Saturday 29 January 2022

காந்தியை கொல்ல RSS சொன்ன காரனம்

நபிகள்நாயகம் ﷺஅவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கற்றுத் தந்த துஆ:

அஸ்ஸலாமு அலைக்கும்


நம் நெஞ்சம் நிறைந்த நபிகள்நாயகம் ﷺஅவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கற்றுத் தந்த துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَوْفِيقَ أَهْلِ الْهُدَى ، وَأَعْمَالَ أَهْلِ الْيَقِينِ ، وَمُنَاصَحَةَ أَهْلِ التَّوْبَةِ ، وَعَزْمَ أَهْلِ الصَّبْرِ ، وَجِدَّ أَهْلِ الْحِسْبَةِ ، وَطَلَبَ أَهْلِ الرَّغْبَةِ ، وَتَعَبُّدَ أَهْلِ الْوَرَعِ ، وعِرْفَانَ أَهْلِ الْعِلْمِ حَتَّى أَخَافَكَ ، اللَّهُمَّ أَسْأَلُكَ مَخَافَةً تَحْجِزُنِي عَنْ مَعَاصِيكَ ، حَتَّى أَعْمَلَ بِطَاعَتِكَ عَمَلًا أَسْتَحِقُّ بِهِ رِضَاكَ ، وَحَتَّى أُنَاصِحَكَ فِي التَّوْبَةِ خَوْفًا مِنْكَ ، وَحَتَّى أُخْلِصَ لَكَ النَّصِيحَةَ حُبًّا لَكَ ، وَحَتَّى أَتَوَكَّلَ عَلَيْكَ فِي الْأُمُورِ حُسْنَ ظَنٍّ بِكَ

அல்லாஹ்வே!நிச்சயமாக நான் நல்வழி பெற்றோரின் தவ்பீக்-நல்லுதவியை

,ஈமான் உறுதியுடையோரின் நல்லமல்களை,

தவ்பா செய்தோரின் தூய எண்ணத்தை

பொறுமையாளரின் அசையாத உறுதியை,

அச்சம்கொண்டோரின் முயற்சியை,

ஆசைகொண்டோரின் தேடலை,

பேணி நடப்போரின் வணக்கத்தை,

கல்வியாளரின் ஆத்ம ஞானத்தை,

 உன்னை நான் சந்திக்கும் வரை
பெற்றிருக்க உன்னிடம் கேட்கிறேன்.

எங்கள் அல்லாஹ்வே!
உனக்கு கீழ்படியாமையை   வெறுக்கச்செய்யும் அச்சத்தை உன்னிடம் கேட்கிறேன்.

அந்த அச்சம் உன் திருப்பொருத்தத்தை பெற என்னைத் தகுதி பெறச்செய்யும் நல்லமல்களை நான் செய்யத் தூண்டும் அளவு வேண்டும்.

அந்த அச்சம ,உனக்கு பயந்து தூய்மையான தவ்பா செய்யும் அளவு வேண்டும்

,அந்த அச்சம் உனக்காக வெட்கமடைந்து மனத்தூய்மையை உனக்காகவே ஆக்கும் அளவு வேண்டும்

எல்லா காரியங்களிலும் உன் மீதே நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற
 உன் மீதே நல்லெண்ணம் ஏற்படுத்துகின்ற
 உனக்கு மாறு செய்வதைத்
தடுக்கின்ற  இறை அச்சத்தைக் கேட்கிறேன்,
------(தப்ரானி)
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து  இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." 2:127-128
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" 2:201

Friday 28 January 2022

உயர் பதவிகள் *IAS*, *IPS*

பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-

1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.

நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான்.

 எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள்.

Thursday 27 January 2022

பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால்

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் – அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான். - [குர்ஆன் 6:116–117] 
--
Thanks & Regards

Sunday 23 January 2022

சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ..

சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ...

சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான் "என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ்

உஸ்மான்- ஒரு சுருக்கச் செய்தி; கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 -1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னை சட்டகல்லூரியிலும் பட்டம் பெற்றார்.

1913ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924 ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916-நீதிக்கட்சி தோற்றம்- உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு- 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.1920 முதல்
சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க 1934 வரை சட்டமன்ற உறுப்பினர். 1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாக சபையில் துணைத்தலைவர். 1932 - 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency -Acting. இதன் மூலம் இந்திய மாகாணங்களிலேயே கவர்னர் பதிவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்- அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லிம் என்ற பெருமையும் கூட அந்த வருடம் சென்னை பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியர் ஒருவர் "வேந்தர் " என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்பதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.

1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India.

இக்குழுவின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் சர் சி.பி இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920ல் கான் சாகிப் பட்டம்.
1921ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928ல் இங்லாந்தின் உயரிய "நைட் - Knight "
விருது.
அதே ஆண்டில் "சர்- Sir " பட்டம்.

KCSl - Moat exalted order of Star of lndia Knight Commander Order of
Chivalry- Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

நன்றி தம்பி, Rajamohamed Kanmani

Aditya brila capital COVID scholarship program 31.01.2022


தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் – அட்டை பெறுவது எப்படி

தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் – அட்டை பெறுவது எப்படி?_*


*❗முழு விவரம்*❗


http://www.adminmedia.in/2021/05/blog-post_52.html

Tuesday 11 January 2022

சாதனைப் பெண்மணி ஹசீனா நிசாத்

சாதனைப் பெண்மணி
ஹசீனா நிசாத்

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணாடிப்பரம்பு எனும் சிறிய கிராமத்தில் பிறந்த ஹசீனா தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உச்சம் தொட்ட பெண் தொழில் முனைவோர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
கண்ணூரில் பி.காம் வரை படித்த ஹசீனா திருமணத்திற்கு பின் கணவர் நிஷாத் ஹுசைனுடன் ஷார்ஜா சென்றவர்.

ஷார்ஜாவில் தனியார் நிறுவனத்தில் கணவர் பணியாற்ற வீட்டு வேலைகளை கவனித்து வந்த ஹசீனாவின் சிந்தனையில் உதித்த திட்டம் இன்று அபார வளர்ச்சி கண்டுள்ளது..
கணவரின் ஒத்துழைப்பில் 12 ஊழியர்களுடன் 2008 ல் ஹசீனா ஆரம்பித்த "World Star Technical Contracting Company" இன்று சுமார் ஏழாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பிரமாண்ட பன்னாட்டு நிறுவனமாக மாறியுள்ளது..

ஆரம்பத்தில் ஷார்ஜாவில் ஒரு சிறிய அறையில் நிறுவனத்தை துவங்கிய ஹசீனாவுக்கு, தற்போது அபுதாபி துபாயிலும் கிளை அலுவலகம் உள்ளது. "World Star Holdings" எனும் சார்பு நிறுவனமும் ஹசீனா நிர்வகித்து வருகிறார்.
தனது நிறுவனத்தில் வேலை தேடி யார் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதும், பணியில் ஈடுபாடு மற்றும் அனுபவம் பார்த்து ஆறு மாதத்திற்கு பின் பணி நிரந்தரமாக்கி அவர்களின் உயர்வுக்கு வழிவகை செய்வதும் ஹசீனாவின் சிறப்புக்களில் ஒன்றாகும்.

ஆரம்பத்தில் சிறியளவில் கட்டுமான ஒப்பந்தங்களுடன் துவங்கிய ஹசீனாவின் பயணம் தற்போது அமீரகம் முழுவதும் பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கட்டிட நிர்மாண பணிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாட்டின் கனவு திட்டங்களான ஷெய்க் ஸாயித் மசூதி, துபாய் மால், அபுதாபி மால்,எதிஹாத் ரயில், யாஸ் ஐலண்ட் மற்றும் துபாய் எக்ஸ்போ கட்டுமான பணிகளில் இவரது நிறுவனங்களின் பங்களிப்பு கலந்துள்ளது.

ஆரம்பத்தில் 12 ஊழியர்களுடன் துவங்கிய ஹசீனாவின் நிறுவனங்களில் தற்போது 400 அலுவலக பணியாளர்களும், 5000 நிரந்தர பணியாளர்களும்,2000 க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி
ஹசீனாவின் வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருக்கின்றனர்.
தனது நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் அனைத்தும் தனது நேரடி கண்காணிப்பில் திருப்தியுடன் அளித்து வரும் ஹசீனா கடந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் கூட சரிவர ஊதியங்கள் வழங்கியதோடு ஆட்குறைப்பு செய்யாமல் அனைவரையும் அரவணைத்த தயாள குணத்துக்கு சொந்தக்காரர்..

கணவர் மற்றும் நான்கு குழந்தைகளின் தாயான ஹசீனா இவ்வளவு நெருக்கடியான பணிச்சூழலிலும் தனது பிள்ளைகளின் படிப்பு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய பிரத்யேக ஊழியர்கள் நியமிக்காமல் தானே நேரம் ஒதுக்கி பார்த்துக் கொள்வதாக பெருமிதம் கொள்பவர்..

2019 ம் ஆண்டு அமீரகத்தின் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது பெற்ற ஹசீனாவுக்கு , பத்தாண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி யுஏஇ அரசு கவுரவித்துள்ளது.

தற்போது சவூதி அரேபியாவிலும் சில பணிகளில் கால் பதிந்திருக்கும் தனது நிறுவனம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25000 பேருக்காவது வேலை வாய்ப்பு வழங்குவது எனும் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற்றப் பாதையில் செல்லும் ஹசீனாவின் எண்ணங்கள் இறையருளால் நிறைவேற வாழ்த்துக்கள்..
Colachel Azheem

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மகளிரணி வெளியீடு
#உதயதாரகை காலாண்டிதழ்
ஜனவரி-மார்ச் 2022 இதழில்
வெளியான கட்டுரை