Saturday 24 December 2022

உம்ரா செய்வது எப்படி - பயிற்ச்சி வகுப்பு power point presentation program -


உம்ரா செய்வது எப்படி - பயிற்ச்சி வகுப்பு power point presentation program -

இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுகிழமை  28.12.2022
(இரவு 7:40 pm துபாய் நேரம் ) ( இரவு 9:10 pm இந்திய நேரம் )

உம்ரா செய்வது எப்படி - பயிற்ச்சி வகுப்பு power point presentation program - நேரடி நிகழ்ச்சி மற்றும் Tamil Islamic Academy - YouTube live நிகழ்ச்சி

A.S.Ibrahim
M.A(Islamic)

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி! 'ஜோரம் வான்' இஸ்லாத்தில் இணைந்தார்!

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி!
'ஜோரம் வான்' இஸ்லாத்தில்
இணைந்தார்!

உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது?

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி.

100 வருஷங்களாக நாட்டை பாதித்துக்கொண்டிருக்கும் மனநோயின் பெயர் தான் இஸ்லாம் என்று உரக்க சொன்னவர்,

இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என மிகப்பெரும் மக்கள் திரளை திரட்டியவர்
ஃபர்தாவை தடை செய்ய வேண்டும்
என போராடியவர்,

பள்ளிகளின் மினாராக்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டும் என்று பார்லிமென்டில் முழங்கியவர்
தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

டச் பார்லிமென்ட் எம்.பியாக
இருந்த ஜோரம் வான் கிளாவரென்.
(Joram van Klaveren - Dutch politician)
தற்போது இஸ்லாத்தை தனது
வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார்.

இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக புத்தகத்தை எழுத துவங்கியவர், பாதியிலேயே அதை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார். இஸ்லாத்தை படிக்கும் போது
தான் அதன் யதார்த்தத்தை உணர முடிகிறது.

இதுவரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன். இஸ்லாம் பற்றி இனி எழுதப் போகிறேன் என்கிறார்.

இறைவன் மிகப் பெரியவன்! ❤☝

25.12.2022

Friday 23 December 2022

Diploma in Training and Development (DTD)* 👉நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா?

*Diploma in Training and Development (DTD)* 👉நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? 👉உங்கள் துறையில் உயர வேண்டுமா? 👉உங்கள் வகுப்பை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டுமா? 👉நீங்கள் சிறந்த பயிற்சியாளராக வேண்டுமா? *❗யார் கலந்துகொள்ளலாம்?* 🔹பேச்சாளர்கள் 🔸பிள்ளைகளுக்கு பாடம் நடத்த விரும்பும் வீட்டுப் பெண்கள் ◻️ஆசிரியர்கள் ◼️பணியாளர்கள் 👉 வகுப்பு துவங்கும் நாள்: 03.01.2023 🗓காலம்: 3 மாதங்கள். 🕢நேரம்: 5.00pm – 6.30pm IST 🗓நாட்கள்: செவ்வாய் மற்றும் வியாழன் 📜 NCAET அங்கீகாரத்துடன். 🎦 இடம்: நேரடி ஆன்லைன் பயிற்சி - Zoom💻💻 📞அட்மிஷன் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்: https://wa.me/+917397733575 🔊நூற்றுக் கணக்கானோர் பலன்பெற்ற இச்சிறப்பு பயிற்சியைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள… https://www.facebook.com/HussainBashaOnline/videos/529574605483177/


முஸ்லிம் நாடுகள் எல்லாம் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன

முஸ்லிம் நாடுகள் எல்லாம் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன  இந்தியா மட்டும் மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? என்ற வாதம் பல காலமாக பாஜக சங்கிகளால் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் எத்தனை முஸ்லிம் நாடுகள் மதம்சார்பற்ற நாடுகளாக இருக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

#துருக்கி 96%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#இந்தோனேஷியா 90% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 10% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது.

#அஜர்பைஜான் 93% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 7% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#கஜகஸ்தான் 70%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 30% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#அல்பேனிய 58% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 42% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#லெபனான் 54% இஸ்லாமியர்களை கொண்ட அரபு நாடு ஆனால் 46% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது.

#தஜிகிஸ்தான் 98%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 2% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#துர்க்மெனிஸ்தான் 89%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 11% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது .
#கிர்கிஸ்தான் 86% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 14% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#உஸ்பெக்கிஸ்தான் 96% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது .

#கொசோவோ 95% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 5% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#டிஜபௌடி 96% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது .

எகிப்து நாடும் மதசார்பற்ற நாடு என்பது உலகிற்கே தெரியும்

#பங்களாதேஷ் 89%
இஸ்லாமியர்களை கொண்ட மதசார்பற்ற நாடு

மதசார்பற்ற ஜனநாயக நாடுகளாக அறிவித்த இந்த நாடுகளில் எந்த ஒரு மத கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை

இதை இங்குள்ள மத வெறியர்கள் புரிந்து கொண்டால் நல்லது.

https://youtu.be/cUVVKYDQtAQ

https://youtu.be/cUVVKYDQtAQ
 Tamil islamic academy ( YouTube) online  சர்வதேச அரபி்மொழி தினம் (டிசம்பர் 18)

இறைவன் கொடுத்த அறிவுக்கு ஃபீஸ் எதுக்கு? ரூ.8 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் கொடுத்த என்ஜினீயர்

இறைவன் கொடுத்த அறிவுக்கு ஃபீஸ் எதுக்கு? ரூ.8 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் கொடுத்த என்ஜினீயர்


ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பொறியாளர் பால் பாண்டியன், தனக்கு கொடுக்கப்பட்ட 8 லட்ச ரூபாய் ஃபீஸை மீண்டும் பள்ளிவாசலுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.


இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கட்டணம் வாங்க மனமில்லாததால் ரூ.8 லட்சத்தை திருப்பிக் கொடுத்ததாக கூறியிருக்கிறார் பொறியாளர் பால் பாண்டியன்.


ராமநாதபுரம் மாவட்டம்

வழுதூரில் புதிய ஜும் ஆ பள்ளிவாசல் நேற்று திறகப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வளைகுடா நாடுகள் ஸ்டைலில் ஆர்கிடெக்ட் டிசைன் செய்யப்பட்டு வெளிநாட்டு பாணியில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசலை கட்டுவதற்கான போட்டியில் 20க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில், ராமநாதபுரம் ரத்னா பில்டர்ஸ் செய்து கொடுத்த டிசைன் தான் வழுதூர் ஜமாத் நிர்வாகத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் பிடித்து போயிருக்கிறது.


இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் ரத்னா பில்டர்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகாலம் நடைபெற்ற பள்ளிவாசல் கட்டுமானப் பணி ஒரு வழியாக நிறைவடைந்து நேற்று திறப்புவிழாவும் கண்டுள்ளது. ஓமனில் இருந்து இந்த டிசைனை வாங்கிய பொறியாளர் பால் பாண்டியன், பள்ளிவாசலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஆர்கிடெக்ட் டிசைன் பொருட்கள் அனைத்தையும் துபாயிலிருந்து வாங்கியிருக்கிறார்.


*ரூ.8 லட்சம் ஃபீஸ்*


இதனிடையே கட்டுமானப் பணிகளுக்கான தொகை போக டிசைன் செய்து கொடுத்தது, மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் கூறியது என இதற்காக மட்டும் கடந்த 5ஆண்டுகளில் பொறியாளர் பால் பாண்டியனுக்கு ரூ.8 லட்சம் ஃபீஸ் தரப்பட்டிருக்கிறது. அதனை மீண்டும் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் பால் பாண்டியன். இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கட்டணம் வாங்குவது நியாயமில்லை என்பதால் பணத்தை திருப்பிக் கொடுத்ததாக பேசியிருக்கிறார்.



*வாழ்க்கை அனுபவம்*

*வாழ்க்கை அனுபவம்*


ஒரு தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..


அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.*


அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சுப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.


இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.


மீண்டும் மீண்டும் வருகிறார்.. முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் *அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.*


ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..


வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்

முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..


*பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே சிரமப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி குஞ்சுகள் வெளிவர* ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..


மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண

மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


*முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...*

சரி நாளை பார்ப்போம் என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...


இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.


*சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன...* பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...


இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..


அப்போது அந்த வழியாக தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...


நடந்ததைக் கூறினார்...


"பாவம் உன் அவசரத்தாலும்

*அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும் அந்த பறவைகளை அழித்து விட்டாயே"*

என்று நண்பர் கூறினார்...


"நானா ... "


"நீ தான்..

வேறு யாரு..."


அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில்

இருந்து வெளிவரும் போது

அதன் இறக்கைகள் மெதுவாக அசையும்,

கால்கள் துடிக்கும்,

முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..

*இது தானே இயற்கை..*


அதை அப்படியோ விட்டிருந்தால்

இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...

ஒரு இயல் பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..

அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்


தோட்டக்காரர் மீண்டும் உடைந்து போனார்..

சிதறிப்போனார்..


இப்படித்தான் நாமும் *நம் பிள்ளைகளுக்கு சிரமத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்...* வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கிறோம்..


உழைப்பின் பெறுமதியை

வியர்வையின் கனதியை

வெற்றியின் தடங்களை

உணரச் செய்யாமலேயே

உருவாக்கி விடுகிறோம்...


நாம் மறந்துவிடக்கூடாது..


கண்டிப்பில்லாத கனிவு

நாளை எங்கேயோ ஓர் இடத்தில்

நம் பிள்ளைகளை

தண்டிக்க வைக்கும்...


*எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக் கற்றுக்கொடுப்போம்*

பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக்கொடுப்போம்


*அவர்களுக்கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்.*

நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..


*பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும் அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..*


உங்கள் சுட்டு விரல்களைப் பிடித்துக்கொண்டே

எத்தனை காலம் தான் இன்னும் அவர்கள் நடை பயில்வது..?


இது ஒரு பறவையின் கதையல்ல..


*நம் பிள்ளைகளின் வாழ்வியல்...


*SMR*



நடிகைகளின் மனமாற்றம்

நடிகைகளின் மனமாற்றம்

முஸ்லிம் பெண்களின் தடுமாற்றம்

___________


வழிகேடுகளின் உச்சகட்டத்தை சந்தித்த பின் கடந்து வந்த பாதை தவறு என்று தாமதமாக உணர்ந்து தவ்பா எனும் பாவமன்னிப்பை தேடி மனம் திருந்தும் நடிகைகள் ஒரு புறம்


கட்டுப்பாடுகளை அடிமைத்தனமாக கருதி கண்ணிய வாழ்வை புறம் தள்ளி கழிசடை பாதைகளை எதிர் நோக்கும் முஸ்லிம் பெண்களோ ஒரு புறம்


வெளித்தோற்ற கவர்சிகளை ஆடம்பரங்களை இனிமையாக கருதி சீரியல்களை சினிமாக்களை நேசிக்கும் முஸ்லிம் பெண்கள்

மனம் திருந்தி வரும் நடிகைகளின் மறுவாழ்வை உற்று நோக்குங்கள்

அதுவே சினிமாவின் அலங்கோலத்தை தோலுரிக்கும் உங்கள் வாழ்வை செவ்வைபடுத்த கூடும்


தற்போதைய செய்தியில் முன்னனி கவர்சி நடிகை மும்தாஜ் அவர்கள் மனம் திருந்தி வருந்தியது ஓர் பாடம்


وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ‏


தீய செயல்கள் செய்தவர்கள் மனந்திருந்தி (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால்

நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும்

மிக்க கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்


(அல்குர்ஆன் : 7:153)

Saturday 17 December 2022

இந்திய சட்டம்

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.  

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Wednesday 26 October 2022

🐅 ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

🐅 ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..


🐅26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.


🐅கற்றலினால் ஆன பயன் என்ன?


🐅ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு கற்றுக்கொடுக்கவேயில்லையே..


🐅ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.


🐅பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..

கூச்சலிடுகிறார்கள்...


🐅அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.


🐅இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.


🐅காரணம்..அறிவின்மை..


🐅என்ன செய்வது என்கிற அறிவின்மை.


🐅மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.


🐅கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.


🐅இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..


🐅(a+b)2 =a2 + 2ab + b2


என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?


🐅ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..


🐅அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????


🐅அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.


🐅அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.


🐅இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???


🐅தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.


🐅மற்றவர்களை மதிப்பது எப்படி..?


🐅மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?


🐅சாலை விதிகள் என்ன?


🐅ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?


🐅அடிப்படைச் சட்டங்கள் என்ன?


🐅நமக்கான உரிமைகள் என்ன?


🐅காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?


🐅விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?


🐅விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?


🐅மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?


🐅நோய்களை எவ்வாறு கண்டறிவது?


🐅எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?


🐅மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?


🐅கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?


🐅மற்றவர்களை நேசிப்பது எப்படி?


🐅நேர்மையாய் இருப்பது எப்படி?


🐅இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?


🐅இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..


🐅இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..


🐅ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது


இந்த பதிவு ரொம்ப பிடித்தது பதிவு செய்து இருக்கேன்.



Tuesday 4 October 2022

பெற்றோர்களை நேசியுங்கள்,

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


பெற்றோர்களை நேசியுங்கள்,

அவர்களை கடைசி காலத்தில்

தனியே விட்டு விடாதீர்கள்.

ஏனெனில்,


''தாயின் காலடியில் #சொர்க்கம் இருக்கிறது.


தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)


ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...


என் அன்பான மகனே/மகளே...


நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.


நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ, அல்லது எதையேனும் கீழேபோட்டு விட்டாலோ,

நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன். நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன்.


முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும்போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.


என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல்! இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.


என்னை மன்னித்து விடு, எனக்கு வயது ஆகிக்கொன்டே இருகின்றது.


என்னுடைய முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது.

நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன். எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்படி நீயும் செய்வாய் என்று நம்புகிறேன்.


நான் ஏதேனும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும்; நீ! நான் சொல்லுவதை கேட்பாய் என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்றும் நம்புகிறேன்.


உனக்கு ஞாபகம் இருகின்றதா,

குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது...


என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும். என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது.


நான் ஏதேனும் புலம்பிக் கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.


உன்னால் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்புடன் பேசுவாயா? உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தாலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.


எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருப்பேன்,

அப்பொழுது நீ என்னை கனிவோடு கவனிப்பாய் என்று நம்புகிறேன். தெரியாமல் நான் படுக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.


என்னுடைய கடைசி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும்,

அக்கறையோடும் பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும், என்னுடைய நேரம் நெருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எனக்காக என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும் மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.


கவலைப் படாதே, இறைவனை நான் பார்க்கும் பொழுது அவனிடம் உன் மீது அருள் மழைப் பொழியச்சொல்கிறேன், ஏனென்றால் நீ உனது தாய் தந்தையை மிகவும் நேசித்தாய் என்று. நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..


என்றும் அன்புடன்,


அப்பா/அம்மா


நினைவு படுத்துகிறோம் .


பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடைசி காலத்தில் தனியே விட்டு விடாதீர்கள்.


ஏனெனில்,


தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.....



Friday 26 August 2022

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*


*"ஜெய் ஹிந்த்"* _என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர்_ *1941ல் "ஆபித் ஹசன் சப்ரானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"இங்குலாப் ஜிந்தாபாத்"* _எனும் சொல்லை உருவாக்கியவர்_ *"ஹஸ்ரத் மொஹானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும்* _மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர்_ *"அஸீமுல்லா கான்"* _எனும் இஸ்லாமியர் ..._


_மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும்_ *(QUIT INDIA) "குய்ட் இந்தியா"* _எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும்,_ *1942ல்* _பம்பாய் மேயராகயிருந்த_ *"யூசுப் மெஹர் அலி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா"* _எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர்_ *"முஹம்மது இக்பால்"* _எனும் இஸ்லாமியர் ..._


_சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற பாடலை, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும்_ *"சர்பரோஷ் கி தமன்னா"* _என்கிற தேசபக்தி பாடலை_ *1921ல்* _எழுதியது உருது கவிஞர்_ *"பிஸ்மில் அஸ்மாதி"* _எனும் இஸ்லாமியர் ..._


_இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் *95300* பேரின் பெயர்கள் *"இந்தியா கேட்டில்"* செதுக்கி வைக்கப்பட்டுள்ளது..._


*இஸ்லாமியர்கள் :* *_61,395 பேர்._*

*இந்துக்கள் :*

*_25,895 பேர்._*

*சீக்கியர்கள் :*

*_8,050 பேர்._*


*இனி சொல்லுங்கள் யாரிடம் தேசபற்றிற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் ?*



Sunday 21 August 2022

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

சொல்வது யார்?

குஜராத் பாஜக எம்.எல்.ஏ.


பில்கிஸ் பானு பாலியல் வன்மத்தில் விடுதலையான 11 பேரை, விடுதலை செய்தது சரியா என ஆய்வு செய்யும் குழுவின் தலைவனாம் இவன்.

குற்றவாளிகள் 11 பேரும் பார்ப்பனர்கள் என்பதால், அவர்கள் நல்லவர்கள் என்கிறான்.


* மொகஞ்சதாரோ, ஹரப்பா அழிந்தது எப்படி?

அம்மக்கள் கட்டியிருந்த அணையை உடைத்து அழித்த பார்ப்பனர்களால் தானே?


* இமயமலையை ஒட்டி லிங்கத்தை வழிபட்ட இனக்குழு மக்களைக் கொன்று, அதன் தலைவன் சம்பரனை அரக்கன் என்று புராணத்தில் எழுதியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* புத்த பிட்சுகளின் தலையை வெட்டியும், சமண முனிவர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது யார்?

பார்ப்பன உத்தரவு தானே?


* கி.மு. 184-151 தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்து, ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்த புஷ்யமித்ரன் யார்?

பார்ப்பனர் தானே?


* அரசனுக்கு இணையாக சத்திரத்தில் ஆசனம் போட்டு சோறு போடு என்று சொன்னதை நிராகரித்த, சூத்திர நந்த வம்ச ஆட்சியை வீழ்த்த சபதம் போட்டு, வீழ்த்துவதற்கு அலெக்சாண்டரை அழைத்தது யார்?

சாணக்யன் என்ற பார்ப்பான் தானே?


* ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

ரவிதாசன் உள்ளிட்ட 4 பார்ப்பனர்கள் தானே?


* இடங்கை 96 சாதி, வலங்கை 96 சாதி எனப் பிரித்து, மோதல்களை நடத்தி, சோழர்கள் ஆட்சி முற்றிலும் வீழ்வதற்கு காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* திராவிடர்கள் வழிபட்ட கடவுள்களையெல்லாம், தனக்குள் உள்ளிழுத்து, மன்னர்களின் துணையோடு கருவறைக்குள் நுழைந்து, பெரும்பான்மை மக்களை கோவிலுக்கு வெளியே நிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* இங்குள்ள மக்கள் வழிபட்ட தெய்வங்களையெல்லாம், இழிவான கதைகள் எழுதி, அதை புனித புராணங்கள் என்று நிலைநிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பன படையெடுப்புக்கு முன்பு, சமூகத்திற்கு அறம் உரைத்த (பறை+ஐயர்) பறையர்களை, அவர்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றியதால், சமூகத்தில் இழிவானவர்களாக ஆக்கி, அவ்விடத்தைக் கைப்பற்றியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பானுக்கு மூப்பு பறையர், கேட்பார் இல்லாமல் கீழ் சாதியானார் என்ற வழக்கு உருவானதற்கு காரணம் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர்களை வேரறுத்த களப்பிரர் ஆட்சியை, இருண்ட ஆட்சி என்று சொன்னது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* சூத்திரர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு, கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் அதை தடுத்து, பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறக் காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்ற ஒன்று உருவாகி, தமிழக ஆட்சியையே கைப்பற்ற காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல், வெள்ளையனிடம் மன்னிப்பு கேட்டு, வெள்ளையனிடம் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று, வெள்ளையனுக்கு ஆதரவாகப் படை நடத்தியது யார்?

சவர்க்கார் எனும் பார்ப்பனர் தானே?


* 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட, மத்தியப் பிரதேச மாநிலம், பட்டேஸ்வர் கிராமத்து மக்களை, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்து, அந்த ஊரே அழியக் காரணமானது யார்?

அடல் பிஹாரி வாஜ்பாய் எனும் பார்ப்பனர் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலையான, காந்தியை சுட்டுக் கொன்றது யார்?

நாதுராம் விநாயக் கோட்சே எனும் பார்ப்பான் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலான முந்திரா ஊழலில் ஈடுபட்டு, பதவியை ராஜினாமா செய்தது யார்?

டி.டி. கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் தானே?


* கருவறையில் கசமுசாவில் ஈடுபடுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பூஜை அறையில் "கரசேவை" நடத்தியது யார்?

கே.டி.ராகவன் எனும் பார்ப்பனர் தானே?


* சிலைகளைக் கடத்திவிட்டு,

சிலை குறைப்போர் எனப் பெயர் பெறுபவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* மூளையே இல்லாமல் பேசிவிட்டு,

மூளை வலிமை சாஸ்தி எனப் புழுகுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* ஐம்பது வீடுகள் உள்ள ஒரு தெருவில், ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினி வீடு" என்று பலகை மாட்டினால், பிற வீடுகளுக்கு என்ன பொருள்? அது போல் தான் பிராமணாள் கபே எனப் பெயர் வைப்பதும் என்றார் தந்தை பெரியார்.


இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டம் சின்னா பின்னமாக கிடப்பதற்கு காரணம் யார்?

பார்ப்பனியம் தானே?


காலம் முழுவதும்

கொலைகளைச் செய்து கொண்டே

கொல்லாமை பேசிப் பயணப்படுகிறது பார்ப்பனியம். அதன் அடிவடிருகளின் பேச்சுகள் இப்படித்தான் இருக்கும்.



Sunday 7 August 2022

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு

தாய் மகனுக்கு
எழுதிய டைரி குறிப்பு

தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*

கணவன்

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லால்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.

Monday 11 July 2022

மெக்காவின் பெரிய மசூதியைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - அல் ஹராம்

மெக்காவின் பெரிய மசூதியைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - அல் ஹராம்

100 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியில் உள்ள மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் மெக்காவின் கிராண்ட் மசூதி முதலிடத்தில் உள்ளது.

அளவு: ஒரு மில்லியன் (1,000,000) சதுர மீட்டர்
திறன்: இரண்டு (2) மில்லியன் மக்களுக்கு இடமளிக்க முடியும்
ஆண்டுக்கு இருபது (20) மில்லியன் பார்வையாளர்களைப் பெறுகிறது
இருபத்தி நான்கு (24) மணிநேரம் திறந்திருக்கும்.
இது 1400 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக மூடப்படவில்லை
1800 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்
40 எலக்ட்ரிக் சானிட்டரி கிளீனர் கார்கள் உள்ளன
திறந்தவெளி முற்றங்களை சுத்தம் செய்ய 60 மின்சார சானிட்டரி இயந்திரங்கள் உள்ளன
வளாகம் முழுவதும் 2000 சானிட்டரி தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன
தரையானது 40000 கம்பளங்களால் மூடப்பட்டுள்ளது (ஜித்தாவிற்கும் மக்காவிற்கும் இடையிலான தூரத்தை விட நீளமானது(79 கிமீ))

13000 கழிவறைகள், தினசரி நான்கு(4) முறை/6 மணிநேரம் சுத்தம் செய்யப்படுகிறது
25000 நீர் விநியோகிகள் (உலகின் மிகப்பெரிய நீர் விநியோக அமைப்புகளில் ஒன்று)
தினமும் 100 சீரற்ற குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன
ஜம்ஜாம் கிணற்றில் இருந்து அதிகப்படியான நீர் 1,700,000 (1.7 மில்லியன்), தண்ணீர் பாட்டில்கள் (10 லிட்டர் கொள்ளளவு) கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டியில் சேமிக்கப்படுகிறது.
ஹரமைன் ஓதுதல் சேவைகள்: புனித குர்ஆன் ஓதுதல்; 24/7; குர்ஆனின் அனைத்து பத்து (10) அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி ஓதுதல்; 180 நாடுகளில் 500,000 (அரை மில்லியன்) எபிசோடுகள் மூன்று (3) ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகள் (தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக)
மசூதிக்குள் நூற்றுக்கணக்கான குளிரூட்டும் அலகுகள் (குளிர்ச்சிக்காக) சிதறிக்கிடக்கின்றன.
மசூதியின் தளம் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது, இதனால் வளாகத்திற்குள் வெப்ப ஒழுங்குமுறை அதிகரிக்கிறது.
மசூதியின் எந்தப் பகுதியின் இருப்பிடத்தையும் காட்டக்கூடிய மின்னணு சுற்றுலா வழிகாட்டி பயன்பாடு.

விரிவான மற்றும் மிகவும் திறமையான ஆடியோ அமைப்பு:
கிராண்ட் மசூதியில் உள்ள ஒலி அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஒலி அமைப்புகளில் ஒன்றாகும்.
ஆடியோ அமைப்பின் பிழையின் விளிம்பு: 0%
6000 ஒலிபெருக்கிகள்
நான்கு (4) வெவ்வேறு ஆடியோ அமைப்புகள்
ஐம்பது(50) ஒலி-பொறியியல் ஊழியர்கள்
குரானின் பிரதிகள் 65 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிரசங்கமும் ஐந்து (5) வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு

ஊனமுற்றோர் சேவைகள்/வசதிகள்

10,000 சாதாரண சக்கர நாற்காலிகள் இலவசமாக பயன்படுத்தப்படுகின்றன
400 மின்னணு வழிகாட்டி சக்கர நாற்காலிகள் உள்ளன
தானியங்கி சக்கர நாற்காலிகள்
(2-சக்கரங்கள் மற்றும் 3-சக்கரங்கள்)

ரமலான் சிறப்பு சேவைகள்

ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பதற்கு 4 மில்லியன் இலவச உணவு
ரமலான் மாதத்தில் மசூதி வளாகத்திற்குள் தினமும் 5,000,000 பேரீச்சம்பழத் துண்டுகள் (விதைகள் அகற்றப்பட்டன) விநியோகிக்கப்படுகின்றன.
நோன்பு துறந்த பிறகு, மக்ரிப் தொழுகையை (ஸலாஹ்) நிறைவேற்றுவதற்கான இடத்தை சுத்தம் செய்வதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்றுவது இரண்டு (2) நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது.
சுபஹானல்லாஹ Jobs Bahrain jabs by PHOENX MAN POWER AGENCY MINAR education study worad Abroad Achieve your Dr eam Rmd MIANAR EDUCATIONAL CONSULTANT STUDY MBBS UZBEKISTAN ok thanks 9486573014


A.s.ibrahim
0555814268

Good news

Friday 20 May 2022

H raja கருப்பு பனம்

நம்பிய தொண்டர்களின் மாசற்ற அன்பை வைத்து பண மகசூல் செய்யும் மாமா,மருமகனின் குடும்ப அரசியல்...

1988 ஆம் ஆண்டு ஒரு ஓட்டை பஜாஜ் ஸ்கூட்டருடன் காரைக்குடி, சுப்பிரமணியபுரத்தில் 9 ஆவது வீதியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ஹெச். ராஜா இன்று மருமகனோடு பல நூறு கோடிக்கு அதிபதி.
உழைப்பில் வந்தால் தவறு இல்லை.
ஆனால் படித்தும் பாவம் செய்த பணம்.

1988 ஆம் வருடம் ஸ்ரீ ரமணி ஐயர்,
1993 ஆம் வருடம் பத்மனாதன் ஐயர்,
2001 ஸ்ரீதரன் ஐயர்,
2002 சந்திரசேகரன் ஐயர்,
பின்னர் 2002 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஹெச்.ராஜா வின் மைத்துனர் சபேசன் ஐயர்.இவர்கள்தான் H.ராஜா உடன் குடும்ப அரசியலில் பயணித்தவர்களின் வரிசைப் பட்டியல்.

அதன் பிறகு 2014 முதல் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஹெச். ராஜா வின் மருமகன் சூரியநாரயணன் சிவகங்கை மாவட்ட பாஜக வில் பலரை அரசியல் ரீதியாக ஒழித்ததுடன் கோடிகளை தான் சேர்க்கவில்லை என்பதை மறுக்கவே இயலாது.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனி1995 ஆண்டில் தொடங்கப் பட்டது.

அப்போது H.ராஜா மாநிலச் செயலாளர்.
லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியின் டைரக்டர் H.ராஜா.
இதன் முக்கிய டைரக்டர் ராமச்சந்திரன்.
இவர் H.ராஜா வின் மைத்துனர்.

திருச்சி பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் சிறிது சிறிதாக சேர்த்து ரூ10,50,000 பணம் டெபாசிட் செய்தனர். இவர் திருச்சி பாஜக மாவட்டச் செயலாளர். 2004 ஆண்டில் பணத்தை திரும்ப கேட்கின்றனர் திருச்சி பாஜக பழனியப்பன்-ரேவதி தம்பதிகள். இன்று தருகிறேன்,நாளை தருகிறேன் என்று அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ராஜாவின் மைத்துனர் ராமச்சந்திரன் செக் கொடுத்து சமாளிக்கிறார். செக் ரிட்டன் ஆகிறது. H.ராஜாவிடம் ஞாயம் கேட்கின்றனர். பணம் வராமல் இருக்கவே H.ராஜா வீட்டு முன் திருச்சி மாவட்ட பாஜக செயளாளர் தம்பதியர் சகிதமாக தர்ணா செய்கின்றனர்.

காரைக்குடி லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் முதலீடு செய்த பாஜக பழனியப்பன் 200 தடவைக்கு மேல் பயணம் செய்து H. ராஜாவை சந்திக்க நடையாய் நடக்கிறார்.

ராமச்சந்திரன் தலை மறைவானார்.
இந்த கம்பெனியின் ஆடிட்டர் மதுரையை சேர்ந்த முரளியிடம் கேட்டுக் கொள்ளலாம்.
http://www.mycorporateinfo.com/busin…/lotus-benefit-fund-ltd

https://moonchronicles.tumblr.com/…/h-raja-and-the-lotus-be…
இதில் ஆனந்த விகடன் லிங்க் உள்ளது.
அதிகாரம் வந்த பிறகு தம்பதியர்களின் பேட்டி அழிக்கப்பட்ட யூ டியூப் லிங்க் இதில் உள்ளது.

தாமரை என்ற பா.ஜ.க கட்சி சார்ந்த பெயர்களை வைத்து தொழில் மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார் ஹெச். ராஜா என்று செக்காலைத் தெரு மக்களின் குற்றச்சாட்டை இன்றும் இன்றும் பலமாக ஒலிக்கிறது.

2013 ஆண்டில் சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் சிப்காட் எஸ்டேட் ராமன் அவர்கள் தன்னை நம்பி விற்பனை செய்ய H.ராஜாவிடம் நிலங்களை கொடுக்கிறார். அந்த இடத்தில் அட்வான்ஸ் வாங்கியதை கூட ராமனிடம் சொல்லாமல் அதை ரொட்டேஷன் மோசடி செய்து பெரிய பஞ்சாயத்து ஆகி அது கோர்ட் வரை போய் கட்டாய பஞ்சாயத்து முடிவாகி கேவலம் ஆனதை இல்லை என்று ஹெச்.ராஜாவால் மறுக்க இயலுமா?.

கோயம்புத்தூரில் 2015 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் HOLISTIC HEALTH CARE FOUNDATION LLP நிறுவனம்.
என்ற கம்பெனியில் ஹெச்.ராஜாவின் மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா இயக்குநர் ஆகும் அளவுக்கு உயர்ந்தது எப்படி ?. ஹெச். ராஜா இதை இல்லை என்று மறுப்பாரா ?. மறுக்கதான் முடியுமா?.
இதோ ஆதாரம்.

https://www.zaubacorp.com/…/HOLISTIC-HEALTH-CARE-F…/AAD-1846

இந்த "ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் " என்ற நிறுவனத்தின் பங்குதாரரில் ஒருவரான கோபால் ரத்தினம் குப்தா மோகன் பிரசாத் என்பவர் பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஒரு டைரக்டர்.

காரைக்குடியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரியநாராயணன் ராமதாஸ் உடன் ஒரு தனியார் வங்கியின் இயக்குனரே பங்குதாரராக இணையும் அதிசய பார்முலாவை பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இந்திய மக்களுக்கு விளக்குவாரா ?.

மதுரை,பெரம்பலூர், சென்னை, கோயம்புத்தூர், கொச்சி ஆகிய நகரங்களில் பினாமி உறவுகள் பெயரிலும் சொத்துகள் வாங்கியது எப்படி என்று ஹெச். ராஜா விளக்குவாரா ?.

தாமரை இன்ஃபோ மீடியா பிரைவேட் லிமிடெட் - இது ஒரு டிவி கம்பெனி.

H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன் ராமதாஸ் சென்னையில் ஹெச்.ராஜா குடியிருக்கும் வட பழனி வீட்டு விலாசத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்த நிறுவனம் "தாமரை இன்போ மீடியா பிரைவேட் லிட்".

மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா ஒரு டைரக்டர்.
ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி மற்றொரு டைரக்டர்.

மாமனார் தேசியச் செயலாளர் H.ராஜா அதிகாரப்பூர்வமான ஆலோசகர்.

ஒரு ஷேர் விலை 20 லட்சம்.
200 பேரிடம் ரூ 20 லட்சம் வீதம் ஷேர் வசூல்.
40 கோடி மொத்தம் வசூல் செய்ய வேண்டும்.

தந்தி டிவிக்கு தினத்தந்தி விளம்பரம் போகாவிடில் அதுவே இழுபறி நிலமையாக உள்ளது.
பெரிய லாபமும் இல்லை.
மற்ற டிவி முதலீடு கதை ஒரு பக்கம்.
இவர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தால் ஒரு கம்பெனி வருமானத்தை இன்னொன்றில் போட்டு இன்னொன்றில் பெரிதாக எடுப்பார்கள்!!.

இப்படி உள்ள நிலையில் மாமா ஹெச்.ராஜா தனது ஆர்எஸ்எஸ் மருமகன் சூர்யா நாராயணன் காரைக்குடியில் 8x6 அளவுள்ள கடையில் ஒரு ஜெராக்ஸ் மற்றும் இரண்டு கம்ப்யூட்டரை வைத்து உழைத்துதான் இவைகளை ஈட்டினார் என்று உறுதி சொல்வாரா?.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் போலவேதான் தாமரை டிவி முடிவும் வரும்.

அன்று மைத்துனர் ராமச்சந்திரன்.
இன்று மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன்.
வித்தியாசம் அவ்வளவுதான்.

சரி.காரைக்குடியில் கட்சியை வளர்க்க தனது கைத்தடிகளாக இருந்தவர் முழுவதும் தனது உறவினர்.

அப்புறம் லோட்டஸ் பெனிபிட்டில் ஒரு மைத்துனர்.
அப்பறம் தாமரை டிவியில் ஆர்எஸ்எஸ் மருமகன்.

திமுக வை குடும்ப சொத்து என்று பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?!.

உங்கள் தொழில்களை வளர்க்கும் ஆர்வத்திற்கு தொண்டர்கள் மோசடி மன்னன் ப.சிதம்பரத்திடம் தோற்று அவமானப் படணுமா?!.

அடுத்து H.R.மூவ்மென்ட் என்று கோவில்களை காப்பதாக சொல்லி மாயமாக புறப்பட்டீர்கள்!!

ஒரு பிராமணனாக இருந்து வழி காட்ட வேண்டிய நீங்கள் மேல் மருவத்தூர் சரக்கு சாமிக்கு சால்வை போட்டு காலில் விழுகிறீர்கள்.

H.R. மூவ்மென்டுக்கு ரதம் வேண்டும் என செக்ஸ் நித்யானந்தாவின் காலைப் பிடிக்கிறீர்கள். அதற்கு அறுபடை வீடு ரதம்,வேல் ரதம் என்று சாகசம் காட்டினீர்கள்.
மற்ற தெய்வம் போல் இல்லை நம் முருகர். இந்த ஆண்டு நீங்கள் 1000 நித்யானந்தாக்களை வைத்து இருந்தாலும் முருகர் பெயரை சொல்லி இவைகளை மீண்டும் நடத்த முடிந்ததா??. முருகரை வெற்று பப்ளிசிடிக்கு உபயோகிப்பவர்கள் வேலுக்கும்,மயிலுக்கும் பதில் கூறவே இயலாது.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். அங்கு உங்கள் குரு மாஸ்டர் துக்ளக் பனியன்களை அணிய வைத்து கூர்காக்களை வைத்து வேவு பார்க்கிறார்.

ஒவ்வொரு கோவில் பட்டியலையும் சிலைகள்,நிலங்கள் உட்பட அத்தனை விவரங்களையும் சேகரித்து பெங்களூர் வேணு சீனிவாசன் தங்கைக்கு அனுப்புகிறீர்கள். அந்த கோவில் சொத்துகள் கொள்ளை அழிக்கப்படும்.
இதுவே உங்கள் H.R.மூவ்மென்ட்.

நல்ல விஷயமான அறநிலையத் துறையை விட்டு வெளியேறு என கத்தணும். அதை பிடுங்கி டிவிஎஸ் கையில் ஒப்படைக்கணும்.
இதற்கும், உங்க தொழிலுக்கும் சேர்த்து உங்க கூட K.T. ராகவனையும் அழைத்துச் செல்கிறீர்கள். T.R.ரமேஷும் வருகிறார்.
இதற்கு முதலீடு பெங்களூர் சிலை திருடர்கள்தானே.

HR Movement சாக்கிய பௌத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு புற வாசல் பரிவார்.

பாஸ்...போதும் உங்கள் நாடகம்.
அன்று இல.கணேசன் காலத்தில்
உங்களிடம் ஒரு தொண்டன் வந்து H.ராஜாவிடம் இல.கணேசன் பற்றி சொல்வார். உடனே இல.கணேசனிடம் சொல்லி கொடுத்து விடுவார்கள். இப்போது பொன்.ராதாகிருஷ்ணனை பற்றி H.ராஜாவிடம் புகார் சொன்னால் பொன்.ராதாகிருஷ்ணனிடமே போட்டு கொடுத்து காலி செய்து விடுகிறீர்கள். பொன்.ராதாவிடம் H.ராஜா ஏரியா புகார்கள் வருவதை அவர் இவரிடம் காட்டி கொடுப்பார். எல்லோரும் ஆளாளுக்கு பாஜக தொண்டனை பஞ்சர் செய்து ஓட ஓட விரட்டினால் அவர்கள் எங்கேபா போவார்கள்?.

என்றைக்காவது ஒரு நாள் உங்க சக செத்துப் போன ஆடிட்டர் ரமேஷ் வழக்கை பார்த்தீர்களா?. ஒரு நாளாவது அந்த வீட்டை எட்டி பார்த்தீர்களா?.
மாட்டீர்கள்.
எல்லாம் சுய நலம் .
மருமகனுக்கும்,மாமனாருக்கும் பைசா வண்டி உருளணும். அவ்வளவுதான்.

ஆனால் தொண்டர்கள் உங்களுக்கு பாரத் மாதா கீ ஜெய் போட்டு விட்டு உங்க பின்னாடியே ஓடி வரணும்.

குரும்பூரில் மோகன் சி லாசரஸ் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பை பெற்றுக் கொண்டு அங்கு உள்ள ஆனந்த விநாயகரை இடிக்க துணிந்தனர். அங்கு நண்பர்கள் இதை தடுக்க பலவாறு போராடினார்கள். சென்னை வரை போய் இந்த இந்து தர்மப் போராளியை சிந்த்திக்க துணிந்தனர். எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று போட்டோ எல்லாம் பிடிச்சாச்சு. கோவிலை உடைக்க JCB வரப் போகிறது என தகவல் வந்த உடன் இந்த இந்து தர்ம போராளியை எல்லோரும் தொடர்பு கொண்டனர். போனை எடுக்கவே இல்லை. உடனே நான் தொடர்பு கொண்டேன். விட்டிருவோமா...நான் உடன் ஸ்பாட் போகிறேன்...அல்லது ஆவன செய்கிறேன் என்று உதார் விட்டார்.வரவும் இல்லை. பிறகு என் போனையும் எடுப்பதில்லை. என் போனை எடுக்க வேண்டாம். ஆனால் ஆனந்த விநாயகர் கோவிலை லாசரஸ் இடிக்க வரும் போது இந்த தர்ம போராளி ஓடுவார். அப்புறம் ஏ...லாசரஸ் என்று கூப்பாடும் போடுவார். ஆனால் ரயில்வே கமிட்டியில் இருந்தாலும் ஆனந்த விநாயகருக்கே எதுவும் செய்ய மாட்டார்.
ஆனால் இவரை இந்து தர்ம போராளின்னு ஊரே சொல்லணும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1041046586053966&id=100004459025108

ஆனால் ஸ்கூல் அட்மிஷன்,காலேஜ் அட்மிஷன், வங்கி பிரச்சனைன்னு சொல்லுங்க...அதற்கு கட்சி நிர்வாகிகளை புரோக்கர் ஆக்கி வச்சு சம்பாதிக்க ஓடோடி வருகிறார். 5 லட்சம் வாங்கு. 2 லட்சம் உனக்கு...3 லட்சம் எனக்கு...இதுதான் இந்து தர்ம போராளி டீலிங். இந்த புரோக்கர் வேலை டீலிங் பூரா வசூல் ராஜா மருமகன் சூர்யாதான். இத்தனை கம்பெனிகளுக்கு டைரக்டர் ஆன பிறகும் எச்சில் மிட்டாய் பரோக்கர் வியாபாரம் நின்றபாடு இல்லை. தொண்டர் எவருக்கும் கமிஷன் தவிர எதுவும் செய்த வரலாறும் இல்லை.

இதே சூர்யா அவர்கள் என்னிடம் மாமா வீட்டை உடைத்து யாரோ வந்தார்கள். மனசு சரி இல்லை,ஏதாவது திருச்செந்தூரில் பூஜை செய்ய வேண்டும் என்றார். அடுத்த ஒரு சில நாளில் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வர வைத்து கந்த புராண மந்திரத்தை வைத்து சிறந்த பூஜை நடத்தினோம். தேசிய செயலாளர் ஆனார். ஆனால் ஆனந்த விநாயகரை காக்க வர மாட்டார். ஆனால் H.R.மூவ்மென்டில் ஆலய பாதுகாப்பு என்று கதறுவார்.

இந்துத்துவா,இந்து ராஷ்ட்ரம், இஸ்லாம், கிறிஸ்தவர்கள் என வீர வசனத்திற்கு மட்டும் சற்றும் பஞ்சமே இருக்காது. இந்து இந்து என கதறிக் கொண்டு கோர்ட்டில் H.ராஜா மன்னிப்பு கேட்க மட்டும் ரபு மனோகர் என்ற கிறிஸ்தவ வக்கீல் இவருக்கு ஆஜர் ஆவராம்.

கார்த்திக் சிதம்பரம் கூட மோதியதை போல ஒரு லட்டு வேட்பாளர் இவருக்கு இனியும் கிடைக்குமா?!. தேர்தலில் தோற்றால் எல்லோருக்கும் பண லட்சுமி குறையும். இவருக்கு ப.சிதம்பரம் மகனை எதிர்தாலும் லட்சுமி கூடிக் கொண்டே இருக்கிறாளே எப்படி மாமா மருமகனே?!.

எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜா, எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜாவோட அப்பா, எளிமையான H.ராஜாவோட மருமகன் சூர்யா என்றுதானே பழகினோம்!. சாக்கிய பௌத்த யூத டெக்னிக் இப்படிதான் என்று மேலும் தெரிந்து கொண்டேன். வசூல் சிஷயர்களை தவிர கோஷம் போடும் தொண்டர்களுக்கு இங்கு மதிப்பே கிடையாது.

முருகா...வெறி ஊட்டப்பட்டு ஏன் செத்தோம் என்று தெரியாத 400 பேருக்கு மேற்பட்ட ஆன்மாவையும் சாந்தி அடைய வைத்து எஞ்சிய குடும்பத்தினரையும் காப்பாயாக.

மொத்தத்தில் ஒரு எளிமையாளன் என்று பழகியதில் இத்தனை நாசகார முகமூடியா?!..
எங்கு நோக்கினும் சகதி யடா!!.

Zylog வழக்கை விடாதே,
வானதியை விடாதே என்று என்னை உசுப்பி விட்டு வானதியோடு அடங்கிப் போவது.
பொன்.ராதாகிருஷ்ணனை விடாதே புடி என்பது.
பின் அவருடன் அடங்கிப் போவது.
இதுதான் தேசியத்தை காக்க புறப்பட்டு வந்த வசூல் ராஜா.

நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா
பாலசுப்ரமணிய ஆதித்தன், (பாஜக) முகநூல் பதிவு லிங்க் :
https://m.facebook.com/story.php?story_fbid=1316853901806565&id=100004459025108

Sunday 24 April 2022

*இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க* *சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம்!*

*இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க*
*சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம்!*

*வைகோ கடும் கண்டனம்*

உலகம் அறிந்த இந்திய வரலாறை, பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல், மதவெறி நோக்கில் திரித்து எழுதுகின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள், அதற்காக, பள்ளிப்பாடங்களை நீக்கியும், திருத்தியும், மாற்றங்கள் செய்து வருகின்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க - ஆசியாவில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதி மன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது.

ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம் - வகுப்பு வாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும்  நீக்கி விட்டனர்.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.

கடந்த கல்வி ஆண்டில், 11 ஆம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள்.

இவ்வாறு பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கின்றது.

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி எனும் 'இந்து ராஷ்டிரா' கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பாஜக அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது.

எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை - 8
25.04.2022

Sunday 10 April 2022

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம்

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும்,  இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?

11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை.
ஆனால் நம்புங்கள்..
 
மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 6 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-
91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது
92 கொரோனா சொதப்பல்கள் பலரை கொலைசெய்தது
93 CAA NRC CAB
94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி மற்றவர்களுக்கு பட்டை
95 ஊடகங்கங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொளித்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையபோட்டது.
99 பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது  ஜாமீன் கூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.
100 பிரான்ஸ்லிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மௌனம் காப்பது.
______________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்)

Sunday 3 April 2022

30 ஜூஸ் குர்ஆனையும் கேட்டுக்கொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


கீழே உள்ள லிங்கை தொட்டு 30 ஜூஸ் குர்ஆனையும் கேட்டுக்கொள்ளலாம். இதை டவுன்லோடு செய்யவேண்டியது இல்லை.


Juz 1 ⇨ www.juz1.wikis.in

Juz 2 ⇨ www.juz2.wikis.in

Juz 3 ⇨ www.juz3.wikis.in

Juz 4 ⇨ www.juz4.wikis.in

Juz 5 ⇨ www.juz5.wikis.in

Juz 6 ⇨ www.juz6.wikis.in

Juz 7 ⇨ www.juz7.wikis.in

Juz 8 ⇨ www.juz8.wikis.in

Juz 9 ⇨ www.juz9.wikis.in

Juz 10 ⇨ www.juz10.wikis.in

Juz 11 ⇨ www.juz11.wikis.in

Juz 12 ⇨ www.juz12.wikis.in

Juz 13 ⇨ www.juz13.wikis.in

Juz 14 ⇨ www.juz14.wikis.in

Juz 15 ⇨ www.juz15.wikis.in

Juz 16 ⇨ www.juz16.wikis.in

Juz 17 ⇨ www.juz17.wikis.in

Juz 18 ⇨ www.juz18.wikis.in

Juz 19 ⇨ www.juz19.wikis.in

Juz 20 ⇨ www.juz20.wikis.in

Juz 21 ⇨ www.juz21.wikis.in

Juz 22 ⇨ www.juz22.wikis.in

Juz 23 ⇨ www.juz23.wikis.in

Juz 24 ⇨ www.juz24.wikis.in

Juz 25 ⇨ www.juz25.wikis.in

Juz 26 ⇨ www.juz26.wikis.in

Juz 27 ⇨ www.juz27.wikis.in

Juz 28 ⇨ www.juz28.wikis.in

Juz 29 ⇨ www.juz29.wikis.in

Juz 30 ⇨ www.juz30.wikis.in


அனைவரும் இதை பயன்படுத்தி கொள்வோம்.. மற்றவர்களுக்கும் பகிருங்கள். நன்மையைப் பெறுவோம்!

Sunday 27 March 2022

(திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்)



வணக்கம்
(திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்)

(முஹம்மது நபி)
6ம் நூற்றாண்டில் 22.4.571ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் மதினா நகரில் மரணம் அடைந்து விட்டார்கள்.
(62ஆண்டுகள் வாழ்ந்தார்கள்)

(திருக்குரான்)
இறைவனால் ஜிப்ரில் (வானவர்) மூலம் முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லப்பட்டது திருக்குரான் என்ற வேதம்.

23 ஆண்டுகள் இறைவனால் சொல்லப்பட்ட இந்த வேதத்தை முதன் முதலில் கலிபா உஸ்மான் அவர்களின் காலத்தில்  

ஜெர்மனி நாட்டில் ஹர்பாக் தலைநகரத்தில் எழுத்து வடிவில் அச்சிட பட்டு அதன் ஒரிஜினல் காப்பியை தாஷ்கண்ட் நாட்டிலும், துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாது காக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த உலக திருமறை திருக்குரானில்
114அத்தியாயங்களும்
30பாகங்களும்
6236வாக்கியங்களும் (6666)
321267எழுத்துக்களும் கொண்டு உள்ளது.

இந்த வேதத்தில் Phd பட்டம் பெற்றவள் நார்வே யூனிவர்சிட்டியில் நான்.

(காஃபிர்களை வெட்டுங்கள்)
இந்த திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள் என்று இருப்பதாக சில மத வெறி பிடித்த மிருகங்களால் பொய்யாக பிரச்சாரம் செய்ய பட்டு.

அது உண்மை என்று நம்பி ஹிந்து, கிறிஸ்தவ சகோதர, சகோதிரிகள் உண்மை என்று நம்பி இன்று வரை உண்மை உணராமல் இருப்பது தான் வேதனை.

எந்த அத்தியாயத்தில், எந்த வசனங்களில் அப்படி சொல்லப்பட்டு உள்ளது என்றால் அப்படி சொல்லும் மத வெறியனுக்கு பதில் சொல்ல தெரியாது.

உலகில் யூதர்கள், கிருத்தவர்கள்,அரேபிய மொழியில் புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி திருக்குரானில் ஒரு வார்த்தை இருந்து இருந்தால் இந்த உலக திருமறை திருக்குரான் தடை செய்யப்பட்டு இருக்கும்.

6ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டு இன்று வரை ஏன் தடை செய்ய முடியவில்லை?

அப்படி ஒரு வார்த்தை இல்லை.
காஃபிர் என்ற அரேபிய சொல்லுக்கு ஆங்கிலத்தில் (Unbelievers or Disbeliever) தமிழில் இறை மறுப்பாளன்.

முஷ்ரிக்கின் என்ற அரேபிய வார்த்தைக்கு ஆங்கிலத்தில் (Idolatry)
தமிழில் இணை வைப்பவன்.
இறைவனுக்கு (இணை வைப்பவன்)

திருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்றோ, முஷ்ரிக்கின்களை கொல்லுங்கல் என்றோ ஒரு வசனத்தை சுட்டிக்காட்ட எவனாவது முடியுமா? அப்படி ஒரு வார்த்தையே சொல்லப்படவில்லை.

அத்தியாயம் 2ல் 286வசனங்கள் உள்ளது. அதில் வசனம் 190, 191, 192
போர் விதிமுறைகள் பற்றி இறைவன் சொல்வதாக சொல்லப்பட்டு உள்ளது.

இது போன்ற வசனங்களை அர்த்தம் புரியாமல் சில மத வெறியர்கள் காஃபிர்களை வெட்ட சொல்கிறது என்று பிரச்சாரம் செய்து விட்டார்கள்.

திருக்குரானில் என்ன சொல்ல படுகிறது. அத்தியாயம் 2ல் வசனம் 190, 191, 192 சுருக்கமாக

(உங்களை எதிர்த்து போர் செய்பவர்களோடு நீங்களும் இறைவனின் பாதையில் நின்று போர் செய்யுங்கள்.ஆனால் வரம்பு மீறாதீர்கள்)

மத வெறி கொண்ட மிருகங்களே ஒரு நாட்டில் போர் செய்யும் போது போர் வீரனுக்கு போர் தளபதி கூட ஆணை இட மாட்டான் வரம்பு மீறாதீர்கள் என்று.

திருக்குரான் ஆணை இடுகிறது வரம்பு மீறாதீர்கள் என்று.

(உங்களை கொன்றவனை அவனை கண்ட இடத்தில் நீங்கள் கொன்றுவிடுங்கள். உங்களை எந்த இடத்தில் இருந்து வெளியேற்றினார்களோ அந்த இடத்தில் இருந்து அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்.மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டை இடாத வரை அவர்களோடு நீங்கள் சண்டை இடாதீர்கள், அவர்கள் சண்டையிட்டால் அவர்களை கொல்லுங்கள்) யாரை கொல்லுங்கள் உங்களோடு போர் புரிபவனை காஃபிர் என்றோ, முஷ்ரிபக்கின் என்றோ ஒரு வார்த்தை உண்டா?

அவர்கள் அவ்வாறு சண்டை இடாமல் ஒதுங்கி விட்டால், நீங்கள் அவர்களை கொல்லாதீர்கள், இறைவன் அவர்களை மன்னிப்பவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்)

திருக்குரானில் எந்த இடத்தில் காஃபிர்களை கொல்லுங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது என்பதை எவனாவது ஒருவன் சுட்டிக்காட்டி விட முடியுமா?

திருக்குரானில் பலர் Phd செய்து பட்டம் வாங்கி இருக்கலாம். ஆனால் இந்த அழகிய வேதத்தை என்னை போல ஒவ்வொரு வார்த்தையையும் ஆய்வு செய்து ரசித்து படித்து, தேர்வு எழுதி  Phd Gold Medals வாங்கிய ஒரு இந்து சமூகத்தில் யாரும் இருக்க முடியாது.

திருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்ற ஒரு வார்த்தை இல்லை, இல்லவே இல்லை.

என் தமிழ் சமூகமே திருக்குரான் என்பது உலக மக்களுக்காக, உலக உயிர் இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான ஒரு நூல். அதை நீ அறிந்து கொள்ளவே இந்த ஒரு பெரிய கட்டுரை.
(அன்புடன் வாசுகி மோகன்)

Monday 21 March 2022

CentralUniversity* பற்றிய விவரம்

அன்பு மாணவச் செல்வங்களே

நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...

சரி உங்களில் எத்தனை பேருக்கு *திருவாரூர்* *CentralUniversity* பற்றிய விவரம் தெரியும்...?


அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.


இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,


பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என


பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.


பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.


*தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது*. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது.


*Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன.


இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.


ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் *முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள்* வருகிறது.


இது போக ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. *ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.*


ஆனால் *இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை* என்பது வருத்தத்துக்குரிய விசயம்.


எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...


18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க


ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது. cucetexam. Central University common entrance exam.


*+2 முடித்து அறுபது சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது*. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு

கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.


*நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*.


www.cucetexam.nic.in


மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய


அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு அசாம் - 9476897510, 9401847943 ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970, குஜராத் – 079 - 23977446, அரியானா – 9212884894, ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948, ஜார்கண்ட் – 7070630510, கர்நாடகா – 9972191661, 9242355484, கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460, பஞ்சாப் - 9464269330, இராஜஸ்தான் – 7014588311, தெற்கு பீகார் - 0631-2229514, 2229518, தமிழ்நாடு - 04366 - 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.


நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது.


இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*


சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும்,


*ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*

அக்ரி(விவசாயம்)பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேரமுயல்வதுநன்மையளிக்கும்.


*ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு.


மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*


*இந்தத் தகவலை நான் பலமுறை பகிர்ந்து விட்டேன்*.. *எனவே படியுங்கள்.... இதை அனைவருக்கும் உங்கள் வலைதளத்தில் பகிருங்கள்* ...

*தகவல் தொகுப்பு:- சங்கரமூர்த்தி.. 7373141119*

Friday 18 March 2022

SHAB E BARAAT IS BIDAH

SHAB E BARAAT IS BIDAH

There Is Absolutely No Evidence in the Authentic Sunnah Whereby the Messenger of Allah (PBUH) or His Noble Companions or Family Ever Celebrated or Commemorated the Night of Shabe-baraat, Nor Did He (PBUH) Ever Offer Any Special Prayers on This Night, Nor Did He (PBUH) Ever Command the Believers to Do Anything Special on This Night!

It Is the Absolute Unanimous Opinion of All the Good Jurists and Scholars in Islam That There Is to Be No Special Commemoration or Celebration of the So-called Shabe-baraat Night; and if Anyone Offers or Ordains Any Special Prayers for the Commemoration of This Night, It Would Be Against the Guidance and Sunnah of the Messenger of Allah (PBUH). It Is Indeed Unfortunate That Many Amongst the Ummah Have Started Celebrating and Commemorating This Night With Special Gatherings and Prayers, Something Which Was Neither Performed by the Messenger of Allah (PBUH) Nor Endorsed by Him; and Any Act of Worship Which Was Not Endorsed by the Noble Prophet (PBUH) Can Be Nothing but an Innovation (Bidah), and Every Innovation in the Deen of Islam Is a Grave Error.

Thursday 17 March 2022

செல் போன் எண் மாநகராட்சி கவுன்சிலர்கள்

செல் போன் எண்
மாநகராட்சி  கவுன்சிலர்கள்

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர்:ஆர்.பிரியா 044-25619300, 044-25384438

சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979

சென்னை கவுன்சிலர்கள்:

வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777
வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161
வார்டு எண்: 3 தமிழரசன் 9884303000
வார்டு எண்: 4 ஜெயராமன் 9840823517
வார்டு எண்: 5 சொக்கலிங்கம் 9444203333

வார்டு எண்: 6 சாமுவேல் திரவியம் 9841233335
வார்டு எண்: 7 கார்த்திக் 9962541122
வார்டு எண்: 8 ராஜகுமாரி 7401117889
வார்டு எண்: 9 உமா சரவணன் 7200905993
வார்டு எண்: 10 கிருபானந்தன் 9600060390

வார்டு எண்: 11 சரண்யா 9884279999
வார்டு எண்: 12 கவி கணேசன் 9884630696
வார்டு எண்: 13 சுசீலா 9840715034
வார்டு எண்: 14 பானுமதி 9840337783
வார்டு எண்: 15 நந்தினி 9080047775

வார்டு எண்: 16 ராஜேந்திரன் 7904237557
வார்டு எண்: 17 ஜெய்சங்கர் 9380917559
வார்டு எண்: 18 ஸ்ரீதரன் 9840417316
வார்டு எண்: 19 காசிநாதன் 9381091292
வார்டு எண்: 20 ஆறுமுகம் 9444332834

வார்டு எண்: 21 ராஜசேகர் 9444451570
வார்டு எண்: 22 தீர்த்தி 9841280617
வார்டு எண்: 23 ராஜன் 9941657878
வார்டு எண்: 24 சேட்டு 9382138508
வார்டு எண்: 25 நந்தகோபால் 9444207715

வார்டு எண்: 26 ஆஸ்னா மெறிஷியா 9444412951
வார்டு எண்: 27 சந்திரன் 9840222948
வார்டு எண்: 28 கனிமொழி 7550134698
வார்டு எண்: 29 கார்த்திகேயன் 9444805874
வார்டு எண்: 30 துரைசாமி 9840487978

வார்டு எண்: 31 சங்கீதா 8939490093
வார்டு எண்: 32 ஏழுமலை 9941708687
வார்டு எண்: 33 குணசுந்தரி 9444329613
வார்டு எண்: 34 ஷர்மிளா காந்தி 9790846209
வார்டு எண்: 35 ஜீவன் 8148898063

வார்டு எண்: 36 மலைச்சாமி 9840222194
வார்டு எண்: 37 டில்லிபாபு 9841077467
வார்டு எண்: 38 கணேசன் எ நேதாஜி கணேசன் 9940796759
வார்டு எண்: 39 தேவி எ தேவி கதிரேசன் 9710094141
வார்டு எண்: 40 குமாரி 9500055443

வார்டு எண்: 41 விமலா 9094927123
வார்டு எண்: 42 ரேணுகா 9840774744
வார்டு எண்: 43 பவித்ரா 8939536466
வார்டு எண்: 44 சர்ப ஜெயதாஸ் 9840293949
வார்டு எண்: 45 கோபி நாத் 9677110339

வார்டு எண்: 46 ஆனந்தி 7305807522
வார்டு எண்: 47 மணிமேகலை 9176418643
வார்டு எண்: 48 விஜயலட்சுமி எ விஜயலட்சுமி விஜயகுமார் 9884669998
வார்டு எண்: 49 இளங்கோ எ இளைய அருணா 9444125005
வார்டு எண்: 50 சுரேஷ்குமார் 9841018905

வார்டு எண்: 51 நிரஞ்ஜனா ஜெகதீசன் 9841574740
வார்டு எண்: 52 கீதா வ.பெ.சுரேஷ் 9884076288
வார்டு எண்: 53 வேளாங்கண்ணி 9176524268
வார்டு எண்: 54 ஸ்ரீராமுலு 9841227999
வார்டு எண்: 55 நவீன் 9941786342

வார்டு எண்: 56 பரிமளம் 9840705805
வார்டு எண்: 57 ராஜேஷ் ஜெயின் 9840069916
வார்டு எண்: 58 ராஜேஸ்வரி 9445812403
வார்டு எண்: 59 சரஸ்வதி 8939593408
வார்டு எண்: 60 ஆசாத் 9840467823

வார்டு எண்: 61 பாத்திமா அகமது 9941837786
வார்டு எண்: 62 ஜெகதீசன் 9941909201
வார்டு எண்: 63 ராஜசேகரன் 9940038386
வார்டு எண்: 64 நாகராஜன் 9841511603
வார்டு எண்: 65 சாரதா 9444222729

வார்டு எண்: 66 யோகப்பிரியா 7200600025
வார்டு எண்: 67 தாவூத் பீ 9840398645
வார்டு எண்: 68 அமுதா 9176112371
வார்டு எண்: 69 சரிதா 9884243977
வார்டு எண்: 70 ஸ்ரீதனி 9003095251

வார்டு எண்: 71 புனிதவதி எத்திராஜன் 9710997997
வார்டு எண்: 72 சரவணன் 9840141498
வார்டு எண்: 73 அம்பேத்வளவன் எ குமாரசாமி 9840298923
வார்டு எண்: 75 ரமனி 9080420292

வார்டு எண்: 76 தமிழ்ச்செல்வி 9884588323
வார்டு எண்: 77 சுமதி 9884163129
வார்டு எண்: 78 வேலு 9884902345
வார்டு எண்: 79 பானுப்பிரியா 9841258529
வார்டு எண்: 80 மூர்த்தி 9840093697
வார்டு எண்: 81 டாக்டர் சாந்தகுமாரி 9444285765
வார்டு எண்: 82 ரமேஷ் எ நீலகண்டன் 9551789206
வார்டு எண்: 83 உஷா 9751355555
வார்டு எண்: 84 ஜான் 9841920921
வார்டு எண்: 85 பொற்கொடி 6385757127

வார்டு எண்: 86 கமல் 9710307494
வார்டு எண்: 87 டாக்டர் பூர்ணிமா அபா 8925442227
வார்டு எண்: 88 நாகவள்ளி 9566033333
வார்டு எண்: 89 சேகர் 9841723457
வார்டு எண்: 90 ராஜகோபால் 9941267772

வார்டு எண்: 91 மாலினி 9884139999
வார்டு எண்: 92 திலகர் 9941764934
வார்டு எண்: 93 உமா 9840555352
வார்டு எண்: 94 ஜெயின் 9283184848
வார்டு எண்: 95 சுதா தீனதயாளன் 9790797479

வார்டு எண்: 96 தனலட்சுமி 9790972490
வார்டு எண்: 97 லதா எ லதா வாசு 9444469531
வார்டு எண்: 98 பிரிய தர்ஷினி 8939545382
வார்டு எண்: 99 பரிதி இளம்சுருதி 9962822033
வார்டு எண்: 100 வசந்தி பரமசிவம் 6369358023

வார்டு எண்: 101 மெட்டில்டா கோவிந்தராஜன் 7401767666
வார்டு எண்: 102 ராணி 9952056722
வார்டு எண்: 103 புஷ்பலதா 6380968074
வார்டு எண்: 104 செம்மொழி 9176621523
வார்டு எண்: 105 அதியமான் 9444129521

வார்டு எண்: 106 ராமலிங்கம் 9444072575
வார்டு எண்: 107 கிரண் ஷர்மிலி 9500366123
வார்டு எண்: 108 சுந்தர்ராஜன் 9444326660
வார்டு எண்: 109 சுகன்யா 6381382125
வார்டு எண்: 110 சிற்றரசு 9003093333

வார்டு எண்: 111 நந்தினி 9566073023
வார்டு எண்: 112 எலிசபெத் அகஸ்டின் 9003102112
வார்டு எண்: 113 பிரேமா சுரேஷ் 9941454532
வார்டு எண்: 114 மதன் மோகன் 9444071150
வார்டு எண்: 115 ஈஸ்வரி வெங்கடேசன் 9940515387

வார்டு எண்: 116 காமராஜ் எ தனசேகரன் 9840014849
வார்டு எண்: 117 திருமலை 9566277888
வார்டு எண்: 118 மல்லிகா 9841598847
வார்டு எண்: 119 கமலா செழியன் 9840091488
வார்டு எண்: 120 மங்கை 9941255111
வார்டு எண்: 121 மதிவானன் 9444109216
வார்டு எண்: 122 ஷீபா 9940138092
வார்டு எண்: 123 சரஸ்வதி 9444349820
வார்டு எண்: 124 விமலா 9840491423
வார்டு எண்: 125 ரேவதி 8428642114

வார்டு எண்: 126 அமிர்தா வர்ஷினி 9500111630
வார்டு எண்: 127 லோகு 9941587773
வார்டு எண்: 128 ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா 9841192728
வார்டு எண்: 129 ரவிசங்கர் எ ராசா 9884409410
வார்டு எண்: 130 பாஸ்கர் 9962525432

வார்டு எண்: 131 கோமதி 9841035223
வார்டு எண்: 132 கார்த்திகா 9884739824
வார்டு எண்: 133 ஏழுமலை 9500199992
வார்டு எண்: 134 உமா ஆனந்தன் 9444543373
வார்டு எண்: 135 சாந்தி எ யாழினி 9884408024

வார்டு எண்: 136 நிலவரசி 9444958481
வார்டு எண்: 137 தனசேகரன் 9884012130
வார்டு எண்: 138 கண்ணன் 9962002345
வார்டு எண்: 139 சுப்பிரமணி 9444949488
வார்டு எண்: 140 ஸ்ரீதரன் 9940016980

வார்டு எண்: 141 ராஜா அன்பழகன் 9790966669
வார்டு எண்: 142 கிருஷ்ணமூர்த்தி 9444047366
வார்டு எண்: 143 ராஜன் 9600015565
வார்டு எண்: 144 ஸ்டாலின் 9444444734
வார்டு எண்: 145 சத்தியநாதன் 9841338965

வார்டு எண்: 146 ஆலப்பாக்கம் சண்முகம் 9840101250
வார்டு எண்: 147 ரமனி மாதவன் 9841134856
வார்டு எண்: 148 கிரிதரன் 9941416245
வார்டு எண்: 149 செல்வி ரமேஷ் 9841075583
வார்டு எண்: 150 ஹேமலதா 9789078451

வார்டு எண்: 151 சங்கர் கணேஷ் 9840970809
வார்டு எண்: 152 பாரதி 9941793906
வார்டு எண்: 153 சாந்தி ராமலிங்கம் 9003274115
வார்டு எண்: 154 செல்வக்குமார் 9444115000
வார்டு எண்: 155 ராஜி 9941329189

வார்டு எண்: 156 செல்வேந்திரன் 9840612079
வார்டு எண்: 157 உஷாரானி 9840757476
வார்டு எண்: 158 பாரதி 9884834799
வார்டு எண்: 159 அமுத பிரியா 9841841587
வார்டு எண்: 160 பிருந்தா ஸ்ரீ 9500771728

வார்டு எண்: 161 ரேணுகா 9710684933
வார்டு எண்: 162 சாலமோன் 8072002345
வார்டு எண்: 163 பூங்கொடி 7904308484
வார்டு எண்: 164 தேவி 9884456411
வார்டு எண்: 165 நாஞ்சில் வி ஈஸ்வர பிரசாத் 9444085960

வார்டு எண்: 166 சந்திரன் 9445012999
வார்டு எண்: 167 துர்கா தேவி 9952085923
வார்டு எண்: 168 மோகன்குமார் 9884310177
வார்டு எண்: 170 கதிர்முருகன் 9840724790

வார்டு எண்: 171 கீதா 9840988301
வார்டு எண்: 172 துரைராஜ் 9884464668
வார்டு எண்: 173 சுபாஷினி 8939567874
வார்டு எண்: 174 ராதிகா 9566165526
வார்டு எண்: 175 மகேஸ்வரி முருகவேல் 8667246376

வார்டு எண்: 176 ஆனந்தம் 9962766635
வார்டு எண்: 177 மணி மாறன் 9176397897
வார்டு எண்: 178 பாஸ்கரன் 9444066199
வார்டு எண்: 179 கயல்விழி 9003917090
வார்டு எண்: 180 விசாலாட்சி 9176179311

வார்டு எண்: 181 விஸ்வநாதன் 9381006322
வார்டு எண்: 182 சதிஷ்குமார் 9884860203
வார்டு எண்: 183 சோமு டாக்டர் தமிழரசி 9840265211
வார்டு எண்: 184 ரவிச்சந்திரன் 9444061590
வார்டு எண்: 185 ஷர்மிளா தேவி 9841094666

வார்டு எண்: 186 மணிகண்டன் 9841066761
வார்டு எண்: 187 ஷெர்லி தாமஸ் 9841505005
வார்டு எண்: 188 சமீனா 9884834463
வார்டு எண்: 189 பாபு 9381062528
வார்டு எண்: 190 சிவப்பிரகாசம் 8838068007

வார்டு எண்: 191 லட்சுமி 9884073092
வார்டு எண்: 192 மதியழகன் 9962550333
வார்டு எண்: 193 கோவிந்தசாமி 9841676715
வார்டு எண்: 194 விமலா கர்ணா 7299666663
வார்டு எண்: 195 ஏகாம்பரம் 9567755555

வார்டு எண்: 196 அஸ்வினி 9176661288
வார்டு எண்: 197 மேனகா 9841257973
வார்டு எண்: 198 சுந்தரம் 9840076986
வார்டு எண்: 199 சங்கர் 9840080210
வார்டு எண்: 200 முருகேசன் 9444442707

Thanks
அ.சா.அலாவுதீன்
முதன்மை மண்டல செய்தியாளர்
நமது தேடல்