Wednesday 29 July 2015

கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்- முகப்புப் பக்கத்தில் கருப்பு ரிப்பன் கட்டி அஞ்சலி! Posted by: Vijayalakshmi Published: Wednesday, July 29, 2015, 17:24 
Google pays tribute to Kalam
சென்னை: மறைந்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழும் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமிற்கு உலகின் தலைசிறந்த தேடல் பொறியான கூகுளும் அஞ்சலி செலுத்தி வருகின்றது. மேதகு மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், நேற்று முன் தினம் தனக்கு மிகவும் பிடித்த மாணவர்களுடன், ஐஐஎம் கல்வி நிறுவனம் மேகாலயாவில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். உலகம் முழுவதும் அனைவரது உள்ளங்களிலும் நீங்காமல் நிறைந்து வியாபித்தவராய் திகழும் அப்துல் கலாமிற்கு உலகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அவரது மாண்பு எத்தகையது என்பதற்கு சான்றாக உலகில் அனைவராலும் உபயோகிக்கப்படும் முதன்மையான சர்ச் எஞ்சினான கூகுளும் "கருப்பு ரிப்பன்" மூலமாக தன்னுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றது. கூகுளின் முதன்மை பக்கத்தின் கீழாக அமைந்துள்ள அந்த கருப்பு ரிப்பன் "டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் சுட்டிக் காட்டுகின்றது. மக்கள் மனதிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் நீங்க இடம் பிடித்துள்ள அம்மாமனிதர் கலாம் மகாத்மாவிற்கு அடுத்தபடியான இடத்தை வரலாற்றின் பக்கங்களில் பெற்றுள்ளார் என்றால் மிகையில்லை. அதற்கு இந்த கூகுள் பக்கமே சாட்சி!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/google-pays-tribute-kalam-232166.html

Sunday 26 July 2015

துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 வெள்ளியன்று ரமலான் சிறப்பு சொற்பொழிவு- Makkal urimai

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Thursday 23 July 2015

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள் 107

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
மக்கீ, வசனங்கள்: 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
107:1   اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏ 
107:1(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2   فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏ 
107:2பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3   وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏ 
107:3மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4   فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ 
107:4இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5   الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ 
107:5அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6   الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏ 
107:6அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7   وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ‏ 
107:7மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

 துபாய் : துபாய் ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேசன் அருகில் உள்ள தம்பே மருத்துவமனையில் இலவச பல் மருத்துவ முகாம் ஜுலை 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது

ஜுலை 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஜுலை 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்க இருக்கிறது

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு 04 6030698,  050 2984424, 056 9583264, 055 7368941 ஆகிய எண்களை தொடர்பு  கொண்டு விபரம் பெறலாம்

  
Free Dental Camp on 23rd and 24th July (Thursday and Friday) @ Thumbay Hospital, Al Qusais, Dubai. Please find below details of the camp. 



For any assistance on transportation or any details  please feel free to call 046030698,  0502984424, 0569583264, 0557368941


Wednesday 22 July 2015

திருமண பதிவு கட்டாயமல்ல; உயர்நீதிமன்ற தீர்ப்பு - தமுமுக வரவேற்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

22/07/15 8:04:57 pm: 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை

 திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமில்லை என்றும் திருமணத்தை  பதிவு செய்யவில்லை என்பதை காரணம் காட்டி ஒருவருடைய  உரிமையை  பறிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி எஸ். வைத்திய நாதன் வழங்கியுள்ள தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது. இந்த தீர்ப்பு ஆறுதலையும் தெளிவையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது.
  
 முஸ்லிம் திருமணங்கள் ஜமாத்துக்களில் பதிவு செய்யப்பட்டு  வருவது  நூற்றாண்டுகளாமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். இந்த  யதார்த்த  நிலைக்கு  மாறாக கடந்த சில ஆண்டுகளாக திருமணபதிவு செய்யவேண்டும்  என கட்டாயப்படுத்தலால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுவந்தது இந்த  சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தமுமுக சார்பாகவும் திருமண பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி வைத்திய  நாதனின் இந்த தீர்ப்பு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதுகிறோம். திருமணப் பதிவு கட்டாயம் இல்லை என்ற தீர்ப்பால் கையூட்டு, கால தாமதம், தேவையற்ற அலைச்சல் போன்றவற்றால் ஏற்படும் மனஉளைச்சல் உள்ளிட்ட அவலம் அகன்றிட வழி பிறந்துள்ளது. அந்த வகையில் இந்த தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது.

 அன்புடன்


(ஜே.எஸ்.ரிபாயீ)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 


பெண்னுரிமை பேணிய இஸ்லாம் – ஹோர் அல் அன்ஸ் கிளை பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக கடந்த 06-06-2015 அன்று பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் ”பெண்னுரிமை பேணிய இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அலஹம்துலில்லாஹ்!……………

புறம்.. குறும்படம் தயாரிப்பு சம்பந்தமாக 26.07.2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர் .எஸ்.இபுராஹிம் - பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் அவர்களுக்கு,

பொருள் : புறம்.. குறும்படம் தயாரிப்பு சம்பந்தமாக

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக..

ஷா ஸ்டுடியோஸ் மேற்பார்வையில் உருவாகவுள்ள புறம்.. என்ற இஸ்லாமிய குறும்படத்தை தாங்கள் பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் சார்பாக தயாரிக்க முன்வந்தமைக்காக எங்களுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். இக்குறும்படத்தின் தொடக்கவிழாவை 26.07.2015, ஞாயிறு அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடத்தவிருப்பதால் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தினரோ கலந்துக்கொண்டு அந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் படத்திற்கான திரைக்கதையை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  
அன்புடன்,

காஜா மைதீன் அஹ்சனி
இயக்குநர்

எனவே நமது சகோதரர்கள் இதையே அழைப்பிதலாக வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு  ரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் சார்பாக கேட்டு கொள்கிறோம்.  



"Please don't print this e-mail unless you r

Tuesday 21 July 2015

அல்ஹம்துலில்லாஹ்! குகன் மனம் மாறினார்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்! குகன் மனம் மாறினார்!!
====================================================
கடந்த 17-07-2015 சனியன்று சார்ஷா சஜா கேம்பிற்கு மார்க்க நிகழ்ச்சிக்காக  சகோதரர் கபீர் அவர்கள் சென்றார்கள் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட சகோதரர் ஒருவர் தன் நண்பர்  தங்கி இருக்கும் அறையில் மாற்றுமத நண்பர் ஒருவர் உள்ளார் அவரிடத்தில் இஸ்லாமிய அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூற அதன் அடிப்படையில் 18-07-2015 ஞாயிறு அன்று தலைவர் A.S.இப்ராஹீம், கபீர் மற்றும் இம்ரான் ஆகியோர் திருவாரூர் குகன்  என்ற சகோதரரை சந்தித்தோம். 

தனது குடும்பத்தார்களை பற்றி சிறிதுநேரம் எங்களிடம் உரையாடினார் தனது குடும்பம் கள்ளர்  சாதியை சேர்ந்தவர்கள் என பேசத் தொடங்கினார், நாங்களும் எங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறி பேசத்தொடங்கினோம் சரியாக மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த எங்களின் உரையாடல் இறைவன் என்பவன் யார்? என்பதில் இருந்து தொடங்கி இறுதியில் மறுமை வாழ்க்கை வரை சென்று சரியாக 7.00 மணிவரை நீடித்தது, ,
குகண் அவர்களும் தான் நண்பர்களிடம் இஸ்லாம் பற்றி கேட்டு வருவதாகவும் கூறினார்,இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே தான் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்க விரும்புவதாக கருத்தை கூற, உடனே நாங்கள் மூவரும் நல்ல காரியத்தை செய்ய காலம் கடத்தாதீர், மனிதன் மரணிக்க கூடியவன் மரணம் நமக்கு வரும் முன் நாம் நல்ல காரியத்தை செய்யவேண்டும் இப்போதே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே என்றுக் கூற அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் உடனடியாக ஒளுச் செய்து சத்திய ஏகத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு மனம் மாறினார் சகோதரர் குகன் அப்துல்லாஹ் வாக 
மனம் மாறிய சகோதரர் அப்துல்லாஹ் அடுத்தக் கட்டமாக தனது பெற்றோர்ளையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பக்கம் அழைப்புக் கொடுக்க தயாராகிவிட்டார் அவரின் நோக்கம் நிறைவேற சகோதரர்கள் அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம், எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்

A.S.இபுராஹிம் - துபாய் 

2015 ஈத் பெருநாள் சந்திப்பு ஜனாப் ஆரிப் ரஹ்மான் உடன் A.S.இபுராஹிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

2015 ஈத் பெருநாள் சந்திப்பு ஜனாப் ஆரிப் ரஹ்மான் உடன் A.S.இபுராஹிம்


Honorable V.C son respected AARIF REHMAN sir ......2015 EID wishes

2015 திருமறை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு இலவசமாக கொடுக்கபட்டது


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

அதில் இந்த வருடம் 2015 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருமறை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு முஸ்லிம்களுக்கும் மாற்று மத சகோதர்களுக்கு இலவசமாக கொடுக்கபட்டது .













9 வருட பயணத்திற்குப் பின்னர் புளூட்டோவை நெருங்கும் நியூ ஹாரிஸான்ஸ்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாஷிங்டன்: மனித குல வரலாற்றில் முதல் முறையாக, மனிதனால் நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விண்பகுதிக்கு அனுப்பப்பட்டு, நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வரும் பெருமை படைத்த அமெரிக்காவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது, நாளை புளூட்டோ கிரகத்தைக் கடந்து செல்லவுள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டு காலமாக புளூட்டோவை நோக்கி பயணித்து வந்தது நியூ ஹாரிஸான்ஸ். சமீபத்தில் அது கிரகத்தை நெருங்கியது. இதன் மூலம் பல வியத்தகு புகைப்படங்கள் நமக்குக் கிடைத்தன. இந்த நிலையில் தனது ஆய்வின் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது நாளை புளூட்டோ கிரகத்தை 10,000 கி.மீ அளவுக்கு நெருங்கிச் செல்ல உள்ளது. இது மனித இனத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Monday 20 July 2015

பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.



மேலும் பரமக்குடி  நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 10 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கதுரமலான் 27 அன்று 15-07-2015 பித்ரா  200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  விநியோகிக்கபட்டது 

























Monday 13 July 2015

துபாய் தமுமுக தலைவர் AS இப்ராகிம் அவர்கள் அஸ்கான் D பிளாக்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

  1. துபை தமுமுகவின் தேரா ... - YouTube

    www.youtube.com/watch?v=FTIDjMM6AVw
    Apr 19, 2015 - Uploaded by Jainul Abdeen
    துபாய் தமுமுக தலைவர் AS இப்ராகிம் அவர்கள் அஸ்கான் D பிளாக்கில்  ...

ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நாள் : Nov 8 2011 8:14PM

பிஸ்மில்லாஹ் ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

துபை நவம்பர் - 06 - 2011 மாலை 7.00 மணி அளவிள்

ஸ்டார் இன்டெர் நேஷனல் ஸ்கூல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா நடுக்கடை, முகம்மது பந்தர், கண்டியூர், திருப்பந்துருத்தி ஜமாத்தார்கள் ஒருங்கினைந்து நடத்தினார்கள். முஸ்லிம் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த E.T.A. MELCO நிறுவனத்தில் பணிபுரியும் A.S. இப்ராகிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஷார்ஜா பிளாக் துளிப் கம்பெனி உரிமையாளர் யஹ்யா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலத்திருப்பந்துருத்தி துக்காச்சி காஜாமைதீன் அவர்கள் துவக்கி வைத்து பேசினார்கள்.

முகம்மது பந்தர் ஹாபிஸ் முகம்மது முஸ்தபா அவர்கள் கிராத் ஓதினார்கள்.

மேலத்திருப்பந்துருத்தி P. லியாகத் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து கண்ணியமிக்க சி.த. அப்துல் காதர் காக்கா அவர்களும் சென்னை தானிஷ் அகமது கல்லூரியின் பேராசிரியர் காதர்ஷா அவர்களும் மற்றும் முதுவை ஹிதாயத் , திருப்பனந்தால் தாஹா

அவர்களும் கல்வியின் விழிப்புணர்வை பற்றி விரிவாக பெசினார்கள். தாஹா அவர்கள் பேசும் போது

அமீரகத்தில் யாருக்கும் எந்த உதவிகள் அவசியப்பட்டாலும் எங்களை நாடுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என கூட்டத்தில் வாக்களித்தார்கள். அதை தொடர்ந்து நடுக்கடை A.P. முகம்மது (தம்பி ராஜா) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதில் நடுக்கடை ஜனாப் சாதிக் பாய் அவர்கள் ஒரு ஏக்கர் நிலம் பள்ளிக்காக நிதியாக வழங்குவதாக அறிவித்தார்கள்.

மேலத்திருப்பந்துருத்தி அகமது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

அதில் இந்த முயற்ச்சிக்கு உறுதுனையாக இருந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்து மேலும் பள்ளி வசதிவாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு முழுவதும் ஷாரிட்டி மூலம் நடைபெரும் என்ற விளக்கத்தையும் தந்தார்கள். முஹம்மது பந்தர் ஆரிப் பாய் அவர்கள் போர்முதல் மற்றம் வாட்டர்கணக்ஷன் அனைத்தையும் செய்து தருவாதாக அறிவித்தார்கள்.

துக்காச்சா ஹாஜா அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நாண்கு தவனைமுறையாக தருவாக வாக்களித்துள்ளார்கள். மற்றும் கூட்டத்திற்க்கு திரளாக வந்திருந்த அனைத்து பகுதி ஜமாத்தார்களுக்கும் மற்றும் இக்கூட்டம் நடைபெருவதற்க்கு உறுதுனாயக இருந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

அதன் பிறகு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய A.S. இப்ராகிம் அவர்கள் துவா ஓதினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருடைய மனதிலும் பெரும் ஆறுதலாக இருந்த விசயம் என்ன வெனில்

மார்க்க கல்வியுடன் கூடிய ஒரு பொது கல்வி நிறுவனம் நம்முடைய பகுதிக்கு அதி விரைவில் அமைய உள்ள செய்தி அறிந்து அனைவரும் சந்தோசமாக விடை பெற்று சென்றனர்.

அல்லாஹு அக்பர் .

செய்தித்தொகுப்பு

ஹாஜா மைதீன்

Sunday 12 July 2015

துபாய் வருகை தந்த தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் வருகை தந்த தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி



இன்று துபாய் வருகை தந்த தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி அவர்களையும், மாநில பேச்சாளர் கோவை ஜெய்னுல் ஆபிதீன் அவர்களையும் துபாய் விமானநிலையத்தில் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி. அவர்களும், துபாய் மண்டல தலைவர் பரமக்குடி இபுறாகீம்.MBA., அவர்களும், அதிரை சாகுல் ஹமீது, அடியற்கை சேக் தாவூது மதுகூர்  ஹாஜா  மற்றும் துபாய் மண்டல  நிர்வாகிகள் வரவேற்றனர்