Tuesday 31 December 2019

*இஸ்லாம் என்றால் என்ன?

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

▪களவெடுக்கக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விடயம் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪மிருக வதை கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

றசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை,அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!
ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!


Sent from my iPhone

Sunday 22 December 2019

தேர்தலில் 347 தொகுதியிலும் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக

அதிகம் பகிருங்கள்

குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி இந்தியா எங்கும் மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில நாட்களுக்கு முன் மிக முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது

கடந்த மக்களவை பொதுதேர்தலில் 542 தொகுதியில் நடந்த தேர்தலில் 347 தொகுதியிலும் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக NGO என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரப்பூர்வமாகவே தெளிவாகியுள்ளது . இதனை சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு சென்றுள்ளது NGO ,
இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்க வழியில்லாமல் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

நாடுமுழுதும் குடியுரிமையை பற்றி கொந்தளிக்கும்போது இதனைப்பற்றி பேசவோ எழுதவோ நாதியில்லை

195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது . மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசமுள்ளதாக ஆய்வு கூறுகிறது
https://timesofindia.indiatimes.com/india/sc-notice-to-ec-on-plea-of-2-ngos-seeking-probe-into-discrepancies-in-2019-ls-poll-data/articleshow/72511755.cms

Thursday 19 December 2019

GetOutBJP_Admk

நீட் வந்த போது,

பண முதலைகள் தகுதி இல்லாமல் மருத்துவம் படிப்பதைத் தடுக்கும் என்றார்கள். அனிதாக்கள் தான் செத்தார்கள்.

செல்லாக்காசு நடவடிக்கையின் போது,

கருப்புப் பணம் வைத்திருப்பவன் தான் அஞ்ச வேண்டும். உங்களுக்குப் பாதிப்பு இல்லை என்றார்கள். யார் நாய் பாடு பட்டார்கள்? யார் வங்கி வரிசைகளில் மோதி இறந்தார்கள்?

தேசிய பாதுகாப்புச் சட்டம் வந்த போது,

தீவிரவாதிகள் தான் பயப்பட வேண்டும். உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை என்றார்கள். காஷ்மீர் என்னும் ஒரு மாநிலத்தையே இப்போது திறந்த வெளிச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வந்த போது,

வெளிநாட்டு அகதிகள் தான் கவலைப்பட வேண்டும். உள்நாட்டுச் சிறுபான்மையினருக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார்கள். இப்போது குண்டடி வாங்குவது யார்?

இவர்கள் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று.

அதனால் தான் பாசிச பாஜக ஒழிக!

#GetOutBJP_Admk

Ravisanker ayyakannu.

முதல்ல CAP"ன்னு சொல்லி இந்த மசோதாவை கொண்டு வந்தாச்சி... இதைவிட இதுக்கு அப்புறம் வரப்போற NRC மசோதா

முதல்ல CAP"ன்னு சொல்லி இந்த மசோதாவை கொண்டு வந்தாச்சி...
இதைவிட இதுக்கு அப்புறம் வரப்போற NRC மசோதா தான் மிகவும் பயங்கரமானது...இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தாது...

மற்ற மாநில இந்துக்கள் இந்த NRCனால தப்பிச்சிக்குவாங்க.. காரணம் இப்ப தாக்கல் பண்ண CAP மசோதா இந்துக்களுக்கு குடியுரிமை உண்டு என்கிற அடிப்படையில்..

ஆனால் மாட்டப்போறது தமிழக இந்துக்கள் தான்.. காரணம் பிஜேபி தலைகீழா நின்னாலும் இங்க வரமுடியாது அதை காரணம் காட்டி மேல CAP மசோதாவுல இலங்கை தமிழ் இந்துக்களுக்கும் குடியுரிமை இல்லைன்னு சொன்னங்களே...அதையே காரணம் காட்டி தமிழர்கள் எல்லாரையும் இலங்கை அகதிகள்ன்னு சொல்லி ஈஸியாக காலி பண்ணலாம்..

இப்ப சொல்லுங்க இது யாருக்கு எதிரானதுன்னு?

நீதிபதிகள் முன்று வகைப் படுவர்:

நீதிபதிகள் முன்று வகைப் படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்; உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார்" அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது (3566)

UNHR

Sunday 15 December 2019

நடந்து முடிந்த ஒரு நீண்ட உண்மை வரலாறு

நடந்து முடிந்த ஒரு நீண்ட உண்மை வரலாறு
முஸ்லிம்கள் அனைவரும் நேரம் ஒதுக்கி முழுமையாக படித்து அறிந்து கொள்ள வேண்டும்
குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்திய நாட்டை உருவாக்கிய இஸ்லாமியர்களை வெளியேற்ற முயலும்
மத்தியஅரசே..! மதவாத அரசே..!

முகலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை...

#சிந்தனைக்கு......

ஒருவேளை முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்....?!

வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை.
அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
.
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
.
இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.
.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன.
.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள்.

எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும்,
.
அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும்,
.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,
.
இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும்,
.
இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும்,
.
இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை.
.
ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.
.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.
.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று.
.
இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்

மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது
.
அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட,
.
குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரிய போது,
.
இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.
.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.
.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை.
.
அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான்.
.
இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
.
ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான்.
.
வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான்,

ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர்.

இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர்.

ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை.

தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.
.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது.

இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். "ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?" என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர்
.
இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும்.
.
அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.

– பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி

இந்தியாவின உயர்விற்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் அயாராது உழைத்துள்ளனர்
.
இந்தியா என்ற அகண்ட ஒரு நாட்டை உருவாக்கியவர்களும் அதை கட்டியழுப்பியவர்களும் முஸ்லிம்களே !
.
குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடே என்ற பெருமை நிறைந்த முழக்கத்தை நாம் செவியுறுகிறோம்
.
ஆனால் குமரி முதல் இமயம் வரை மட்டும் இல்லாமல் பாகிஸ்தானையும் வங்காள தேசத்தையும் இணைத்த ஒரு அகண்ட பாரதத்தை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.

.முஹலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை
நாம் வாழும் தமிழகமே சேர நாடு சோழ நாடு பல்லவ நாடு பாண்டிய நாடு என ஒரு 50 துண்டுகளாகவாவது இருந்திருக்கும்
.
தமிழகமே இத்தனை துண்டுகளாக இருந்தது என்றால் இந்தியா எத்தனை துண்டுகளாக நொறுங்கி கிடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள்
.
இப்படி நொறுங்கி கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்து அகண்ட பாரதமாக உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.
இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்திய சுதந்திரம் பெறப்பட்டது .
.
இஸ்லாமியர்களின் தியாகமும்—-இந்திய சுதந்திரமும்……..
.
இந்திய சுதந்திர போரில் இந்திய நாட்டில் வாழ்ந்த மக்கள் தொகையில் சிறு பாண்மையினராக இருக்கக்கூடிய முஸ்லிம் மக்கள் தங்களின் சதவீதத்தைவிடவும் மிக அதிகமாக தங்களின் இன்னுயிரையும் ,பொருளாதாரத்தையும் இழந்து,
.
ஆங்கிலேயர்களால் பலவித கொடிய இன்னல்களை அனுபவித்தும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வேளையில்,
.
ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்தும் அவர்கள் போடும் எழும்பு துண்டாண சர் பட்டத்திற்காகவும்,அவர்களிடம் அடிமை வேளை பார்க்கவும் முறை வாசல் செய்து வந்தவர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தேறிகளாக வந்த பார்ப்பனர்கள் தான் என்பது உண்மை வரலாறு.
.
இன்று இந்தியாவை இந்து மயமாக்குவோம் என்று முழங்கும் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் அன்று காட்டிக்கொடுப்பவர்களாகவே இருந்தனர்.
.
ஏன் வாஜ்பாயும் கூட காட்டிக்கொடுத்தவர்களில் ஒருவர் அதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது.
.
காட்டிக் கொடுத்து பதவி சுகம் பெற்ற இவர்களால் ஆங்கிலம் பேசுவதும் ஹராம் என்று மார்க்கக் கட்டளையிட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதோடு
.
இன்றைக்கு முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க பார்ப்பன பணியா கும்பல் தங்களின் ஊடகங்கள் வாயிலாக முற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளன.
.
சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாததோடு சுதந்திரப் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்த ஒரு கூட்டம் இந்தியாவை உரிமை கொண்டாடுகிறது.
.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த முஸ்லிம்களுக்கு குடியிருக்க வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.
.
சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகியும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமையும் வேதனையளிக்கிறது.
.
ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ,எந்த கொள்கையை சார்ந்தவர்களோ அவர்களுக்கு சாதகமான வரலாற்றை கல்வியில் புகுத்தியும்,தனக்கு எதிரான கொள்கையுடையவர்களைப் பற்றி தவறான செய்திகளை புகுத்தியும் உண்மையான வரலாற்றை திரித்து வைத்திருக்கின்றனர்.
.
கர்னாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் அங்கே பகவத் கீதையை கல்விகூடங்களில் புகுத்த முயற்சிக்கிறது.
.
பீகாரில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி நடத்தும் நிதீஷ் குமார் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோவால்கர் உடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.
.
இது போன்றே முன் சென்ற ஆட்சியாளர்கள் உண்மையான இஸ்லாமியர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகத்தை மறைத்து காந்தியை சுட்டுக்கொன்றவர்களின் தியாகம் போற்றப்படுகிறது.
.
இதுபோன்ற தவறான செய்திகளை மீண்டும் மீண்டும் (கோயபல்ஸ்தத்துவம்) கேள்விப்படும் மக்கள் (இஸ்லாமியர்கள் உள்பட) இந்த வரலாறு உண்மையாக இருக்குமோ? என்று நினைக்கின்றனர்.
.
அவர்களுக்காக,மற்றும் இஸ்லாமியர்களைப்பற்றி தவறாக விளங்கியுள்ள மற்றவர்கக்கும் உண்மையை விளக்கும் விதமாக இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
.
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களைப் பற்றிய ஒரு சில செய்திகளை அறிந்துகொள்வது நல்லது.
.
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைப்பற்றி 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
.
இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
.
அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
.
சுதந்திர வரலாற்றில் இந்திய அளவில் இல்லாது தமிழகத்திலும் ஏராளமானவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். .
.
இந்தியாவை கட்டிஎடுழுப்பியது போலவே இந்தியா அணுஆயுத வல்லரசாக உருவாகுவதற்கும் ஒரு முஸ்லிமின் உழைப்பே அடிப்படையானது
.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் முக்கிய பங்களிப்பில் நடத்தபட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகுதான் இந்தியா உலக அரங்கில் வலிமையுடன் உயர்ந்து நின்றது
.
அந்த நிகழ்வுக்கு பிறகு தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க ஆரம்பித்தது
.
ஏவுகளை தொழில் நுட்பமானாலும் ராக்கெட் தொழில் நுட்பமானாலும் அணுஆயுத தொழில் நுட்பமானாலும் அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்கியதில் அப்துல் கலாமின் பங்கு அளபெரியது
.
இந்த தொழில் நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்கி இந்தியாவை சிறப்பின் சிகரத்தில் அமரவைத்து உலகில் இருந்து விடை பெற்றிருக்கிறார்
இசுலாமியரான அப்துல் கலாம்...

இந்தியா என்ற ஒரு தேசத்தை உருவாக்கிய இசுலாமியர்களை வெளியேற்ற நினைப்பது
களிறு தன் மீது மண்ணை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.

Wednesday 11 December 2019

பகவத் கீதை சொல்லிக் கொடுப்பது பாலியல் பலாத்காரமா?

*"பகவத் கீதை சொல்லிக் கொடுப்பது பாலியல் பலாத்காரமா?"*

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாக செய்திகள் வந்தவாறு இருக்கும் நிலையில், ஆந்திரமாநிலம் கடப்பாவில் 14 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரட்டிவாரியப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக வேலைபார்த்துவருபவர் சத்யநாராயணா. இவருக்கு கடப்பாவைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள இந்துக்களுக்கு சமஸ்கிருதம், பகவத் கீதை, இராமாயணம் கற்றுக்கொடுக்க இந்து அமைப்பினர் வழங்கும் நிதியை ஊதியமாக வழங்கி வருகின்றனர்.

இந்த ஊதியத்தைக் கொண்டு இவர் கடப்பா மாவட்டத்தில் வீடுகட்டி குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவர் ரட்டிவாரியப் பள்ளியில் உள்ள கோவிலில் பகவத்கீதை வகுப்பு நடத்தினார். *கடந்த 5 ஆம் தேதி மாலை "பகவத்கீதை" படிக்கவந்த* அனைவரும் சென்றுவிட 14 வயது சிறுமி தனது பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியிடம் சத்யநாராயணா கைப்பேசியில்
ஆபாசப்படம் காட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக யாரிடமும் கூறினால் கடவுளின் சாபம் உன்னையும், உனது குடும்பத்தாரையும் பிடித்துக் கொள்ளும் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில் தனது பெற்றோருடன் வீடுதிரும்பிய சிறுமிக்கு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது, மருத்துவர் சிறுமியிடம் விசாரணை செய்த போது அர்ச்சகர் கோவிலில் வைத்து பாலியல்வன்கொடுமை செய்த விவரம் தெரியவந்தது, இதனை அடுத்து மருத்துவர் கடப்பா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்தனர். மேலும் குற்றவாளியான அர்ச்சகரைத் தேடி கோவிலுக்குச் சென்றனர்.

இதற்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் காவல்துறை தன்னை தேடுகிறது என்று தெரிந்துகொண்ட அர்ச்சகர் சத்யநாராயாணா தனது குடும்பத்தோடு தலைமறைவானார்.

ரயில் மூலம் நாக்பூருக்கு தப்ப இருந்த அர்ச்சகரை அவரது கைப்பேசி சிக்னலைக் கொண்டு அனனவரம் ரயில் நிலையத்தில் கடப்பா காவல்துறை கைதுசெய்தது. பின்னர் அர்ச்சகரும், அவரது குடும்பத்தினரும் கடப்பா காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். விசார ணைக்குப் பிறகு அர்ச்சகரைக் கைதுசெய்தனர்.

அவரை பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த கோவிலுக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள பல கோவில்களில் அர்ச்சகராகவும், பகவத்கீதை சொல்லித் தருபவராகவும் இருந்துள்ளார். பிற கோவில்களிலும் இது போன்று யாரையேனும் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் *ஆந்திராவில் கோவிலில் வைத்தே - பகவத்கீதை சொல்லித்தருகிறேன் என்று கூறி சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

*பகவத் கீதை சொல்லிக் கொடுப்பவர் பாலியல் வன்கொடுமை செய்யலாமோ என்று யாரும் கேட்க முடியுமா?*

பார்ப்பன அர்ச்சகரைக் கேட்டால் அவர் சொல்லக் கூடும்; *பகவான் கிருஷ்ணனே செய்யாத பாலியல் லீலைகளா? அறுபதினாயிரம் கோபிகாஸ்திரிகளிடம் அவர் அடித்த லீலைகள் கொஞ்சமா நஞ்சமா என்று கேட்க மாட்டாரா?*

*காஞ்சிபுரத்தில் மச்சேந்திரன் கோயிலில் தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் கோயிலிலேயே லீலைகள் செய்து விபச்சார விடுதி ஆக்கிவிடவில்லையா? திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் பத்ரிநாத் என்ற பார்ப்பான் பாலியல் வேட்டை நடத்திடவில்லையா?*

*இந்து மதத்தின் கடவுள்களுக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணம் - ஒன்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்தியால் ஒழுக்கம் வளராது என்பதுதான் அந்த மாபெரும் உண்மை.*

*நன்றி : "விடுதலை" நாளேடு தலையங்கம் 11-12-2019.*

ஒன்று படாத ஆண்ட வர்கம் ஆண்டியாக்கப்படுவது உறுதி....

ஒன்று படாத ஆண்ட வர்கம் ஆண்டியாக்கப்படுவது உறுதி....

Tuesday 10 December 2019

வரலாற்றில்_பொன்னெழுத்துக்களால்_பொறிக்கப்பட_வேண்டிய_இரு_பாராளுமன்ற_உரைகள்

#வரலாற்றில்_பொன்னெழுத்துக்களால்_பொறிக்கப்பட_வேண்டிய_இரு_பாராளுமன்ற_உரைகள்
#காங்கிரஸ்_கட்சியைச்_சேர்ந்த_திரு_மனீஷ்_திவாரி_அவர்கள்
#திமுகவைச்_சேர்ந்த_திரு_தயாநிதி_மாறன்_அவர்கள்

யாராலும் குறிப்பிடப்படாத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை மனீஷ் அவர்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

#ICCPR எனப்படும் சர்வதேச சமூக மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights) இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் இது ஒரு இன்றியமையாத அம்சம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஐநா பொது கவுன்சிலால் டிசம்பர் 19,1966 அன்று கொண்டு வரப்பட்டு, மார்ச் 23,1976 அன்று முதல் அமுலுக்கு வந்த உடன்படிக்கை அது.

#Refoulment என்று சொல்லப்படக் கூடிய, அகதிகள் சொந்த நாட்டிற்குத் திரும்பினால் அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்ற நிலை இருக்குமேயானால், அபயம் அளித்த நாடு அபயம் தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதும் இந்த உடன்படிக்கையின் முக்கிய சாராம்சம்.

இது நாட்டில் உள்ள அகதிகள், குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பது நாம் கவனிக்க வேண்டியதாகும்.

இதை எதிர்த்துப் பேசிய அமைச்சர் அமித் ஷாஜி, மனீஷ் திவாரி அவர்களின் விளக்கத்திற்குப் பின் எதிர்வாதம் புரியாமல் தலை குனிந்து உட்கார்ந்தார்.

#முஸ்லிமாக_இருப்பது_ஓர்_க்ரிமினல்_குற்றமா?
திரு தயாநிதி மாறன் அவர்களின் 13 நிமிட பேச்சின் சாராம்சமாக இந்த ஒற்றைக் கேள்வி அவரது உரையில் வெளிப்பட்டது.

20 கோடி இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் எழும் கேள்வியை அவர் பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார்.

மாலத்தீவில் வாழும் இந்திய வம்சாவளியினர் முதல், இலங்கைத் தமிழர்கள் வரை தொட்டு அவர் ஆற்றிய உரை நம் நன்றிக்கு உரியது.

திருமனிஷ் திவாரி அவர்களின் உரை
https://m.facebook.com/story.php?story_fbid=2642464335866222&id=351616078284404

திரு. தயாநிதி மாறன் அவர்களின் உரை
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=0qQaSUhUMjs

சித்தார்த் நாட்டைபற்றி உண்மையான அக்கறை

சித்தார்த் நாட்டைபற்றி உண்மையான அக்கறையுடனும் கவலையுடனும்
உள்ளதை பேசுகிறார் இந்த துணிச்சலும் தையிரியமும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

NRC இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!

NRC இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!

" "இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே." என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார்.

"தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கான (சிஏபி) எதிர்ப்பானது நம் நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராக அமையும். அதனை தலைமை தாங்கி வழிநடத்தவும் நான் தயார்." என்று கடந்த வெள்ளிக் கிழமையன்று (5-12-19) மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
"
"இது நமது தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக மாறும். நாம் போராடியே ஆக வேண்டும், நாம் போராடியே தீருவோம். இறுதி கட்டம் வரை போராடுவோம். இத்தனை காலமாக மக்களை வழிநடத்தி வந்துள்ளோம். இந்த முறையும் (இந்த பிரச்னையிலும்) வழி நடத்துவோம். அதுவும் முன்னிருந்து வழி நடத்துவோம். இதன் (என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றின்) இயல்பு தன்மையும் சாராம்சமும் பாபசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய நம் நாட்டின் அரசியலமைப்புக்கே எதிரானது." என்று மயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மம்தா பானர்ஜி முழங்கினார்.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமும் அம்பேத்கர் நினைவு தினமும் ஒருங்கே டிசம்பர் 6 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட சன்ஹதி திவாஸ் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் மம்தா பானர்ஜி இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைப் பற்றி பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலம் அடிப்படை பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை போன்றவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப பாஜக அரசு முயற்சிப்பதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

நீங்கள் உங்கள் உடலின் கையையோ, காலையோ துண்டிப்பீர்களானால், உங்கள் உடலால் எப்போதும் போல சரிவர இயங்க முடியாமல் போகும். அதே போல தான் மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த அடையாளத்தின் அடிப்படையிலோ நீங்கள் -உடலில் (நாட்டில்) வேறுபாடு காட்ட ஆரம்பித்தாள் நம் நாடு இத்தனை ஆண்டுகளாக எப்படி இருந்து வந்ததோ அப்படிபட்ட நாடாக இருக்காது. என்ஆர்சி என்பது உடலில் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பதற்கு சமானம் . சிஏபி என்பதோ உடலில் தலையை துண்டிப்பதற்கு சமானம் என்று அவர் மேலும் கூறினார்.
1947 அல்லது 1971 ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் மக்களின் குடியுரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம்..? ஒரே இரவில் இவர்கள் அனைவரையும் அந்நியநாட்டவர் என எப்படி அறிவிப்பீர்கள்.? 6 ஆண்டுகள் வரை அந்நிய நாட்டவராக தங்க வைப்பீர்கள், பிறகு சில பாகுபாடான சட்டங்களின் அடிப்படையில் சிலருக்கு மட்டும் குடியுரிமையை வழங்குவீர்கள்? இதையெல்லாம் முக்கியத்துவத்துடன் மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக எதிர்பார்கிறதா? மேற்குவங்கத்தில் என்ஆர்சி யை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டோம்.
மேலும் இந்தியா போன்றதோர் மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை ஒருபோதும் வழங்கப்பட கூடாது என மம்தா கூறினார்.

பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா

பாராளுமன்றத்தில் தூள் கிளப்பிய தயாநிதி மாறன்.

பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா

குடியுரிமை சட்டம்

குடியுரிமை சட்டம் அமலில் வந்தால் நான் முதலில் முஸ்லிம் ஆவேன் .இரண்டாவது குடியுரிமையை நிருபிக்க எந்த ஆவணத்தையும் சமர்பிக்க மாட்டேன். முன்றாவது இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு எந்த முஸ்லிமையும் கைது செய்தால் நானும் அவர்களில் ஒருவன் ஆவேன்!

-ஹர்ஷ் மந்தர்!

(குஜராத் படுகொலைகள் 2002இல் நடந்தபோது அம்மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஹர்ஷ் மந்தர். அந்த நிகழ்வுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் சமூகப் பணியாற்றி வருகிறார்)

Monday 2 December 2019

102:2

حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏ 
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் wவரை.
(அல்குர்ஆன்: 102:2)


Sent from my iPhone

Tuesday 26 November 2019

இவர்தான் ராஜதந்திரி

இவர்தான் ராஜதந்திரி

கடந்த வாரம் சிவசேனா கட்சி தாங்கள் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட போது, காங்கிரஸ் தலைவர் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவளிக்காமல் காலம் தாழ்த்தினார். காரணம், பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்களும், எம்,எல். ஏக்களும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவசரமாக செயற்குழு கூட்டப்பட்ட பின்பும் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் சரத்பவரின் ஆலோசனைப்படி குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் சிவசேனாவிற்கு ஆதரவளிக்க முன்வந்தார். இந்த காலகட்டத்தில் தான் ஆளுநர் ஆட்சி, பாஜக இரவோடு இரவாக பதவியேற்றது போன்ற கூத்தெல்லாம்..

கடந்த வாரம் மட்டும் சோனியா காந்தி அவசரமாக எதாவது முடிவெடுத்திருந்து சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தால், மகாராஷ்ட்ரியாவில் காங்கிரசில் அதிருப்தி எம்எல்ஏகள் உருவாகியிருப்பார்கள்.காங்கிரஸ் கட்சி உடைந்திருக்கும் அவர்களுக்கு தூண்டில் போட்டிருக்கும் பாஜக. ஆனால் அதற்கான வாய்ப்பை சோனியாதான் தடுத்தெறிந்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆட்சிக்கு ஆசைப்பட்டு சிவசேனாவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியையும் தேசியத்தை காங்கிரசையும் எல்லா தரப்பு மக்களும் தூற்றியிருப்பார்கள். எந்தவித பேச்சுக்கும் வழிவகுக்கும் அமைதியாக சாதித்திருக்கிறார் சோனியா. உண்மையிலேயே இவர்தான் ராஜதந்திரி

இப்படிப்பட்ட சூழலில் தான் , ஆட்சியை பிடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய ஒட்டு மொத்த இமேஜியையும் இழந்திருக்கிறது பாஜக. அதோடு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளை தொங்கலில் விட்ட , பாஜகவை இனி ஒரு போதும் எவரும் ஆதரிக்க முன் வர மாட்டார்கள். 'நண்பனின் பகை மிகவும் ஆபத்தானது, என்று சொல்வார்கள் அதுபோல பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த சிவசேனாவும், பாஜகவும் இன்று எதிரெதிர் துருவத்தில்... பாஜகவின் அஸ்தமனம் மஹாராஷ்ட்ராவிலிருந்து ஆரம்பமாகப்போகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் முயற்சித்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் கொண்டு வரமுடியும். அதற்காகத்தான் வரும் நவம்பர் 30ல் சோனியா தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இந்திய அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும்.

-ஏஜிஎம்

Good simply advise

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்)

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....
குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ ,
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்.
படித்ததில் பகிர நினைத்தது....


Sent from my iPhone

Give respect take respect

இழந்தோம்_ஒரு_பாபரி_பள்ளிவாசலை வென்றோம்_பல_இந்துக்களின்_இதயங்களை

#இழந்தோம்_ஒரு_பாபரி_பள்ளிவாசலை
#வென்றோம்_பல_இந்துக்களின்_இதயங்களை

🎯👆👌💐💐💐👏🏻#மதத்தினுள் #அடங்கா #மாந்தர்

வாழ்த்துக்கள் #பத்மாவதி பாட்டி. தங்களது செயலை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்.

சேலம் முதல் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் பத்மாவதி பாட்டி, அங்குள்ள ஜாமியா பள்ளிவாசலின் புனரமைப்பிற்கு நன்கொடையாக ரூ.10,000 தானம் கொடுத்துள்ளார். அதற்கான ரசீதில் அவர் கைரேகையை ஒப்பிட்டுக்கொடுத்துள்ளார். பாராட்டுவோம் வாழ்த்துவோம்.

கடந்த வாரம் லக்னோ பகுதியில் ஒரு கேன்டிட் வீடியோ நிகழ்ச்சியை நடத்திய ஒரு சமூக ஊடக சேனல் வெளியிட்ட தரவுகளின்படி....லக்னோவிலிருக்கும் பிரபல மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களிடமும், தலையில் தொப்பி,தாடி ,ஜுப்பாவுடன் முஸ்லிம் அடையாளங்களோடு வலம்வந்தவரிடையேயும் அருகிலிருக்கும் ஒரு கோவில் புனரமைப்பிற்காக நன்கொடை கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மறுப்பேதும் செல்லாமல் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி நீட்டிய உண்டியலில் தங்களால் இயன்ற தொகையை போட்டுவிட்டனர்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கின் ,இஸ்லாமிய விரோதப்போக்கு தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக உபியில் முஸ்லிம்களின் மனநிலை எப்படியுள்ளது என்பதை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட நாடக நிகழ்ச்சி அது. அதில் 100% முஸ்லிம்கள் எங்களது மனங்களை வென்றுவிட்டார்கள், அவர்களிடம் விரோதம், காழ்ப்புணர்ச்சி, குரோதம் என எந்தவித ஆவேசங்களும் இல்லை என ஊடகத்தினர் சார்பில் தரவுகள் பகிரப்பட்டது. அவர்கள் செய்த செயலைவிட நமது பத்மாவதி பாட்டி செய்த தானம் தான் போற்றுதலுக்குறியதாகப்படுகிறது.
#நன்றி #பாட்டி.

Saturday 23 November 2019

பாத்திமா(ரலி)

பாத்திமா(ரலி) அவர்களுடைய கணவர் பெயர்: அலீ(ரலி). [1] பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் 3 ஆண் மக்கள் [ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி),முஹ்ஷீன் (ரலி)]2 பெண் மக்கள்[,உம்முகுல்தூம்(ரலி),ஜைனப்(ரலி

Monday 18 November 2019

பிரியாணியில் இத்தனை வகை இருக்கும் போது

பிரியாணியில் இத்தனை வகை இருக்கும் போது

ஒரே மொழி எப்படி சாத்தியம்

கூடி வாழ்வோம்,... கோடி நன்மை

சிறுவனின் செயல்

மாஷா அல்லாஹ் இந்த சிறுவனின் செயல் என் மனதை ஈர்த்தது அல்ஹம்துலில்லாஹ் .


 யா அல்லாஹ்! யார் எனக்கு உன்வளித்தாரோ அவருக்கு நீ உணவளித்திடுவாயாக! யார் எனக்கு பானம் புகட்டினாரோ அவருக்கு நீ பானம் புகட்டிடுவாயாக!.


ஆதாரம் : முஸ்லிம்



பால் எங்கே உற்பத்தியாகிறது?_*

*_பால் எங்கே உற்பத்தியாகிறது?_*

*_விஞ்ஞானத்தை மிஞ்சும் திருகுர்ஆன்!_*

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள *செரிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.* அருந்துவோருக்கு அது இனிமையானது.

*(திருக்குர்ஆன் 16:66)*

:- 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானியை விட சிறப்பாக பேசும் இறைவேதம் திருக்குர்ஆன்!

சொர்க்க வாசல்களின் பெயர்கள்

சொர்க்க வாசல்களின் பெயர்கள் :
1. சலா ( ஸஹிஹீல் புகாரி # 1897
2. ஜிஹாத் ( ஸஹிஹீல் புகாரி # 1897
3. ஸதகா ( ஸஹிஹீல் புகாரி # 1897
4. ரய்யான் ( ஸஹிஹீல் புகாரி # 1897
5. ஹஜ்
6. கஸ்மன்
7. ஈமான்
8. திக்ரு

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3257.
அத்தியாயம் : 59.


Sent from my iPhone

Ilm 2019 துபையில் மாநாடு

Sunday 17 November 2019

யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்.. =

யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்..
=============================

இந்திய சுதந்திரத்திற்காக
தங்களையே கொடுத்தவர்கள் முஸ்லீம்கள்.
ஜதராபாத் நிஜாம் கொடுத்தாரே
5000கிலோ தங்கம், அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
.
கப்பல்வாங்க வா உ சி க்கு பல கோடி
கொடுத்துஉதவினார்களே...முஸ்லீம்கள்
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

சுதந்திரம் வாங்க வீர மரணம்
அடைந்த அதிகமானோர் முஸ்லீம்கள்,
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

டெல்லியில் உள்ள
இந்தியா கேட் முகப்பில் 69500 பேர் முஸ்லீம்கள் என பொறிக்கப்பட்டுள்ளது
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

நீதி சொன்ன நீதி மன்றம் ...
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகை
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றம்...
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
தாஜ்மகால், குதுப்மினார்,ரேட் போர்ட்..
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

முஸ்லீம்களின்
ஆயிரமாயிரம் தியாக
வரலாறுகள் இந்தியாவின் வழியெங்கும்
கொட்டிக்கிடக்கிறது சங்கிகளே!
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

இந்தியாவின் சுதந்திரத்திற்காக
தங்களின் சக்திக்கு மீறி
தியாகம் செய்த பரம்பரையினர்
முஸ்லீம்கள் என்று வரலாறு எழுதி
வைத்துள்ளதை அறிவீரா சங்கிகளே?
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

இன்னும் ஆயிரமாயிரம் தியாகத்திற்கும்,
உழைப்புக்கும், நீதிக்கும், நேர்மைக்கும்
பெருமைக்கும் உரியவர்கள் முஸ்லீம்கள்...

குருவாயூரில் உள்ள கோவிலுக்கு
669 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த
நன்கொடை நாயகன்
மாவீரன் திப்பு சுல்தான்...
இன்னும் இதுபோல கோயில்களுக்கு
நஞ்சைகளையும், புஞ்சைகளையும் வாரி வாரி தானமாக கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் என்று வரலாறு சொல்லும்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

திருவல்லிக்கேணி திரு வெற்றீசுவரன் கோவில் கட்ட ஆற்காடு நவாப்தான் இடம் கொடுத்துள்ளார். கோவிலின் பராமரிப்புக்காக பல்வேறு மானியங்களும் கொடுத்துள்ளார்கள்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

ஆற்காடு நவாப்புகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை 16 நூற்றாண்டில் இருந்து 19 நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சி செய்தனர். அப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலுள்ள கோவில்களுக்கு பல தானதர்மங்களை செய்துள்ளனர்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

உலகத்தின் வரலாற்றை புரட்டிப்பார்.
இஸ்லாமியர்களின் வீரதீர தியாகங்கள் புரியும்.

முஸ்லீம்கள்...
விட்டு கொடுப்பவர்கள். அதனால் என்றுமே கெட்டு போகமாட்டார்கள்...

கெட்டு போகிறவன் விட்டு
கொடுக்க மாட்டான்....

1947ல் நாடு விடுதலை பெற்றபோது, முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு சென்றபோதிலும், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியா தங்கள் தாயகம் என்ற எண்ணத்திலும், இந்துக்களின் மேல் இருந்த நம்பிக்கையாலும் பிறந்த இடத்திலேயே இருந்துவிட்டார்கள்.

சம்ராஜ்யங்கள் சரியலாம்....
சரித்திரங்கள் சரியாது.....

சங்கிளுக்கு இந்திய முஸ்லீம்களை
பிடிக்காது. ஆனால்
அரபுநாட்டு ஷேக்களும்,
அவர்களின் முதலீடுகளும்
அவர்களின் விருந்தும்,
அவர்களின் பெட்ரோல் ஊற்றும் பிடிக்கும்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட
50 ஏக்கர் நிலம் வாங்கித் தாருங்கள் என்று முஸ்லீம்களிடம் கேட்டிருந்தால், முஸ்லீம் என்றோ வாங்கித் தந்திருப்பார்களே.

ராமருக்கு ஆலயம் கட்ட
எங்கள் இறை ஆலயத்தையே
வார்த்து தந்திருக்கிறோம்.
இதுதான் உண்மை.

யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்..

ஹாபிழ்
M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி.

Thursday 14 November 2019

முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக

اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 9:112)

அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏ 
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன்: 13:11)

هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ‌ۚ‏ 
அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
(அல்குர்ஆன்: 13:12)

‌وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤـٮِٕكَةُ مِنْ خِيْفَتِهٖ ‌ۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَآءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰه‌ۚ ِ وَهُوَ شَدِيْدُ الْمِحَالِؕ‏ 
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 13:13)


Sent from my iPhone

என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை

قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى‏ 
"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 20:50)

قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍ‌‌ۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى‏ 
"இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்.
(அல்குர்ஆன்: 20:52)


Sent from my iPhone

உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.” (

وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ‌ ۚ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰ لِكَ‌ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏ 
(மலக்குகள் கூறுகிறார்கள்: நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்."
(அல்குர்ஆன்: 19:64)


Sent from my iPhone

நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்

وَمِنَ الشَّيٰطِيْنِ مَنْ يَّغُوْصُوْنَ لَهٗ وَيَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰ لِكَ‌ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِيْنَۙ‏ 
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
(அல்குர்ஆன்: 21:82)


Sent from my iPhone

பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்

قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَيْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰٓى اَخِيْهِ مِنْ قَبْلُ‌ؕ فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا‌ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏ 
அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.
(அல்குர்ஆன்: 12:64)


Sent from my iPhone

அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْ‌ۖ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ‏ 
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
(அல்குர்ஆன்: 42:6)


Sent from my iPhone

حَفِيْظٌ பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்

وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ يُّـؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِىْ شَكٍّ ؕ وَ رَبُّكَ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ‏ 
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 34:21)


Sent from my iPhone

அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்

وَاسِعٌ அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்;

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ 
அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 2:247)

يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று; நீர் கூறும்: "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."
(அல்குர்ஆன்: 2:215)

اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰـهَ اِلَّا هُوَ‌ؕ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا‏ 
"உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்" என்றும் கூறினார்.
(அல்குர்ஆன்: 20:98)

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ‌ؕ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ 
"(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
(அல்குர்ஆன்: 2:73)

وَّجَعَلَ الْقَمَرَ فِيْهِنَّ نُوْرًا ۙ وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا‏ 
"இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 71:16)

وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۙ‏ 
"அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
(அல்குர்ஆன்: 71:17)

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ 
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 2:261)


Sent from my iPhone

‎مُّقِيْتًا. கண்காணிப்பவனாக இருக்கின்றான்

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
(அல்குர்ஆன்: 11:6)


Sent from my iPhone

مُّقِيْتًا. கண்காணிப்பவனாக இருக்கின்றான்

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌ ۚ وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏ 
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 4:85)


Sent from my iPhone

مُحِيْطٌ சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்

اَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَآءِ فِيْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ‌ ۚ يَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِىْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ‌ؕ وَاللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ‏ 
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 2:19)

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيْـطًا‏ 
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:126)

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ۚ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏ 
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
(அல்குர்ஆன்: 3:120)


Sent from my iPhone

Al muhaimeen அடக்கியாள்பவன்

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏ 
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
(அல்குர்ஆன்: 59:23)


Sent from my iPhone

Free education

Tuesday 12 November 2019

நற்பன்புகள்

இரவு நேரங்களில் ஸஜ்தாச் செய்தவராகவும், நின்றவராகவும், மறுமையைப் பயந்து தனது இறைவனின் அருளை எதிர்பார்த்தவராகவும் வணங்கிக் கொண்டிருப்பவரா? (அல்லது அவ்வாறு இல்லாதவரா?) அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.
[அல்குர்ஆன் 39:9]

"நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்!" என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான். "எழுந்து விடுங்கள்!" எனக் கூறப்பட்டால் எழுந்து விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
[அல்குர்ஆன் 58:11]

அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.
[அல்குர்ஆன் 96:4]

"தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை" என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலைநாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
[அல்குர்ஆன் 3:18]

"இதை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்!" என்று கூறுவீராக! இதற்கு முன் (வேத) அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில் விழுவார்கள்.
[அல்குர்ஆன் 17:107]

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
[அல்குர்ஆன் 35:28]

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 29:49]

குர்ஆனை மனனம் செய்திருந்த எழுபது நபித் தோழர்களை காஃபிர்கள் சதி செய்து அழைத்துச் சென்று கொலை செய்தபோது நபி (ஸல்) வேதனையோடு குனூத் நாஸிலா என்ற எதிரிகளுக்கு எதிராக சாப துஆ செய்தார்கள் அது வித்ரில் ஓதப்படும் குனூத்

கடன் பற்றி

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ‌ؕ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ‌ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ‌ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌ؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ‌ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ‌ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ  ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 2:282)

செலவு பன்னுவதில் சிறந்தது

நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
[அல்குர்ஆன் 3:92]

இணக்கத்தை ஏற்படுத்துங்கள்!

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
[அல்குர்ஆன் 49:10]

உன்மை பேசுங்கள்


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!
[அல்குர்ஆன் 9:119]

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
[அல்குர்ஆன் 17:23]

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்" என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
[அல்குர்ஆன் 60:12]

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!
[அல்குர்ஆன் 2:188]

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
[அல்குர்ஆன் 5:90]

வாக்கை நிறைவேற்றுங்கள்


அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.
[அல்குர்ஆன் 17:34]

பொறுமை

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
[அல்குர்ஆன் 2:45]

அஸ்திவாரம் போடும் போது பூஜை பொருட்களை புதைக்க அனுமதிக்காதீர்!

அஸ்திவாரம் போடும் போது பூஜை பொருட்களை புதைக்க அனுமதிக்காதீர்!

தமிழகத்தில் வீடோ? அல்லது வேறு கட்டிடங்களோ கட்டும் போது அஸ்திவாரம் என்னும் வானப்படை போடுவது வழக்கம்!

இவ்வாறு அஸ்திவாரம் போடும் போது முதலில் மேஸ்திரி,கொத்தனார் போன்றவர்கள் தேங்காய்,பழம்,ஊதுபத்தி,குங்குமம்,சந்தனம் வைத்து பூமி பூஜை செய்வார்கள்.

பூஜை முடிந்ததும் ஐம்பொன் என்னும் பொருட்களை ஒரு பேப்பரில் மடித்து பூமிக்குள் வைப்பார்கள்.அதை சுற்றியும் சந்தனம் குங்குமம் தடவிய செங்கலை எடுத்து ஒவ்வொருவரிடமும் கொடுத்து அதை பூமிக்குள் வைக்க சொல்வார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகள் முஸ்லிம்களிடமும் உள்ளது என்பதும் இணை வைத்தலுக்கு எதிரான அல்லாஹ்வின் பள்ளிகள் கட்டப்படும் போதும் பூமி பூஜை நடப்பது அதிர்ச்சி மட்டுமல்ல, இதனை கண்டும் காணாதது போல் உள்ளனர் என்பது தான் பேரதிர்ச்சியாகும்.

தற்போதைய சிவில் வழக்கு முறைப்படி நமது கட்டிடத்தின் மீது யாராவது ஒருவர் வழக்கு தொடுத்து இந்த கட்டிடம் எங்கள் முன்னோர்கள் வணங்கிய இடமென்று கூறினால்....

அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆராய்ச்சி செய்து அதனடிப்படையில் தீர்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளதால்...நாம் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அனுமதித்த பூமி பூஜையின் அடையாளங்கள் நமது கட்டிடத்தை இன்னொரு புறம்போக்கு நபருக்கு மாற்றி கொடுத்து விடக்கூடும்?

நம்பிக்கை மற்றும் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லப்படும் நமது நாட்டில் நமது சொந்த நிலத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் பூமிக்கடியில் புதைக்கப்படும் பூஜை பொருட்களே நாளை நமக்கு எதிராக மாறும் வாய்ப்புள்ளது.

எதிர்கால அரசியல் சூழ்ச்சிகள் புரியாத மங்குனி சமூகமாய் நாம் பயணிப்பதால் தான், நமது நிலத்திலேயே மற்றவர்களின் மத நம்பிக்கையின் அடையாள பொருட்களை புதைக்க விட்டு நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

நமது நிலம்,கட்டிடம் நமக்கும் நமது சந்ததிகளுக்கும் உரிமையாக வேண்டுமானால்...நாம் கட்டும் எந்த கட்டிடத்தின் அஸ்திவாரத்தின் போதும் பூஜை பொருட்களை புதைக்க அனுமதிக்காதீர்.

Monday 11 November 2019

Railway அகர்வால் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமாம்.

அகர்வால் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமாம்.

ரயில்வேயை தனியார் மயமாக்கிவிட்டு, அந்த தனியார் ரயில்வேயில் குறிப்பிட்ட பனியா மற்றும் பிராமண சமூகத்தை மட்டும் தேர்வு செய்கின்றனர்.

இப்படித்தான் 1960 க்கு முன்பு இருந்து வந்தது. இட ஒதுக்கீடு மூலம் ஒரு தலைமுறை எழத்துவங்கியது. தற்போது, மீண்டும் அடிமையாக்கும் வேலை முழு வீச்சில் நடந்து வருகிறது.

இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்தவர்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கு பெரிய ஆப்பை சொருகியுள்ளனர்.👇

இறைநம்பிக்கையாளர்கள்* நரகத்திலிருந்து *தப்பி வரும்போது,

*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*


*இறைநம்பிக்கையாளர்கள்* நரகத்திலிருந்து *தப்பி வரும்போது,*

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் *இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.*


அப்போது *உலகில் வாழ்ந்த போது* அவர்களுக்கிடையே நடந்த *அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள்.*


இறுதியில், அவர்கள் *பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது* சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.


*முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!*


அவர்கள் *சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை,*


*உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.*


*நூல் - புகாரி : 2440*


☝🏿☝🏿☝🏿

பாபர் மசூதி

டிசம்பர் ஆறு அன்று
#கறுப்பு_தினம் கொண்டாடி
கொண்டாடி சோர்ந்து விட்டோம்.

இனிமேல்
#பொறுப்பு_தினம் கொண்டாடுவோம்.

ஐந்து ஏக்கர் புதிய இடத்தில்
அதே பாபர் மசூதி தோற்றத்தில்
கம்பீரமாக ஒரு பள்ளியை
#பாபர்_மசூதி என்ற பெயரிலேயே
கட்டி எழுப்புவோம்.

தொழுகைக்காக
மக்கள் கூடும் கூட்டத்தால்
பள்ளியை அலங்காரம் செய்வோம்.

உலகில் உள்ள
பள்ளிகளை விட எழிலான ஒரு
பள்ளிவாசலை அங்கே கட்டி முடிப்போம்.

பெரும்பான்மை இந்து சகோதரர்களோடு
இணக்கத்தை அனுசரிப்போம்.
இப்தார் வேளைகளில்
இன்முகத்தோடு அவர்களிடம்
நல்லிணக்கம் பேசுவோம்.

பகை படிந்த உள்ளங்களை
பொறுமையைக் கொண்டு
சுத்தம் செய்து விடுவோம்.

என்றாவது ஒருநாள் ..

இஸ்லாமியர்களின்
இணங்கி வாழும் பண்பில்
அவர்களும் இணங்கி வருவார்கள் .

அரபு குலத்தின்
அதிகார மையத்தில் இருந்தவர்களே
இறங்கி வந்து
அண்ணல் நபிகளின்
அடியொற்றி நடந்த வரலாறுகள்
நம்மிடம் உண்டு .

நிச்சயமாக
பொறுமையாளர்களுடன்
இறைவனே இருக்கிறான்.

இறைவனே
நம்மோடு இருக்கும்போது
இடம் ஒன்றும் பெரிதில்லை.!

.

முகம்மது நபி ஸல் கடைசி நபி

مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ 
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன்: 33:40)

ஜகரிய்யா அலை


اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏ 
இம்ரானின் மனைவி "என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்-
(அல்குர்ஆன்: 3:35)

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏ 
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
(அல்குர்ஆன்: 3:36)

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏ 
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்;  "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.
(அல்குர்ஆன்: 3:37)

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏ 
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."
(அல்குர்ஆன்: 3:38)

ஸக்கரிய்யா

இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம்.

இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும்போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்ததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக்கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஸக்கரியா நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் சான்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் இருக்கும்போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும்.

மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.


Buhary 2845


தாவுத் அலை


وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ‏ 
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன்: 27:15)

وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏ 
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
(அல்குர்ஆன்: 27:16)

وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏ 
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
(அல்குர்ஆன்: 27:17)

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏ 
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
(அல்குர்ஆன்: 27:18)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏ 
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன்: 27:19)

தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும் பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான். (பார்க்க திருக்குர்ஆன் 2:247-249)

அல்யஸவு அலை

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏ 
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
(அல்குர்ஆன்: 6:84)

وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ‏ 
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
(அல்குர்ஆன்: 6:85)

وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏ 
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
(அல்குர்ஆன்: 6:86)

وَمِنْ اٰبَآٮِٕهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ‌ۚ وَاجْتَبَيْنٰهُمْ وَهَدَيْنٰهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
(அல்குர்ஆன்: 6:87)

ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
(அல்குர்ஆன்: 6:88)


Sent from my iPhone

இல்யாஸ் அலை


اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏ 
(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் "இறந்து விடுங்கள்" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
(அல்குர்ஆன்: 2:243)

وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன்: 2:244)

مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا کَثِيْرَةً  ‌ؕ وَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 
(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 2:245)

اَلَمْ تَرَ اِلَى الْمَلَاِ مِنْۢ بَنِىْٓ اِسْرَآءِيْلَ مِنْۢ بَعْدِ مُوْسٰى‌ۘ اِذْ قَالُوْا لِنَبِىٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِکًا نُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ قَالَ هَلْ عَسَيْتُمْ اِنْ کُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَآ اَلَّا نُقَاتِلَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَاَبْنَآٮِٕنَا ‌ؕ فَلَمَّا کُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏ 
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார்; அதற்கவர்கள்: "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன்: 2:246)

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ‌ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ‌ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِ‌ؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ 
அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 2:247)


Sent from my iPhone

இல்யாஸும்

وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ 
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
(அல்குர்ஆன்: 37:123)

اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ‏ 
அவர் தம் சமூகத்தவரிடம்: "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
(அல்குர்ஆன்: 37:124)

اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخٰلِقِيْنَۙ‏ 
"நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு "பஃலு" (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
(அல்குர்ஆன்: 37:125)

اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏ 
"அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்."
(அல்குர்ஆன்: 37:126)

فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏ 
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
(அல்குர்ஆன்: 37:127)

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
(அல்குர்ஆன்: 37:128)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَۙ‏ 
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
(அல்குர்ஆன்: 37:129)

سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏ 
"ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
(அல்குர்ஆன்: 37:130)

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
(அல்குர்ஆன்: 37:131)

கிதிர் அலை


وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰٮهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِىَ حُقُبًا‏ 
இன்னும் மூஸா தம் பணியாளிடம், "இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
(அல்குர்ஆன்: 18:60)

فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ سَرَبًا‏ 
அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
(அல்குர்ஆன்: 18:61)

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰٮهُ اٰتِنَا غَدَآءَنَا لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا‏ 
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, "நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்" என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:62)

قَالَ اَرَءَيْتَ اِذْ اَوَيْنَاۤ اِلَى الصَّخْرَةِ فَاِنِّىْ نَسِيْتُ الْحُوْتَ وَ مَاۤ اَنْسٰٮنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗ‌ ‌ۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِىْ الْبَحْر‌ِ ‌ۖ عَجَبًا‏ 
அதற்கு "அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்." மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!" என்று பணியாள் கூறினார்.
(அல்குர்ஆன்: 18:63)

قَالَ ذٰ لِكَ مَا كُنَّا نَبْغِ ‌‌ۖ  فَارْتَدَّا عَلٰٓى اٰثَارِهِمَا قَصَصًا ۙ‏ 
(அப்போது) மூஸா, "நாம் தேடிவந்த (இடம் அ)துதான்" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
(அல்குர்ஆன்: 18:64)

فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا‏ 
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
(அல்குர்ஆன்: 18:65)

قَالَ لَهٗ مُوْسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا‏ 
"உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
(அல்குர்ஆன்: 18:66)

قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏ 
(அதற்கவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 18:67)

وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا‏ 
"(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!" (என்று கேட்டார்.)
(அல்குர்ஆன்: 18:68)

قَالَ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِىْ لَكَ اَمْرًا‏ 
(அதற்கு) மூஸா, "இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்" என்று (மூஸா) சொன்னார்.
(அல்குர்ஆன்: 18:69)

قَالَ فَاِنِ اتَّبَعْتَنِىْ فَلَا تَسْــٴَــلْنِىْ عَنْ شَىْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَـكَ مِنْهُ ذِكْرًا‏
(அதற்கு அவர்) "நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது" என்று சொன்னார்.
(அல்குர்ஆன்: 18:70)

فَانْطَلَقَا حَتّٰۤى اِذَا رَكِبَا فِى السَّفِيْنَةِ خَرَقَهَا‌ ؕ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا‌ ۚ لَقَدْ جِئْتَ شَيْــٴًـــا اِمْرًا‏ 
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; "இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:71)

قَالَ اَلَمْ اَقُلْ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏ 
(அதற்கு அவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
(அல்குர்ஆன்: 18:72)

قَالَ لَا تُؤَاخِذْنِىْ بِمَا نَسِيْتُ وَلَا تُرْهِقْنِىْ مِنْ اَمْرِىْ عُسْرًا‏ 
"நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்" என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:73)

فَانْطَلَقَاحَتّٰۤى اِذَا لَقِيَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙ قَالَ اَقَتَلْتَ نَـفْسًا زَكِيَّةً ۢ بِغَيْرِ نَـفْسٍ ؕ لَـقَدْ جِئْتَ شَيْــٴًـــا نُّـكْرًا‏ 
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) "கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!" என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:74)

قَالَ اَ لَمْ اَ قُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏ 
(அதற்கு அவர்) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 18:75)

قَالَ اِنْ سَاَ لْـتُكَ عَنْ شَىْءٍۢ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِىْ‌ ۚ قَدْ بَلَـغْتَ مِنْ لَّدُنِّىْ عُذْرًا‏ 
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 18:76)

فَانْطَلَقَا حَتّٰۤى اِذَاۤ اَتَيَاۤ اَهْلَ قَرْيَةِ  ۨاسْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ يُّضَيِّفُوْهُمَا فَوَجَدَا فِيْهَا جِدَارًا يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ فَاَقَامَهٗ‌ ؕ قَالَ لَوْ شِئْتَ لَـتَّخَذْتَ عَلَيْهِ اَجْرًا‏ 
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) "நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே" என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:77)

قَالَ هٰذَا فِرَاقُ بَيْنِىْ وَبَيْنِكَ‌‌ ۚ سَاُنَـبِّئُكَ بِتَاْوِيْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَيْهِ صَبْرًا‏ 
"இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்" என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்: 18:78)

اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِيْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ يَّاْخُذُ كُلَّ سَفِيْنَةٍ غَصْبًا‏ 
"அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன்: 18:79)

وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَاۤ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا‌ۚ‏ 
"(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
(அல்குர்ஆன்: 18:80)

فَاَرَدْنَاۤ اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا‏ 
"இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
(அல்குர்ஆன்: 18:81)

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖ  رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌ ؕ ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ؕ‏ 
"இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்" என்று கூறினார்.  
(அல்குர்ஆன்: 18:82)

ஹாருன் அலை

ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ‏ 
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
(அல்குர்ஆன்: 23:45)

اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عٰلِيْنَ‌ ۚ‏ 
ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
(அல்குர்ஆன்: 23:46)