Monday 15 August 2011

கன்ஸ்யூமரை ஏமாற்றும் கண்'கட்டிங்' வித்தை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அதாவது ஒரு பிரச்சனை என்றால் இரு நிலையிலும் சிந்திக்க வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று முழக்கிமிட்டால் போதாது, அதில் உள்ள பிரச்சனைகளையும் ஆழமாக சிந்திக்கவேண்டும், மக்கள் நலன் என்று சொல்லிக்கொண்டு எதையாவது கூப்பாடுபோடக்கூடாது.
மூலப்பொருட்களின் விலையேற்றம் என்றால் அது எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். அது வணிகத்தில்தான் முதன்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாருக்கும் சொல்லித்தரவேண்டியதில்லை. ஆகையால் மூலப்பொருட்களின் விலையேற்றம் நடக்கும்போது வணிகத்தில் மாற்றம் செய்யப்படும் நிர்ப்பந்தம் நிலவும். அப்போது அதை ஈடு செய்வதற்காக சில மாற்றங்களை எடுக்க வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். அதன் பொருட்டே விலையேற்றம், அளவில் குறைப்பு போன்ற செயல்பாடுகள். விலையேற்றத்தினாலோ அல்லது அளவு குறைப்பினாலோ ஆரோக்கியத்துக்கு ஆபத்து இல்லை, ஆனால் கலப்படம் என வரும்போதுதான் நிலவரம் கலவரமாகிவிடுகிறது.
இவர்கள் கலப்படம் செய்யவில்லை எனவே உயிர் பிழைத்தோம், விலையேற்றவில்லை எனவே இன்றும் இன்றும் அப்பொருட்களை வாங்குவதில் சிக்கல் இல்லை. ஒரே பிரச்சனை அளவு சற்றுக்குறைவு. அதனால் தனிமனித வாழ்வில் ஒன்னும் குடி முழுகிவிடப்போவதில்லை. கலப்படம், நியாயமற்ற விலையேற்றம், நியாயமற்ற அளவு குறைப்பு என்றால் உதைக்கவேண்டியதுதான்
பெரும்பாலும் சென்னை சிட்டியில்பல பழக்கடையில் நம்மவர்கள் 1/2 (ஒன் பை டூ ) ஜூஸ் போட சொல்வதை நாம் கவனித்திருக்ககூடும். அதாவது ஒரு ஜூஸ் போட்டு அப்படியே ரெண்டு க்ளாஸ்ல ஊத்து கொடுத்திருங்கனு கோரிக்கை வைப்பார்கள். இங்கே அளவு குறைப்பு வேண்டப்படுகிறது. 4 புரோட்டா ஒரு சிக்கன் மசாலா என்று ஒரு ஆர்டர் வந்தால், ஆளுக்கு ரெண்டு புரோட்டா, சிக்கன் மசாலா ஆளுக்குப்பாதி அங்கிட்டு போயி பங்கு வச்சுக்குவோம் என்று அர்த்தம். இங்கேயும் அளவு குறைப்பு ஒரு தீர்வாக கருதப்படுகிறது.
அப்ப்றம் எதாவது குடிமகனைப்பிடித்து அவன் நிதானத்துல இருக்கும்போது கேட்டுபாருங்க, நேத்து எவ்வளவு போட்டேனு, ரெண்டு கட்டிங் அல்லது மூனு போட்டேனு சில்லரைத்தனமாத்தான் சொல்வான். காரணம் ஃபுல் வாங்க அமௌண்ட் நஹி பாபா. அதுனாலதான் ஒரு அட்ஜெஸ்ட்மெண்டுல ஓடிகிட்டு இருக்கார் அந்த குடியார் சமுதாய மக்கள்.
விலையேற்றினால் தற்போது வாங்கிக்கொண்டிருப்பவர்கள் அணைவரும் வாங்க இயலயாது, அது நுகர்வோருக்கும் பிரச்சனை, வியாபாரிக்கும் பிரச்சனை. அளவு குறைத்தால் ரெண்டுபேருக்கும் பெருசா பிரச்சனை இல்லை.  கலப்படம் செய்தால் ஆஸ்பத்திரிக்குதான் போகனும். அதுனாலதான் அளவில் லேசா கிள்ளிப்பாத்திருக்காங்க.
ஒன்னாருவா கொடுத்து தேயிலை பாக்கெட் வாங்குற நீ இவ்வளவு புலம்புனா கோடி கணக்குல முதல் போட்டு வியாவாரம் பன்றவன் எவ்வளவு அழுவான்? அவனுடைய அழுகையும் பாக்கனுமா இல்லையா?இதே நீ முதல் போட்டு யாவாரம் பன்னுனா இப்படி பேசுவியா? ம்? சொல்லும் ஓய்!
சும்ம களம் இறங்கினோம், கன்மாய் வெட்டுனோம்னு பிலடப் கொடுக்ககூடாது.
250
கிராம்ல 5 கிராம் குறைஞ்சா என்ன பிரளயம் நடந்துவிடப்போகிறதுன்றேன்? மக்கள் நலனை சிந்திக்க வேண்டியதுதான், வேண்டாம்னு சொல்லல. ஆனா சிந்திச்சு சிந்திக்கனும் :-). பணம் கொடுத்து வாங்கிறோங்கிறதுக்காக என்னவேனும்னாலும் பேசாலாம்னு இல்லை.
குறிப்பு:  நான் வியாபாரி இல்லை, நானும் ஒரு நுகர்வோ
அப்பறம் எதோ கமிஷன் வாங்கிட்டு கத்துறேனு என் மேல கத்திய வச்சிராதீங்கய்யா! அயம் பாவம்.

-
பஹ்ருதீன்



மீபகாலமாக நுகர்பொருள் துறையில் நடக்கும் தில்லாலங்கடி வேலையன்றை நண்பரொருவர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது கொஞ்சம் புதுமையாகத்தான் இருந்தது. கடைக்குப் போனவர் வழக்கமாக வாங்கும் டூத் பேஸ்ட்டை வாங்கி வந்திருக்கிறார். அதில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவர், என்னவென்று பார்த்திருக்கிறார். ஆனால் பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இருந்தும் விடாமல் துருவித் துருவி பார்த்திருக்கிறார். கடைசியில்தான் தெரிந்திருக்கிறது வழக்கமாக 50 கிராம் இருக்கும் அந்த பேஸ்ட் இப்போது 40 கிராம்தான் இருந்திருக்கிறது. இதனையடுத்து வழக்கமாக வாங்கும் எல்லா பொருட்களையும் நோட்டம்விட ஆரம்பித்திருக்கிறார். அதிலும் அவருக்கு கிடைத்தது அதிர்ச்சிதான். கிட்டத்தட்ட பெரும்பாலான பொருட்களின் விலையில் இந்த கண்கட்டு வித்தை நடந்திருக்கிறது!
இதையடுத்து நாமும் களமிறங்கி விசாரித்தபோது சோப்பு, பேஸ்ட், டீ தூள், முதற்கொண்டு மசாலா பொருட்கள் வரை அனைத் திலும் இந்த எடை 'கட்டிங்வேலை ஓசையில்லாமல் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்றில்லாமல் எல்லா நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கையாண்டிருக் கின்றன. விலையை ஏற்றினால் விற்பனை குறைந்துவிடும் என்பதால், அளவு அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் தங்களின் பிஸினஸை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால், எந்த நிறுவனமும் நேர்மையாக நுகர்வோரிடத்தில் இதைச் சொல்லவில்லை.  
''எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கையாளர்களை ஏமாற்று கிற மாதிரி ஆகிவிடாதா?'' என ஒரு முன்னணி பிராண்டின் விற்பனை உயரதிகாரியிடம் கேட்டோம்.
''எடை குறைப்பு செய்ததன் மூலம் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்றுவதாக எப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருள் எவ்வளவு எடை கொண்டது, விலை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெளிவாக அச்சடித்துதானே தருகிறோம்? வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தானே வாங்கு கிறார்கள்? அவர்களுக்கு அந்த பொருள் தேவை. விலையும் அவர்களுக்கு சகாயமாக இருக்க வேண்டும். ஆனால், எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்றுதான் அவர்கள் வாங்குகிறார்கள். எனவே, ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை'' என்றார்.
சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்ததோடு விலையையும் உயர்த்தி இருக்கிறார்கள். உதாரணமாக, மேனியை மிருதுவாக வைத்திருக்க உதவும் ஒரு சோப் முன்பு 100 கிராம் அளவில் கிடைத்தது. இன்று வெறும் 90 கிராம்தான் உள்ளது. ஆனால், விலை முன்பிருந்ததைவிட அதிகம். இதேபோல பாதுகாப்பு வளையத்தைத் தரும் ஒரு பற்பசை முன்பு 50 கிராம் 10 ரூபாய். ஆனால், இன்றைக்கு அதே 10 ரூபாய்க்கு வெறும் 40 கிராம் மட்டுமே தருகிறார்கள். நூடுல்ஸுக்கு பெயர் போன அந்த பிராண்ட் முன்பு 100 கிராமுக்கு கொடுத்த விலையில், இப்போது 87 கிராம் மட்டுமே உள்ளது. 250 கிராம் என நினைத்து வாங்கும் மலரின் பெயர் கொண்ட டீ பாக்கெட் இப்போது 245 கிராம்தான் இருக்கிறது.  
''வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குகிறார்கள். தவிர சோப்பு, ஷாம்பு போன்றவற்றில் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு பழகிவிடுவதால் இந்த பொருட்கள் விலையேறினாலும் வாங்கத்தான் செய்கிறார்கள். கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், இந்த மாதிரியான எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.'' என்கிறார் தஞ்சை இ.பி. காலனி ஸ்ரீஹரி மளிகை செல்வகுமார்.
மூலப் பொருட்களின் விலை ஏறியதால், தாங்கள் தயார் செய்யும் பொருட் களின் விலையை உயர்த்தி யாக வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு இருக்கிறது தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால், ஐந்து கிராம் ஆஃபர் கொடுத்தாலே டமாரம் அடிக்கும் இந்த நிறுவனங்கள், இதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே!

Wednesday 10 August 2011

தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டிற்குள் ஆடு மாடுகளை, மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக நுழைந்த வந்தேறிகளின் கூட்டம் மண்ணின் மைந்தர்களாகிய ஆதி திராவிடர்களுடைய அறியாமையை பயன் படுத்தி அவர்களிடத்தில் சிலை வணக்கத்தை புகுத்தி முச்சந்திக்கு முச்சந்தி கோயிலைக் கட்டி வைத்துக்கொண்டு நாங்கள் தேவனின் தலையில் பிறந்ததால் நாங்களே வேதத்தை ஓதுவதற்கும், கோயிலில் பூஜை புணஷ்காரம் செய்வதற்கும் தகுதியானவர்கள் என்றுக்கூறி ஒட்டு மொத்த கோயில் நிர்வாகத்தையும்  தங்களுக்கே நிரந்தரமாக்கிக் கொண்டனர்.

இன்று இந்திய அரசியலில் கால் பதித்து அரசு அதிகாரத்தை கைப்பற்றி கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் முழுவதையும் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு முன்பு வரை ஒட்டு மொத்த ஆரியர்களின் வயிற்றுப்பிழைப்பு கோயிலுக்கு வழங்கும் பிரசாதமும், உண்டியலில் இடும் காணிக்கையைத் தவிர வேறில்லை அதனால் இவர்களின் பிழைப்பில் அவர்கள் குறுக்கிட்டு விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தேவனின் காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பதால்  கோயில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் நகருக்குள்ளும் குடி இருக்கக் கூடாது என்றுக்கூறி அவர்களின் குடியிருப்பை  ஊர் கோடியில் ஒதுக்கி வைத்து அதற்கு சேரிகள் என்று பெயர் சூட்டி தங்களுடைய குடியிருப்பை கோயிலைச் சுற்றியும், நகருக்கு மத்தியிலும் அமைத்துக் கொண்டு அதற்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டி வாழ்க்கையைத் தொடங்கினர்.

சிறகொடிந்தப் பறவைகளாய் 

அந்த அப்பாவிகள் வந்தேறி ஆரியர்களால் அடிமைப் படுத்தப் படுவதற்கு முன் இயற்கை எழில் கொஞ்சும் இந்திய மண்ணில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர் இவர்களது வருகைக்குப்பின் சூத்திர முத்திரை குததப்பட்டப் பின் அவர்களது குடியிருப்புக்களாகிய சேரிகளை தவிர்த்து பொது இடங்களில் நடக்கக் கூட முடியாத அவலநிலையை அடைந்து கொண்டதுடன் ஆரியர்கள் அல்லாது வேறு சமுதாயத்து மக்களுடனும் கூட கலந்திட முடியாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் பறிக்கப்பட்டு சிறகொடிந்தப் பறவைகளாயினர்.

ஒடுக்கப்பட்ட இந்த மக்களுடைய அவல நிலையை மாற்றி அவர்களது துயர் துடைக்க எத்தனையோ இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு குரல் கொடுத்தன அவைகளாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அவைகளும் ஒரு காலகட்டத்தில் அரசியல் அமைப்புகளாக பரினாமம் பெற்று யாரை எதிர்த்து யாருக்காக ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் அமைப்பு துவக்கப்பட்டதோ எஅவைகளும் திர்க்க வேண்டியவர்களிடமே சட்டமன்ற, பாராளுமன்ற சீட்டுகளுக்காக சரணடைந்து கொண்டன.

மனுதர்மத்தை உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டியது மாமறைக் குர்ஆன்  

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன்  49:13. என்றுக் கூறி மனிதன் கடவுளுடைய தலையிலும் பிறக்கவில்லை, காலிலும் பிறக்கவில்லை ஒரே ஒரு மனிதனே முதலில் படைக்கப்பட்டு அவரிலிருந்து அவருக்கு பெண் துணை படைக்கப்பட்டு உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே அச்சிலிருந்தே ( அந்த இருவரிலிருந்தே ) படைக்கப் படுகின்றனர் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தேறி ஆரியர்களுடைய செட்டப் நாடகத்தை ( மனுதர்மத்தை ) உடைத்தெறிந்து மனித தர்மத்தை (சமத்துவத்தை) முழங்கியது மாமறைக்குர்ஆன். 

மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனம் சமத்துவத்தைக் கூறினாலும் சகோதரத்துவத்தைக் கூறவில்லை என்று சொல்லி அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற விட மாட்டார்கள் என்பதால் அவர்களின் உள்ளங்களையும் சூழ்ச்சிகளையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10. என்றுக் கூறி சகோதரத்துவத்திற்கு அழுத்தமான அஸ்த்திவாரத்தை இட்டு தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து வீழ்த்தியது சத்திய வேதம் திருமறைக்குர்ஆன்.
மனிதர்கள் தீட்டும் மலைப் போன்ற சூழ்ச்சி அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு முன் தூள் தூளாக சிதறிப் பறந்து விடும் என்பதற்கு ஆரியர்கள் தீட்டிய தீண்டாமை சூழ்ச்சி அல்லாஹ்வின் சகோதரத்துவ திட்டத்தின் கீழ் சிதறி தவிடுப் பொடியாகியது மிகப் பெரிய உதாரணமாகும்.   

சகோதரர்களுக்கு மத்தியில் ஆண்டான் அடிமை எனும் சிந்தனை வருமா ?

சகோதரர்களுக்கு மத்தியில் தலையில் பிறந்தோன், காலில் பிறந்தோன் எனும் ஏற்றத் தாழ்வு சிந்தனை வருமா ?

சகோதரர்களுக்கு மத்தியில் கருப்பன் சிவப்பன் என்ற நிறவெறி சிந்தனை ஏற்படுமா ?

ஏற்படாது !

அதனால் ஆரியர்களால் சூத்திரர்கள் எனும் அடிமை விலங்கிடப்பட்டிருந்த அப்பாவி ஆதி திராவிடர்கள் அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கு சகோதரத்துவம் கூறிய இஸ்லாத்தை நோக்கி ஓடி வந்தனர்.

அவ்வாறு  அடிமை விலங்கை உடைத்தெறிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வந்து சமத்துவ அந்தஸ்தை அடைந்து கொண்டவர்களே நம்முடைய முன்னோர்கள் ஆவர் அவர்களுடைய வாரிசுகளே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும், படித்துக் கொண்டிருக்கின்ற உங்களிலும் அதிகமானோர் ஆவோம். 

இன்று சமுதாயத்தில் சமத்துவத்துடனும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருகிறோம் என்றால் திருக்குர்ஆன் முழங்கிய விடுதலை முரசு என்பதை மறந்திடக் கூடாது. அதனால் திருக்குர்ஆனை உலகில் வாழக்கூடிய மற்ற எல்லா மக்களை விடவும்  நாம் சங்கை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

மனு தர்மத்தை உடைத்து மனித தர்மத்தை நிலை நாட்டிய  மா மறையை மறந்தவர்களை நோக்கி 
குர்ஆனை மறந்தவர்களை நோக்கி குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிரிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 3:103

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நாடி இஸ்லாத்தை நோக்கி வந்தவர்களின் வாரிசுகளாகிய நாம் சமத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த திருமறைக்குர்ஆனை அழகுற ஓதி அது ஏவுகின்ற ஏவல்களை நமது வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகி நடப்பதுடன் அது விலக்கும் விலக்கல்களிலிருந்து இயன்ற வரை விலகிக் கொண்டு வாழ்வதே தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருக்குர்ஆனை சங்கை படுத்தியதாக அவ்லாஹ்விடம் கருதப்படும்.

எத்தி வைத்தால்
திருக்குர்ஆன் கூறும் சமத்துவமும், சகோதரத்தவமும் இன்றும் இந்தியாவின் அடிமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு எட்டாமல் இருந்து வருகிறது எட்ட விடாமல் அடிமை விலங்கு பூட்டிய ஆதிக்க வர்க்கம் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது செவிப் புலன்களை '' இன்னமா அல் மூஃமினூன இஹ்வா  '' இறைநம்பிக்கையாளர்கள் சகோதரர்களே ! எனும் திருமறை வசனம் அவர்களது செவிப்பறையை தட்டினால் அடுத்த கனமே அவர்கள் தங்களது அடிமை விலங்குகளை உடைத்தெறிவதற்கு இஸ்லாத்தை நோக்கி விரைந்தோட தயங்க மாட்டார்கள்.  

அல்லாஹ்வின் நோன்பாளிகளே ! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதி வருவதுடன் அது கூறும் ஏவல் - விலக்கல்களை நடைமுறைப் படுத்துவதுடன் அவரவர் சகதிக்குட்பட்ட அளவு சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் கூறும் சத்திய இஸ்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய உடலாலும், பொருளாலும் உதவ முன் வர வேண்டும்.

எழுதியபடி எம்மையும்
, வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
 கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்
நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.
நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.
இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில் பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் பாபரிநாமாஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;    பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்லமறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 

Regards,
Mohamed Shaheed

கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்


கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TESTஎனப்படும் மென்பொருள் . 

இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் . அதாவது கூட்டல் ,கழித்தல் ,பெருக்குதல் , வகுத்தல் மற்றும் தசமங்கள் ,பின்ன பிரச்சனைகள் ,பணப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பல மட்டங்களில் கற்றுகொள்ள வசதியளிக்கிறது இந்த மென்பொருள் . 
 
கணித பயிற்சிகளை செய்யும் போது நேர கணிப்பினை இந்த மென்பொருள் வழங்குவதால்  மிக வேகமாக கணித பயிற்ச்சிகளை செய்யும் ஆற்றலை வளர்க முடியும் . 

வீட்டிலேயே கணித பாடத்தினை கற்றுகொள்ள கண்டிப்பில்லாத கனிவான கணித ஆசான் . 
தரவிறக்க முகவரி .  இங்கே



மாணவர்களுக்கான கல்வி கடன் பற்றிய ஒரு நேர்முகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மாணவர்களுக்கான கல்வி கடன் பற்றிய ஒரு நேர்முகம்

கட்ந்த ஜூலை (2011) 22ம் தேதி, சென்னை அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப். எம் 101.4 அலைவரிசையில்ம் கல்வி கடன் பற்றிய ஒரு நேரடி ஒலிபரப்பிற்கு அழைத்து இருந்தார்கள். 
எஃப். எம். ஸ்டூடியோவில் இடமிருந்து வலம்:
ஆர். ஜே மகி, பிரைம்பாயிண்ட் சீனிவாசன்
நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராமசாமி சுதர்சன்
இந்தியா விஷன் அமைப்பின் வழியாக நாங்கள் ‘'Education Loan Task Force' என்கிற அமைப்பு வழியாக பல மாணவர்களூக்கு கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம்.  அதிக மார்க் வங்கிய ஏழை மாணவர்களை வங்கிகள் அலட்சியப்ப்டுத்தும்போது, நாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வரை எடுத்துச் சென்று தகுந்த நீதி கீடைக்க பாடுபட்டுள்ளோம்.
கல்வி கடன் பற்றிய அனைத்து விவரங்களும் www.eltf.co.cc என்கிற இணைய தளத்தில் கொடுத்துள்ளோம்.  இந்த பதிவை படிக்கும் வாசகர்கள், இந்தியாவின் எந்த பகுதியிலும், அதிக மார்க் வாங்கிய ஏழை மாணவர்கள் வங்கிகளால், பாதிக்கப்பட்டால், எங்களுக்கு action2020eltf@gmail.com  என்கிற இமெயிலுக்கு அந்த மாணவர்களைவிட்டு முழு விவரங்களையும் எழுத சொல்லுங்கள்.  கூடிய் வரையில், 24 மணி நேரத்தில், தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குகிறோம். என்னுடைய நேரடி ஒலிபரப்பை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், ‘பிளேபட்டனை அழுத்தி கேட்கவும்.  (24 நிமிடங்கள்).  இந்த ஒலிபரப்பில், கல்வி கடன் சம்பந்தமாக எழும் பல வினாக்களுக்கு விடையளித்துள்ளேன். இந்த ஒலிபரப்பை எம்.பி.3 ஆக ஆடியோவில் டவுன்லோடு செய்ய வேண்டுமானால்இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கவும்.
இந்த ஒலிபரப்பை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/view/144115188075857546