Monday 25 January 2016

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப்பெற‬ வேண்டும்! ‪‎மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்‬.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.. வெளியிடும் அறிக்கை:

MH Jawahirullah
தலைவர்,...

மத்திய அரசு, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.621லிருந்து ரூ.671.50ஆக 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மத்திய பா.. அரசு. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 37 டாலர் அளவுக்குப் குறைந்துள்ளபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க முன்வராமல், மேலும் மேலும் விலையை உயர்த்திக் கொண்டே போவதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆலோசனைப் படி மானியங்கள் குறைப்பு, பொது விநியோகக் குறைப்பு என அதிரடியாக இரட்டைத் தாக்குதல் களை ஏழை, எளிய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது.
மேலும், சமையல் எரிவாயு போன்று மண்ணெண்ணெய் மானியத்தையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் பொதுப்பங்கீட்டுக் கடைகளில் மண்ணெண்ணெய் பெற்றுவந்த அனைவரும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அடித்தட்டு ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தையும், சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
தலைவர், ...

 

பேய்க்கரும்பு கலாம் நினைவிடம் அருகே ரேசன்கடை கட்ட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. 10 லட்சம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வகையில் தங்கச்சிமடத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவிடம் அருகே உள்ள பேய்க்கரும்பு கிராம மக்கள் ‘தங்கள் கிராமத்தில் வாடகை கட்டடத்தில் ரேசன்கடை இயங்கி வருகிறது. கடையை காலி செய்யும் நிலை தற்போது ஏற்பாட்டுள்ளது. அவ்வாறு கடையை காலி செய்யும் போது கிராமத்தை தாண்டி தூரமான இடத்தில்  கடை அமைய வாய்ப்புள்ளது. இதனால் கிராம மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே எங்கள் கிராமத்திலேயே சொந்தமாக கட்டடம் கட்டி  தர வேண்டும்’ என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை  பரிசீலித்த எம்.எல்.ஏ இந்த பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்ற இப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்திரவிட்டார்.
இராமநாதபுரம் நகர் 20வது வார்டு பாம்பூரணி பகுதி மக்களும் இதே போல் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இப்பகுதியில் ரேசன்கடை கட்ட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.00  லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்ற இப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உத்திரவிட்டார்.
பாம்பன் ஊராட்சி தெற்குவாடி கிராம மீனவ மக்கள் இதே போல் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இப்பகுதியில் ரேசன்கடை கட்ட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10.00  லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்ற இப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உத்திரவிட்டுள்ளார்.