Wednesday 1 September 2021

அல்குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்கள் part 2 / 25 Prophets name in the Quran_A.S.Ibrahim AAT-030



Please click above link 

அல்குர்ஆனில் 25  நபிமார்களின் பெயர்கள் part 2 /  25 Prophets name in the Quran_A.S.Ibrahim AAT-030

Friday 27 August 2021

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது

இளைஞர்களே*
இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள்.

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா?*

*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?*
How Many Groups in TNPSC?

குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8

*குரூப் – 1 சேவைகள்* (Group-I)
1)துணை கலெக்டர்
(Deputy Collector)
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை
(District Registrar, Registration Department)
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) /4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர்
(Div. Officer in Fire and Rescue Services)
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

*குரூப் – 1A சேவைகள்* (Group-I A)
1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

*குரூப் – 1B சேவைகள்*
(Group-I B)
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

*குரூப் – 1C சேவைகள்* (Group-I C)
1)மாவட்ட கல்வி அலுவலர் DEO
(District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2
-----------------------------
*குரூப் – 2 சேவைகள்* (நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II)
1)துணை வணிக வரி அதிகாரி
2)நகராட்சி ஆணையர், தரம் -2
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)
5)துணை பதிவாளர்,
தரம் -2
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர்
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)
9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு
நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும் ....
பழங்குடியினர் நலத்துறை
தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர்
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை
உதவி ஜெயிலர், சிறைத்துறை
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில்
நிர்வாக அதிகாரி,
தரம் -2 டி.வி.ஐ.சியில்
சிறப்பு உதவியாளர்
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில்
சிறப்பு கிளை உதவியாளர்.
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு
தொழிலாளர் உதவி ஆய்வாளர்
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.
*குரூப் – 2A சேவைகள்* (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A)

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர்
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில்
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர)
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை)
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம்
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை
உதவியாளர் பல்வேறு துறைகள்
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர்
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம்
திட்டமிடல் இளைய உதவியாளர்
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை)
சட்டத்துறையில் உதவியாளர்
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

*குரூப் – 3 சேவைகள்* (Group-III)

தீயணைப்பு நிலைய அதிகாரி
*குரூப் – 3A சேவைகள்* (Group-III A)
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர்
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2
*குரூப் – 4 சேவைகள்* (Group-IV)
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத)
பில் கலெக்டர்
தட்டச்சு செய்பவர்
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3
கள ஆய்வாளர் 6. வரைவாளர்
*குரூப் – 5A சேவைகள்* (Group-V A)

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
*குரூப் – 6 சேவைகள்* (Group-VI)

வன பயிற்சியாளர்
*குரூப் – 7A சேவைகள்* (Group-VII A)
நிர்வாக அதிகாரி,
தரம் -1
*குரூப் – 7B சேவைகள்* (Group-VII B)
நிர்வாக அதிகாரி,
தரம் – 3
*குரூப் – 8 சேவைகள்* (Group-VIII)
நிர்வாக அதிகாரி,
தரம் – 4

*************************

இத்தனை தேர்வுகள் பற்றிய நம்மில் பலருக்கு முறையான வழிகாட்டல் இல்லாததால் நம்மில் பலர் TNPSC தேர்வுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர் இது போட்டித்தேர்வுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்து வருகின்றனர் ஆகையால் போட்டித்தேர்வர்கள் தவறான தகவல்களை நம்பாமல் அனைவரும் பயின்று விரைவில் அரசு பணியில் அமர வாழ்த்துகிறது........

Saturday 17 July 2021

மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 18 விஷயங்கள்*

*மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 18 விஷயங்கள்*

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு இடமாவது வாங்கி ஒரு  வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருக்கிறது. ஆனால், மனை வாங்கும்போது மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.  மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே 'செக்-லிஸ்ட்'-ஆகத் தந்திருக்கிறோம்.  

1. நீங்கள் வாங்கப்போகும் மனை, யாருடைய பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் கடந்த 30 வருடங்களுக்கு, அதற்கான மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும். 

2. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.   

3. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப்பட்டுள்ள  சமீபத்திய பட்டா மற்றும் நில அளவை விவரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் வருவாய்த் துறைப் பதிவுகளில் அந்தச் சொத்து யார் யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதையும் சரிபார்க்கலாம்.

4. நீங்கள் வாங்கப்போகும் மனையின் தள வரைபட விவரங்களைச் சரிபார்க்கவும்.

5. நீங்கள் வாங்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைப் பார்க்க வேண்டும். அதாவது, மனையானது விவசாய நிலம் அல்லாத குடியிருப்புக்கான மனையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

6. வாங்கவிருக்கும் மனையின் பயன்பாட்டுத்தன்மையைத் தெரிவிக்கும் வரைபடங்களைப் பார்க்கவும். உதாரணமாக, மனையின் பயன்பாடானது குடியிருப்புக்கானதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அதனை வேறெந்த வணிகச் செயல்பாட்டுக்காகவும் பயன்படுத்த முடியாது. 

7. வாங்கும் நிலமானது அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.  லேஅவுட் விவரங்கள் அடங்கிய லேஅவுட் பிளான் ஆவணத்தின் நகலைச் சரிபார்ப்பதன் மூலம், உரிய அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதி  பெறப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்கும் வசதியிருந்தால் அதன் மூலமும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா  என்பதைப் பார்க்கலாம். சி.எம்.டி.ஏ இணைய தளத்தில், 2000-ம் ஆண்டுக்குப்பிறகு அங்கீகரிக்கப் பட்ட லே அவுட்டுகளை உறுதி செய்யமுடியும். மேலும், அப்ரூவல் கொடுத்துள்ள அதிகாரி அதற்கான அதிகாரம் கொண்டவர்தானா என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப் பஞ்சாயத்து தலைவருக்கு மனைக்கான லேஅவுட் பிளான் அப்ரூவல் வழங்கும் அதிகாரமில்லை. ஆனால், பல இடங்களில் பஞ்சாயத்து அனுமதி பெறப்பட்ட  நிலம் என்று விற்கப்பட்டிருக்கிறது. 

8. லேஅவுட் அப்ரூவல் வழங்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள், அப்ரூவல் வழங்கும்போது ஏதேனும் நிபந்தனைகள் விதித்திருந்தால் அதையும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற லே அவுட்டுகளில், ஓ.எஸ்.ஆர் பயன்பாட்டுக்காக உள்ளூர் பஞ்சாயத்து சார்பாக சாலைகள் அரசுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவும்.

9. மனையானது அதன் நிர்ணயிக்கப்பட்ட நில உச்சவரம்புக்குள் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்.

10. வாங்கும் மனையின்மீது உயர் மின்னழுத்தக் கடத்திக் கம்பிகள் எதுவும் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

11. நீங்கள் வாங்கும் மனையானது நிர்ணயம் செய்யப்பட்ட அளவுகளைவிட அதிகமாக இருந்தால், அந்த இடம் ஏதேனும் பொதுப் பயன்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமா என்பதையும் சரிபார்க்க வேண்டும். 

12. தற்போதைய நில உரிமையாளரின் நம்பகத்தன்மையை, நில வருவாய்த்துறைப் பதிவுகளை ஆன்லைனில் பார்க்கும் வசதி மூலம் சரிபார்க்கலாம்.

13. நில வரியானது தற்போதைய நில உரிமையாளரின் பெயரில் செலுத்த வேண்டிய துறைக்குச் சரியாகச் செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். (சென்னையைப் பொறுத்தவரை, 4,800 சதுர அடிக்குக் குறைவான காலி நிலத்துக்கு நில வரி இல்லை)

14. ஒருவேளை தற்போதைய நில உரிமையாளர் நிலத்துக்குச் சொந்தமானவராக யாரையேனும் அறிவித்திருந்தால், அதற்கான ஆவணத்தைச் சரிபார்த்து அது இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். மேலும், நிலத்தின் தற்போதைய உரிமையாளர், நிலத்தின் கிரயப்பத்திரப் பதிவுக்குமுன் உயிரோடு இருக்கிறாரா என்பதையும் உறுதிசெய்யவும்.

15. மனையின் ஆவணங்களைச் சரிபார்க்க,   மனை எந்தச் சார்பதிவாளர் அலுவலகத்தின் வரம்புக்குள் வருகிறதோ,  அந்த அலுவலகத்திலிருந்து மனை தொடர்பான சமீபத்திய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்று, ஒரிஜினல் ஆவணங்களுடன் பொருத்தி சரிபார்க்கவும். 

16. மனையை நீங்களாகவே அளந்து ஆவணத்தில்/வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  மனை அளவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்த்துக்கொள்ளவும்.

17. வாங்கவிருக்கும் மனையின் மதிப்பை, குறிப்பிட்ட மாநில அரசுத் துறையின் இணைய தளத்தில் பார்த்து, அந்த மதிப்புக்கேற்ப ஸ்டாம்ப்  பேப்பர் வாங்க வேண்டும்.

18.  கடந்த 30  வருடங்களுக்கான நில உரிமையைச் சரிபார்க்கவும். அடமானத்திலோ அல்லது நீதிமன்ற வழக்குகளிலோ இல்லை என்பதை உறுதி செய்யவும். வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்ப்பது அவசியம். வில்லங்கச் சான்றிதழின் விவரங்களை ஆன்லைனில் ஒருமுறை சரிபார்ப்பதும் அவசியம்.
--
Thanks & Regards

Tuesday 13 July 2021

Fwd: UAE's Juma Kuthba-Tamil (16th July-2021)

Assalaamu Alaikum,

With pleasure we forward you the Juma Kutba Tamil Translation of 16/07/2021 (Friday Sermon) which is published by AWQAF of the UAE Government.

தலைப்பு: அரபாவுடைய நாள்!!- UAE Juma 16th July-2021

இந்த ஜும்ஆ உரையை எழுத்து வடிவில் நேரடியாக பெற கீழ்காணும் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Regards

Moulavi K Syed Abusalih Bilali B.Com

Mobile: +971 52 9919346

--
You received this message because you are subscribed to the Google Groups "Bilalia Ulamas' Association Dubai" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bilalia-ulamasdubai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msgid/bilalia-ulamasdubai/CAN3jKYgZKg8%3DoEC7rf%3DQkZ3PA%2B7p5qa_79uc%2B5ARfJ_2xPFz3A%40mail.gmail.com.

Thursday 8 July 2021

Fwd: UAE's Juma Kuthba-Tamil (9th July-2021)


From: bilalia-ulamasdubai@googlegroups.com <bilalia-ulamasdubai@googlegroups.com> on behalf of Bilalia Ulamas' Association <buadubai@gmail.com>
Sent: Tuesday, July 6, 2021 8:18:32 PM
To: bilalia-ulamasdubai@googlegroups.com <bilalia-ulamasdubai@googlegroups.com>
Subject: UAE's Juma Kuthba-Tamil (9th July-2021)
 

Assalaamu Alaikum,

With pleasure we forward you the Juma Kutba Tamil Translation of 09/07/2021 (Friday Sermon) which is published by AWQAF of the UAE Government.

தலைப்பு: துல்ஹஜ் பிறையின் முதல் பத்து நாட்கள்!!- UAE Juma 9th July-2021

இந்த ஜும்ஆ உரையை எழுத்து வடிவில் நேரடியாக பெற கீழ்காணும் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Regards

Moulavi K Syed Abusalih Bilali B.Com

Mobile: +971 52 9919346

--
You received this message because you are subscribed to the Google Groups "Bilalia Ulamas' Association Dubai" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bilalia-ulamasdubai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msgid/bilalia-ulamasdubai/CAN3jKYiGuvy%2Bm%2BdEpY7E-1_79cWnXKeYKyj_kj1CQESDrDZBgQ%40mail.gmail.com.

Friday 28 May 2021

பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை

அலஹம்துலில்லாஹ் 

நமது பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு பதிவு என் 18/2016 இயங்கிவருகிறது் 
இப்போது தமிழகஅரசின் NGO விலும் பதிவும் செய்துள்ளோம் பதிவு என் NAI-05020 

நமது அன்னை ஆயிசா அறக்கட்டளை இறைவன் அருளால்  சீரிய சிந்தனையுடனும் திறம்பட செயல்பட உங்களுடைய ஆதரவும் பிராத்தனையும் தரவேண்டும்.

S.அப்துல் கபூர் 
நிறுவனர் 
அன்னை ஆயிசா அறக்கட்டளை 
பரமக்குடி
--
Thanks & Regards

Saturday 22 May 2021

பார்ப்பனீயம்

#பிணங்கள் குவிந்து கொண்டிருக்கும் கொடுங்காலத்திலும் யாரேனும் எரிக்க  இடமில்லாமல் வேறு சாதி தகனமேடைக்கு வந்துவிட்டால்..?

என்கிற எச்சரிக்கை உணர்வோடு புதிதாக பெயின்ட் வாங்கி எழுதியுள்ள அந்த மனசு இருக்கே சார் அது தான் #பார்ப்பனீயம்

செங்கம் வே.சஞ்சய் விசிக

Wednesday 19 May 2021

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) & (6) ன்படி கீழ்க்கண்ட உறுப்பினர்கள், அரசு ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவர்.

தந்தை / வளர்ப்புத் தந்தை
தாய் / வளர்ப்புத் தாய்
கணவன்
மனைவி
மகன் / வளர்ப்பு மகன்
மகள் / வளர்ப்பு மகள்
சகோதரன்
சகோதரி
மனைவியின் தாய், தந்தை
கணவரின் தாய், தந்தை
சகோதரியின் கணவர்
சகோதரரின் மனைவி
மகளின் கணவர்
மகனின் மனைவி

தொலைதூர கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு அலுவலர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படின் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம். அரசாணை எண். M. s. No 200, P & A. R., DT - 19.04.1996. அரசுப் பணியை தவிர வேறு எந்தப் பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. G. O. Ms. No. 893, P & A. R. DT - 23.09.1983 Rule 8(1)(aa). ஆனால் provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

எந்த ஆசிரியரும் தனியாக (Tuition) வகுப்பு நடத்தக்கூடாது. டியூஷன் நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் ஏதும் பெறாமல் மாணவர்களுக்கு தனியாக கல்வி புகட்ட தடை ஏதுமில்லை. Rule 6(17)

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் அதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலக துறைத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. Provision 1 rule 8(1)(a)

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருமானத்திலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத்தலைவரின் அனுமதி தேவை. G. O. Ms. No. 3158, Public (service - A) Dept, DT - 27.09.1974

அரசு பணிபுரிகின்ற கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத்தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். Govt. Letter. No. 29546/80 - 4, P & A. R. DT - 22.10.1980

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின்படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அதை துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். ஆனால் சொத்து அறிக்கையில் காட்ட வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்தச் சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னமே பணிபுரிந்த மாவட்டமாக இருப்பின், இடமாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் சொத்து ஒன்றை கையகப்படுத்த வேண்டும். Rule 7(14)

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவோ, விற்கவோ தடை ஏதுமில்லை. Rule 7(14)(a)

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. Rule 7(16)

Record sheet அல்லது personal file - ஐ பராமரித்து வரும் அதிகாரி, ஊழியர்களின் சொத்து விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். Rule 7(9)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7 (2) amended in G. O. Ms. No. 39, P & A. R. Dt - 9.03.2010

A Group Employees may Purchase upto Rs. 80000/-

B Group Employees may Purchase upto Rs. 60000/-

C Group Employees may Purchase upto Rs. 40000/-

D Group Employees may upto Rs. 20000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆம் ஆண்டு முடிவில் சொத்து அறிக்கை ஒன்றினை துறைத்தலைவருக்கு தாக்கல் செய்ய வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருவதை அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை துறைத்தலைவர் கண்டிக்க வேண்டும். அதனையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பிறகும் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த ஊழியர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். Govt. Letter. No. 9637/A/95 - 1, P & A. R (A) Dept, dt - 24.04.1995

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். G. O. Ms. No. 9, P & A. R. (A) Dept, dt - 2.10.1985

Monday 10 May 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.


மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 17 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த வருடமும் ரமலான் 27 அன்று 10.05.2021 பித்ரா 200 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு விதித்த கெரானா சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விநியோகிக்கபட்டது.


அல்லாஹ் எங்கள் பனிகளை ஏற்று கொன்டு இதற்க்காக உதவி செய்த மற்றும் உழைத்த சகோதர சகோதிரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக ! ஆமீன்


S.Abdul Gafoor

President

Annai ayeisha trust paramakudi

Ramnad district

Tamil Nadu India 🇮🇳



Tuesday 4 May 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு: 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு:  2021
××××××××××××××××××××××××××

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்னை ஆயிசா அறக்கட்டளை வழக்கம்போல் ஸதக்கத்துல் ஃபித்ர் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 
200 குடும்பங்கள் பயன்பெற திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ். 10.05.2021 காலை

எனவே, எங்களின் சேவையை அல்லாஹ் ஏற்று கொண்டு மென்மேலும் தொடர  இறைவனிடம் பிராத்தனை செய்யவும்.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப் படுத்துவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி  (ஸல்) அவர்கள் ஃபித்ராவை கடமையாக்கினார்கள்.
அறிவிப்பு: இப்னு அப்பாஸ்  (ரலி)
நூல்:அபூதாவுது

செய்தி/ தகவல்
அன்னை ஆயிசா அறக்கட்டளை
பரமக்குடி
இராமநாதபுரம் ஜில்லா

நிய்யத் எப்படி வைப்பது ? AAT

https://youtube.com/watch?v=JABlT-y1xF4&feature=share

நிய்யத் எப்படி வைப்பது ?
A.s.ibrahim

: தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் ?

 தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் 
--
Thanks & Regards

Monday 12 April 2021

*🔥குரானில் சில வாசகங்களை நீக்கச் சொல்லி மனு*

*🔥குரானில் சில வாசகங்களை நீக்கச் சொல்லி மனு*


*🔥50 ஆயிரம் அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்*


http://www.adminmedia.in/2021/04/26.html



*🅰️DMINⓂ️EDIA*



நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَالَ اللَّهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، إِلَّا الصِّيَامَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ "

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1904]

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ المِسْكِ»

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1894]

"لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ"

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1904]

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

[அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி 38]

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.


Sunday 14 March 2021

அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். ஏன்?

அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். ஏன்?

1. பல மாநிலங்களிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பயன்படுத்தப்படும்  பணம் யாருடையது?

2. ரபேல் ஆவணங்கள் அனைத்தும்
ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும், கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை முன்னிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது?

4.பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்க முன்வந்த பணக்காரர்கள் தேவை என்ன?

5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? 

7.குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

8 பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியது ஏன்?

9. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை?

10. குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே ஏன்? 

11. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? 

12 ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ? 

13. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? 

14.பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

15. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

16. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

17. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? 

18 இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

19. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

20. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

21. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

22. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

23. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

24. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மாயமானது? ஏன் தர மறுக்கிறீர்கள்?

25. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

பாஜக ஆறு ஆண்டு ஆட்சியின் அவலங்களின் தொகுப்பு

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்

11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு

21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை

31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல்
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி

51-வியாபம் ஊழல்-தொடர் மர்ம மரணங்கள்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்

61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா

81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல் 
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
90 ஆதார் அட்டை குழா்படிகள்-

91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது 
92 கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி.
93 CAA NRC CAB 
94 68000 கோடி மார்வாடிகளுக்கு தள்ளுபடி.
95 ஊடகங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொழுத்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பல மாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை தர மறுப்பது
99 PM care ஊழல்..கணக்கு காட்ட முடியாது 
100 மாநிலங்களில் வாங்கிய ரேபிட் கிட்டை மத்திய அரசு பறித்தது.

இவையெல்லாம் தேசநலனா?
பதில் கிடைக்குமா?

- Surya Xavier
--
Thanks & Regards

Monday 8 March 2021

பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?

*பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.*

ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!.

மசூதியை இடித்து கோவில்கட்டுவதால்  இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால்  இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது  கூற முடியுமா?  உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.

நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்துவீட்டு கரண்டுபில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற  ஒருவித மனநோய் தான் அது,

அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும்  முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  நிம்மதி  இழக்கிறார்களே என்கிற சந்தோச  மனோவியாதிதான் அது!    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது!  முஸ்லிம்கள் மற்றும்   கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய   உரிமைகளை  பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோவியாதிதான் அது !!!.

பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. *ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.*
ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்திவிடலாம் ஆனால் ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.

*இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.* *மதவெறியற்ற இந்துக்களுக்கானது அல்ல !!!.*

Saturday 6 March 2021

பூத் ஏஜென்ட் பணிகள் என்ன...?

பூத் ஏஜென்ட் பணிகள் என்ன...?

1. வாக்கு போட ஆரம்பிக்கும் முன் வாக்களிக்கும் மெஷினில் வாக்குகள் எதும் இல்லை என உறுதிபடுத்த வேண்டும்.

2. மூன்று முறையாவது டம்மியாக வாக்களித்து வாக்குகள் சரியான நபருக்கு விழுகிறதா என சரிபார்க்க வேண்டும்.

3. சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.

4. தவறான நபர் வாக்களிக்க வந்தால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.

5. வாக்களிப்பு முடிந்ததும் முறையாக சீல் வைக்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

6. வாக்கு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா, இறக்கப்படுகிறதா என்பதை கவணிக்க வேண்டும்.

பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை :-

1. ஒரு வாக்களிக்கும் பூத்திற்கு உள்ளே அமர ஒருவரும், அவரை மாற்றுவதற்க்கு இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் அமைக்கலாம். அல்லது இரண்டு பேர் கூட போதும்.

2. மூன்று பேர் இருந்தாலும். உள்ளே ஒருவர் தான் உட்கார முடியும்.

பூத் ஏஜெண்டை அமர்த்தும் முறை :-

1. வேட்பாளர் அல்லது வேட்பாளாரல் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட் மட்டுமே பூத் ஏஜென்டை நியமிக்க முடியும்.

2. விண்ணப்ப படிவம் எண் 10 - நியமண கடிதம் நிரப்பப்பட்டு, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட கடிதம். (இணைக்கப்பட்டுள்ளது)

3. வேட்பாளர்/ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும்.

4. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும் போது, பூத் ஏஜெண்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகாரிக்கப் படுவார்.

5. போஸ்டல் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது.

பூத் ஏஜென்ட் தகுதிகள் :-

1. எழுத படிக்க தெரியவேண்டும்.

2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.

3. அந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது.

4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக் கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறைதண்டனை. அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

5. தேர்தல் மற்றும் வாக்கு இயந்திரங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம்.

பூத் ஏஜென்ட் செல்லும் நேரம் :-

1. தேர்தல் நாளன்று, தேர்தல் ஆரம்பி்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கே இருக்க வேண்டும்.

2. விண்ணப்பம் எண் 10, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட நியமன கடிதம் கொண்டு செல்ல வேண்டும்.

3. அதை அந்த பூத் அதிகாரியிடம் கொடுத்து பூத் ஏஜென்டாக பதிவு செய்து கொண்டு, நியமண அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

4. அரசு அதிகாரிகள் கேட்டால் அதை காண்பிக்க வேண்டும். தவறினால் வெளியேற்றப்படுவார்கள்.

5. மாற்று ஏஜென்டும் காலையிலேயே சென்று நியமண அட்டை பெற வேண்டும். பிறகு அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். மாற்றும் போது மட்டும் உள்ளே வரவேண்டும்.

6. உள்ளே உட்காருபவர்கள் தான் முக்கிய ஏஜென்ட். மற்றவர்கள் மாற்று தான்.

7. கைபேசி கொண்டு போக கூடாது

8. புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.

பூத் ஏஜென்ட் வாக்குபதிவு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டியவை :-

1. எந்த பூத்தில் அமர்கிறோரோ, அந்த பூத்தின் மொத்த வாக்காளர் பட்டியல் புத்தகம். அதை நாம் முன்பே தயாராக வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே கொடுக்க மாட்டார்கள்.

2. பேனா, பெண்சில், ஏ4 வெள்ளை காகிதம், இயந்திரத்தை சீல் வைக்க சீல் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

3. வாக்குபதிவு மாலையில் முடியும் வரை எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

வாக்குபதிவு அறைக்குள் செய்யவேண்டியவை :-

1. எந்த நாற்காலியில் அல்லது இடத்தில் அமர்கிறாரோ கடைசி வரை அங்கேயே தான் அமர வேண்டும்.

2. வாக்களிப்பவர் சரியானவர் தானா என்பதை கண்காணிக்க வேண்டும்.

3. எத்தனை வாக்குகள் பதிவாகிறது என்பதை நோட் செய்ய வேண்டும்.

4. உங்கள் கணக்கு, தேர்தல் அதிகாரி கணக்கு, இயந்திர கணக்கு ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

5. வாக்கு சீல் வைத்து கையெழுத்து வாங்கியவுடன், சரியாக வாகணத்தில் ஏற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

இவைகள் தான் பூத் ஏஜென்டுகான பணிகள்.

விழிப்போடு இருந்து, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Thursday 25 February 2021

https://youtu.be/peezjuwYJZM The Names of 25 Prophets Mentioned in the Quran

https://youtu.be/peezjuwYJZM  


1. Adam as (Adam)آدم

2. Idris as (Enoch) إدر يس

3. Noah as (Nuh) نوح

4. Hud as (Hud) هود

5. Shaleh as (Saleh) صالح

6. Ibrahim as (Abraham) إبراهيم

7. Lut as (Lot) لوط

8. Ismail as (Ishmael) إسماعيل

9. Ishaq as (Issac) إسحاق

10. Yaqub as (Jacob) يعقوب

11. Yusuf as (Joseph) يوسف

12. Ayyub as (Job) أيوب

13. Shu'aib as (Jethro) شعيب

14. Musa as (Moses) موسى

15. Harun as (Aaron)هارون

16. Dzulkifli as (Ezekiel) ذو الكفل

17. Dawud as (David) داود

18. Sulaiman as (Soloman) سليمان

19. Ilyas as (Elijah) إلياس

20. Alyas'a as (Elisha) اليسع

21. Yunus as (Jonah) يونس

22. Zakaria as (Zachariah) زكريا

23. Yahya as (John) يحيى

24. Isa as (Jesus) عيسى

25. Muhammad saw محمد


Thanks & Regards

Monday 22 February 2021

கோழையான #சிவாஜியை

என் அன்பு முகநூல் நண்பர்களே,

கோழையான #சிவாஜியை

வீர சிவாஜி என கட்டுக்கதைகளை சொல்லிவரும் பாசிச பாஜாகாவிற்க்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக இந்த பதிவை பதிகிறேன்,,


முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய

சிங்கம்!!

வீரத்தின் பிறப்பிடம்!!

அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தனார் என்று தம்பட்டம் அடிக்கும்,——–

சங்கிகளின் கதாநாயகனான சக்ரவர்த்தி!

மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை

பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான்

நீங்கள் மேலே படித்த வரிகள்…


உண்மையை சொல்லப்போனால்

சிவாஜியை விட ஒரு கோழை,

நம்பிக்கை துரோகி,

ஏமாற்றுக்காரன்,

நயவஞ்சகன்,

கேடி மொள்ளமாறி பேமானி பக்கா

பிராடு இந்திய வரலாற்றில் வேறு

யாருமே இல்லை என நிச்சயமாக

கூறலாம்…


இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று

சிதறல்கள்—


*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை

ஷாகாஜியை துணைக்கு

வைத்துக்கொண்டு முகலாய

சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில்

இறங்கி அண்ணனை இழந்து தந்தையை

கைதியாக்கி தானும் தலைமறைவானார்

சிவாஜி…


பிறகு "எந்த மாதிரியான போர்

நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என்

தந்தையை விடுதலை செய்யுங்கள்,

அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி

கருணை புரியுங்கள்" என பேரரசர்

அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி

மாமன்னரின் கருணையை பெற்றார் வீர

(???) சிவாஜி…😡😡😡


*1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார்

சிவாஜி.

புனேவுக்கு தெற்கில்முகலாய

சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின்

மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு

ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க

வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர்

அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை

கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,

அந்த இருவரும் தகவலோடு வந்து

சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே

ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்…


*ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை

தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய

படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி

தப்பியோடி தலைமறைவானார்…

"ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி

முகலாய அரசின் எல்லைகளை காக்கும்

விசுவாசியாக இருப்பேன்,

எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என

மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு

மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார்

வீர???சிவாஜி…


*பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற

சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி

கைப்பற்றினார் சிவாஜி…


*இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க

பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை

அனுப்பினார்…

அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த

சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு

சென்று பதுங்கி கொண்டார்…


*நான் அமைதியாக இருந்து தங்களிடம்

அடங்கிப்போக விரும்புகிறேன்" என

அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார்

சிவாஜி…


*ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,

தகவலை உண்மைதானா என

அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும்

தளபதியை சிவாஜியிடம் தூதுவராக

அனுப்பினார்…


*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான்

நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,

அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்…

என் லட்சியத்தை நிறைவேற்றிட

தாங்கள்தான் எனக்கு உதவி

புரியவேண்டும்" எனக்கூறி

கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு

பொருட்களை கொடுத்து மூளைச்சலவை

செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!


*அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை

அப்படியே நம்பினார்…

சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு

சென்றது…

1659 நவம்பர் 20 ஜாவ்லியின்

காட்டுப்பகுதியில் சிவாஜியும்

அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது…


சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய

வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி

கொண்டனர்…

அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500

குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே

நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும்

எடுத்துக்கொள்ளாமல்,

கவசமும் அணியாமல்,

இடைவாளையும் சயீத்பாண்டா என்னும்

வீரனையும் வைத்துக்கொண்டு

முகாமுக்கு வந்து சேர்ந்தார்…


*ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள்

கவசத்தையும் தலைப்பாகைக்குள்

தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்…

வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட

பிச்சுவாக்கத்தி,

இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து

அமைக்கப்பட்ட இரும்பாலான

மிகக்கூர்மையான புலிநகங்கள்,

ஆனால் பார்வைக்கு

நிராயுதபாணியாகவே தெரிந்தார்

சிவாஜி…


*கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை

கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான்…

அப்சல்கானை நான்கைந்து முறை

குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி,

திடீரென புலிநகங்களால் அப்சல்கானின்

வயிற்றை கிழித்தார்.

இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,

மறைந்திருந்த மராத்திய வீரர்கள்

சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்…


வலியால் துடித்த அப்சல்கான்

சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில்

பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை

வெட்டி சாய்த்தனர்.


அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட

சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.

அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர்

பன்ஹாலா ஆகிய இரண்டு

கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி…


ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா

நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர்

பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க

தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு

கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார்

சிவாஜி…


*சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு

ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார்

அவுரங்கசீப்…

புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில்

அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்…


பிறகு மூன்று ஆண்டுகள் வரை

அமைதியாக இருந்த சிவாஜிக்கு

ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம்

ஒன்று கிடைத்தது…

அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.

பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய

வீரர்கள் இரவு முழுவதும்

பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்…


அப்போது மராத்தியர்கள் யாரும்

புனேவுக்கு நுழையாத வண்ணம்

பாதுகாப்பு பலமாகவே இருந்தது..

200 மராத்தியர்கள் வெவ்வேறு

வேடங்களிட்டு புனேவுக்குள்

நுழைந்தனர்.


கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து

அதில் மணப்பெண் வேடத்தில்

புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி..,

அப்போது சில மராத்தியர்களோடு

சமையல்றை வாயிலாக கோட்டைக்குள்

நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38

பெண்களை கொன்றுகுவித்து

முன்னேறினார்…


பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில்

நுழைந்து தொழுகையில் இருந்த

ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின்

மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை

தாக்கினார்…


உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை

கொன்றனர்…

ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள்

துண்டானது,

ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு

பலமாக சிவாஜியை தாக்கினார்,


உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும்

ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து

மறைந்தனர்.

(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து

துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)


*நோன்பு மாதத்தில் சூரத் நகரில்

முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது

கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த

"வீர" சிவாஜி.


*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங்

தலைமையில் திலாவர்கானை தளபதியாக

நியமனம் செய்து பெரும் படை ஒன்றை

தக்காணத்திலிருந்து அனுப்பினார்

அவுரங்கசீப் …


ஆண்டு 1665 ஜனவரி.

பெரும் படை வந்துகொண்டிருக்கும்

தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19

கோட்டைகளையும் காலி செய்து

கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்…


திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர்

கோட்டையில் உயிரை விடப்போகிறாயா

அல்லது ஒழுங்கு மரியாதையோடு

அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு

கடிதம் எழுதினார்…


இதனை படித்து பதறிப்போன சிவாஜி

உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில்

உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து

"சரணடையத்தான் வந்துள்ளேன்…

மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ

ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்"

எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து

கொண்டார்…


*பிறகு "இதுவரை நான் பிடித்த 25

கோட்டைகளையும் தந்து விடுகிறேன்…

ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு

2,00000 பொற்க்காசுகளை கப்பம்

கட்டுகிறேன்…

2000 யானைகளை தருகிறேன்…

அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்…

தக்காணம் முதல் கோல்கோண்டா வரை

முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்…

பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்…

உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என

மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில்

மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார்

சிவாஜி.!!!!


ஆதார நூல்கள்:

The mughals by Chop singh verma,prakash books

2004,

the fall of the mughal empire of hindustan by Hg

Keene.

oxford 1887,

the maraathas 16001818,series: the new cambridge

History of india,

by stewart gordon. university of michigan ann arbor.