Monday 30 March 2020

கலவரத்தில் என்னட்ட முஸ்லீம்கள் கொன்றொழிக்கப்பட்டர்கள்

மனிதநேயம் எங்கே இருக்கிறது பாருங்கள் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி கலவரத்தில் என்னட்ட முஸ்லீம்கள் கொன்றொழிக்கப்பட்டர்கள்
கொன்று ஒளித்தவர்கள் எல்லாம் UP சங்க பரிவர கூட்டம் இத்தனையும் நடந்த பின்பும் முஸ்லிம்கள் மனிதநேயத்துடன் செயல்படுவதை பாருங்கள் முழு ஊரடங்கு உத்தரவல் டெல்லியில் இருந்து UP வரையும் சொந்த ஊருக்கு கால்நடையாக நடந்து வரும் மக்களுக்கு பசி போகின்ற முகமாக முஸ்லீம்கள் பழங்களையும் தண்ணீரையும் பிஸ்கட் களையும் வழங்கி அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு செயல்படுகிறார்கள் இங்குதான் உண்மையான மனிதநேயம்

அணிந்திருந்த செருப்பையும் தர்மம் செய்யும்

உணவு தண்ணீர் தர்மம் செய்யும்
இஸ்லாமியர்களிடம்

காலுக்கு செருப்பு இல்லை என்று ஒரு பெண்மணி கேட்டபொழுது

அணிந்திருந்த செருப்பையும்
தர்மம் செய்யும்

பண்பு இதுதான்

இஸ்லாம் இஸ்லாமியர்களுக்கு கற்றுக்கொடுத்தது

Friday 27 March 2020

தயவுசெய்து தனித்து இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள், தைரியமாக தன்னம்பிக்கையோடு வீட்டிலேயே இருங்கள்.

1. இத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்... உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு காட்சி.

2. எத்தியோபியா செல்லும் விமானத்தில் corona நோயாளியால் மக்கள் பீதி அடைந்து வெளியே குதிக்க, போலீஸ் துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக வரும் வீடியோ.. உண்மை இல்லை. அது rescue operation drill பயிற்சி.

3. Jio வின் lifetime free recharge. உண்மையில்லை. நல்ல கற்பனை. மேலும் விவரங்களுக்கு அலையுது பார் அல்பம் என்ற வலைதளம் சென்று பார்க்கலாம்.

4. பிணங்களை புதைக்க இடம் இல்லாமல் இத்தாலியின் அதிபர் அழுகின்ற புகைப்படம்... உண்மை இல்லை. படத்தில் இருப்பவர் முதலில் இத்தாலியின் அதிபரே இல்லை.

5. தென்னாப்பிரிக்க பாதிரியார் Corona அழிக்க அனைவரின் வாயிலும் Dettol ஊற்றிய புகைப்படம்.. உண்மை இல்லை. அது 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம். Coronaவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

6. இந்தியாவைத் திட்டி UNESCO போட்ட ட்வீட்.. உண்மை இல்லை. இப்படி fake அக்கவுண்ட் உருவாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய உள்ளது.

7. ரஷ்ய மக்கள் வெளிவரக் கூடாது என அதிபர் புடின் 500 சிங்கங்களை வெளியில் சுற்ற விட்டுள்ளார்... உண்மை இல்லை. அந்த புகைப்படம் வேறொரு சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பழைய படம். அந்த புகைப்படத்தில் இருக்கும் சாலை ரஷ்யாவே இல்லை.

8.இத்தாலி basilica மீது மனித பறவை ஒன்று ஏறுவது போல் உள்ள காட்சி உண்மை இல்லை,அது ஒரு திரைப்படத்திற்கான graphics காட்சி....

9. எல்லாமே பொய் என்றால் எதுதான் உண்மை? சரியான காரணம் இன்றி வெளியே சுற்றி திரியும் இளைஞர்களை போலீஸ் தர்ம அடி அடிக்கும் வீடியோ.. உண்மைதான். வீம்புக்கு ஊர் சுற்றினால் உம்மாவா கொடுக்க முடியும்?

பொண்டாட்டி புள்ள குட்டிய வீட்டுல விட்டுட்டு உசுர பணயம் வச்சி இரவு பகல் பார்க்காம வேலை செய்து கொண்டிருக்கும் காவல்துறையும் மனிதர்கள்தான். அடி வேண்டாம் என்றால் அமைதியாக வீட்டில் இருங்கள்.

Stage 2 வில் இருந்து மிக மிக முக்கியமான கட்டத்தை நாடு தாண்டி கொண்டு இருக்கின்றது. தயவுசெய்து தனித்து இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள், தைரியமாக தன்னம்பிக்கையோடு வீட்டிலேயே இருங்கள்.

Courtesy- Putchutney Rajmohan👍


உங்கள் நன்பனான AS

Covid-19: Dubai initiates online permit system to step out during UAE Sterilisation Program

Covid-19: Dubai initiates online permit system to step out during UAE Sterilisation Program

துபை வாழ் நண்பர்களுக்கு,
(நீங்கள் அறிந்திராத செய்தி)

கொரோனா வைரஸ் (#COVID19) தொற்று காரணமாக வார இறுதி நாள்களின் (வியாழன் முதல் சனி வரை) இரவு 8:00 மணி தொடங்கி மறுநாள் காலை 6:00 மணி வரையிலும், நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது நாம் அறிவோம், இதனால் வார இறுதி நாள்களான வியாழன், வெள்ளி & சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட/பயணிக்க அனுமதி இல்லை என்பதும் நாம் அறிந்ததுதான்.

ஆனால், தடை செய்யப்பட்ட நேரத்தில் ஏதும் அவசரமாகவோ அத்தியாவசியத்திற்காகவோ (உணவகம், மருத்துவமனை, மருந்தகம்) செல்ல வேண்டியிருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, கீழே கமெண்ட் பாக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கும் வெப் சைட்டுக்குச் சென்று, உங்கள் மொபைல் எண் கொடுத்துப் பதிந்தால், OTP எண் கிடைக்கும். அந்த OTP எண் உதவியுடன் அடுத்த பக்கத்திற்குச் சென்று, உங்கள் பெயர், அடையாள அட்டை எண் (National ID OR Passport OR Driving License), வாகன எண், வெளியில் வரும் காரணம் மற்றும் இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் வரை என்ற கால அளவும் தெரிவித்தால், நமக்கு அனுமதியளிக்கும் குறுஞ்செய்தி நமது மொபைலுக்கு வரும்.

பாதுகாப்பிலிருக்கும் அதிகாரிகள் சோதிக்க நேர்ந்தால் இந்த குறுஞ்செய்தியைக் காண்பிக்க வேண்டும்.

பதிவு செய்யாத பயணங்கள் சட்ட விரோதமாகக் கருதப்பட்டு, உரிய சட்ட ரீதியான தண்டனைகள் கிடைக்கும்.

சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்துவோம்.

Register in Movement Permit System >> https://movepermit.gov.ae/home

News >> https://www.khaleejtimes.com/coronavirus-outbreak/covid-19-dubai-launches-permission-system-to-leave-home-during-uae-sterilisation-program---

Source: Khaleej Times

உங்கள் நன்பனான AS

Friday 20 March 2020

கொரோனா வந்தால், கடவுளிடம் முறையிடலாம், அந்த கடவுளுக்கே கொரோனா வந்தால்?

கொரோனா வந்தால், கடவுளிடம் முறையிடலாம், அந்த கடவுளுக்கே கொரோனா வந்தால்? ஆட்சியாளர்கள்தான் முட்டாள்கள் என்றால், மருத்துவருமா? கடவுளை, கடவுளை நம்பாதவர்களைவிட, இவனுங்க அதிகம் கேவலப்படுத்துறானுங்களே? என்ன கொடும சார் இது?

அதுங்க உலகமே தனி.

அதுங்க உலகமே தனி.

இந்திய நீதிமன்றம்

உங்கள் நன்பனான AS

Saturday 14 March 2020

டெல்லி கலவரம் குறித்து திரு.கபில் சிபல் மேலவையில் பேசியதைக் கேட்டுப்பாருங்கள்....

டெல்லி கலவரம் குறித்து திரு.கபில் சிபல் மேலவையில் பேசியதைக் கேட்டுப்பாருங்கள்....  ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்திருக்கிறார். ஹிந்தி புரியாதவர்களுக்கு அவர் உடல்மொழி புரிய வைக்கும் 😊 
👇👇👇


வலிமிகு வார்த்தைகளை மிக அழகான உடல் மொழியோடு எதிர் தரப்பினரை சாட்டையால் அடித்து இருக்கிறார் கபில்சிபல்.

உங்கள் நன்பனான AS

Wednesday 11 March 2020

ஆகாய ஆச்சரியம்.!

•#ஆகாய ஆச்சரியம்.!
🐦
•அர்ஜென்டினாவில் இருந்து #பார்ன் #சுவாலோ என்ற சின்னஞ்சிறு #பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

•இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

•ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?

•அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

•பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!


உங்கள் நன்பனான AS

மருத்துவ சேவை அணி கவனத்திற்க்கு*

*மருத்துவ சேவை அணி கவனத்திற்க்கு* 👆

Thursday 5 March 2020

Parliament UK

காலியாகிறது_இந்தியாவின்_கஜானா… #தங்கத்தையும்_விற்கும்_ரிசர்வ்_வங்கி!

*📛 #காலியாகிறது_இந்தியாவின்_கஜானா… #தங்கத்தையும்_விற்கும்_ரிசர்வ்_வங்கி!*

கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளது.

#நரேந்திர_மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும். தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

Source: NEW INDIAN EXPRESS

தமிழாக்கம்: நியூசு.இன்


உங்கள் நன்பனான AS

Shocking

#Shocking

இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டான்டன் என்பவர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இந்தியாவில் கஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள நிலைமைகளைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இவர் இனப்படுகொலை கண்காணிப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தியவர்.

இந்தியாவில் முஸ்லிம்களின் இன அழிப்புக்கான பத்து படிகளை முன்வைத்துள்ளார். அவை:

1. வகைப்படுத்துதல் - மக்களை நாம் மற்றும் அவர்கள் என வகைப்படுத்துதல்.

2. அடையாளப்படுத்துதல் - பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் என அடையாளப்படுத்துதல்.

3. பாகுபாடு காணுதல் - குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து நாடற்றவர்களாக ஆக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித உரிமையும் கிடைக்காமல் செய்வதன் மூலம் மக்களிடையே பாகுபாடு காணுதல்.

4. மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல் - அவர்களை தீவிரவாதி என்றும் மனித சமூகத்தைப் பீடித்த நோய்க் கிருமிகள் எனவும் வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல்.

5. இன அழிப்பை செய்வதற்காக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துதல் - உதாரணம் கஷ்மீரில் ராணுவம் அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு அதிகாரிகள்.

6. ஒன்றுகுவித்தல் - பிரச்சாரங்களின் மூலம் மக்களை ஒருபக்கமாக ஒன்று குவிப்பதன் மூலம் குறிப்பிட்ட மக்களை தனிமைப்படுத்துதல்.

7. தயாரிப்பில் ஈடுபடுதல்.

8. துன்புறுத்துதல் - கஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் தற்போது நடந்து கொண்டிருப்பது.

9. ஒட்டுமொத்தமாக மக்களை அழித்தொழித்தல்.

10. மறுப்பு - செய்த படுபாதக செயலை மறுத்தல்.

டாக்டர் ஸ்டான்டன் ஏற்கனவே ருவாண்டா, புருண்டி, கம்போடியா மற்றும் ரோஹிங்யா இனப்படுகொலைகள் தொடர்பான உலக குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபை சார்பில் தீர்மானங்களை வரைவு செய்தவர்.

தற்போது இந்தியா இன அழிப்பை நோக்கி நகர்கிறது என இவர் அறிக்கை அளித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் பகிர்ந்துள்ளது இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது...
Ahamed Meeran

Monday 2 March 2020

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

அநியாயம் செய்வோறே இன்ஷா அல்லாஹ் நீங்கள் சீக்கிரம் அழியக்கூடிய நேரம் வந்துட்டது இன்ஷா அல்லாஹ்.

உன்னைப் பெற்றது ஒரு தாய் ஆனால் உன்னை வளர்த்தது RSS BJP இது உனக்கு சாபம் உன்னை வளர்த்தவரனுக்கும் சாபமே.

உன் பார்வையில் இந்த பெண் மற்றும் குழந்தை என்ன பாவம் செய்ததுடா???
ஐயோக்கியன்

நீ இந்த போட்டோவை உனது தாயிடம் காண்பித்து பார்

உன்னை 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்ததற்கு

நீ எனக்கு செய்த மகத்தான சேவையாட இது என்பாள்

RSS BJP சங்கீகளே
தேச விரோதி அமித்ஷா வே நாட்டின் நயவஞ்சக மோடியே

இன்ஷா அல்லஹ்
உன்மீதும் உன் கூட்டத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இரங்கட்டுமாக

ஆமீன்



இந்த செயல்
பெரும்பாலான தாய் மார்களின் சாபம் வரும் முன் நீ திருந்திவிடு

Sura Yaseen 26 to


قِيْلَ ادْخُلِ الْجَـنَّةَ  ؕ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ‏ 
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக" என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."
(அல்குர்ஆன்: 36:26)

இவ்வசனத்தில் (36:26) ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்'' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.

அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்பது இவ்வசனம் கூறும் கருத்து.

கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.

இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்துப் பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர். (நூல்: முஸ்லிம் 3834)


"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!" எனக் கூறுவார்கள்.

[அல்குர்ஆன் 41:30]

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

[அல்குர்ஆன் 3:169]

بِمَا غَفَرَلِىْ رَبِّىْ وَجَعَلَنِىْ مِنَ الْمُكْرَمِيْنَ‏ 
"என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்" (என்பதை).
(அல்குர்ஆன்: 36:27)

وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى قَوْمِهٖ مِنْۢ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُـنَّا مُنْزِلِيْنَ‏ 
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
(அல்குர்ஆன்: 36:28)

اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ‏ 
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
(அல்குர்ஆன்: 36:29)
ஹாமிதூன் : அழிந்து போனார்கள்

அந்தாகியா அல்ல 
தவ்ராத்க்கு பிறகு நடந்தது 
மூஸா அலை பிறகு எந்த சமுதாயத்திற்கு பிறகு அழிக்க வில்லை 

ஸூரா கஸ்ஸ் 13 

அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிர்வதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரை (மூஸாவை) அவரிடம் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

[அல்குர்ஆன் 28:13]

3:125

அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும்போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

[அல்குர்ஆன் 3:125]

يٰحَسْرَةً عَلَى الْعِبَادِ ؔ‌ۚ مَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏ 
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
(அல்குர்ஆன்: 36:30)

يٰحَسْرَةً عَلَى الْ கைசேதம் 




اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَيْهِمْ لَا يَرْجِعُوْنَؕ‏ 
"அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்" என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
(அல்குர்ஆன்: 36:31)


وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ‏ 
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.  
(அல்குர்ஆன்: 36:32)

وَاٰيَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَيْتَةُ  ۖۚ اَحْيَيْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَاْكُلُوْنَ‏ 
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
(அல்குர்ஆன்: 36:33)

وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ‏ 
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
(அல்குர்ஆன்: 36:34)

لِيَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَـتْهُ اَيْدِيْهِمْ‌ ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏ 
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
(அல்குர்ஆன்: 36:35)

سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏ 
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
(அல்குர்ஆன்: 36:36)

وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ  ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ‏ 
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
(அல்குர்ஆன்: 36:37)


உங்கள் நன்பனான AS