Friday 18 August 2023

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டியது

*வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய அவசியமான 31 வகையான கிராம ஊராட்சி பதிவேடுகள்.*


கிராம ஊராட்சி பதிவேடு எண்.1

வீட்டு வரி கேட்பு தொகைக்கான அறிவிப்பு:

வீட்டு உரிமையாளர்களின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்பப்பட வேண்டிய அறிவிப்பாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.2

வீட்டு வரி ரசீதுகள்: வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.3

வீட்டு வரி (நிலுவைத்தொகை நடப்பு வரித்தொகை) கேட்புத்தொகைப் பதிவேடு: இப்பதிவேடு 5 ஆண்டுகளுக்கு நடை முறையிலிருக்கும். புதியதாக வீட்டுவரி செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம். நீக்கம் செடீநுய வேண்டியிருப்பின் நீக்கம் செடீநுயலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு வரி வீதம் மற்றும் அடிப்படை வகைப்பாடு (மூலதன மதிப்பு அல்லது பரப்பளவு மதிப்பு ஆண்டு வாடகை மதிப்பு) அதற்கான நிர்ணயம் செடீநுயப்பட்ட தீர்மானத்தை இணைக்க வேண்டும். மேலும் வரி விகிதம் நிர்ணய தீர்மானத்தையும் இணைக்க வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.4

தொழில் வரி பற்றுச்சீட்டு: தொழில் வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் இரசீதாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.5

தொழில் வரி (நிலுவைத்தொகை, நடப்பு கேட்புத்தொகை) கேட்புத்தொகை பதிவேடு: தொழில் வரி செலுத்த வேண்டியவரின் பெயர் மற்றும் விவரங்கள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.6

பல்வகை பற்றுச்சீட்டு: பல வகையான கட்டணங்கள் ஊராட்சியில் பெறப்படுவதற்கு அத்தாட்சியாக அளிக்கப்படும் இரசீதாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.7

வரிகள் மற்றும் பல்வகை இனங்களில் வசூல் பதிவேடு: வீட்டு வரி தொழில் வரி மற்றும் விளம்பர வரி இதர ஊராட்சி நிர்ணயிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை வசூல் செடீநுய வேண்டிய பதிவேடாகும்.


எண்.8 மானியங்கள், ஒதுக்கப்பட்ட இனங்களில் வசூல் பதிவேடு: மாநில நிதி மான்யம் மற்றும் ஒதுக்கீட்டு வரவினங்கள் ஆகியவற்றை குறிக்கும் பதிவேடாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.9

கிராம ஊராட்சி நிதி சிட்டா: இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்படும் வரவினங்கள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.10

பல்வகை வரவு, வசூல் நிலுவைப் பதிவேடு:

அனைத்து வரியினங்கள் மற்றும் குத்தகைக் கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவற்றின் கேட்பு விவரம், வசூல் செடீநுத விபரம் மற்றும் நிலுவைகள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண் .11

ரொக்கப் புத்தகம் (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): ஒவ்வொரு நிதிக் கணக்கிற்கும் தனித்தனியே ரொக்கப் புத்தகம் பதிவு செடீநுயப்பட வேண்டும். இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்பட்ட வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.12

திருப்பி வசூலிக்கத்தக்க முன்பணங்கள் பதிவேடு: கிராம ஊராட்சி ஏதேனும் ஒரு செலவிற்காக முன் பணம் அளித்தால் இப்பதிவேட்டில் பதியப்பட்ட பின்னரே முன்பணம் வழங்கப்பட வேண்டும். பின்னர் வசூலிப்பதை கண்காணிக்கப்படல் வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.13

வகைப்பாடு செடீநுயப்பட்ட தொகை செலுத்தங்கள் பதிவேடு அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு:


பட்டியல் அனுமதிக்கப்பட்ட பின்னர் ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வழங்கப்படும் அனைத்து இனங்களும் இப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.14

பற்றொப்பப் பதிவேடு: கொடுக்கப்படும் பணத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதிவேடாகும்


கிராம ஊராட்சி பதிவேடு எண்.15

மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): ஊராட்சி நிதி மூலம் எடுக்கப்படும் பணிகளுக்கு மதிப்பீடு மற்றும் வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை ஆகியவை பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.16

கிராம ஊராட்சியின் சொத்துக்கள் பற்றிய பேரேடு: ஊராட்சி நிதி மூலம் ஏற்படுத்தப்படும் அனைத்து சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஊராட்சிகளின் சொத்துக்கள் இனவாரியாக பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.17

பராமரிப்பு பதிவேடு: ஊராட்சி சொத்துக்கள் பராமரிப்பு செலவுகள் ஆகியவை பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.18

தெரு விளக்குப் பொருள்கள், கைப்பம்புகளின் உதிரி பாகங்கள், பொதுச் சுகாதாரம் தொடர்பான பொருள்கள் மற்றும் ஏனைய பயனீட்டுப் பொருட்கள் இருப்புப்பதிவேடு:

ஊராட்சியினால் வாங்கப்படும் அனைத்து பொருட்களின் விவரங்கள் இருப்பு பதிவேட்டில் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.19

செலவுச்சீட்டு:

இரசீது புத்தகங்களின் விவரங்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.20 தொகை மதிப்பு படிவங்கள் குறித்து இருப்புப் பதிவேடு,

அளவுச் சுவடிகள், ஒப்பந்தப் படிவங்கள் முதலியவை: பண மதிப்புப் படிவங்கள், அளவு புத்தகங்கள், ஒப்பந்தப் படிவங்கள் மற்றும் இதர படிவங்கள் ஆகியவற்றின் இருப்புக்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும். பண மதிப்பு படிவங்கள்: வீட்டு வரி இரசீது புத்தகம், தொழில் வரி இரசீது புத்தகம், விளம்பர வரி இரசீது புத்தகம், இதர பல்வகை இரசீது புத்தகங்கள், எழுது பொருட்கள் இருப்பு பாதுகாப்பு வைப்புகள்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.21

விற்பனையாகாச் சரக்குப்பதிவேடு (முடங்கு பொருள் பதிவேடு):

பழுதடையக் கூடிய மற்றும் உபயோகமற்ற பொருட்களின் இருப்புகள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.22

சிமெண்ட், உருக்கு நிலக்கீல், கதவுகள், சன்னல்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் ஏனைய பொருட்கள் குறித்த இருப்பு பதிவேடு:

ஊராட்சியின் மூலம் பெறப்பட்ட சிமெண்ட், இரும்புக் கதவுகள், சன்னல்கள், தார் மற்றும் இதர பொருட்களின் இருப்புகள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.23 ரொக்கப்புத்தகம்(அளிக்கப்பட்ட மானியக் கணக்கு வகை செடீநுயப்பட்டுள்ளது):

மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்காக வழங்கப்படும் அனைத்து வரவினங்களும் இப்பதிவேட்டில் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.24 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலுத்தங்கள் பற்றிய பதிவேடு (அளிக்கப்பட்ட மானியக் கணக்கு):

பன்னிரெண்டாவது நிதிக்குழு மான்யத்தொகை, இறுதிச் சடங்குத்தொகை ஆகியவற்றின் வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.25

மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய பதிவேடு

(அளிக்கப்பட்ட மானிய கணக்கு): ஒதுக்கீட்டு மானிய கணக்கில் மேற்கொள்ளப்படுகின்ற மூலதன மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரம் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.26

ரொக்கப் பதிவேடு புத்தகம் (திட்ட நிதிக் கணக்கு):

கிராம ஊராட்சி திட்ட நிதி கணக்கிற்கு வரவு (ம) பணிகள் செடீநுத செலவு குறித்த விபரம் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.27 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலவுகள் பதிவேடு (திட்ட நிதிக்கணக்கு) :

இந்திரா குடியிருப்புத் திட்டம், மத்திய ஊரக துப்புரவு திட்டம் ஆகியவற்றின் கீடிந பெறப்படும் வரவுகள் மற்றும் தொகை வழங்கல் விபரம் இதில் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.28

திட்டப்பணிகள் பதிவேடு:

கிராம ஊராட்சியின் பயனுக்காக அனைத்து திட்டப் பணிகளின் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் பற்றிய விவரம் இதில் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.29

திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் விபரம் அடங்கிய பதிவேடு :


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(அ)

திட்டப் பயனாளிகள், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(ஆ)

இந்திரா வீட்டு வசதித்திட்டம் (தொகுப்பு வீடுகள்): இத்திட்டத்தின் கீடிநபயனடைந்தோர் விபரம், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(இ)

மத்திய ஊரக சுகாதாரத் திட்டம் பதிவேடு (ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய கழிப்பிடங்கள்): தனிநபர் கழிப்பறைகள் கட்டிய நபர்கள் விபரம் மற்றும் பயன்பெற்ற மான்ய விபரம் ஆகியன பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(ஈ)

ஏனையவை: மேற்கண்ட திட்டங்கள் தவிர மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்களின் கீடிந பயன் பெறுபவர்கள், பயன் பெற்ற மான்ய விபரம் குறித்துப் பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண்.30

கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஆடீநுவாளருக்கு அனுப்பப்பட வேண்டிய மூன்று வகைக் கணக்குகளுக்கான வகைப்படுத்தப்பட்ட வரவுகள்–செலவுகள் குறித்த மாதாந்திர விபரம்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.31

கிராம ஊராட்சிகளின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான

மாதிரிப்படிவம்

சென்ற ஆண்டின் வரவு – செலவு விபரமும், எதிர்வரும் ஆண்டிற்கு உத்தேசமாக மேற்கொள்ளவுள்ள வரவு – செலவு விபரமும் இதில் குறிப்பிடப்படும்.


இந்த பதிவேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எப்படி பெற இயலும் பெற்று எப்படி அவற்றில் உள்ள குற்றங்குறைகளை மோசடிகளை கண்டறிவது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



* *இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்




🇮🇳. *இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்*


🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது சுமார் *95,300* சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் *61,945 (அ) 61, 395 பேர் முஸ்லிம்கள்.*


🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய கீதம் தற்போதுள்ள *"ஜன கண மன"* அல்ல, *அல்லாமா இக்பால்* அவர்கள் இயற்றிய, *"ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா"* என்ற பாடல் தான்.


🇮🇳. ஷேகுல் ஹிந்த் எனப்படும் *மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்)* அவர்கள் *மால்டா* சிறையில் இருக்கும் போது, ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவர்களின் இடுப்பில் சூடு போடுவார்கள், அதனால் அவர்களின் இடுப்பில் சதையே இல்லை.


🇮🇳. காந்திக்கு *"மகாத்மா"* என்று பெயர் சூட்டயதே *அப்துல் பாரீ ஃபரங்கி மஹல்லி (ரஹ்)* அவர்கள் தான்.


🇮🇳. *40 உலமாக்கள்* நிர்வாண நிலையில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள், *14,000 ஆலிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.*


🇮🇳. *பகதூர் ஷா* அவர்களின் இரு மகன்களின் தலைகளை வெட்டி தட்டில் வைத்து அவர்களுக்கே கொடுக்கப்பட்டது.


🇮🇳. தேசிய கொடியை வடிவமைத்தவர், *"சுரையா தியாப்ஜி"* என்ற இஸ்லாமிய பெண்.


🇮🇳. வா. உ. சி - க்கு சுதேசி கப்பல் வாங்க *ஹாஜி ஃபக்கிர் முஹம்மது சேட் என்பவரே 80 % சதவீத பணம் தானமாக வழங்கினார்.*


🇮🇳. இந்தியாவின் பாரம்பரிய ஆடையான *கதர்* ஆடையை முதன்முதலில் இராட்டையில் திரித்து , ஆடையாய் நெய்து காந்திக்கு போர்த்தி அந்த ஆடைக்கு *"கதர் ஆடை"* என்று பெயர் வைத்தவர் *மௌலானா முஹம்மது அலி அவர்களின் தாயார்.*



பத்திரம் பதிவு பற்றிய தகவல்கள்

பத்திரம் பதிவு பற்றிய தகவல்கள்


1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும். 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.


Zero value நிலம்.....


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான் நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.


2.Double Document அல்லது சந்தேகம் உள்ளதா என்று கேள்வி கேக்க வேண்டும் உரிமையாளர் விடம்


Power of attorney(POA) double document....


POA நிலத்தை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோடு, சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தை power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.


அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா? என்று கேளுங்கள்.


அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள்.முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம். விற்றால் அது double டாக்குமெண்ட் ஆகும்.


3.உயில் பத்திர நிலத்தில்.....double document உள்ளதா


உயில் மூலம் உரிமை மாறி இருக்கா?


உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.


எது இறுதி/கடைசி உயில்? என்று கவனமாக பார்க்க வேண்டும்.பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.


பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கா? ன்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும்.இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.


4.Settlement பத்திர நிலம்....(double document) ஆகும்


Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும்.


1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலமாக தான் ரத்து பண்ண முடியும்.


பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால். அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.


5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-.....(double document.).....


1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.


அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document ஆகும்


6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?....


அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் என்ற பாருங்கள்?.


DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.


Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority )என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.


அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.


Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள்.


நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள். எனவே ஜாக்கிரதை.


பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.


நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும். உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.


VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள்.

RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .


5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.....


கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு.பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம். அதனாலே, விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள்.அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்....


நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில்க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கவேண்டும்.


7. பட்டாவின் பயனாளி யார்?......


முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்


மேஜர் இனாம் நிலம்......


ராயட்டு வாரி

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரியாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை. உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.


Minor இனாம் நிலம்,

சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்.


தொழில் முறை இனாம் நிலம்.....


தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன், கர்ணம்,தலையாரி,வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.


ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)

settlement etc என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகைபாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தவை. சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்ட (HSD பட்டா ,

D-பட்டா,

நமுனா பட்டா,

TKT பட்டா,

F-பட்டா,

B-memo பட்டா,

அனுபந்த பட்டா,

Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா.....

என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு, revenue டிபார்ட்மென்ட் வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.


Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் நிலத்தை வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.


1956-பூமி தான நிலம்....


Manual EC

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம்(கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும்.


Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும். பூமி தான நிலம் வாங்காதீர். பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு. எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.


Zero value நிலம்....


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.


கோயில் நிலம் -HR&CE நிலமா.....


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும்.


கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு. இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.


இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை அரசு திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


LAND REFORMS ACT.....


இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில், B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.


1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்....


இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme....


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.


1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்......


தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.


இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும்.


1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்.....


நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.


1976 களின் Urban land seiling act.....


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.


8. கோர்ட் attached property வாங்காதீர்.


9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர்மனைவிmaintenance(ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.


10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.


11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )


13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு அவசியம் வேண்டும்.


1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும். இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்......


அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.


அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு, ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி, UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து, UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரியாக மாற்றி கொண்டார்கள்.


14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா confirm(உறுதி )பண்ணிக்கணும்.


15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.


16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள்?.இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா, தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்


17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர்க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்.


18.அடுத்து, டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.


நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.


உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

லாயர் எங்கு படித்தார்,

எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார், எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள்.புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.


மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு.நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.


19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.


20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாம் என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்விகள் .


காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே.அதனாலே அலுத்துக்கொள்ளதீர்.


surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல், இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்....


மேலும்...

‌‌ சொத்துக்கள் வாங்கும் போது வழக்கறிஞர்கள் அவர்களிடம் ஆலோசனை பெறலாம்


செங்கோட்டையில் மோடி பறக்கவிட்ட 'வடைகள்' !

செங்கோட்டையில் மோடி பறக்கவிட்ட 'வடைகள்' !


மோடி 'மிகச்சிறந்த' பேச்சாளர். உண்மை போலத் தோன்றும்படி பொய்களை சரளமாக அள்ளிக் கொட்டுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. மிக நீண்ட நேரமும் பேசக் கூடியவர். இந்தாண்டு சுதந்திரத் தினத்தன்று அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் 'ப்ளா'(Blah) எனப்படும் புளுகு மூட்டைகள் அல்லது வெற்றுத் தம்பட்டங்களே.


தான் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட்டதாகவும், வாரிசு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட தாகவும் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். முதலாவதாக ஒரு மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம், அங்கே வாரிசு அரசியல் எப்படியிருக்கிறது என்று


l மத்தியப் பிரதேசத்தில், 'உடன்கட்டை ஏறுதல், எங்கள் பிறப்புரிமை' என்று முழங்கிக் கொண்டிருந்த விஜயராஜே சிந்தியா, வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர். அவருடைய மகள் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவருடைய இன்னொரு மகள் யசோதரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்தவர். அடுத்ததாக, மகன்வழிப் பேரன் ஜோதிராதித்யா சிந்தியா இப்போது மோடி அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தது, மகள் வழிப் பேரன் துஷ்யந்த் சிங் தற்போது பாஜகவில் எம்.பி.யாக உள்ளார். ஒரு குடும்பத்தில் இத்தனை பேர் அமைச்சர் பொறுப்பில் இருப்பது ஒன்றும் வாரிசு அரசியல் இல்லை போலும்!.


. l மோடி அமைச்சரவையில் இப்போது இருப்பவர்களில் 15 பேர் வாரிசுகள்தான். உதாரணத்திற்கு, அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்த துமால் அவர்களின் மகன். இதேபோன்று, ராவ் இந்திரஜித் சிங், ஹரியானா முதல்வராக இருந்த ராவ்பீரேந்திர சிங்கின் மகன். பியூஸ் கோயல், பாஜகவின் முன்னாள் பொருளாளர் வி.பி.கோயலின் மகன்.


l இதுதவிர, 1999 முதல் இன்றுவரை 31பேரின் வாரிசுகள் பாஜகவின் எம்.பி.க்களாக இருந்துள்ள னர். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் 224 வேட்பாளர்களில் 34 பேர் வாரிசுகள். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு போட்டியிட வாய்ப் பளித்தது நான்கு குடும்பங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த 8 பேரும் இந்த வாரிசுகளில் அடங்குவார்கள்.


ஊழலைப் பற்றியும் பிரதமர் மோடி, பேசியிருக்கிறார்:


l ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் அற்றவர்கள் பாஜகவினர். ஆனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய மிருக பலம், ஊடகங்களை கட்டுப்படுத்துகிற அடி யாள்தனம், பணத்தால் அடித்து, யாரையும் விலைக்கு வாங்குகிற நரித்தனம் - இவற்றின் காரணமாக அதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


l இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, குஜராத்தில் 12 பாலங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. 2016 முதல் 2022 வரை யிலான 6 வருட காலத்தில் 12 பாலங்கள் இடிக்கப்பட்டி ருக்கின்றன; அல்லது அவை பயணம் செய்வதற்கு தகுதியற்றவை என்கிற முறையில் நிர்வாகத்தாலேயே இடிக்கப்பட்டிருக்கின்றன.


l இதைவிட மிகப்பெரிய கொடுமை, ஹரியானாவில் இருக்கக்கூடிய துவாரகா எக்ஸ்பிரஸ் ஹைவே-க்கு ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு 18 கோடி ரூபாய் அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என்ற செலவில் ரோடு போட்டிருக்கிறார்கள். சிமெண்டால், ஜல்லியால் ரோடு போடுவதற்கு, அவர்கள் தங்கத்தை குழைத்து, வைரத்தில் போட்டிருந்தால்கூட இவ்வளவு வந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு யோக்கியர்களாக இருந்திருக்கிறார்கள்.


l பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் - இதற்கு பிரதமருடைய பெயரை வைப்பாராம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டு அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன ஊழி யர்களிடம், ஒன்றிய அரசு ஊழியர்களிடம், ஐஏஎஸ் அதிகாரிகளிடம், பொதுத்துறையின் 'கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) நிதி'யிலிருந்து கோடி கோடியாக பணத்தைப் பெறுவார்களாம். ஆனால் வாங்கிய பிறகு, அந்தப் பணம் தனியார் ஃபண்ட், தனியார் நிதியம் - எனவே நான் இதற்கு கணக்குச் சொல்லவில்லை என்று சொல்வாராம். இப்படி முற்றிலும் ஊழலில் குளித்து அம்மணமாக நிற்கிற பாஜகவிற்கு யோக்கியஸ்தர் பட்டம் கொடுப்பதற்கு, எல்லாவற்றையும் துறந்த நேர்மையற்ற மனிதர்களால்தான் சாத்தியம்.


மிகப்பெரிய அளவிற்கு உலக மதிப்பீட்டு நிறு வனங்களெல்லாம் மோடியைக் கொண்டாடு கின்றனவாம். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா விற்கு ஆற்றியிருக்கிற பணிகளை மெச்சிப் புகழ்ந்திருக்கின்றனவாம். சுதந்திர தின உரையில் ஒரே தற்புகழ்ச்சி.


l சமீபத்தில்தான் ஐரோப்பிய யூனியன், மணிப்பூரில் மோடி ஒரு பிரதமர் என்கிற முறையில் நியாய மாக, நடுநிலையோடு செயல்படவில்லை. பாரபட்ச மாக நடந்து கொண்டார் என்று அவருக்கு பட்டம் கொடுத்திருக்கிறது. இதற்கிடையில், 2014 ஆம் ஆண்டு பட்டினிக் குறியீட்டில் 55 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 இல் 107ஆவது இடத்திற்கு, அதாவது, 52 இடம் கீழே போயிருக்கிறது.


நாங்கள் வந்த போது இந்திய பொருளாதாரம் 10 ஆவது இடத்தில் இருந்தது. அதை 5 ஆவது இடத்திற்கு கொண்டுவந்துவிட்டோம் என்று தனது முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டார் மோடி.


l மோடி உண்மையில், 2014 மே 1இல் உலக வங்கியின் அறிக்கையை சுட்டிக்காட்டி, இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிற செய்தியில் - 2005இல் இந்தியா 10 ஆவது பெரிய பொருளாதார மாக இருந்தது; 2011 ஆம் ஆண்டு, அது 3 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, உண்மையில் இந்தியா 2027 ஆம் ஆண்டில் 3 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இந்த மதிப்பீடு களை மேம்போக்காக ஒப்பிட முடியாது.


l இரண்டு பேர் இருக்கிற ஒரு குடும்பத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்; 10 பேர் இருக்கிற குடும்பத்தில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால், அந்த 10 பேர் இருக்கிற குடும்பம்தான் அதிகமாக சம்பாதிக் கிறது என்று சொல்வது ஒரு மேம்போக்கான வாதம்.


l எனவேதான் உலகம் முழுவதும், ஒரு நாட்டின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எப்படி சரியாக பிரதிபலிக்கும் என்பதற்கு, தனி நபர் ஜிடிபி என்பதை ஓர் அளவுகோலாக வைத்திருக் கிறார்கள்.அப்படி பார்த்தால், பொருளாதார வல்லமை படைத்த முதல் 10 நாடுகளில், கடைசியாகத்தான் இந்தியா இருக்கும். 3 ஆவது இடத்திற்கு வந்தாலும் கூட, அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆறில் ஒரு பகுதியாகவும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள சீனப் பொருளாதாரத்தின் ஐந்தில் ஒரு பகுதியாக வும் இருக்கப் போகிறது என்பதுதான் நிலைமை. எனவே பொருளாதாரத்தைப் பற்றி மோடி அடிக்கிற தம்பட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது.


வீடு கட்டிக் கொடுத்தேன்; வைத்தியம் பார்த்தேன் என்றெல்லாம் கூட சுதந்திர தின உரையில் பிரமாதமாக அளந்து விட்டிருக்கிறார் பிரதமர். வீடு கட்டுவதற்கு கடந்த கால ஆட்சி யாளர்கள் மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடி கடன் கொடுத்தார்கள்; நாங்கள் ரூ.4 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக் கிறார்.


l உண்மையில், இந்நேரம் ஒரு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் என்பது வெறும் 76 லட்சம் மட்டும்தான். இதிலும் கூட, கடைசியாக ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது என்பதை சிஏஜி சுட்டிக் காட்டியிருக்கிறது.


l அதேபோல, மருத்துவ திட்டம் குறித்தும் சிஏஜி சொல்லி யிருக்கிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக, நாங்கள் ஆகாயத்தை வளைத்து விட்டோம்; இறந்து போனவர்களை எழுப்பிவிட்டோம் என்பது மாதிரியாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில், பொருத்தமற்ற 7.5 லட்சம் பேர் பணம் வாங்கியிருக்கிறார்கள். ஏழு ஆதார் எண் களிலிருந்து 4766 பேருக்கு பணம் அனுப்பியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 403 பேர் இறந்து போன பிறகு, அவர்களுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் என சிஏஜி அறிக்கை புட்டுப் புட்டு வைத்துவிட்டது.


43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை உச்சத்தில் இருக்கிறது என்பது அறிந்ததே, பிரதமர் மோடி, 8 லிருந்து 10 கோடிப் பேருக்கு நாங்கள் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கி விட்டோம் என்றும் அள்ளி விட்டிருக்கிறார்.


l வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு நிறுவனங்களில், இந்த ஆண்டு ஜூன் மாத கணக்கின்படி, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 39 லட்சத்து 77 ஆயிரம். நிரப்பப்பட்டிருப்பவை 30 லட்சத்து 13 ஆயிரம். 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.


l மறுபுறம், ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் 2013-2014 இல் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சேர்த்து 16 லட்சத்து 90 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர். இது தற்போது 14 லட்சத்து 54 ஆயிரமாக மாறியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் 2.5 லட்சம் பணியிடங்களை காலி செய்திருக்கிறார்கள். அதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் 13 லட்சத்து 51 ஆயிரமாக இருந்ததை, 9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்து விட்டு, மீதமுள்ளவற்றை அத்துக் கூலிகளாக மாற்றிவிட்டார்கள்.


l கடந்த 2022-2023 ஆண்டு, இந்தியாவில் 15 முதல் 24 வயது வரை இருக்கிற 25 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குவது 72 சதவீதம் குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான விசயங்கள் உள்ளன.


l 2016-2017இல் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக வேலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 40.7 கோடி. ஆனால் 2020-21 இல் இது 37.8 கோடி. கிட்டத்தட்ட 3 கோடி வேலைவாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டார். அப்படியென்றால், இவர் சொல்லியிருக்கக் கூடிய 10 கோடி வேலைவாய்ப்பு என்பதை எங்கே உரு வாக்கினார்? கடலுக்கு அடியிலா? அகண்ட பாரதத்திலா?


பெண்கள் பாதுகாப்பில் அவர் பெரிய முன்னுரிமை கொடுத்ததைப் போல பேசி யிருக்கிறார்.


l இந்தியாவின் அடையாளங்களாக இருக்கக் கூடிய மல்யுத்த வீராங்கனைகள் (குழந்தைகள் உட்பட) தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்ட தாக பாஜக எம்.பி.யான பிரிஜ் பூசண் சரண்சிங் மீது குற்றம் சாட்டியிருக்கிற பின்னணியில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படி பேசுவதற்கு, பிரதமர் மரத்துப் போனவராக இருக்க வேண்டும்.


l இப்போது பாஜகவில் இருக்கக் கூடிய ஏழு எம்.பி.க்கள் மீது மிகக் கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச் சாட்டுக்கள் உள்ளன. பாஜகவின் 37 எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.


l பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachho, Beti Padav) பெண் குழந்தைகளுக்கான திட்டத்தைப் பொறுத்தவரை 2022-23 ஆம் ஆண்டில், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 18 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று, நிர்பயா நிதி 2022-23 ஆம் ஆண்டில் வெறும் 12.4 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மறந்து, கொஞ்சமும் கூச்சமின்றி இப்படி ஒரு மனிதர் பேசுகிறார் என்றால், அவரை எந்த வகையில் சேர்ப்பது?


நாங்கள் கொரோனாவை மிகவும் சக்தியுடன் எதிர்கொண்டோம் என்றும் கதையளந்துள் ளார் பிரதமர் மோடி.


l உண்மையில் இந்திய அரசாங்கம் சொன்னதைவிட, கொரோனா காலத்து மரணங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் எழுதியது. அது ஒரு பத்திரிகை; இதை நம்ப வேண்டாம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் உலக சுகாதார நிறுவனம், 'இந்திய அரசாங்கம் 4.8 லட்சம் பேர் மட்டும் இறந்ததாக கணக்குக் காட்டியிருக்கிறது. உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்திற்கும் அதிகம்' என்று சொல்லியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 10 மடங்கு. கங்கையில் தூக்கி வீசப்பட்ட உடல்கள் அனாதையாக எறியப்பட்ட உடல்கள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்தால், இந்த எண்ணிக்கை சரியாக இருக்கும்.


மணிப்பூர் குறித்து, அவர் கூறிய வார்த்தைகள் மிக மோசமானவை. மணிப்பூரில் பல வாரங்களாக வன்முறை நீடித்தது; இப்போது அமைதியாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.


l அவர் பேசிக் கொண்டிருந்த நாளிலிருந்து சரியாக, ஐந்து நாட்களுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 6 அன்று தான் 24 மணி நேரத்திற்குள் 6 பேர் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார். ஆனால் இந்தியாவே அவர்களுக்கு துணை நிற்கும் என்று மேடையில் ஏறி வாய்ச்சவடால் அடிக்கிறார். இவரது அரசாங்கமோ, இவரது கட்சியின் மாநில அரசாங்கமோ அந்த மக்களுக்கு ஆதரவாக நின்றதா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததா? இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் வெளியில் வந்தபோது, இப்போதுதான் தெரிய வந்தது போன்று பேசினார். ஆனால் தேசிய மகளிர் ஆணையத் தலைவி, "ஜூன் 12 ஆம் தேதியே எங்களுக்கு தகவல் கிடைத்தது. நான் அதை மணிப்பூர் உள்துறைச் செயலாளருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பி விட்டேன். இதுவரை பதில் இல்லை" என்று சொல்கிறார். இதேபோன்று கூடுதலான பல வழக்குகளையும் அனுப்பியதாகச் சொல்கிறார்.


அடுத்ததாக, தன்னுடைய இயலாமை,தான் சந்திக்கிற தோல்விக்கெல்லாம் இஸ்லாமியர் கள்தான் காரணம் என்று சொல்வதை அவர் ஒருபோதும் தவற விடுவதே இல்லை. இப்போது, ஆயிரம் ஆண்டு கால அடிமைத்தனம் என்று முக லாயர்கள் காலத்தையும் சேர்த்தே சொல்லியிருக் கிறார். அதிலிருந்து நாம் விடுபடப் போகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இந்தியா வில் சமூக நீதியை நிலை நாட்ட முடியாமல் போய் விட்டது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


l இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக, இங்கு இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்க முடியவில்லை; சலுகைகள் வழங்க முடியவில்லை என்பதை அவர் சொல்லியிருக்கிறார். உண்மையில், அவரது ஒட்டுமொத்த சுதந்திர தினப் பேச்சில் மிக ஆபத்தான பகுதி என்று இதைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது.


l தன்னுடைய சாதனை என்று அவர் சொல்வது அனைத்தும் பொய்யாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் என்பது வெறும் தம்பட்ட மாக இருக்கிறது. ஆனால் தன்னுடைய சங் பரிவாரத்திற்கு அவர் ஒரு செய்தியை அனுப்பு கிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்ட த்தை தீவிரப்படுத்துங்கள். அவர்கள் மீது தாக்குதலை நடத்துங்கள். இந்தியா பின்தங்கியிருப்பதற்கு அவர்கள்தான் காரணம். எனவே, அவருடைய பேச்சு வன்மம் நிறைந்ததாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.


மேலும், நாங்கள் ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை; 50 ஆண்டுக்கு, 100 ஆண்டுக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஆயிரம் ஆண்டுகள் என்கின்றனர். அதாவது, இவர்கள் இன்று செய்வதன் பலன் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்குமாம். அதனால் இவரை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். இந்திய மக்கள் 2024 தேர்தலில், பாஜகவும் அதன் கூட்டாளிகளும் முற்றிலுமாக துடைத்தெறியப்படுவதை உறுதி செய்வதன் மூலமாகவே, நிகழ்கால இந்தியாவை சிறந்த இந்தியாவாக எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல முடியும். அதை செய்ய வேண்டியது நம்முடைய கடமை.


தொகுப்பு : ஆர்.நித்யா

Monday 14 August 2023

Returned mails: see transcript for details Spam

 The original message was received at 8/15/2023 12:27:41 a.m.

   ----- The following addresses had permanent fatal errors, Click below to view failed recipient -----

To fix the delivery errors permanently, Click Fix Delivery Error

    (reason: 550 Messages tagged as spam. Contact the postmaster of this site if you believe that your message has been incorrectly tagged as spam.

   ----- Transcript of session follows -----
550 5.7.1 < View Failed Recipient >... Message tagged as spam. Contact the postmaster of this site if you believe that your message has been incorrectly tagged as spam. 

To fix the delivery errors permanently, Click Fix Delivery Error