Wednesday 9 November 2011

துபாயில் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
Dubai Bakrid Meet
துபாய்: கடந்த 6ம் தேதி துபாய் ஸ்டார் சர்வதேச பள்ளி அரங்கில் தியாகத் திருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஏ.எஸ். இப்ராகிம் தலைமை தாங்கினார். ஷார்ஜா பிளாக்துளிப் நிறுவ‌ன‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் யஹ்யா முன்னிலை வகித்தார். மேலத்திருப்பூந்துருத்தி துக்காச்சி காஜாமைதீன் துவக்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

முகம்மது பந்தர் ஹாபிஸ் முகம்மது முஸ்தபா இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். மேலத்திருப்பூந்துருத்தி லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து ஸ்கைசீ இய‌க்குந‌ர் செய்ய‌து அப்துல் காதர் காக்கா ( சீனா தானா ),சென்னை தானிஷ் அஹ‌மது பொறியிய‌ல் கல்லூரி செய‌லாள‌ர் காதர்ஷா, ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாளர் திருப்பனந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத் ஆகியோர் கல்வி விழிப்புணர்வு குறித்து பேசினார்கள்.

அதை தொடர்ந்து நடுக்கடை ஏ.பி. முகம்மது, தம்பி ராஜா, ஹ‌ஸ‌ன் அலி, இக்பால் ம‌ற்றும் அப்துல் க‌பூர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலத்திருப்பூந்துருத்தி அஹ‌மது நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா நடுக்கடை, முஹ‌ம்மது பந்தர், கண்டியூர், திருப்பூந்துருத்தி ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைந்து நடத்தினார்கள். துபாயில் மார்க்கக் கல்வியுடன் கூடிய ஒரு பொதுக்கல்வி நிறுவனம் விரைவில் அமையப்போகிறது என்ற அறிவிப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.