Tuesday 21 July 2015

அல்ஹம்துலில்லாஹ்! குகன் மனம் மாறினார்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்! குகன் மனம் மாறினார்!!
====================================================
கடந்த 17-07-2015 சனியன்று சார்ஷா சஜா கேம்பிற்கு மார்க்க நிகழ்ச்சிக்காக  சகோதரர் கபீர் அவர்கள் சென்றார்கள் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட சகோதரர் ஒருவர் தன் நண்பர்  தங்கி இருக்கும் அறையில் மாற்றுமத நண்பர் ஒருவர் உள்ளார் அவரிடத்தில் இஸ்லாமிய அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூற அதன் அடிப்படையில் 18-07-2015 ஞாயிறு அன்று தலைவர் A.S.இப்ராஹீம், கபீர் மற்றும் இம்ரான் ஆகியோர் திருவாரூர் குகன்  என்ற சகோதரரை சந்தித்தோம். 

தனது குடும்பத்தார்களை பற்றி சிறிதுநேரம் எங்களிடம் உரையாடினார் தனது குடும்பம் கள்ளர்  சாதியை சேர்ந்தவர்கள் என பேசத் தொடங்கினார், நாங்களும் எங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறி பேசத்தொடங்கினோம் சரியாக மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த எங்களின் உரையாடல் இறைவன் என்பவன் யார்? என்பதில் இருந்து தொடங்கி இறுதியில் மறுமை வாழ்க்கை வரை சென்று சரியாக 7.00 மணிவரை நீடித்தது, ,
குகண் அவர்களும் தான் நண்பர்களிடம் இஸ்லாம் பற்றி கேட்டு வருவதாகவும் கூறினார்,இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே தான் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்க விரும்புவதாக கருத்தை கூற, உடனே நாங்கள் மூவரும் நல்ல காரியத்தை செய்ய காலம் கடத்தாதீர், மனிதன் மரணிக்க கூடியவன் மரணம் நமக்கு வரும் முன் நாம் நல்ல காரியத்தை செய்யவேண்டும் இப்போதே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே என்றுக் கூற அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் உடனடியாக ஒளுச் செய்து சத்திய ஏகத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு மனம் மாறினார் சகோதரர் குகன் அப்துல்லாஹ் வாக 
மனம் மாறிய சகோதரர் அப்துல்லாஹ் அடுத்தக் கட்டமாக தனது பெற்றோர்ளையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பக்கம் அழைப்புக் கொடுக்க தயாராகிவிட்டார் அவரின் நோக்கம் நிறைவேற சகோதரர்கள் அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம், எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்

A.S.இபுராஹிம் - துபாய் 

No comments:

Post a Comment