Sunday 4 December 2016

Dawa in PMK

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,















Wednesday 17 August 2016

துபை East ஹோர் அல் அன்ஸில் தொடரும் அழைப்பு பணி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபை ஹோர் அல் அன்ஸில் தொடரும் அழைப்பு பணி
***************************

தமுமுக துபை மண்டலம்
ஹோர் அல் அன்ஸ் பகுதியில் 17-08-2016 புதனன்று துபை மண்டலம் மமக செயலாளர் சகோதரர் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் கிளையின் பொருளாளர் சகோதரர் அகமது கான் பார்த்திப்பனூர் சதாம் ஹீஸைன் உள்ளிட்ட சகோதரர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களை சந்தித்து இறைவேதமாகிய திருக்குர்ஆனை ஓதுவதின் அவசியத்தை எடுத்துரைத்தனர்




அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 18 ஆகஸ்ட் 2016 @ 09:30 PM

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
 
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் நாளை வியாழக்கிழமை 18th August' 2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு 09:30 மணி அளவில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை ) அவர்களின் தியாகமும் & படிப்பினையும் என்ற தலைப்பில் MTCT மர்க்கஸ் இல் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.


விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்


For Madukkur Thowheed Charitable Trust


துபை ஹோர் அல் அன்ஸில் .அழைப்பு பணி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
 
துபை ஹோர் அல் அன்ஸில் ...

தமுமுக துபை மண்டலம்
ஹோர்அல் அன்ஸ் பகுதியில் 16-08-2016 இன்று செவ்வாய்கிழமை நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விதமாய் சகோதரர்களுக்கு அழைப்பு பணி செய்யப்பட்டது

துபை மணடல மமக செயலாளர் சகோதரர் A.S.இப்ராஹீம் தலைமையில் ஹோர் அல் அன்ஸ் கிளையின் பொருளாளர் சகோதரர் அஹமது கான் உள்ளிட்ட சகோதரர்கள் அழைப்பு பணியில் ஈடுபட்டனர்


அல்ஹம்துலில்லாஹ்

நபி இப்ராஹிம் (அலை )அவர்களின் தியாகமும் & படிப்பினையும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவதுதாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் நாளை வியாழக்கிழமை 18th August' 2016 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு 09:30 மணி அளவில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை )அவர்களின் தியாகமும் & படிப்பினையும் என்ற தலைப்பில் MTCT மர்க்கஸ் இல் சிறப்புரையாற்றஇருக்கின்றார்கள்.

 விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம். மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால்வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்படஅன்புடன் அழைக்கும்


Madukkur Thowheed Charitable Trust


Displaying 18082016 Dxb.jpg

Monday 18 July 2016

Good Thought



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



Sunday 14 February 2016

சிறந்த காண்காட்சியாக நாக்கு - இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் கிருபையால் துபை அல்மனார் சென்டர் அல்கூஸ் தமிழ் தாவா பிரிவின் மூலமாக அல்குர்ஆன் மாநாடு பிப்ரவரி 4, 5, 6, -2016 மூன்று நாள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கண்காட்சிகள் (Exhibition) நடை பெற்றது.
இதில் சிறந்த காண்காட்சியாக நாக்கு என்ற தலைப்பின் கீழ் வைக்கபெற்ற என்னுடைய கண்காட்சி இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ் வழங்கபட்டது
அமீரகம் தழுவிய நடைபெற்ற இந்த கண்காட்சிகளில் என்னை இராண்டாவதாக தேர்ந்தெடுத்து துபை அவ்காப் மூலமாக முபாரக் மதனி, முப்தி உமர் காஸிம், காயல்பட்டிணம் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முதல்வர் அப்துல் மஜித் மஹ்லரி, மெளலவி அப்துல் பாசித் புகாரி, அல்ம னார் தமிழ் தாவா குழுவின் தலைவரரும் துபை இஸ்லாமிய வங்கியின் வைஸ் சேர்மானுமாகிய அமீர் ஜாபர் ஆகியோர்களின் முன்னிலையில் சிறந்த இராண்டாவது அமீரகம் தழுவிய கண்காட்சிக்கான சான்றிதழ் எனக்கு வழங்கபட்டது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே! Regards A.S.Ibrahim Dubai

பெரும்பாலானோருக்கு பொழுது போக்கே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்றைய உலகில் பெரும்பாலானோருக்கு பொழுது போக்கே மற்றவர்களை பற்றி புறம், அவதூறு பேசுவதுதான்..
அதுவும் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் அவர்களுடைய வேலை எளிதாகிவிட்டது என்றே கூறலாம்.
ஆனால் இது போன்று புறம்பேசும் செயலை இஸ்லாம் தடுத்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.."மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள், யார் மற்றவர்களுடைய குறையை தேடி திரிகிறார்களோ, அவர்களுடைய குறையை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான், பின்னர் அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளை பகிரங்கமாக்கி அவர்களை இழிவுப்படுத்திவிடுவான் -நூல்:அஹ்மத்.
இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சகோதரர் Khaja Mydeenபுறம் என்னும் குறும்படத்தை அருமை சகோதரர்.Hussain Bashaவை வைத்து இயக்கியுள்ளார். ஐந்து நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம், புறம் பேசுவது பற்றி இஸ்லாம் கூறும் தகவல்களை நமக்கு தருகிறது.
கோவையில் நடந்த வெளியீட்டு விழாவில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இதற்காக உழைத்த
இக்குறும்படக்குழுவினருக்கும், தயாரிக்க உதவிய AS Ibrahim Mbaஅவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...
காட்சிகளும்,வசனங்களும் குறைவாக இருந்தாலும், மற்றவர்களை பற்றி புறம் பேச என்னும் போது அந்த‌" அறை" மட்டும், ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும் என்பதில் ஐயமில்லை...


புறம்' குறும்படம் (Must Watch & Share) சமாதானக் கலைவிழாவில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்ற குறும்படம்
YOUTU.BE

புறம் என்ற குறும்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த புறம் என்ற குறும்படம் மக்களுடைய விழிப்புணர்வுக்காக, பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்டின் தயாரிப்பில் முதன் முதலாக வெளியிடபட்ட குறும்படம்.இன்ஷா அல்லாஹ் இதனைபார்த்து அனைவரும் பயன் பெறவும்.புறம் என்ற மோசமான பாவத்தை சமூகத்தில் இருந்து ஒழிப்பதே இதனுடைய நோக்கமாக இருக்கிறது.
புறம்' குறும்படம் (Must Watch & Share) சமாதானக் கலைவிழாவில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்ற குறும்படம்
YOUTU.BE

Monday 25 January 2016

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப்பெற‬ வேண்டும்! ‪‎மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்‬.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.. வெளியிடும் அறிக்கை:

MH Jawahirullah
தலைவர்,...

மத்திய அரசு, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.621லிருந்து ரூ.671.50ஆக 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மத்திய பா.. அரசு. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 37 டாலர் அளவுக்குப் குறைந்துள்ளபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க முன்வராமல், மேலும் மேலும் விலையை உயர்த்திக் கொண்டே போவதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆலோசனைப் படி மானியங்கள் குறைப்பு, பொது விநியோகக் குறைப்பு என அதிரடியாக இரட்டைத் தாக்குதல் களை ஏழை, எளிய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது.
மேலும், சமையல் எரிவாயு போன்று மண்ணெண்ணெய் மானியத்தையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் பொதுப்பங்கீட்டுக் கடைகளில் மண்ணெண்ணெய் பெற்றுவந்த அனைவரும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அடித்தட்டு ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தையும், சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
தலைவர், ...