Thursday 24 October 2013

மைல்கல்லை கூட கடவுள் என்று பெயர் வைக்கிறீர்கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இது இந்துக்கள் மனதை புண் படுத்தவற்க்காக இந்த பதிவு இல்லை மாறாக நீங்கள் சிந்திப்பதற்க்காக..

ஒரு கடவுள் தன்னுடைய படைப்புகளுக்கு சுத்தமான சுகமான காற்றை சுவாசிக்க விட வேண்டும் ஆனால் கடவுளின் நாள் என்று பட்டாசு வெடி பறக்கும் புகை மூலம் காற்றை மாசாக்கி விடுகின்றது.

இன்னும் உங்களுடைய கடவுளுகளை சிலையாக்கி வைக்கிறீர்கள் அதிலும்



மைல்கல்லை கூட கடவுள் என்று பெயர் வைக்கிறீர்கள்..

நீங்கள் சிந்தித்தால் உங்களுக்கே புரியும் நாம் செய்த கல்லுதானே இது இதற்க்கு எப்படி சக்தி உன்டாகும்? ?

சிந்தியுங்கள் மக்களே..


அன்புடன் அழைக்கிறோம் இஸ்லாத்தை நோக்கி

Wednesday 23 October 2013

மதம் கொண்டு அலையும் சிலருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதங்களை கடந்த மனிதர்கள் ..

மதம் கொண்டு அலையும் சிலருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!



Saturday 19 October 2013

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்
மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்! ! ! !

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிட தக்கவர் ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் சினிமா பட தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசை பாடும் விதமாக திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிர்கும்கோபத்திர்கும் உள்ளானவர்.

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்க தொடங்கினார் முஹம்மது நபியை பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தை பற்றி படிக்க தொடங்கினார் படித்து முடித்த பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
அவர் மக்கா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்...

இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன், அழுது புலம்பி எனது இறைவனிடம் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசை பாடி திரைபடம் எடுத்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரியே நான் இங்கு வந்துள்ளேன்.

இப்படி கூறிய அவர் எந்த நபியை வசை பாடி படம் எடுத்தாரோ அந்த நபியின் மூலம் மறு அறிமுகம் செய்யப்பட்ட புனித இஸ்லாத்தின் மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தனது தவறை நினைத்து வருந்தி தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்தி கூறுகிறது
இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்கு புகலிடமாக மாறுகிறது என்பதர்கு மற்றோரு எடுத்து காட்டாக ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்!

நன்றி :- Syedali Faizi

Friday 18 October 2013

நபி (ஸல்) பற்றி பிற மத அறிஞர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி (ஸல்) பற்றி பிற மத அறிஞர்கள் - மாற்று மத அன்பு சகோதரர்களும் , முஸ்லிம்களும் , கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு 
************************************************

வில்லியம்மூர் 

சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கின்றான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபியவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்ட சாதனைகளை அவர்களால் செய்திருக்க முடியாது. 

நெப்போலியன்

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மத் அவர்களுக்கும் எனது விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்கி ஒரேவிதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.

பெர்னாட்ஷா

முஹம்மத் நபியின் நற்குணங்கள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கை பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். கூடியவிரைவில் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று நம்புகிறேன்.

கிப்பன்

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வரையறுத்துக் கூறிய ஒரேயொரு சட்ட மேதையாக விளங்குபவர் முஹம்மத் நபி ஒருவரே

அறிஞர் அண்ணா

கண்மூடிப்பழக்கங்களை கைவிடாச் செய்து, காட்டுமிராண்டி தன்மையினரை உயர்ந்த சமுதாயமாய் மாற்றி நெருக்கடியான நேரங்களிலும் இலட்சியங்களை நிறைவேற்றத் தவறாத கடமை வீரர் நபிகள் நாயகம்.

கலைஞர் கருணாநிதி

செந்தழலை குளிராகவும், சினம் கொண்டு சீறிவிடும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமை மிக்க மேலோர் நபிகள் நாயகம்.

மகாத்மா காந்தி

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபி பெருமான் வகுத்த சீர்த்திருத்தங்களை பின் பற்றி நடக்க வேண்டும். மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi).. இஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனே அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள். முஹம்மது நபி பெரிய தீர்க்கதரிசி, மஹாவீர புருஷர், கடவுளைத் தவிர மனிதர் ஒருவருக்கும் அஞ்சாதவர். அவர் சொல்லொன்றும் செயலொன்றுமாக நான் கண்டதில்லை. அவர் எப்படி உணர்ந்தாரோ அப்படியே செய்தார்.அப்புண்ணிய புருஷர் ஓர் பக்கிரி. அவர் செல்வத்தை விரும்பி இருப்பின் ஏராளமாகச் சேர்த்திருக்கலாம். அவரும் அவருடைய குடும்பத்தாரும் பந்துக்களும் மனமுவந்து அனுபவித்த கஷ்டங்கள், துயரங்களைப் படிக்கும்போது என் கண்களிலிருந்து நீர் ததும்புகிறது, கடவுளிடம் அவர் மனது சதாகட்டுப்பட்டிருந்தது. கடவுள் கட்டளைக்கு எப்போதும் பயந்தே நடந்தார். மனித சமூகத்திடம் அளவற்ற கருணையும் கொண்டார்.அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?அம்மஹhனின் சிறிதும் பிசகாத, ஆடம்பரமற்ற வாழ்க்கையும், “ தான்” என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும், கொடுத்த வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும், நண்பர்களிடத்தும், தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும், அஞ்சாமையும், கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும், தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து, எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)
அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

சுவாமி விவேகானந்தர்„

குர்ஆனும், அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத விஞ்ஞானமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்-8)

குருநானக் (சீக்கிய மத நிறுவுனர்)

வேதாகம, இதிகாச, புராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால், திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபி கள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக, இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பண்டித கோபால கிருஷ்ண கோகலே„

மகான் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனித வாழ்வைப் பற்றிய விசாரணையில் நான் இறங்கியபோது, எனக்குத் தெளிவாகிய சில உண்மைகளைப் பற்றி நான் எழுதுவதில் மகிழ்கிறேன்.அவர்களைப் அகில உலக சீர்திருத்தத்துக்காகவே ஈசுவரன் அனுப்பியுள்ளான். ஒரு பெரும் சீர்த்திருத்தக் காரருக்கு இருக்க வேண்டிய அனைத்துச் சக்திகளும், ஒரு மாமனிதருக்கு அமைந்திருக்க வேண்டிய எல்லா குணநலன்களும் அவர்களிடம் காணப்பட்டன. மகான் அவர்கள் பிறப்பதற்கு முன்னர் அரேபியாவிலும் இந்தியாவில் நடப்பது போன்றே விக்கிரக ஆராதனை நடந்துவந்தது. மகானின் போதனைகளால் விக்கிரக வழிபாடு முற்றாக ஒழிந்தது. இதன் பின்னரே ஒரே இறைபக்தியும் ஏகத்துவ எண்ணமும் மக்களின் உள்ளங்களில் தோன்றியது. மகான் பிறப்பதற்கு முன்னர், பெண்களுக்குரிய உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டுவந்தன. பெண்கள் இம்சிக்கப்பட்டுவந்தனர். அவர் பெண்களுக்கு உயர்நிலையை வழங்கினார். மேலும், அவர்களுக்கான உரிமைகளையும் அவர் வகுத்துத் தந்தார். ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையை முற்றும் களைந்து எல்லோரிடையிலும் சமத்துவத்தை நிலவச் செய்த மகான் அவர்களின் அந்த இயக்கம் இன்றும் உயிருடன் இயங்கி வருகிறது. ஏதேனும் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று பாருங்கள். அங்கு ஏழையும், செல்வனும், உயர்ந்தவனும், தாழ்ந்தவனும், யாசிப்பவனும், கொடுப்பவனும் ஒரே வரிசையில் நின்று தோளோடு தோள் உராய்ந்து கம்பீரமாக நிற்கும் காட்சியைக் காண்பீர்கள். இத்தகைய தனிப்பெரும் விஷேசத் தன்மைகளால்தான் மகான் அவர்களை அறிஞர் பெருமக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.அவர்களை மதிக்கின்றனர்.

டாக்டர் அம்பேத்கார் (இந்திய அரசியல் சாசனத்தைத் வகுத்தவர்)„

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச்செய்து, சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை.

ரவீந்திரநாத் தாகூர்

முசல்மான்களை ஒன்றாக இணைப்பது, அவர்களுக்குத் தர்மத்திலுள்ள பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பு அல்ல. அனாவசியமான கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுத்தியிருக்கிறது. ஒரு கொள்கையைப் பல அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் தர்ம உணர்வு.(கோரா நாவல்)

ஹர்தே பிரகாஷ்

அராபியப் பாலைப் பிரதேசத்தில் முஹம்மது நபி (ஸல்) அவதரித்தது அரேபிய நாட்டிற்கும், இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல, அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மதுரை ஆதினகர்த்தர்

இஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்கொள்கையையும் அதனைப் பின்பற்றி ஒழுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தௌpவாகக் கூறிச் சென்றுள்ளார்கள். பெருமானாரைப் பின்பற்றுவதிலே பெருமையுண்டு. உண்மையுண்டு. எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவுள்கொள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார். சமுதாயக்கொள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார். சமயக்கொள்கையில் தௌpவையும் எளிமையையும் நிலைநிறுத்தினார். இது எப்படி அவரால் முடிந்தது என்றால், அல்லாஹ்வின் பேரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி)

மாவீரர்களில் ஒருவராக நான் முஹம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன.

ஜெனரல் பர்லாங்

அரேபிய நபியின் சரிதையை – அவர்களது குZதிசியங்களை- அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும்.

ஸ்டான்லி லேன்புல் (வரலாற்றாசிரியர்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும், அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது “நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன்” என்று கூறினார்.

ஜுல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா- யூத மனோதத்துவ விஞ்ஞானி)

சரித்திரத்தில் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கீழ்க்காணும் மூன்று அம்சங்களுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அவை„
1) தலைவராக இருப்பவர், வழிநடத்தப்படும் மக்களின் நல்வாழ்வுக்கு வகை செய்ய வேண்டும்.
2) ஒரு சமுதாயத்தை உருவாக்கி, அந்த மக்கள் போதிய பாதுகாப்பும் பெறுகிறேhம் என்ற உணர்வினைப்பெற வழிவகுக்க வேண்டும்.
3) அவர்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
பாஸ்டர், மற்றும் சால்க் போன்ற தலைவர்கள் முதல் நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். காந்தி கன்பூஷியஸ், அலெக்ஸhண்டர், சீஸர் மற்றும் ஹிட்லர் போன்ற தலைவர்கள் இரண்டாவது மூன்றhவது நிபந்தனையின் கீழ் வருகின்றவர்கள். ஆனால், புத்தர் மற்றும் ஏசு மூன்றhவது நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். எல்லாக் காலத்திலும் நின்று நிலவக் கூடிய பெரும் தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. காரணம் அவர்களிடத்தில் இம்மூன்று அம்சங்களும் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும் மோசேயிடத்திலும் இவ்வம்சங்கள் யாவும் சற்றுக் குறைவான அளவில் இருந்தன. (15.07.1974 ஆமாண்டு டைம் வார இதழ் சரித்திரத்தில் முக்கியமான பெருந்தலைவர் யார்? என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில்)

பாஸ்வொர்த் ஸ்மித் (வரலாற்றாசிரியர்)

அரசாங்கத்தின் தலைவராகவும், மத விஷயத்தில் தலைவராகவும் இருந்துகொண்டு அன்னார் ஏககாலத்தில் சீஸராகவும் போப்பாகவுமே விளங்கிவந்திருக்கின்றhர். ஆனால் அவர் போப்புக்குரிய படோடோபங்கள் இல்லாத ஒரு போப்பாகவும் சீஸருக்குரிய படைகளும் இல்லாத ஒரு சீஸருமாகவே விளங்கிவந்தார். ஒரு நிரந்தர படை இல்லாமலும், மெய்காப்பாளர் ஒருவருமில்லாமலும், அரண்மனை ஒன்றுமில்லாமலும், ஒரு நிரந்தரமான வருவாய்க்கு வழி ஒன்றுமில்லாமலும் எப்போதேனும் ஒருவர் ஆண்டவனது அதிகாரத்தைக் கொண்டே தாம் இவ்வுலகில் ஆட்சிபுரிந்துவந்ததாக கூறிக்கொள்ள உரிமை பெற்றிருப்பாராயின் அன்னவர் முஹம்மதாகவே இருந்துவந்தார். ஏனெனில் அவர் எல்லாவிதமான அதிகாரத்தையும் அதற்குரிய உபகரணங்கள் இல்லாமலும், அதற்கு வேண்டிய உதவிகள் இல்லாமலுமே செலுத்திவந்தார்.

ரெமண்ட் டெரோகு

வரலாற்றில் குறிப்பிடக் கூடிய முதல் சர்வதேச சமுதாயப் புரட்சிக்கு வழிகோலியவர் முஹம்மதுவே ஆவார். நீதி, தர்மம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாத உலகமுழுவதும் விரவக்கூடிய ஒரு நாட்டிற்கு அவர் அடிப்படைகள் இட்டிருக்கிறhர். மனித சமுதாயத்தையும் பரஸ்பரம் உதவும் கடமையையும், சர்வதேச சகோதரத்துவத்தையும் அவர் போதிக்கிறார்.

ஜான்டேவன் போர்ட் (விஞ்ஞானி)

நீதி நெறி வகுத்தோரும், வெற்றி பல கண்டோரும் ஆகியவருற்றுள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றினைப் போன்று சரியான ஆதாரபூர்வமானதாகவும் விரிவானதாகவும், விஷயங்கள் அடங்கியதாகவும் உறுதியான உண்மையுள்ளதாகவும் உள்ள வரலாற்றினை உடையவர் என நன்கு அறிந்த எந்த ஓர் அறிஞர் பெருமான் பெயரையும் குறிப்பிட இயலாது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

தாமஸ் கர்லைல்

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்கு புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மையானவை, கருத்தாழமிக்கவை. விசுவாசம் கொள்ளத் தக்க வேதம் என்றொன்றிருந்தால் அது நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட குர்ஆனேயாகும்.

ஜி.ஜி.கெல்லட்

இஸ்லாத்தின் நிறுவுனரைக் காட்டிலும் ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலேயே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களை காணுதலும் அரிது.

சரோஜினி நாயுடு

மேலைநாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவை எல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே நபிகள் நாயகம் அவர்களால் விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சகங்களேயன்றி புதியது ஒன்றுமில்லை. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு குடிஅரசு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.

ஜவஹர் லால் நேரு

முஹம்மத் நபியின் வெற்றிக்கு முதல் காரணம் அவர் கொண்டிருந்த உறுதியும், ஊக்கமும் ஆகும். இத்தகைய உறுதியும் ஊக்கமும் அந்த காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம் இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஆகும்

எஸ். எச். லீடர்

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், முஹம்மது ஒரு சரித்திர நாயகர் என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்

வாஷிங்டன் இர்விங்

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரேனும் மறுக்க முடியும்?

டாக்டர் ஜான்சன்

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது. நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது. இஸ்லாம் அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது

வில்லியம் மூர்

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.

டால்ஸ்டாய்

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமைவெறும் நாவினால் புகழ்ந்துவிடக்கூடியதல்ல.

எழுத்தாளர் பா. ராகவன்

ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார்.

100 என்ற நூலில்..மைக்கேல் ஹெச். ஹார்ட்

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர்உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தெடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் பேன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவேரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தேன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பெறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான். ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல், அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பெறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பெறுப்பினை மேற்கெண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் பேதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தெகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், பேதனைகளும், கெள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது பேன்ற விரிவான பேதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் பேன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே செல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் பேன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று செல்லலாம். இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் பேலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம். - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர்..

அல்குர்ஆனின் முன்னறிவிப்புக்கள்....

இஸ்லாத்திற்கு உதவி செய்வதாகவும், காபிர்கள் வெறுத்த போதிலும் தன்னுடைய ஒளியைப் பூரணப்படுத்துவதாகவும், அவ்வாறே இணை வைப்பாளர்கள் விரும்பாத போதிலும் இஸ்லாத்தை அனைத்து மதங்களை விடவும் உயர்ந்ததாக ஆக்குவதாகவும் அல்லாஹ் அல்குர்ஆனில் தனது நல்லடியார்களுக்கு அளித்துள்ள இவ்வாக்குறுதிகளை, இவ்வெற்றிச் செய்திகளின் ஆரம்பமாகக் குறிப்பிடலாம்.
சூரா அத் தவ்பாவில், அல்லாஹ்வை விட்டு தங்களது சந்நியாசிகளையும் பாதிரிகளையும் கடவுளர்களாக எடுத்துக் கொண்டு, தங்களது மார்க்கத்தைத் திரிவுபடுத்திய அஹ்லுல் கிதாப்கள், (யூத கிறித்தவர்கள்) முஷ்ரிக்குகள் பற்றியும் அடுத்த மனிதர்களது சொத்துக்களைத் தவறான முறையில் புசிப்பவர்கள் பற்றியும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பவர்கள் பற்றியும், கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அலல்hஹ்வுடைய பிரகாசத்தை அணைத்து விட விரும்புகின்றனர். எனினும் இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாச்தைப் பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப் போவதில்லை.

அவன் தான், என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 32,33)

சத்திய மார்க்கம் என்பது இம்மையிலும் மறுமையிலும் பயன் தரக் கூடிய சீரான நல்லமல்களாகும்.அனைத்து மதங்களையும் மிகைப்பதற்காகவே அனுப்பி வைத்தான் என்ற பதம் உலகில் ஏனைய மதங்கள், கோட்பாடுகள் அனைத்தையும் ஆக்கிரமித்த சக்தியாக இஸ்லாத்தை ஆக்குவதையே குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

இப்புவியின் கிழக்குப் பகுதிகள் மேற்குப் பகுதிகள் அனைத்தையும் அல்லாஹ் எனக்கு சுருக்கிக் காண்பித்து விட்டான். எதிர்காலத்தில் எனது சமூகத்தின் ஆதிக்கம் எனக்குக் காட்டப்பட்ட உலகின் எல்லாப் பகுதிகளையும் சென்றடையும். (ஸஹீஹ் முஸ்லிம், அல் ஃபிதன் வஅஷ்ராதுஸ் ஸாஆ, ஹதீஸ் எண் 19, அபூதாவூத் 4225.)

இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேறுபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

எனது மனமார்ந்த நன்றிகள் :

இதனை தொகுத்து பதிவிட உதவிய அனைத்து இணைய தளங்களுக்கும், மற்றும் கட்டுரையாளர்களுக்கும்....

ஜஸாக்கல்லாஹ் ஹைர் .....

அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்



Madurai will soon be linked by air to Dubai, with Spicejet gearing up to launch flights to the Middle East destination.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
துபை-மதுரை நேரடி விமானம் இன்ஷா அல்லாஹ் நவம்பரிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவன சேவை துவக்கம்.

Madurai will soon be linked by air to Dubai, with Spicejet gearing up to launch flights to the Middle East destination.

“This service will open air connectivity to all major global destinations for people from the southern districts,” says Virudhunagar MP and chairperson of the Madurai Airport Advisory Committee B. Manicka Tagore.

Spicejet has forwarded its flight schedule to the Airports Authority of India for clearance.

“The services are likely to commence by the end of November,” Mr.Tagore told The Hindu.

The Civil Aviation Ministry has cleared air routes for Spicejet to fly to Dubai. The airport slot for the airline has been cleared by Dubai.

Dubai will be the second international destination linked directly from Madurai airport, after Colombo. The first service to Colombo opened in September 2012. After Spicejet launched the Madurai-Colombo service, Mihin Lanka followed suit last December.

It will be a big opportunity for trade and industry bodies in the southern districts, according to senior president of the Tamil Nadu Chamber of Commerce and Industry S Rethinavelu.

The new service will give an impetus to the export of flowers, vegetables, fruits and processed food from the southern districts, including Madurai, Theni and Dindigul, he notes.

It will also boost medical tourism as Madurai offers quality healthcare at a cheaper rate when compared to other Indian cities.

Around two lakh labourers from the southern districts who are employed in the United Arab Emirates will benefit from the new air link, according to B.S.G. Musthafa of Travel Club, Madurai.

“The travellers will not only save money on transport, but also save time by not having to travel to Tiruchi, Chennai or Thiruvananthapuram airports,” he adds.

The new flight is expected to depart at around 11.30 p.m. from Madurai and reach Dubai in the early hours, says N. Sriram of Balika Travels.

FlyDubai, a low cost carrier of the Emirates (airlines), has evinced interest in operating its flights to Madurai in early 2014.

http://www.thehindu.com/news/cities/Madurai/from-november-fly-to-dubai-from-madurai/article5216844.ece

More Relative News :

SpiceJet is expanding its international operations to improve its dollar earnings and offset losses causes by currency rate fluctuations.

Over the next few months the airline will be adding new flights to Bangkok, Dubai, Sharjah, Dammam and Riyadh. Bangkok will be added to the network in October and will be the tenth foreign destination for the airline.

It now plans to add new services between Lucknow-Riyadh, Kochi-Dammam, Madurai-Dubai over next few months.

http://www.business-standard.com/article/companies/spicejet-to-expand-international-network-to-improve-dollar-income-113100800394_1.html

Source: The Hindu (Thanks : Bro. Hameed Rahman)

இ-போஸ்டல் ஆர்டர் முலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐ க்கு விண்ணப்பிக்கும் வசதி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ER Postel order to apply for Indian and foreign capital facility 

இ-போஸ்டல் ஆர்டர் முலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐ க்கு விண்ணப்பிக்கும் வசதி.

New Delhi: Now, Indians living abroad to Information Act in order to be able to obtain information through the Federal Foreign Office has made a few new features.

In 2005, introduced last year, the Indians living in foreign countries under the Right to Information Act to obtain certain information when the problem persists.

This fee pays for obvious practical application of Information Act, the main reason was vakukkappatamal protocols. But, now the Foreign Ministry offered to fix the system.

Accordingly, the Indian High embassies around the world through 176 'Electronic Indian Postel Order' electronic money transaction through the payment of fees for the information requested is no longer necessary information to apply to plaintiffs.

டெல்லி: இனி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற இயலும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சில புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சில குறிப்பிட்ட தகவல்களை பெற சிக்கல் நீடித்து வந்தது.

இதுவரை தகவல் அறியும் சட்டத்தின் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் தெளிவான நடைமுறை நெறிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்ததே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், தற்போது இந்த முறையை நிவர்த்தி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்வந்துள்ளது.

அதன்படி, உலகெங்கிலும் உள்ள 176 இந்திய உயர் தூதரகங்களின் மூலம் 'எலக்ட்ரானிக் இண்டியன் போஸ்டல் ஆர்டர்' எனப்படும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக தகவலுக்கான கட்டணத்தை செலுத்தி மனுதாரர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு இனி விண்ணப்பிக்கலாம்.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ளwww.epostoffice.gov.in அல்லதுwww.indiapost.gov.in என்ற இணைய தளங்களில் மனுதாரர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதுமானது.

Source: Oneindia.in

-கருணாநிதி என்ற ஒரு பண முதலையின் சொத்து விபரங்களில் சில..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருப்பதை எல்லாம் பதுக்கி வைத்தால் உழைப்பவன் வாழ்வு என்னாவது ??????

-கருணாநிதி என்ற ஒரு பண முதலையின் சொத்து விபரங்களில் சில.....

1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி

3. முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி

4. சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி

5. மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி

6. அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி

7. செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.

8. சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி

11. மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.

12. உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.

13. கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

14. கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.

15. ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.

16. கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.

17. சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.

18. சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

19. கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.

20. பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.

21. பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.

22. மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.

23. பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.

24. மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.

25. மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள். மதிப்பு 30 லட்சம்.

26. சன் டிவியின் டெல்லி அலுவலகம். மதிப்பு 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

30. முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)

31. ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.

32. தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்

33. தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.

34. தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.

35. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.

36. மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

41. மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.

42. மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

43. மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.

44. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.

49. தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.

50. சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.

52. காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.

53. சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.

54. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.

55. மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.

56. மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.

57. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.

58. சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-a என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.

59. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.

60. கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.

61. ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.

உறுதி செய்யப் படாத சொத்துக்கள்

62. அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.

63. கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.

64. தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.

65. எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.

66. மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.

67. சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.

68. கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

-இது முழுமையான பட்டியல் அல்ல. இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை. கருணாநிதி என்ற ஒரு பண முதலையின் குடும்ப சொத்துக்கள் இவ்வளவு என்றால் இந்தியாவில் உள்ள மீத பண முதலைகளின் சொத்து எவ்வளவு இருக்கும் இவர்கள்தான் வறுமையை ஒளிப்பர்களா ?????

#இன்று வறுமை ஒழிப்பு தினம்

Saturday 12 October 2013

DUBAI மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

உணர்வாய் உன்னை என்ற ஆளுமைத்திறன் யிற்சி முகாம் அக்டோபர் 11ம் தேதி பட்ஸ்பப்ளிக் பள்ளி ஆடிட்டோரியத்தில் பிரேம் நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுசாதிக்  அக்மல் அவர்கள் வரவேற்புரையாற்றநிகழ்ச்சியை ஜலாலுதீன் அவர்கள்அறிமுகவுரையாற்றி துவக்கிவைத்தார்









   பல்வேறு ஆளுமைத் திறனை வளர்க்கக் கூடிய முறைகளைக் குறித்து மனிதவள மேம்பாட்டுபயிற்சியாளர் ஹூசைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.

கலந்துக்கொண்டவர்களுக்கு பயிற்சி குறிப்பேடுகள், சிற்றுண்டி வழங்கப்பட்டது. A.S. இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சென்னை நூர் புவுன்டேஷன், பரமக்குடி அன்னை ஆயிஷா(ரலி) அறக்கட்டளை நிர்வாகிகள்உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tuesday 8 October 2013

திருக்குர் ஆனை எளிய வழியில் ஓதுவோம் / READ AL QURAN THE EASY WAY

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர் ஆனை எளிய வழியில் ஓதுவோம்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கும் இளம் குழந்தைகளுக்கும்...

இன்ஷா அல்லாஹ் இத்துடன் திருக்குர்ஆன் ஓதுவோம் READ AL QURAN THE EASY WAY பாடத்தின்  பாடல் முறையை (RHYMES) இணைத்துள்ளேன்..



அல்லாஹ் நம்மை குர்ஆனிய மனிதனாக்கி தாமும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடிய சிறந்த அந்தஸ்தை வழங்குவானாக.. ஆமீன் 

வஸ்ஸலாம்

ஜலாலுதீன்..
08.10.2013


முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses) (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான்.

இஸ்லாம் கூறும் செய்தி:

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது.
நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை --- குரான் (112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும் அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

குர் ஆன்:

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குரான்.

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது.

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?
இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து நம்பி வருகின்றார்கள்.

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது.

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), தன்னுடைய "The Developing Human" புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார்.

பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) அவர்கள் தன்னுடைய "The Bible, the Qur'an and Science" புத்தகத்தில்,
"ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?"

அறிஞர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான மற்ற முஸ்லிம்கள் கூட, குர்ஆனில் குறிப்பிடத்தக்க ஞானம் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது குரான் அறிவை கண்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், குரான் உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதே ஆகும். சில நாட்களிலேயே கூட உங்களால் முழு குரானையும் படித்து விட முடியும்.

மேலும், குரான் என்னும் இறைவேதம், உலக மக்கள் அனைவருக்குமானது. நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டவர்கள்.
(நபியே) உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை - குரான் 21:107.

நம் அனைவருக்கும் சொந்தமான, படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத குரானை ஏன் ஒரே ஒரு முறை படித்து பார்க்க நீங்கள் முன்வரக்கூடாது?

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் குரான் என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் என்னுடைய மெயில் முகவரிக்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். இறைவன் நாடினால், அனுப்பி வைக்கின்றேன்.

சகோதரத்துவம்:

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள்,
"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13


புரட்சி:

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம் என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும் (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டலாம்.

உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கு உதவுவானாக...ஆமீன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ