Sunday 29 May 2011

புற்று நோய்: – ஏன்? – எப்படி?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


- புற்று நோய்.
- `யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!
- ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

புற்று நோய்க்கு என்ன காரணம்?

பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)
சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே’ என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.
`ஹியூமன் பபிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?

முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்’ என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்’ ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான’ ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்’தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை: 1. ஆபரேஷன்,
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்), 3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.

Saturday 28 May 2011

ஏ.டி.எம் தெரிந்துகொள்ள வேண்டியவை ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
 
வங்கி துறையின் வளர்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக ஏ.டி.எம் எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தின் அறிமுகத்தை குறிப்பிடலாம். வங்கி எப்போது திறக்கும் என்று பார்த்திருந்து... திறந்தவுடன் நீண்ட நேரம் காத்திருந்து... பணம் பெறும் தொல்லைக்கு முடிவு கட்டியது இந்த இயந்திரம். வீதிக்கு வீதி பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.க்கள், 24 மணி நேர சேவை, நள்ளிரவிலும் பணம் எடுக்கும் வசதி போன்றவற்றால் இந்த இயந்திரம், வங்கி வாடிக்கையாளர்களின் உற்ற தோழனாக உருவெடுத்து விட்டது.
வசதிகள் பெருக பெருக, பிரச்னைகளும் பெருகும் என்பது இந்த இயந்திரத்திற்கும் பொருந்தும். இன்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பவர்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, மாத துவக்கத்தில், ஊதியத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம் செல்பவர்கள் கசப்பான அனுபவங்களை சந்தித்து வருகின்றனர். முதலாவதாக, மாத துவக்கத்தில் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் "பணம் இல்லை; இயந்திரம் வேலை செய்யவில்லை' என்ற அறிவிப்புகள் தான் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. இதற்கு, அந்த மையங்களில் போதிய பணம் இருப்பு வைப்பதில்லை அல்லது முன்னதாக வருவோர் பணத்தை எடுத்து விடுவது ஆகியவை தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏ.டி.எம் மையங்களில், பணத்தை இருப்பு வைக்கும் பொறுப்பை, சில வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளன. இந்த நிறுவனங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பணத்தை இருப்பு வைக்கின்றன. அதுவும் பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் போடுவதில்லை. இதனால், இதுபோன்ற நாள்களில், பணம் உள்ள ஏ.டி.எம்.க்களை தேடி அலைய வேண்டியுள்ளது. அப்படியே அலைந்து திரிந்து, அட்டையை செருகினால், 100 ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட மாட்டாது என்ற பதில் தான் கிடைக்கிறது. அதனால், 500 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுக்க வருபவர்கள் பாடு திண்டாட்டம் தான். அவர்கள், ஒவ்வொரு ஏ.டிஎம்.மாக தேடி அலையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அடுத்ததாக, ஒவ்வொரு ஏ.டி.எம் இயந்திரமும் ஒவ்வொரு வகையாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. கனரா வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கார்டு உள்ளே இழுத்து கொள்ளப்படுகிறது. ரகசிய எண்ணையும், எடுக்க வேண்டிய தொகையையும் குறிப்பிட்டால், கார்டு வெளியே வந்து விடுகிறது. பணம் வராமல், கார்டு மட்டும் வருகிறதே என்று சிந்தித்து முடிவெடுப்பதற்குள், கார்டு திரும்பவும் உள்ளே சென்று விடுகிறது. பணமும் வருவதில்லை. இதை தொடர்ந்து "உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்' என்று அறிவிப்பு திரையில் தோன்றுகிறது. இதனால், அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏ.டி.எம் வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். அது மட்டுமின்றி, "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல், குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்பட்டதாக இயந்திரத்தில் இருந்து ரசீது வரும். ஆடிப்போகும் வாடிக்கையாளர்கள், உடனடியாக வங்கிக்கு ஓடி பிரச்னையை தெரிவித்தால், குறைந்தபட்சம் இரு வாரத்திற்கு பின்தான் புதிய கார்டு வழங்கப்படும். "சஸ்பென்ஸ்' தொகையும் கணக்கில் சேர்க்கப்படும்.

"
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம் இயந்திரங்கள், டெபிட் கார்டை உள்ளே இழுத்துக் கொள்வதில்லை. செருகி விட்டு எடுக்கக் கூடிய வசதி கொண்டவை. இந்த இயந்திரங்களில் பணம் தீர்ந்து போனால், அது பற்றிய சமிங்ஞை சம்பந்தப்பட்ட ஏஜன்சிக்கு தானாகவே தெரிவிக்கப்படும். அந்த ஏஜன்சி உடனடியாக ஆட்களை அனுப்பி பணத்தை நிரப்பி விடும்' என, இவ்வங்கியின் துணை பொது மேலாளர் (கார்ப்பரேட் வர்த்தகம்) பி.வாதிராஜன் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, ஒரு சிலர், ஏ.டி.எம்.மில் கார்டை செருகி விட்டு, ரகசிய எண்ணை தவறாக குறிப்பிட்டு விடுவர். அதனால், கார்டு திரும்பி விடும். தொடர்ந்து மூன்று முறை முயன்றால், ஏ.டி.எம் இயந்திரம் கார்டை திரும்ப அளிக்காமல் உள்ளேயே வைத்து கொள்ளும். அந்த கார்டை பெறுவதற்கு, வங்கி கிளையை அணுக வேண்டும். வங்கிகள், புதிய கார்டு வழங்க குறைந்தபட்சம் 150 ரூபாய் வலிக்கின்றன. இது தவிர, ஏ.டி.எம்.மில் கார்டை செருகி, தொகையை குறிப்பிட்டால், சில சமயங்களில் பணம் வராது. ஆனால், தொகை கழித்து கொள்ளப்பட்டதற்கான ரசீது மட்டும் வரும். இது குறித்து வங்கியில் புகார் தெரிவித்தால், மீண்டும் வங்கி கணக்கில் பணம் போட 15 நாள்களாகும். "இதுபோன்ற குளறுபடிகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பில் ஏற்படும் தடங்கல் தான் காரணம். ஏ.டி.எம் பரிவர்த்தனைக்கு செயற்கைக்கோள் வாயிலான தொலைத்தொடர்பு வசதி அவசியமாகும். அதனால், இந்த தொடர்பில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், ஏ.டி.எம்.மில் கார்டு அல்லது பணம் வராமல் போக வாய்ப்புள்ளது' என, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் (ஏ.டி.எம் பிரிவு) சுரேஷ் கூறினார்.
ஏ.டி.எம். இயந்திரங்களில் தவறாக கழிக்கப்பட்ட தொகையை 12 நாள்களுக்குள் வாடிக்கையாளருக்கு தர வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. காலதா மதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி 100 ரூபாய் வழங்க வேண்டும். இதுகுறித்து வாடிக்கையாளர் கோரிக்கை விடுக்கவில்லையென்றாலும், அவரது கணக்கில் அந்த தொகை வரவு வைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உறுதியாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நடைமுறையை எந்த வங்கியும் கடைபிடிப்பதில்லை. "பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற விதிமுறை இருப்பது தெரிவதில்லை. அதனால் அவர்கள் வங்கியில் காலதாமத கட்டணத்தை கோருவதில்லை' என்கிறார் தமிழ்நாடு முதலீட்டாளர் நலச்சங்கத் தலைவர் நாராயணன்.
இது தவிர, தனியார் துறையை சேர்ந்த சில முன்னணி வங்கிகள், எந்த வகையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை கறக்கலாம் என்று "ரூம் போட்டு' யோசித்து, சில விதிமுறைகளை வைத்துள்ளன. இதன்படி, ஏ.டி.எம். இயந்திரத்தில் ஞாபக மறதியாக, கணக்கில் உள்ள இருப்பை விட கூடுதல் தொகையை குறிப்பிட்டு விட்டால், "போதுமான தொகை இல்லை' என்ற பதில் வருவது மட்டுமின்றி, அவரது கணக்கில் 28 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இதுபோல் எத்தனை முறை தவறாக பணத்தை குறிப்பிடுகிறோமோ அத்தனை முறை பணத்தை பிடித்து கொள்கின்றன. அதனால், இதுபோன்ற வங்கிகளின் ஏ.டி.எம் பயன்படுத்தும் போது, கணக்கில் உள்ள இருப்பை முதலில் தெரிந்து கொண்டு, அதன்பின் பணம் எடுப்பது நல்லது. மேலும், மாற்று வங்கியின் ஏ.டி.எம்.மில் ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், 20 ரூபாய் கணக்கில் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. ஏ.டி.எம் பயன்பாட்டில் உள்ள பிரச்னைகளையும், குறைபாடுகளையும் களைய வங்கிகள் முன்வர வேண்டும். அதே சமயம், வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகள் முன்வர வேண்டும். இது இரு தரப்பிற்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த வழிவகுக்கும்.

*
வங்கி சேவைக்கான ஏ.டி.எம் இயந்திரத்தை உருவாக்கியவர் டொனால்டு வெட்செல்.

*
நியூயார்க்கின் கெமிக்கல் வங்கியில், 1969ம் ஆண்டு, முதன் முதலாக ஒருங்கிணைந்த ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டது.

*
உலகில் தற்போது 20 கோடி ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன.

*
சொகுசு கப்பலில் கூட ஏ.டி.எம் வசதி உள்ளது.

*
இந்தியாவில், 1987ம் ஆண்டு முதன் முதலாக எச்.எஸ்.பி.சி வங்கி ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியது.

*
பாரத ஸ்டேட் வங்கி 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.

*
எச்.எம்.ஏ டைபோல்டு, என்.சி.ஆர் இந்தியா போன்ற நிறுவனங்கள் ஏ.டி.எம் இயந்திரங்களை தயாரிக்கின்றன.

*
ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புதல், பராமரிப்பு பணிகளையும் இந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
ஏ.டி.எம்.மில் கவனிக்க வேண்டியவை

*
அவ்வப்போது கிரெடிட், டெபிட் அட்டைகளுக்கான ரகசிய எண்ணை மாற்றிக் கொள்ளவும்.

*
ரகசிய எண்ணை யாரிடமும் தெரிவிக்காதீர்கள்.

*
கார்டின் பின்புறம் ரகசிய எண்ணை எழுதி வைக்காதீர்கள்.

*
அட்டை தொலைந்து விட்டால், உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு, வங்கி கணக்கை முடக்கவும்.

*
இயந்திரத்தில் அட்டை சிக்கினாலோ, பணம் தவறுதலாக கழிக்கப்பட்டாலோ ரசீதுடன் வங்கியில் புகார் தெரிவிக்கவும்.

*
கிரெடிட், டெபிட் அட்டைகளின் எண்களை குறித்து வைத்து கொள்ளவும்.

*
பரிவர்த்தனை முடித்து, திரையில் ஹோம் பேஜ் வந்த பிறகே மையத்தை விட்டுச் செல்ல வேண்டும்.

--- அன்புடன் உங்கள் சகோதரன்: 
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.  

Friday 27 May 2011

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
 B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு
  B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன.  B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA  தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும். 
B.Arch  கலந்தாய்வு (counseling) முறை :  +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிட படுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 - ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130 மதிப்பெண்னும் எடுத்து இருந்தால்அவரின்  கட் ஆப் மதிப்பெண்  305 ஆகும்.
இந்த கட்  ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
NATA  (National Aptitude Test in Architecture)தேர்வு
    இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும்.  இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.
NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது,  (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது.  மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத  தமிழகதில் உள்ள 15  மையங்கள் மற்றும் NATA தேர்வு  பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன.
மேலும் விபரங்களுக்கு sithiqu.mtech@gmail.com மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
S.சித்தீக்.M.Tech

Monday 23 May 2011

மலேசியாவில் நிலச்சரிவு: 15 அனாதை குழந்தைகள் பலி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
2011-05-22 18:19:35


மலேசியாவில் உள்ள மத்திய செலாங்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று திடீரென 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அங்கிருந்த அனாதை இல்லம் மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் அனாதை இல்லத்தில் தங்கியிருந்த 15 மாணவர்கள் மற்றும் அந்த இல்லத்தின் நிர்வாகி ஒருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் தவிர 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக பூமிக்குள் இருந்த ஈரத்தினால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Thursday 19 May 2011

“ ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
பிஸ்மில்லாஹ்….
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! ”- (திருக்குர்ஆன்- 5:32)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் 
நடத்தும்
மாபெரும் 11 ஆவது சிறப்பு இரத்த தான முகாம்

இன்ஷா அல்லாஹ்,

இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - KFMC இரத்த வங்கி, ரியாத்
 நாள் : 27-மே-2011, வெள்ளிக்கிழமை – 9.30 AM To 4.45 PM

உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!!

“  கொடையாளிகளுக்கு சிறப்பு மதிய உணவு ஏற்பாடு

இரத்த தான தொடர்புக்கு: 

ஃபெய்ஸல் – 0507809247  மாஹீன் – 0542540860 
வாகன தொடர்புக்கு: நூருல் அமீன் – 0507292857   
நியூ செனையா தொடர்புக்கு: நூர் முஹம்மது -  05514 45 321
TNTJ அலுவலகம் - 4021854

உதிரம் கொடுத்து உயிர் காக்க அழைக்கிறது: 
TNTJ ரியாத் மண்டலம்

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல; நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!!

{குறிப்பு: KFMC இரத்த வங்கிக்கு தபாப் ஸ்ட்ரீட் (ஷாரா தபாப்) - ல் உள்ள என்ட்ரன்ஸ் வழியாகவும்,  மக்கா ரோடு-சர்வீஸ் ரோடு - ல் உள்ள என்ட்ரன்ஸ் வழியாகவும் உள்ளே வரலாம்.  }

Wednesday 18 May 2011

'வாயால் வீடு கட்டி ஒரு 'சக Citizen of World' சாதனை..! 'காண வாருங்கள் சகோ..!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பயங்கரவாதங்கள் நிறைந்த, பணம் சம்பாரிக்கும் பரபரப்பான இவ்வாழ்கையில் சில நேரங்களில் நம்மை சுற்றி இயல்பாக நடந்து கொண்டிருக்கும் எளியோரின் சில அதிசய சாதனைகள் நம் கண்டு கொள்ளலில் ஏனோ சிக்காமலேயே போய் விடுகின்றன..!

அப்படி  ஒன்றைத்தான் இங்கே புகைப்படங்களாக தந்துள்ளேன்.

வாருங்கள்..!
எளியோருக்கு அதரவு நல்கி, அவர்களின் உழைப்பை போற்றி  அன்போடு அரவணைப்போம்..!
மனிதம் நம்மில் தழைத்தோங்கட்டும்..!
நம்முடைய  எளிய சக 'Citizen of World'-ன் ஒரு சாதனை இப்பதிவில் படங்களுடன்.!



























சுபஹானல்லாஹ்..!

'
இந்த வீட்டு ஓனர் தன் ஜன்னல் கண்ணாடியை திறப்பாரே...' என்ற பகுத்தறிவு சிறிதும் இல்லாமல் தவறுதலாக கூட்டை கட்டி விட்டது குருவி.

'
ஜன்னலை திறப்பது எனது உரிமை... கூட்டை கட்டியது குருவியின் ஆக்கிரமிப்பு...' என்று வலியார் சட்டம் பேசி ஜன்னலை வலுக்கட்டாயமாய் திறந்தால்..?
கூடு கட்ட எடுக்கப்பட்ட குருவியின் கடும் முயற்சிகள் அனைத்தும் பாழ்.
உள்ளே  முட்டைகள் இட்டிருந்தால் அவை நொறுங்கி உடையும்.
ஒருவேளை குஞ்சு பொறித்து இருந்தால்...?
சின்னஞ்சிறு பறக்க இயலா பச்சிளம் குருவி குஞ்சுகள் கீழே விழுந்து இறக்கலாம்...! இல்லையெனில்... மேலே சுற்றும் வல்லூறுகளுக்கு இறையாகலாம்...!
குஞ்சுகள் இறக்கை முளைத்து, தானே வானில் பறக்கும் வரை... வலியார் கொஞ்ச காலம் அவகாசம் தந்து கதவை திறக்காமல் இருந்து பொறுக்கலாமே..!
எதற்கு வலியார் அத்துமீறும் எளியாரிடம் பொறுக்க வேண்டும்..?
ஏன் சட்டப்படி வலியார் நடக்காமல் இருக்க வேண்டும்..?
அப்படி இருந்தால் அதனால்... வலியாருக்கு என்ன இலாபம்..? என்ன இலாபம்..? 

நபி (ஸல்) அவர்கள் ''உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) 
நூல்: புகாரி 2363, 6009
-- முஸ்லிம் மெயில்ஸ் குழுமம் வாயிலாக வெளிவரும் எல்லா ஆக்கங்களுக்கும் அனுப்புனரே பொறுப்பாளியாவார். தொடர்புக்கு muslimmails@gmail.com