முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Wednesday 19 June 2019
Jai beem
இன்றைக்கு பாராளுமன்றத்தில் சங்கிகளின் கதறலுக்கு உவைஸி பதிலடி முழக்கத்தில் ஒன்று ஜெய் பீம்.
ஜெய் பீம் வரலாற்றை நாமும் அறிந்து கொள்வோம்.
ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள 'பீமா' என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.
1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.
அப்போது, பார்ப்பனர்களின் வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது.
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு அம்மக்கள் ஆட்பட்டனர்.
அதற்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
1817 டிசம்பர் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள 'பீமா' என்ற நதிக்கரைதான் போர்க்களம்.
2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, 'கோகலே' தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்...
500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம்...
போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின.பாஜிராவ் கைதானான். பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.
வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட 'பீமா' நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது.
1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார். அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக "ஜெய் பீம்" எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.
பார்ப்பன வேத, சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனியத்திற்கு எதிராகவும், தலித்துகளும், பிற்படுத்தப் பட்ட இந்துக்களும், சிறுபான்மையினரும் இணைந்து நடத்திய புரட்சி தான் மேற்கண்ட பீமா நதிக் கரை வரலாறு. " ஜெய் பீம் ".
தகவல் உதவி أبو بكر صديق
Monday 17 June 2019
விசிட் விசாவில் அமீரகம் வேலைதேடி வரும் அன்பர்கள் செய்யவேண்டிய பட்டியல்
1. ECNR passport ஏற்பாடுகளை முடித்துவிட்டு வரவும்
2. Certificate Attestation ஊரில் செய்தால் சற்று முன்னரே தயார் செய்யவேண்டும் ஏனெனில் 2 மாதங்கள் ஆகலாம் செலவு குறைவு. இங்கு 2 வாரத்தில் கிடைக்கும் ஆனால் செலவு அதிகம்.
3. Two way டிக்கெட் எடுத்துவிட்டு வரவும் one way வைத்திருந்தால் இந்திய விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிடும் வாய்ப்புகள் அதிகம்.
4 . கண்ணியமான உடைகளை அணிந்து பயணம் செய்யுங்கள் சிலரின் நடவடிக்கைகளால் திருப்பி அனுப்பிய செய்திகளும் முன்னர் உண்டு.
5. முதல் பயணத்தில் நிதானம் மிகவும் முக்கியம் கேட்கபடும் கேள்விகளுக்கு குடியுரிமை அலுவலர்களுக்கு சரியான பதிலை அளிப்பது முக்கியம். மது அருந்திவிட்டு தேவையில்லாத தர்மசங்கடங்களை தவிர்க்கவும்.
6. இங்கிருக்கும் நண்பர்கள் / உறவினர்களின் தொடர்பு எண்ணை வைத்திருக்கவும் ஏதும் தேவையிருப்பின் அழைத்திட உதவும்.
7. செலவுக்கு தேவையான கையிருப்பை டாலராகவோ அல்லது திர்ஹமாகவோ வைத்திருப்பது அவசியம் கேள்விகள் கேட்கபட்டால் அதற்கு சரியான விளக்கம் சொல்லுங்கள். இந்திய மற்றும் அமீரக விமான நிலையங்களில் இந்த கேள்விகள் கேட்கபடலாம்.
8. ஊர் அனுபவங்களின் அனுபவ கடிதம் மற்றும் தொடர்புகள் இன்றைய நிலையில் update செய்துவிட்டு வருவது சிரமங்களை தடுத்திடும்.
9. வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளத்திலும் சுயவிவரங்களை பதிவு செய்திடவும். அலைபேசி எண் பின்னர் update செய்து கொள்ளலாம்.
10. General Profile உள்ளவர்கள் மூன்று விதமான சுயவிவர குறிப்பை தயார் செய்துகொள்ளுங்கள். தேவைகேற்ப சில மாறுதல்களை செய்துவிட்டு அனுப்பிட வசதியாக இருக்கும்.
வேலையில் சேர்ந்திடும் வரை செலவுகளை சற்று கட்டுக்குள் வைத்திருங்கள் தேவையிருப்பின் தேடலை நீடிக்கக்கூடிய சூழலில் இவை உதவிடும்.
உங்களது தேவையற்ற சிந்தனைகளையும் செயல்களையும் ஊரிலேயே ஒதுக்கிவிட்டு தெளிவான திட்டத்துடன் பயணம் செய்யுங்கள். தன்னம்பிக்கை அனைத்தையும் வெல்லும். இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட முயற்சிகள் தொடரட்டும் நிறைவாக.
#அமீரகவேலைவாய்ப்பு
#UAEvisitvisa
Saturday 15 June 2019
கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!
ஆரோக்கியமாக வாழ...
* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
* தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!
கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம், சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட, வலியை ஏற் படுத்தி, கழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவது, வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம்.
ஒரே கோணத்தில், வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால், சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும்,முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும். இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது.
தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும், கழுத்து வலி ஏற்படும். "போம்' தலையணைகளை விட, இறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான், கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.
கம்ப்யூட்டர் முன், மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர், வேலையில் அதீத கவனம் செலுத்தும்போது, கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர்.
நெடுநேரம் இப்படி வைத்திருந்தால், கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம், கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப, உங்கள் டேபிள், மானிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.
சிலர், காலுக்கு, உயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்க, கம்ப்யூட்டர் மானிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொண்டால், பார்வை கெடும்; அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால், கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை, உங்கள் உடலியல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும் வகையில், அவற்றின் மீது பாதம் வைத்துக் கொள்வதும் அவசியம் என்பதால்,அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் சீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.
வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? கழுத்தில் ஐஸ் கட்டி, சூடு ஒத்தடம் ஆகியவற்றை, மாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும், வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில், 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
டாக்டர் பி.நாகராஜ்
A.S.Ibrahim
தஸ்பமனி China counting mani
Monday 10 June 2019
ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே
இந்தியாவை
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமியப் பேரரசர்களை எதிர்க்காத பார்ப்பனர்கள்,
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள் தெரியுமா... ?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்...!
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.
ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது
சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.
சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!
(ஆதாரம்:தினமணி 25-2-2007)
Friday 7 June 2019
Imam changing at prayer
Thursday 6 June 2019
ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?*
ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா?
صحيح مسلم
2815 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – أَخْبَرَنِى سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِىِّ عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ – رضى الله عنه – أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ».
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தொடர்ந்து'' என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும்.
ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை.
ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.
மேலும் இந்த நன்மை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். ரமலான் முடிந்த மறுநாள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் ரமலானைத் தொடர்ந்து இந்த நோன்பைப் பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே தொடர்து என்பதன் பொருள் நாட்களால் தொடர்வது அல்ல; மாதத்தால் தொடர்வது என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டு இருக்க முடியும்.
ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தனக்கு வசதியான நாட்களில் இந்த நோன்பை நோற்கலாம். நாட்களால் தொடர்ச்சி என்று பொருள் கொண்டால் ஷவ்வால் பிறை ஒன்று பெருநாளாக உள்ளதால் ஒருவரும் தொடர்ந்து பிடிக்க முடியாமல் போய்விடும். பெண்களில் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.
முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.
ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.
*சுன்னத்தான நோன்புகள்*
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்புநோற்கட்டும்.
(அல்குர்ஆன் 2:183)
என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான்மாதம் முழுவதும் நோன்பு நோற்று விட்டோம். இது அல்லாஹ்நமக்குக் கடமையாக்கிய நோன்பாகும். இவை தவிரகடமையல்லாத நோன்புகளும் உள்ளன. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வலியுறுத்திய, செயல்படுத்திய சுன்னத்தானநோன்புகள் பற்றிய விபரத்தைப் பார்ப்போம்.
*ஆறு நோன்பு*
ரமளான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புபிடிப்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். ஒன்றுக்குப் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் ரமளான்மாதம் முழுவதும் நோன்பு நோற்பது பத்து மாதங்கள் நோன்புநோற்றதற்குச் சமம். ஷவ்வாலில் ஆறுநோன்புகள் நோற்றால்அவை 60 நாட்கள் நோன்பு நோற்றதைப் போன்றாகின்றது.
எனவே ஷவ்வாலில் ஆறு நோன்பு பிடிப்பதால் ஆண்டுமுழுவதும் நோன்பு நோற்ற நன்மைகள் கிடைக்கின்றன என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்துஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர்காலமெல்லாம் நோற்றவராவார்" என அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1984, அபூதாவூத் 2078
இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத்தொடர்ந்து ஷவ்வா-lல் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையி-lருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறானவாதமாகும்.
ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும்நோன்பு நோற்று, ஷவ்வா-லும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறுநாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.
தொடர்வது என்பதற்கு "அத்பஅஹு" என்ற அரபுச் சொல்பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு "முததாபிஐன்" என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும்.
உதாரணமாக, மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர்அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிதிருக்குர்ஆனில் கூறப்படுகின்றது.
(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்திபெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 58:4)
இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு "முததாபிஐன்" என்ற சொல்பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால்ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறுகூறப்படவில்லை.
ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்புபிடிக்கவேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்றுவைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத்தடை உள்ளது.
ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்றகருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர்.
இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்குஎந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.
எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால்மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறு நாட்கள்நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.
முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறுநோன்புகளாகின்றது.
நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப் படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்துஅறியலாம். ஆனால் ஷவ்வால் என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்துவிட வேண்டும்.
*ஆஷுரா நோன்பு*
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுராநோன்பு எனப்படும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில்நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்புநோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள்(பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம்அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி),
நூல்: புகாரி 1960
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்புகட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது.
(ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1592
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்புநோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போதுநபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளையூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?" என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும்நோன்பு நோற்பேன்" எனக் கூறினார்கள். ஆனால்அடுத்த ஆண்டுவருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089
*அரபா நாள் நோன்பு*
"அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில்நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: இப்னுமாஜா 1722
வாரத்தில் இரண்டு நோன்புகள்
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத்தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: திர்மிதீ 676, நஸயீ 2321
*மாதத்தில் மூன்று நோன்புகள்.*
"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள்நோன்பு நோற்குமாறும், ளுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் ஆகிய இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1981
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான்உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்றுவணங்குவேன்" என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி அவர்கள் என்னிடம்கேட்ட போது) "என் தாயும் தந்தையும் உங்களுக்குஅர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!" என்றேன்.நபி (ஸல்) அவர்கள், "இது உம்மால் முடியாது. (சிலநாட்கள்) நோன்பு வைத்து, (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது விட்டு (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்குநற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இதுகாலமெல்லாம் நோன்புநோற்றதற்குச் சமமாகும்" என்றார்கள். "என்னால் இதைவிடசிறப்பானதைச் செய்ய முடியும்" என்று நான் கூறினேன். "அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள்விட்டுவிடுவீராக!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, "என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்யமுடியும்என்று நான் கருதுகிறேன்" என்று கூறினேன். "அப்படியானால்ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவீராக! இதுதான்தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவேசிறந்ததாகும்" என்றார்கள். "என்னால் இதைவிட சிறப்பாகச்செய்ய முடியும்" என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள்"இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 1976
மாதத்தில் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13, 14, 15ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்கள்: திர்மிதீ 692
முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான வன்முறைதாக்குதல்கள்
கடந்த செவ்வாய் அன்று டில்லியை சேர்ந்த சாஜித் என்ற இஞைஞர் அவர் நண்பர் கவுரவ்வுடன் டில்லியில் உள்ள ஜன்ந்தர் மோட்டில் உள்ள துணிகடையில் வேலை முடித்து திரும்பும்போது காட்டுமிராண்டி கும்பலால் கடுமையாக ராடால் தாக்கிவிட்டு பன்றிஇறைச்சியையும் ,சிறுநீரையும் உண்ணுமாறு கட்டாயபடுத்தியுள்ளது மிக மிக கடுமையான கண்டனத்திற்குரியது, 😡😡😡😡😡😡😡😡😡😡😡
முஸ்லிகளாக இருப்பது பாவமா என்று அவரின் தாயின் கதறல் 😢😢😢
HORRIFIC! A Muslim man in #Delhi was brutally attacked by an extremist mob on 28th May.
They attacked him with rods, tried to feed him pork and urinated on him. 😡😡😡😡😡😡😡😡
#India
Wednesday 5 June 2019
Neet result 2019
நீட் தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கையை பார்த்தாச்சா?
SC/ST - 20,009
OBC - 63,749
Others - 7,04,335
அதாவது மொத்தமே 83758 பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வான நிலையில் முன்னேறிய வகுப்பினர் மட்டும் 7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அமுலில் இருக்கிறது.
அகில இந்திய அளவில் 49.5% இடஒதுக்கீடு இருக்கிறது.
ஆனால் இந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வானவர்கள் சதவிகிதம் என்ன தெரியுமா?
12% தான்.
நீட் தேர்வு எதற்காக வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி சரியாக பயணிக்கிறது.
பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிரெதிர் கட்சியில் இருந்தாலும், சமத்துவத்துக்கும் சமவாய்ப்புக்குமான அடிப்படை கட்டமைப்பை 60 ஆண்டுகளில் ஒவ்வொரு செங்கலாக கட்டி எழுப்பினர்.
அதை மூன்றே ஆண்டுகளில் உடைத்தெறிந்துவிட்டது சனாதானம்.
இனி உரக்க சொல்லுங்கள்:
திராவிடத்தால் வீழ்ந்தோம்
இந்துக்களாக இணைவோம்
இந்தி சமஸ்கிருதம் கற்போம்
எங்கள் அடுத்த தலைமுறையை கால் வயித்து கஞ்சுக்கு கோயில் வாசலில் நிற்க வைப்போம்!
#TNAgainstNEET ந முகுந்தன்
Sunday 2 June 2019
பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2019
2019
பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2019
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.
மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 15 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. ரமலான் 27 அன்று 02-06-2019 பித்ரா 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கபட்டது