Saturday 5 October 2013

துபாய் சோனாப்பூரில் நடைப்பெற்ற தியாகம் செய்வோம் வாருங்கள் இஸ்லாமிய நிகழ்ச்சி .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய்  04:10:13 வெள்ளிக் கிழமை அஷர் தொழுகைக்குப் பின் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத் தலைமை தாங்கினார், IPP பொறுப்பாளர் அதிரை அப்துல் காதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,இந்நிகழ்ச்சியில் சகோதரர் குணங்குடி முஹைதீன் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அதைத்தொடர்ந்து சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்,
மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார் இந்நிகழ்ச்சியில் சோனாப்பூர் பலுதியா கேம்ப் சகோதரர்கள் திரளாக கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள். அமர்வு  நடைப்பெற பலுதியா கேம்ப் சகோதரர்கள் கடையநல்லூர்  அப்துல்ஹமீத்,பாதுஷா,அலி,முஹைதீன்,முஹம்மத்,மேலப்பாளையத்தைச் சார்ந்த காஜா உள்ளிட்ட சகோதரரர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்,
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்புடன்,  முஹைதீன்,

No comments:

Post a Comment