசியக் கீதம் பாடினர். மேலும் மதரஸா சிறுவர்களின் சுதந்திர தின உரை மற்றும் சுதந்திர சிறப்பு பாடல்  ஆகியன நடந்தது.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் பொறியாளர் சாதிக் பாட்சா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்துல் காதர், நகர தலைவர் முகம்மது சஜித்,  நகர் தமுமுக செயலாளர் நல்ல இப்ராஹீம்,மமக செயலாளர் சர்க்கரைக் கனி, பொருளாளர் அப்துல்லா, MTS செயலாளர் அப்துல் அஜீஸ், தெற்கு பள்ளி வார்டு செயலாளர் ரஹீம், இப்ராகிம் ஷா, நவாஸ் கான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தக்வா பள்ளிவாசல் இமாம் தாஹிர் சைஃபுதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Monday, 24 June 2024

அம்மாபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அம்மாபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? 

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் 

#mmkitwing #jawahirullamla #பாபநாசம்#Papanasam
👇👇👇
https://www.facebook.com/share/v/EHEcAz1M1ECtrwFG/?mibextid=oFDknk
👇👇👇
https://x.com/mmkhqofficial/status/1805166973594321253?t=COWV5AENta5x4vOnAh5bAg&s=19

Thursday, 6 June 2024

லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்.. தேர்தலில் கட்சிகளின் பாரபட்சம்? 2014க்கு பின் நடந்த மாற்றம் By Yogeshwaran Moorthi Published: Thursday, June 6, 2024, 15:01 [IST] சென்னை : 543 எம்பி-க்களை கொண்டுள்ள லோக்சபாவில் 26 இஸ்லாமிய எம்பி-க்கள் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டனி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவிகிதமும், எம்பி-க்களின் பிரநிதிதித்துவம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் முடிவுகள் அதன்படி 18வது லோக்சபா தேர்தலில் மொத்தமாக 26 இஸ்லாமிய எம்பி-க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

 

லோக்சபாவில் மொத்தவுள்ள 543 எம்பி-க்களில் வெறும் 26 பேர் மட்டும் இஸ்லாமிய எம்பி-க்கள் என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவிலும் இஸ்லாமிய எம்பி-க்களின் எண்ணிக்கையும் 26ஆக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே எண்ணிக்கையிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் செல்கின்றனர். லோக்சபா வரலாற்றில் 2014ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தான் குறைந்த அளவிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் சென்றனார். அப்போதைய எண்ணிக்கை 22ஆக இருந்தது. அதேபோல் 1980 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 49 இஸ்லாமிய எம்பி-க்களே தேர்வு செய்யப்பட்டதாக அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

 

இந்தியாவில் 2வது அதிகபட்ச வாக்கு வங்கியையும் வைத்திருந்தாலும் இஸ்லாமிய எம்பி-க்களின் பிரதிநிதித்துவம் 10 சதவிகிதம் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chandrababu Naidu - Stalin சந்திப்பு…பாஜகவுக்கு Message சொன்ன Stalin | Oneindia Tamil ஏனென்றால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடிய சக்தியாக இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர்.

 

அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய கட்சிகள் இஸ்லாமியர்களை வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் குறைத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் வெறும் 19 இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 13 பேருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 6ஆக குறைந்துள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சியும் இணைந்துள்ளது. கடந்த தேர்தலில் 8 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. இந்த தேர்தலில் 4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Advertisement முத்தலாக், 370-வது பிரிவு நீக்கம், 33% இடஒதுக்கீடு, செங்கோல்..17-வது லோக்சபாவில் மோடியின் கடைசி உரை!

 

இதுமட்டுமல்லாமல் 2019 லோக்சபாவில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் மொத்தமாக 115 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 78 பேருக்கு மட்டுமே இந்த கட்சிகள் வாய்ப்பு கொடுத்துள்ளன. அதேபோல் 2014ல் பகுஜன் சமாஜ் கட்சி 61 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுத்த போதும், இந்த தேர்தலில் 35 பேருக்கு மட்டுமே போட்டியிட அனுமதித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே மற்ற கட்சிகள் இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இது மாற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறுகின்றனர். அதேபோல் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே வாக்களித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

Tuesday, 4 June 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

காந்தியின் இந்தியாவுக்கு மக்களின் ஆதரவு, கோட்சேவின் மதவெறி பாசிசத்திற்கு மறுதவிப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த தேர்தல்களில் இருவேறு கருத்துக்கள் நேரடியாக மோதிக் கொண்ட இந்த தேர்தலில் காந்தியக் கருத்தியலை ஓங்கி முழங்கிய இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு காந்தியத்தை இழிவு செய்து கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான செயல்பாடு மக்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்பட்ட பிரதமர் மோடி முஸ்லிம்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தி அவதூறாக பேசியதற்கு தேர்தல் ஆணையம் ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பியது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 

 * எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் முகமைகள் வேட்டை நாயாக பாய்ந்தன. 
 * ஜார்கண்ட் முதல்வர் மற்றும் டெல்லி முதல்வர் சிறையிடப்பட்டனர். 
 * திமுக அரசுக்கு சொல்லன்னா இன்னல்கள் பாஜகவால் தரப்பட்டது.
 * காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
 * பதிவான மொத்த வாக்குகளை அறிவதற்குக்கூட உச்சநீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது.

அதேநேரம் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உலகின் இமாலய ஊழலாக பேசப்பட்டது, மோடியின் பி.எம். கேர் ஊழல் உலகின் பெரிய ஊழலாக கருதப்பட்டது. பணபலம் அதிகார பலம் இவற்றோடு சுயசார்பு ஜனநாயக நிறுவனங்களையும் முடக்கி ஆட்கொண்டு ஊடகங்களை தனது காலடியில் பணிய வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. 

சம போட்டி இல்லாத சூழலிலும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை முன்னிறுத்திய கருத்துகளுக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது. இத்தகைய வலிமையோடு இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த திமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு தேசத்தைத் தட்டி எழுப்பிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

முதல் ஐந்து சுற்றில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்ததும், வாரணாசிக்குப் பிறகு இந்துக்களின் இன்னொரு புனிதத் தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் கே. நவாஸ் கனி முன்னிலை வகித்ததும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்தி இருக்கிறது. காந்தியின் இந்தியா மீண்டெழும் என்பதற்கு இம்முடிவுகள் சான்றாக உள்ளன. 

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

#ElectionsResults #400Paar #mmkitwing #jawahirullahmla