Friday 14 March 2014

துயமனதுடன் இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றேன் என கூறி தன் பெயரை அஹ்மது என மாற்றிகொண்டர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடிஅல்லாஹ்வின் 
மாபெரும்  கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் இறைகோட்பாடு பற்றியும் சகோதரர் கோகுல் குமார் என்ற சகேதரருக்கு எடுத்து கூறப்பட்டது . அதன் அடிப்படையில் அவர் துயமனதுடன் இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றேன்  என கூறி தன் பெயரை அஹ்மது என மாற்றிகொண்டர். அல்ஹம்துலில்லாஹ் .

சகேதரர் A.S.இப்ராகிம் கலிமா சொல்லி கொடுத்தார் 

அந்த சகோதரரிடம் நமக்காக துவா செய்யும்படி கேட்டுகொண்டோம் 

அல்லாஹ்  நம்முடைய  அழைப்பு பணியை ஏற்றுக்கொள்வானாக 





Wednesday 12 March 2014

பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்ப்பனிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில்


துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.



சபியுல்லாஹ்


இர்ஷாத் அஹ்மது


அப்துல் ரஹ்மான்

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் 12.03.2014 அன்று இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Monday 10 March 2014

சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

உலகின் சிறு வயது பேராசிரியர் என்ற பட்டத்தை வென்று கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவை சேர்ந்த 13 வயது முஸ்லீம் சிறுவன்.

உலகின் மிகவும் வயது குறைந்த பேராசிரியராக இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.



இவர் தன்னைவிட இருமடங்கு வயது உடையவர்களுக்கு அனிமேஷன் குறித்த பாடங்களை சொல்லி கொடுக்கின்றார்.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டோராடூன் என்ற நகரை சேர்ந்த அமன் ரஹ்மான் தான் இந்த சாதனையாளர்.

இவர் தனது எட்டாவது வயதிலேயே பேராசிரியராக அதிகாரபூர்வமற்ற முறையில் பணிபுரிந்துள்ளாராம். தற்போது 13 வயதாகும் இவருக்கு பேராசிரியர் பதவி சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இவர் கரும்பலகையின் உயரம் கூட இல்லாத நிலையில் நாற்காலியின் மீது ஏறி கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுத்துள்ளார்.



கம்ப்யூட்டர் அனிமேஷன் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்கும் இவர் அனிமேஷனில் பல புதிய யுக்திகளை மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் கற்றுத்தருகிறார்.

இவருக்கு டேராடூன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

இவர் தனது 18 வயதை பூர்த்தி செய்தவுடன் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் கல்லூரியில் சேர்ந்து தனது அனிமேஷன் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டு பின்னர் இந்தியா வந்து சொந்தமாக அனிமேஷன் கல்வி நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்.

மாணவர்களே, படிப்பில் கவனம் செலுத்துங்கள் அல்லாஹ் நாடினால் உங்கள் ஒவ்வொருவரையும் இதுபோன்ற சாதனையாளராக ஆக்குவான்.

விழுந்து விழுந்து சிரித்து ரசித்த பதிவு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விழுந்து விழுந்து சிரித்து ரசித்த பதிவு:

தமுமுக வினர் திமுக வில் இருப்பதால் தான் நீங்கள் அதிமுக வை ஆதரித்ததாக பேசப்படுகிறதே அதைப்பற்றிய கருத்து என்ன ??

சகோ பீஜே பதில்:

தேர்தல் ஆதரவிற்காக நாங்கள் கணக்கிடுவது சமுதாய நன்மைகளை மட்டுமே..அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை..

தமுமுக வினரை நாங்கள் கணக்கிலே எடுத்துக் கொள்ளவுமில்லை....

மேலும் தமுமுக வை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை...

உண்மையா 

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் , அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி கொள்ளுங்கள்

அம்மாவுக்கு ஆதரவு -ADMK - TNTJ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அம்மாவுக்கு ஆதரவு

யாரு நம்மளை 2 அடி அடிக்கிறா / 10 அடிக்கிறானு  பாருங்க  சொன்னது யாரு

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் , அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி கொள்ளுங்கள்

தயவு செய்து ஆணவம்  வேண்டாம் 

மக்களை அழைக்கிறது இஸ்லாம் இந்த வழியில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மக்களை அழைக்கிறது இஸ்லாம் இந்த வழியில்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பி.ஜெயினுலாப்தீன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பி.ஜெயினுலாப்தீன் அவர்கள் முதல்வரை சந்தித்து கூறியதாக தினமணியில் செய்தி இருக்கிறது.

அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கிய கட்சி திமுக. அதை எதிர்த்த கட்சி அதிமுக. இப்போது உயர்த்திக் கேட்டதைக்கூட இவ்வளவு நாள் ஆறப்போட்டு தேர்தல் நேரத்தில் அதை சிறுபான்மைக் கமிஷன் ஆய்வுக்கு ஜெயலலிதா அனுப்பியதிலிருந்தே ரெட்டைவேஷத்தை புரிந்து கொள்ள வேண்டாமா?

கலைஞர் மோடியை நண்பர் என்று சொன்னாரே என்று கேட்கிறார்கள். அரசியலில் ஒருவரை நாகரிகத்தோடு நண்பர் என்று சொல்ல்யிருக்கிறார். சவூதி அரேபியாவுக்கு நட்பு நாடாக இந்தியா இருக்கிறது. ஒரு பள்ளிவாச்லை இடித்த நாடு என்பதற்காக எதிரி நாடு என்றா சொல்லிவிட்டது? அது அரசியல்.

செயல்பாட்டைப்பாருங்கள். கரசேவைக்கு ஆளனுப்பியது ஜெயலலிதா அல்லவா... செங்கல் அனுப்பியது ஜெயலலிதா அல்லவா... முஸ்லீமகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் எல்லா சாதியினரும் கேட்பார்கள் என்று எதிர்த்தது ஜெயலலிதா அல்லவா... சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு அடங்கித்தான் நடக்க வேன்டும் என்று சொன்னது ஜெயலலிதா அல்லவா... மதமாற்ற தடைச்சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினரை அச்சுறுத்தியது ஜெயலலிதா அல்லவா... சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை மமக வைச்சேர்த்துக்கொண்டு பாஜக எதிர்ப்பு வேஷம் போட்டுக்கொண்டு, முடிந்தவுடன் பதவி ஏற்பு விழாவிற்கு மோடியை அழைத்தது ஜெயலலிதா அல்லவா...

இதில் எதிலிருந்து ஜெயலலிதா மாறியிருக்கிறார், நீங்கள் ஆதரவு கொடுக்க. குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்பே அதிகப்படுத்திக் கொடுத்திருந்தாலாவது உங்கள் செயலில் ஒரு நியாயம் இருக்கும்.

மமக எங்கிருக்கிறதோ அதற்கு எதிரான நிலை என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு சமுதாயத்திற்கு எது பலனளிக்கும் என்று பாருங்கள். மமக ஒன்றும் எதிரிகளல்ல. கொளகையை யார் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது என்கிற கருத்து வேறுபாடுதான் உங்கள் இருவருக்குமே..

ததஜ ஆதரவாளர்களிடம் ஒரு கேள்வி. உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், அதிமுகவுக்கு வாக்களித்தால் இந்த சமுதாயத்திற்கு நல்லதா? பிஜே சொன்னதற்காக வாக்களிக்காதீர்கள், உங்கள் மனசாட்சியைக் கேட்டு வாக்களியுங்கள். நீங்கள் அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளுமே மோடிக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தவறான முடிவெடுத்து எதிரிக்கு பலம் சேர்த்துவிடாதீர்கள்.....

Sunday 9 March 2014

நாளை துபாயில் பேச்சுப்பயிற்சி நடைபெறும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
நாளை துபாயில் இரவு 8.30 மணியளவில் அளவில் பேச்சுப்பயிற்சி ( குரூப் டிஸ்கஸ் ) நடைபெறும்.  சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .


அமீர் - இர்ஷாத்  050-2426380

விமானம் புறப்பாடுக்கு முன் தாய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விமானம் புறப்பாடுக்கு முன் தாய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது... ஆனால் இப்பொழுது விமானம் காணவில்லை.... இதுதான் நாம் வாழுகின்ற வாழ்கை.... ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும்
மரணம் நாம் அனைவரையும் நெருங்கி கொண்டுதான் இருக்கிறது... மறுமைக்கு அஞ்சி வாழுவோம் இன்ஷா அல்லாஹ்.

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களூக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ";இது உம்மிடமிருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே" (4:78) 
மேலும்,
இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடபீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)

Wednesday 5 March 2014

சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இன்ஷா அல்லாஹ், மார்ச் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் நல்லதொரு முடிவை எடுத்து, சிறந்ததொரு வேட்பாளரை தேர்வு செய்து மயிலாடுதுறை தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

தலைவர் - தமுமுக
துபாய் 

தமுமுகவை ஊடகங்களால் மறைக்கப்படும் சேவைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாதி, மதம் பாராமல் அனைத்து சமுக மக்களுக்காகவும் உழைக்கும் தமுமுகவை ஊடகங்களால் மறைக்கப்படும் சேவைகள்..- இந்தியாவிலியே அனைத்து சமுக மக்களுக்காக 110 ஆம்புலன்ஸ் சேவைகள்- அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம்..- ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள்..எண்ணுக்கு அடங்காத சேவைகளை எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவை நடுநிலை என்று சொல்லும் ஊடகங்கள் மறைப்பது ஏன்..?

சேவைகளில் தனது தனி பெயரை வைத்துக் கொண்டு செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் தமுமுகவின் அரசியல் பிரவான மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறிப்பினர்கள்.. தமிழகத்தில்லேயே ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத சட்டமன்ற உறிப்பினராக சேவை செய்து கொண்டு இருக்கின்றனர்.. தான் ஊழல் செய்ததை நிருபித்தால் தனது கட்சியையே கலைக்க தயார் என்று மக்கள் மன்றத்தில் சொன்ன ஒரே கட்சி மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே...

ஆனால் இதையேல்லாம் பற்றி ஊடகம் மறைப்பாதால் தான் இன்றும் நமது சமுகத்திற்க்கும், பிற சமுக மக்களுக்கும் நம்மை பற்றி அறிய வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது..யார் அதிகம் காசு கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு வசபாடுவதும்., சினிமா கூத்தாடிகளை வரம்பு மீறி புகழ்வதும் தான் தனது வாடிக்கையாக அமைத்து கொண்டு உள்ளனர்..இந்நிலை எப்போழுது மாறும்..மாறினாலும் மாறாவிட்டாலும் சேவைகள் தொடரும், கடைசி மூச்சு இருக்கும் வரை (இறைவன் நாடினால்) 

thanks sultan...

துபாயில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் 
வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் 
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடிஅல்லாஹ்வின் 
மாபெரும்  கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 04.03.2014 இரவு 8.45 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர்  சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில்  ஹதீஸ் கலை  பயிற்சி நடைபெற்றது.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 

கடைசி 4th தலைப்பு ளயீப் (பலவீனமானது) பார்க்கபட்டது இன்ஷாஅல்லாஹ்  வரும் வாரங்களில் 
பேச்சுப்பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்க பட்டதுஇதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,..

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு

டெல்லி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை 9 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் 6வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.



Tuesday 4 March 2014

சென்னை பல்கலைக்கழகம் அளித்த தங்கப்பதக்கம் - அசாருதீன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வை நடத்தியது.இதில் 5929 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் தேந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலை கழகம் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சென்னை ஆலந்தூர் கிளையில் துணை செயலாளராக இருக்கும் பி.இ மெக்கானிகல் இஞ்சினியர் மாணவரான அசாருதீன் இந்த பொறியியல் தேர்வில் கலந்து கொண்டு 50 வது இடத்தை பிடித்திருந்தார்.அவருக்கு சென்னை பல்கலை கழகம் தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டியது. அந்த படத்தைதான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

கல்வியில் பின் தங்கிய சமுதாயமாக இருக்கின்ற இஸ்லாமிய சமூக மாணவ-மாணவிகள்,மாணவர் அசாருதீனைப் போலவே பதக்கங்களும் விருதுகளும் பெற வேண்டும் என்கிற லட்சிய வேட்கையுடன் படிக்க வேண்டும்.விடா முயற்சியும் கடின உழைப்பும் தான் இந்த லட்சியத்தை அடையும் படிக்கட்டுகள்.

அசாருதீனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துக்கள்


தொகுதி உடன்பாடு - MMK

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




தொகுதி உடன்பாடு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தலைமையில் நானும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பி. அப்துல் சமது ஆகியோரும் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றோம்.

திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

நமது தரப்பில் இரண்டு தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக முன் வைக்கப்பட்டது. அப்போது நமது கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்ட திமுக குழு, முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் திமுக சார்பில் இரண்டு முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இத்தகைய வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு மமக இம்முறை ஒரு தொகுதி ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தனர். விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகு, மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது எங்களுக்கு ஒரு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உறுதியாக எடுத்து வைத்தோம்.

அடுத்து கலைஞருடன் ஒப்பந்தம் போடும்போதும் இக்கோரிக்கையை திரு.ஸ்டாலின் அவர்கள் கலைஞரிடம் நமது இக்கோரிக்கையை எடுத்து கூறினார்.

இறைவன் அருளால் தலைமை கேட்ட அதே தொகுதியான மயிலாடுதுறையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டது.

அப்போது பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களும் உடன் இருந்தார்கள். இது தவிர திமுகவின் தேர்தல் அறிக்கையில் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் தொடர்பாகவும், ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகளையும் வலியுறுத்தி விட்டு அவை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தோம்.

திமுக கூட்டணியில் நிறைய முஸ்லிம்கள் போட்டியிட கூடிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை படும் சூழலும் உருவாகி வருகிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே.

இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம். இன்று - இது உதாரணம் .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறு திரும்புகிறது ...குஜராத்தில், 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான இனப்படுகொலையில் கையில் இரும்புத் தடியுடன் வெறிபிடித்துக் கத்திய, பஜ்ரங் தள் என்ற இந்து மத வெறி அமைப்பைச் சேர்ந்த அஷோக் மோச்சி என்பவரும்,
” எங்களை விட்டுவிடுங்கள் “ என்று கெஞ்சிக் கதறும் குதுபுதின் அன்சாரியும்,
கேரளாவில் நேற்றுச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள் !

இதுபோன்ற சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு. தாயிப் மலைவாசிகள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அண்ணல் நபிகளாரை படு பயங்கரமாக துன்புறுத்தினார்கள். நபிகள் பிரார்த்தனை செய்திருந்தால் இறைவன் தாயிப் மலையை புரட்டி இருப்பான். அந்த மக்கள் அழிந்து போயிருப்பார்கள். ஆனால் நபிகளோ ... இன்றில்லாவிட்டால் நாளை.. இவர்களில்லாவிட்டால் இவர்களின் பிள்ளைகள் நேர்வழி பெறுவார்கள் என்றார்கள். அண்ணலாரின் கூற்றுப்படியே அந்த மக்கள் திருந்தி தங்கள் தவறுக்கு வருந்தினார்கள்.
அண்ணலாரின் கரம பிடித்து முஸ்லிம்களானார்கள் !
அதுபோல் இஸ்லாத்தின் பரம எதிரியான அபுசுப்யானின் மனைவி ஹிந்தா , உஹதுப் போர்க் களத்தில் அண்ணலாரின் சிறிய தந்தை ஹம்சாவைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தார். பின்னாளில் அபுசுப்யானின் குடும்பமே இஸ்லாத்தில் இணைந்தது.
இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம்.
இன்று - இது உதாரணம் .

துபாயில் இன்று ஹதீஸ் கலை ஆய்வு தொடர் வகுப்பு நடைபெறும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இன்ஷாஅல்லாஹ் துபாயில் இன்று  04.03.2014  இரவு 8.30 மணியளவில் ஹதீஸ் கலை ஆய்வு தொடர் வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ள சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும். 

தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.
இர்ஷாத்  050-2426380

நியாயவிலை கடைகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நியாயவிலை கடைகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

ஆம்பூர் நகரத்தின் 11 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு 
நிதியில், ரூ.10 இலட்சம் செலவில் கட்டப்பட்ட நியாயவிலை கடைகள், மற்றும் ரூ.3.95 இலட்சம் செலவில் 11வது வார்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகிய கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மமகவின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் 
அ.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்களை திறந்து வைத்தார்

Saturday 1 March 2014

துபாயில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 27.02.2014 இரவு 8.30 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர்  சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில்  ஹதீஸ் கலை  பயிற்சி நடைபெற்றது.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 

இதில் 3 தலைப்புக்கள் பார்க்க பட்டது, கடைசி 4th தலைப்பு இன்ஷாஅல்லாஹ்  வரும் வாரங்களில் நடைபெறும் என்று அறிவிக்க பட்டது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


மமக அமைப்புச் செயலாளருடன் கலந்தாய்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மமக அமைப்புச் செயலாளருடன் கலந்தாய்வு


மூன்று நாள் பயணமாக அமீரகம் வருகைப் புரிந்த மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் மௌலா நாசர் அவர்கள் 26:2:2014 அன்று துபாய் தமுமுகவின் தேரா மர்கசிற்கு வருகை தந்தார்கள்அப்போது துபாய் தமுமுக நிர்வாகிகள் அண்ணன் மௌலா நாசருடன் சமூக விசயமாக கலந்துரையாடல் செய்தார்கள்.

Inline images 1

Inline images 2

Inline images 3

Inline images 4

Inline images 5