Sunday 12 July 2015

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 ரமாலன் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 ரமாலன் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது,

தலைவர் மௌலவி ரிபாய் ரஷாதி அவர்களின் உரை


இறைவனின் கிருபையால் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 வெள்ளியன்று மாலை 5:00 மணியளவில் தேரா லேன்ட் மார்க் ஹோட்டலில் ரமாலன் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது,




 தமுமுக துபை மண்டல தலைவர் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்,




தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றி ரமலான் மாதத்தின் சிறப்புகளையும் ரமாலனில் நாம் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்,

மஹ்ரிப் தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டு சமுதாய  பேரியக்கத்தின் தலைவர் மௌலவி ரிபாய் ரஷாதி அவர்கள் கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், ஆரம்ப உரையில் தமுமுகவின் பணிகளை சகோதரர்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து உரையை ஆரம்பித்த தலைவர் அவர்கள், இறைமறை குர்ஆனை நாம் ஓதுவதின் நன்மைகளையும் குரானிய சமுகமாக வாழவேண்டியதின் அவசியத்தையும் குறிப்பிட்டார்கள், ஒவ்வொரு முஸ்லிம்களும் குர்ஆனுக்கு உயிரோட்டம் கொடுத்து இம்மை, மறுமை வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினார் கள்,

இந்நிகழ்ச்சியில் அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹதி,செயலாளர் சகோதரர் யாசீன் நூருல்லாஹ்,,துணைத் தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா ஆகியோரும் உரையாற்றினார்கள்,அமீரகத்தில் உள்ள அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்,





சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல ஒருங்கிணப்பாளர் சகோதரர் மதுக்கூர் ஹாஜா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது �

No comments:

Post a Comment