Thursday 23 February 2023

நாடா - சுடுகாடா ?"

"நாடா - சுடுகாடா ?"

~~~~~~~

  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் 15.2.2023 அன்று அதிகாலை தங்கள் காரில் ராஜஸ்தான் - அரியானா எல்லைக் கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது, அரியானாவை சேர்ந்த பசுப் பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாகக் கருதி அவர்களைத் தடுத்து நிறுத்தி, தாக்கியுள்ளனர்.

 

அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற வாடகைக் கார் ஓட்டுநர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார். பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மொனு, மனீசர் என்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்திச் சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப் பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையிலும் எலும்புக்கூடாக கிடப் பது குறித்தும் காவல் துறையினருக்கு 16.2.2023 அன்று தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த விவகாரம் பெரிதான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்துக் கொன்றதில் தொடர்புடையதாக வாடகைக் கார் ஓட்டுநர்  ரிங்கு சைனியை ராஜஸ் தான் மாநில காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த அனில், சிறீகாந்த், ரிங்கு சைனி, லோகேஷ் சிங்லா, மோனு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபரான மோனுவையும் காவலர்கள் தேடி வருகின்றனராம்.

 

என்றைக்கு பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு 2014 இல் அமைந்ததோ அன்று முதல் இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பிடித்த கேட்டின் கொடிய நெருப்பு அணைந்த பாடில்லை; நாளும் நாளும் கொடுந்தீயாக, எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறிக் கொண்டு இருக்கிறது.

 

மனிதனைவிட மாடுதான் முக்கியம் என்பது காவிகளின் கேடு கெட்ட - கீழ்த்தரப் புத்தியாகும். அதுவும் உண்மைக்கு மாறாக சந்தேகத்தின் பேரில் கொலை!

 

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரை, இந்தியா வின் தலைநகரமான புதுடில்லியில் உயிரோடு வைத்துக் கொளுத்தி, அவர் உயிரைக் குடிக்கத் திட்டமிட்ட கூட்டத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் தானே ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன.

 

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையில் இன்னும் ஆழமாக, தீவிரமாக நாட்டையே உலுக்கும் வண்ணம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எடுத்துச் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாசிசத்தை ஒழிக்க மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். இல்லையெனில் நாடு இருக்காது - சுடுகாடுதான் விஞ்சும்!

 

நன்றி : "விடுதலை" நாளேடு தலையங்கம் 22-02-2023

Friday 17 February 2023

அன்புள்ள மனோஜ்ஜது எம்.பி.,

Dear Manoj jatu MP,

 

I hope this letter finds you in good health and spirits. I am writing to express my appreciation for your recent speech in Parliament, where you spoke up for the rights of Muslims in India. Your words were powerful and much needed in a time when the media is misrepresenting Islam and spreading misinformation about the Muslim community.

 

As a member of Parliament, you have an important responsibility to represent the needs and concerns of all your constituents, regardless of their religion or background. Your commitment to justice and equality is truly inspiring, and I am grateful that you are using your position to speak out against discrimination and injustice.

 

It is heartening to see that there are still leaders like you who are willing to stand up for what is right, even in the face of opposition and criticism. Your speech has certainly silenced the Sangh Parivar and BJP and provided hope to millions of Indian Muslims who feel marginalized and discriminated against.

 

Once again, thank you for your courageous and compassionate words. I hope that you will continue to use your platform to advocate for the rights of all communities and to work towards a more inclusive and just society.

 

Sincerely,

 

A.S.Ibrahim

Indians' welfare forum

 

அன்புள்ள மனோஜ்ஜது எம்.பி.,

 

இந்தக் கடிதம் உங்களை நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் காணும் என்று நம்புகிறேன். இந்தியாவில் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுத்த பாராளுமன்றத்தில் உங்கள் சமீபத்திய உரைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க எழுதுகிறேன். ஊடகங்கள் இஸ்லாத்தை தவறாக சித்தரித்து முஸ்லிம் சமூகம் பற்றி தவறான தகவல்களை பரப்பும் இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகள் சக்திவாய்ந்ததாகவும் மிகவும் அவசியமாகவும் இருந்தது.

 

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, உங்களுடைய அனைத்து அங்கத்தவர்களின் தேவைகள் மற்றும் அக்கறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான பொறுப்பு உங்களுக்கு உள்ளது, அவர்களின் மதம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல். நீதி மற்றும் சமத்துவத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, மேலும் பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக நீங்கள் உங்கள் நிலையைப் பயன்படுத்துவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

 

எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் சரி, நியாயமானதைக் கடைப்பிடிக்கத் தயாராக இருக்கும் உங்களைப் போன்ற தலைவர்கள் இப்போதும் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பேச்சு சங்பரிவாரையும் பிஜேபியையும் நிச்சயமாக மௌனிக்கச் செய்துள்ளது மற்றும் ஒதுக்கப்பட்ட மற்றும் பாகுபாடு காட்டப்பட்டதாக உணரும் மில்லியன் கணக்கான இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

 

மீண்டும் ஒருமுறை, உங்கள் தைரியமான மற்றும் இரக்கமுள்ள வார்த்தைகளுக்கு நன்றி. அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்கும் மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான சமூகத்தை நோக்கி பணியாற்றுவதற்கும் உங்கள் தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

 

உண்மையுள்ள,

 

A.S.Ibrahim

Indians' welfare forum

Saturday 4 February 2023

மது அவன் ‌உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறது.

ஒரு ஆணின் வாழ்க்கையில் "சாராயம்"தான் முக்கியம் என்றால், அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியம் இல்லாத ஆணாக மாறுகிறான்!

1, அன்பான மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக?

2, அழாகன குழந்தைகளின் பாசத்தை உனராத முரடனாக!


3, இச்சமுகத்தில் கௌரவமாக வாழ தகுதியற்ற மனிதனாக!


*மது அவன் ‌உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறது... ஆனால்? தண்டனையை இந்த சமுகம் அவன் மனைவியை பணத்திற்காக வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்...

இவன் பெற்ற பிள்ளைகளை இச்சமூகம் குடிகாரனுக்கு பிறந்தவன்தானே என்றும் ஏசும்...


*நாட்டில் நடக்கும் 99% குற்றத்திற்கு குடி பழக்கம்தான் முக்கிய காரணமாம்,

1)மது போதையில் வாகனம் ஓட்டி உயிர் பலியை ஏற்படுத்துதல்,

2)மது போதையில் கற்பழித்தல்,

3)மது போதையில் திருடுதல்,

4)மது போதையில் கொலை செய்தல்,


*குடி பழக்கம் உங்களுடைய ரகசியங்களை வெளிக்கொண்டு உங்களை அசிங்கப்படுத்திவிடும், அவமானப்படுத்திவிடும்,


*அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் உங்களுடைய வம்சத்தையே அழித்துவிடும்,

உங்களால் உங்கள் மனைவிக்கு உடலாலும். மனதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை,

உங்கனின் சொல்லிற்கு மதிப்பிற்காது.

கூட்டத்தில் உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள்,

உங்கள் பேச்சு எங்கும் எடுபடாது,

உங்களை கண்டு உங்கள் குடும்பத்தினரே அஞ்சிக்கொள்வர்,


குடி தான் வாழ்க்கை என்றால்?


*எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும் ?

எதற்காக மனைவி வேண்டும் ?

எதற்காக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் ?


*காலம் கடந்து வெகு காலம் ஆச்சு தன்னுடைய இன்பம்தான் தனக்கு முக்கியம் என்று வாழும் சுயநல ஆண்களை எல்லாம் போடா பொட்ட கண்ணா என்று உதறியெறி பல பெண்கள் தற்போது துணிந்துவிட்டனர், செய்திகளாக நாம் பல கேட்டதும் உண்டு, நிஜமாக பார்த்ததும் உண்டு,


*தற்போது காலகட்டத்தில் பெண்களின் கண்ணீர் துடைக்க நிறைய ஆண்கள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...


*கணவனிடத்தில் கிடைக்காத இன்பம் வேறொருவனிடம் கிடைக்குமே எனில் நிச்சயம் பெண்கள் தடம் மாறத்தான் செய்வார்கள்,


*ஏன் மதுவிற்கு "குடி" என்ற பெயர் வந்தது? தெரியுமா??

மது மட்டுமே உயிரையும், வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் சேர்த்து குடிப்பதால்... அதாவது மகிழ்ச்சியில் தொடங்கி துன்பத்தில் முடிவதால்...


*இந்த 2022ம் நூற்றாண்டில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு குடிகாரனிடம் வாழ எந்த பெண்ணிற்கும் ஆசையில்லை, விருப்பமும் இல்லை, இருந்தாலும் மானம், கௌரவம், கலாச்சாரம், என்று சொல்லி வளர்த்ததன் காரணமே... சில "தீர்க்கத்தரசிகள்" பிள்ளைகளுக்கு ஒரு அப்பன் வேண்டுமே என்ற கட்டாயத்தில்தான் வாழ்கின்றனர்...


காரணம் இச்சமூகம்...

நமது தாய்/தந்தையினர் வாழ்ந்த வாழ்க்கை முறையே...


அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீற்கும் எதிர் வினை உண்டு...


இறுதியில் நீங்கள் அவர்களிடமே சென்று தஞ்சமடைவீர்கள்...

காலம் கண்டிப்பாக அதை உங்களுக்கு உணர்த்திவிடும்.


#மது #வீட்டிற்கும் #உயிருக்கும் #எதிர்கால #தலைமுறையினருக்கும் #மிகப்பெரிய #தீங்கு.