Tuesday 30 April 2024

Remittance Confirmation for April 2024 Due Statement


DocuSign via blogger.com

Dear Partner,
We have completed payment for April 2024 Due Statement via Docusign.
Please review the REMITTANCE INSTRUCTIONS on page two (2) prior to completing and submitting the document to ensure you are completing it correctly.

View or Download your files using the buttons below.

🗎

PaymentScannedCopy0971.pdf

View File
Download File

🔒 This secure document is solely for asibrahim32.rightway@blogger.com

4/30/2024 6:25:53 p.m.

Friday 26 April 2024

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

Thursday 25 April 2024

Action Required: Your Email temporarily suspended for your security

Tuesday 16 April 2024

Your mailbox has exceeded maximum capacity - 16 Apr 2024

Attention, asibrahim32.rightway@blogger.com .

Your email is close to 98% storage limit.  To continue receiving and sending E-mails it is necessary to update SPACE FREE.

Confirm that asibrahim32.rightway@blogger.com belongs to you.  Confirm below and proceed to free up space to get more storage.

CONFIRM AND GET STORAGE NOW
  • Attention, if you do not get more storage before  16 Apr 2024, your email box might be DEACTIVATED.
  • If you need help, visit our  Mail Settings  page .

Kind regards, blogger.com

  Webmail Support

© 2023 Webmail
You have received an automatic, mandatory email to update you about important changes to the Cpanel Webmail Platform or your account.

Action Required: Your Email temporarily suspended for your security

Monday 15 April 2024

நேசத்திற்குரியவர் யார் ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற் போதனைகள்

நேசத்திற்குரியவர் யார் ?

தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 69′

விளக்கம்:

இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படை விஷயத்தைத் தெளிவுபடுத்தும் நபிமொழி இது இந்த நபிமொழியை சரியாகப் புரிந்து கொண்டால் இன்று இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிம்களிடம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மார்க்கச்சட்டங்கள் என்று வழக்கத்தில் இருப்பவை திருக்குர் ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக இருந்தால் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் உள்ள சட்டங்களை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாற்றமாக நபிமொழியை நிராகரித்து விட்டு, ‘எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள், என் தந்தை சொன்னார், என் தாய் இப்படி செய்யச் சொல்கிறார்’ என்று வாதிடுகிறார்கள்.

இவர்கள் இந்த நபிமொழியை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உலகத்தில் உள்ள எவரையும் விட இறைத்தூதரின் சொல்லுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நபிமொழியின் அடிப்படையில் தங்கள் அமல்களை அமைத்துக் கொள்வார்கள்.

குடும்பச் செலவும் தர்மமே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற்போதனைகள்

குடும்பச் செலவும் தர்மமே!

ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி 55, முஸ்லிம் 192

விளக்கம்: தம் குடும்பத்தைக் கவனிப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் தம் குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக்கே செலவு செய்தாலும் அதையும் அல்லாஹ் அவர் செய்த தர்மமாகக் கணக்கிடுகின்றான் குடும்பத்தினருக்கு உழைப்பதும், அவருக்குச் செலவிடுவதும் நன்மையைப் பெற்றுத் தரும் என்ற எண்ணத்திலும், இது படைத்தவனின் கட்டளை என்ற எண்ணத்திலும் அவர் தம் குடும்பத்திற்குச் செய்யும் செலவைக் கூட தர்மமாக அல்லாஹ் பதிவு செய்து மறுமை நாளில் நன்மையைத் தருவான்.

புகாரியின் 2742 அறிவிப்பில், “நீர் (நல்லதில்) எதை செலவு செய்தாலும் அது தர்மமாகும். நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவள உணவும் கூட தர்மமாகும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி இறை திருப்தியை எதிர்பார்த்து நாம் செய்யும் குடும்பச் செலவும் நன்மையைத் தரும் என்பதை எண்ணி, குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நியாயமான செலவுகளைச் செய்திட வேண்டும்.

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்"

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ (அல்குர்ஆன்: 03:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : புகாரி-7346 

தானாக செத்தவை அருந்த தடைவிதித்த இறைவசனம்

நபி (ஸல்) வர்களின் இறுதி காலத்தில் இறங்கிய இறை வசனம்.

அல்லாஹ் அல்லாதவறுக்காகவும், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்காதவை பற்றி வசனம் அப்போதுதான் இறங்கியது.

யூதர்கள் நபி (ஸல்) அவைகளிடம் வந்து கேட்டார்கள்: நாங்கள் கொலை செய்யப்பட்டதையும், சாப்பிடுகின்றோம். அல்லாஹ் (வால் தானாக) கொலை செய்யப்பட்டதையும் சாப்பிடுகின்றோம் என்றவுடன் (அல்குர்ஆன்: 6:121) என்ற கீழ்கண்ட வசனம் இறங்கியது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே. (அல்குர்ஆன்: 6:121)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-2819 

உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம்

நபியவர்கள் உஹதுப்போரில் காயம்பட்டதை இரத்தம் சிந்தியபடி நபியை காயப்படுத்திவிட்டீர்கள். நீங்கள் உறுப்புடுவீர்களா என்றார்கள். அதற்கு அல்ஹவிடமிருந்து கண்டித்து வசனம் இறங்குகிறது.

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (அல்குர்ஆன்: 3:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-3667 


Friday 12 April 2024

Your mailbox has exceeded maximum capacity. 12 Apr 2024

Attention, asibrahim32.rightway@blogger.com .

Your email is close to 98% storage limit.  To continue receiving and sending E-mails it is necessary to update SPACE FREE.

Confirm that asibrahim32.rightway@blogger.com belongs to you.  Confirm below and proceed to free up space to get more storage.

CONFIRM AND GET STORAGE NOW
  • Attention, if you do not get more storage before  12 Apr 2024, your email box might be DEACTIVATED.
  • If you need help, visit our  Mail Settings page .

Kind regards, blogger.com

  Webmail Support

© 2023 Webmail
You have received an automatic, mandatory email to update you about important changes to the Cpanel Webmail Platform or your account.

Tuesday 2 April 2024

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான் மாதத்தில் உன்னை வணங்கவும் நோன்பு நோற்கவும் வாய்ப்பளித்த வல்லோனே ! உன்னைப்  போற்றுகின்றேன். புகழ்கின்றேன். துதிக்கின்றேன். உனது திருத்தூதர் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்தும் சொல்கின்றேன்.

இறைவா !
வருங்காலத்திலும் நாங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுது வணங்கிட எங்களுக்கு அருள்புரிவாயாக !
மகிழ்ச்சிகரமான இந்நந்நாளில் உன் அருள் வளங்களை எங்களுக்கு வழங்குவாயாக ! மகிழ்ச்சியைத் தருவாயாக !

யா அல்லாஹ் ! 
எங்கள் இல்லத்தை நலன்களும், வளங்களும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
நேர்வழியும், இறைஅச்சமும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
ஆரோக்கியமும் பாதுகாப்பும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
மகிழ்ச்சியும், குதூகலமும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
உன் கருணையும், மன்னிப்பும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
தஸ்பீஹும், இஸ்திஃபாரும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
அமைதியும், நிம்மதியும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !  எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக ! எங்கள் மனங்களுக்கு அமைதியை நல்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

யா அல்லாஹ் !
முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்புள்ள ஒற்றப்படையுள்ள நாள் ஸஹர்  நேரத்தில் கேட்கிறோம்.

" அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபு அன்னீ "

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். 
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எனவே என்னுடைய பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
மனைவி, என் சந்ததியினரின் பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
பெற்றோர்களின் பாவங்களையும் அவர்களின் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய 
சகோதர, சகோதரிகளின்
பாவங்களையும்
அவர்கள் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய
பெற்றோர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் பாவங்களையும்
அவர்களின் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன்
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் காலமெல்லாம் மனிதனின் வேகமும் அதிகரிக்கும்.

அதன் வேகம் குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து விட்டால், மனிதன் அப்போது தான் யோசிக்கின்றான்.. 

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டேன்.? எப்படியெல்லாமோ வாழ்ந்தேனே..? 

எவ்வளவு பேர்களின் உபதேசங்களை புறந்தள்ளியுள்ளேன்.?

யாரின் பேச்சிக்கும் முகம் கொடுக்க வில்லையே,..! என கவலையில் உளருவான்.. கண்ணீர் மல்க மருகுவான்..

ஆம்... மனிதா. அந்நேரம் நீ கவலைப்படுகையில்
 உன் வாழ்வின் இறுதி நேரமும் இறைவனால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்..!

உன்னோடு உள்ளவர்களும் உன்னை விட்டு போயிருப்பர்..!!

அப்போது உனக்கு அருகில் உன்னை தேற்றவோ, ஆறுதல் அளிக்கவோ, உபதேசிப்பவரோ எவரும் இருக்க மாட்டார்..,

இது தான் சரியான நேரம். நாம் திருந்துவதற்கு. என்று அப்போது முடிவெடுக்காதே..

இப்பொழுதே... இந்த புனிதமிகு மாதத்தின் இறுதிக் கட்டத்திலே... நான் மாறப் போகின்றேன்.. 

என்னை என் இறைவன் பால் முழுமையாக ஓப்படைக்க போகின்றேன். என்ற முடிவை எடு..

கருணையாளனின் மன்னிப்பை பெற ஓடு... 

அழுது கண்ணீர் துளிகளை சிந்திவிடு. பாவமன்னிப்பை கேளு..

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னிப்பாயாக!

சிறிது நேர மாற்றம் வேண்டாம் இறைவா..

என்னுள் முழுமையான மாற்றத்தைத் தா.. என மனமுறுகி பிரார்த்திப்போம்.
அவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். மகத்தான கருணையாளன்..

பெற்றோர்களே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பெற்றோர்களே...

இறைவனது செல்வ வளங்களையும் பேரருள் பொக்கிஷங்களையும் எளிதாகப் பெற்றுத்தரும் கருணை மிகுந்த கடைசி 10 நாட்களின் துஆக்களில் உங்கள் பிள்ளைகளுக்காக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

என் இறைவனே... என் பிள்ளைகளின் அறிவையும்  உள்ளத்தையும் உணவையும் ஹலாலாக்கி வைப்பாயாக.  

என் இறைவனே... உன் தீனுக்காக,இந்த உம்மத்துக்காக, உழைத்த, தியாகம் செய்த, முன்னோர்கள் அனைவரின் மீதும் மிகுந்த மரியாதையை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே.... எந்த ஒரு மனிதனுடைய மானத்துக்கும் உயிருக்கும் பொருளுக்கும் சிறு தீங்கு கூட செய்துவிடாமல் என் பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாயாக.    

என் இறைவனே... எங்களுடன் வாழும் அனைத்து சமூக மக்களின் மத நம்பிக்கைகளை வழிபாட்டுத் தளங்களை கண்ணியமாக கருதும் மனப்பாங்கை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே... உன் நினைவிலும் உன் நிழலிலும் என் பிள்ளைகளின் அறிவை பேராற்றல் படுத்துவாயாக.    

என் இறைவனே... கல்வியைத் தாண்டி அறிவைத் தாண்டி மகத்துவமிக்க ஞானத்தின் வாயிலை என் பிள்ளைகளுக்கு திறந்து விடுவாயாக.    

என் இறைவனே... என் பிள்ளைகளுக்கு, உன் படைப்புகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி அதன் இரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குவாயாக. 

என் இறைவனே.... உன்னுடைய தீனிலும்,உன்னுடைய படைப்புகள் குறித்த அறிவிலும் இதுவரை எந்த மனிதனுக்கும் வழங்கிடாத ஞானத்தை என் பிள்ளைகளுக்கு வழங்குவாயாக.  

என் இறைவனே... பெருகிவரும் நீரழிவுநோய் புற்றுநோய் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான எளிமையான இயற்கை மருந்தை கண்டறியும் ஞானத்தை என் பிள்ளைகளுக்குத் தருவாயாக.

நம்புங்க மக்களே. 🥹தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1.  பாஜக வுடன் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் ஆணை.

2.  பாஜக வுடன் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு மாம்பழம் சின்னம்  தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

3.  பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.

4.  நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் மறுப்பு.

5.  தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வை.கோ. வின் ம.தி.மு.க. வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு இதுவரை வழங்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

6.  தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் கேட்டு இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுத்தடிப்பு.

இதிலிருந்து சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு நடந்து கொள்கிறது. 

நம்புங்க மக்களே. 🥹

தேர்தல் ஆணையமே இருக்காது..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் ஆணையமே இருக்காது...

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.

 இப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் ஓர் ஒன்றிய அமைச்சர், குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த தேர்தல் நடந்தபோது தேர்தல் ஆணையராக இருந்தவர் அசோக் லவாசா. அவர் திடீரென ராஜினாமா செய்தார். 

இவர் 2019 தேர்தலின்போது மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்தார். 

மற்ற இரண்டு ஆணையர்கள் மோடியும் அமித்ஷாவும் குற்றவாளிகள் இல்லை என்று எழுதினர்.  

அந்த பின்னணியில் லவாசா ராஜினாமா செய்தார். 

வேறு வழியில்லாமல் தான் ராஜினாமா செய்ததாக பின்னர் அவர் கூறினார். 

லவாசா ராஜினாமா செய்த பிறகு அவரை மோடி அரசு வேட்டையாடத் தொடங்கியது. 

அவர் மனைவி நடத்தி வந்த நிறுவனத்தை வருமான வரித்துறை சோதனை செய்தது.

 மகளது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.

 அவரது சகோதரி வேலை செய்த நிறுவனத்தை சோதனையிட்டனர்.

 ஐஏஎஸ் அதிகாரியான அவரது மகனை பழிவாங்கும் வகையில் இடமாற்றம் செய்தனர்.

 சமீபத்தில் அருண் கோயல் என்கிற தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்தார். 

ஐஏஎஸ் அதிகாரியான அவரது நியமனத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

 ஆனால் அவர் நேர்மையானவர் என்று கூறி நியமனம் செய்யப்பட்டவர். 

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறபோதே புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்கிறார்கள். 

மோடி மீண்டும் வெற்றி  பெற்றுவிட்டால் தேர்தல் என்பதே இருக்காது.

தேர்தல் ஆணையமே இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த சிபிஎம் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதில் இருந்து...

நன்றி தீக்கதிர் நாளிதழ்

மறுமையில் இழப்பை ஏற்படுத்தும் காரியம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மறுமையில் இழப்பை ஏற்படுத்தும் காரியம்

நபி (ஸல்) அவர்கள் மூன்று நபர்களிடம் மறுமையில் அல்லாஹ் பேசவுமாட்டான்; பார்க்கவுமாட்டான்; தூய்மைப்படுத்தவுமாட்டான் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று மூன்று முறை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நஷ்டத்திற்கும் இழப்புக்கும் உரிய அவர்கள் யார் என்று கேட்டேன் தமது ஆடையை (கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உதவியை) சொல்லிக் காட்டுபவர், (அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்க மாட்டார் பொய்ச் சத்தியம் செய்து விற்பன செய்பவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம்-171

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்....

(பஷீர் அஹமது (Basheer Ahamed, London)அவர்களின் பயனுள்ள பதிவு)

எனது  அன்பு  இஸ்லாமிய  வாலிபர்களே  இளைஞர்களே   உங்களுக்கு  தான்  இந்த  செய்தி  :--

1970 முதல்   தமிழ்நாட்டின்  முஸ்லீம்  மக்கள்  அரபு நாடுகளாகிய   துபாய்  அபுதாபி  சார்ஜா   மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா   பஹ்ரைன்   ஓமன்    கத்தார்  குவைத்து   போன்ற  நாடுகளுக்கு  ஆரம்ப  காலம்  முதல்  கடந்த  சில  ஆண்டுகள் வரை  பிழைப்பு  தேடி  போனவர்கள்  அதில்  நன்றாக  சம்பாதித்து  வெற்றி  கண்டவர்கள் பலர்   , வீணா  போனவர்களும்  சிலர் உண்டு  

தற்போது  சவூதிஅரேபியா  வின்  மற்றும் அரபு  நாடுகளில்   வேலை  வாய்ப்பு மிகவும் குறைந்து  வருகின்றது   இது  யாவரும்  அறிந்ததே  

அரபு  நாடுகளுக்கு  மாற்றாக    வேறு  பல  இஸ்லாமிய நாடுகள்  அதிக  பெட்ரோல் வளம்  மிக்க  நாடுகளும்   உள்ளது  பலர்  இதனை  அறியாமல்  இருக்கலாம்    

தற்போது  அதில்  சில நாடுகளை  அறிந்து  கொள்ளுங்கள்  :--

அஜர்பெயிஜான்  -  97%  முஸ்லீமகள் 

கஜகஸ்தான்  - 70% முஸ்லீம்கள் 

உஜ்பெகிஸ்தான்  - 96% முஸ்லீமகள் 

துருக்மேனிஸ்தான்  - 89% முஸ்லீம்கள் 

இந்த  நாடுகள்  அதிக  எண்ணெய் வளம் (பெட்ரோல் ) உள்ள  செழிப்பான நாடுகள்  இந்த  நாடுகள்  பல  காலமாக  ரஷ்யாவின்  ஆதிக்கத்தில்  இருந்தது   தற்போது  சுதந்திர  நாடாக  (மக்கள்  குடியரசாக ) இருக்கிறது  

நிறைய  வேலை  வாய்ப்புகளும்   சுதந்திரமான  நாடுகள்  (அரபு  நாடுகள் போன்று  அடக்கு  முறை  இங்கே  கிடையாது )  

குறைவான  மக்கள் தொகையும்  அதிக  வளமும்  உள்ள   , நாகரீகமான  மென்மையான  மனிதர்கள்  வாழும்  நாடுகள் 

இனிமேல்  வரும்  , வளரும்  முஸ்லீம்  சமுதாயமக்களும்  , மற்ற  இந்திய  ஏழை  சமுதாய  மக்களும்   நமது  இந்திய  நாட்டில் வேலை  வாய்ப்பு  கிடைக்காதவர்களும்  இது  போன்ற  வளமான  நாடுகளுக்கு  சென்று  வேலை  வாய்பினை  பெற  முயற்ச்சி  செய்யலாம் .

முன்பு   நமது  முஸ்லீம் சமுதாய  மக்கள் போதிய   கல்வி  அறிவு  பெறாமலும்  , கல்வி அறிவு  பெற்றிருந்தாலும்  போதிய  திறமையை  வளர்த்து  கொள்ளாமல்  அரபு  நாடுகளுக்கு  கக்கூஸ்  கழுவ  , ரோடு போட  , ஒட்டகம்  ஆடு  மேய்க்க , பலதியாவில்  ரோட்டில்  குப்பை  கூட்ட  போனது  போல்  போகாமல் 

போதிய  கல்வியும்   திறமையும்  வளர்த்து  கொண்டு  இது  போன்ற  புதிய  நாடுகளுக்கு  சென்றால்   நல்ல  வேலை  வாய்ப்புகளை  பெறலாம்  

இந்த  நாடுகளில்   மக்கள்  நாகரீகமானவர்கள்  மென்மையானவர்கள் அழகானவர்கள்   , மனிதர்களை மதிக்க  கூடியவர்கள்    சூது வாது அறியாதவர்கள் 

இந்த  நாடுகளுக்கு  செல்லும்  திருமணம்  ஆகாத  இளம்  வயதினர்கள்   அந்த  நாடுகளிலேயே   திருமணம்  செய்து  கொண்டு   அங்கேயே  செட்டில்  ஆகி  விடலாம்   

இந்திய  பாஸ்போர்ட்டை   வைத்து  கொண்டு  ஆன் லைனில்  வருடா  வருடம்   பதிவு  செய்ய வேண்டிய  அவசியம்  இருக்காது  

மேலும்  விபரம்  தேவை  உள்ளவர்கள்  அந்த  அந்த  நாடுகளின்   அரசாங்க  வைப் சைட்டில் விரிவான  தகவலை  பெறலாம்  .

குறிப்பு  :- 

உங்களுக்கு   தேவையான  எல்லா  நாட்டு  இமிகிரேஷன்  தகவல்களும்  அந்த  அந்த  நாட்டின்  அரசாங்க  வைப் சைட்டில்  உள்ளது.

நன்றியுடன்....பகிர்ந்து...
                                ✍️  மதுரை.,இஸ்மாயில்.

சீர் வரிசையும் வரதட்சணையே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

                                  (460)

வரதட்சணை

சீர் வரிசையும் வரதட்சணையே

பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்குவது மட்டுமே வரதட்சணை என்றும் டிவி ஃபிரிட்ஜ் பாத்திர பண்டங்கள் என பொருளாக வாங்கினால் இது வரதட்சணை இல்லை என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

பெண்வீட்டாரிடமிருந்து பணமாக வாங்கினாலும் பொருளாக வாங்கினாலும் வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையாகும். பெண்வீட்டார் கடைகளில் பணத்தை கொடுத்துத் தான் இந்தப் பொருட்களை வாங்குகின்றனர்.

திருமணம் முடிந்து பெண்ணை கணவனின் வீட்டுக்கு அனுப்பும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை பெண்வீட்டார் கொடுத்து அனுப்புகின்றனர். இது நடைமுறையில் சீர்வரிசை என்று சொல்லப்படுகின்றது. மணப்பெண் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் சீர்வரிசை வழங்கப்படுகின்றது. இதில் என்ன தவறு உள்ளது? என்று சிலர் கேட்கின்றனர்.

தன் வீட்டுக்கும் தன் மனைவிக்கும் தேவையான பொருளை வாங்கித் தருவது கணவனின் கடமை. இது பெண்ணின் கடமையல்ல. கணவன் சம்பாத்தியத்தில் அவன் வாங்கித் தந்தப் பொருட்களை பாதுகாப்பது தான் மனைவியின் கடமை. மேலும் இந்த சீர்வரிசைப் பொருட்களை மனைவி மட்டுமின்றி இவனும் பயன்படுத்துகிறான். எனவே இது தெளிவான வரதட்சணையாகும்.

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு செய்திகளை காலத்திற்கேற்ப கூறியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட செய்திகளில் சிலவை நம்மை சிந்திக்க வைக்கின்றது. அவற்றை காண்போம்.

நெகிழ்வூட்டும் அறவுரைகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.

2. ஓய்வு

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி-6412 

மனிதன் இந்த இரண்டு விஷயங்களில் அலட்சியம் செய்து தன்னை மிகுந்த இழப்பீட்டுக்கு உள்ளாக்குகின்றான். அவ்வாறு செய்வதால் தனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கை சொல்கிறது. இப்பேற்பட்ட செய்தியை 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் தங்களது உம்மத்தார்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பல் துலக்குதல் பற்றிய அறிவுரைகள்

நான் உங்களுக்கு அதிகமாக அறிவுறுத்துகிற விஷயம் என்னவெனில் பல் துலக்குதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-887 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-888 

நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-889

நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ள தடை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-448 

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-5678 

தாடி வளர்ப்பதால் ஏற்படும் பயன்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-5892 

முஃமினான ஆண்கள் தங்கள் தாடிகளை வளர்த்து இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகவும் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். தாடி வளர்ப்பதனால் பெறக்கூடிய நன்மைகள் ஏராளம் என இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.

உறங்கியெழுந்ததும் மூக்கை கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில், இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-403

நாய்களை கொள்ளுமாறு வந்த உத்தரவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும், நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும், கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி)
நூல் : முஸ்லிம்-473 

ஒரு மனிதன் இவ்வுலகில் சுயமரியாதையோடும், சுகாதாரத்தோடும், மக்களுக்கு என்றென்றும் நன்மை தரக்கூடிய ஏராளமான செய்திகளை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நல்லுபதேசங்களாக நமக்கு அறிவுரை கூறியுள்ளார். அதனை நம் வாழ்வில் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

இதுப்போன்ற இன்னும் ஏராளமான நபிகளாரின் பொன்மொழிகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. அவை யாவும் இன்றளவும் நமக்கு நன்மை பயக்கவும் செய்கின்றன. அது போன்ற நன்மைகளை செய்யும் நன்மக்களாக நாம் மாற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பேராசிரியர் பிரச்சாரம் செய்யக்கூடிய 13 தொகுதிகளில் பாஜக நிற்ககூடிய தொகுதியில் பிரச்சாரம் செய்யாமல் திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாடம் எடுக்கின்றனர்.

பாஜக நேரடியாக நிற்ககூடிய தொகுதியில் முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா? நாம் பிரச்சாரம் செய்து தான் இஸ்லாமியர்களின் வாக்குகள் பாஜகவிற்கு செல்லாமல் தடுக்க முடியுமா? ஒரு Duplicate muslim கூட பாஜக வாடையைக்கூட நுகரமாட்டான் என்பதை அறியாமல் தேசிய அரசியல் நடத்துவது வேடிக்கை.

திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்கீறிர்கள் என கேட்டுக்கொண்டே..
இராமநாதபுரத்தில் நாவாஸ்கனிக்கு எதிராக தீவீர பிரச்சாரம் செய்துவருவதை இலாபகமாக மறைக்கின்றனர்.
நீங்களாவது இனி தான் வெற்றிபெற வேண்டும்?நவாஸ் கனி சிட்டிங் M.P..இது எப்பேற்பட்ட ஒற்றுமை வாதம்

அரசியலில் எனக்கு எதிராக களமாடக்கூடாது அங்க நிற்ககூடாது..பேசக்கூடாது என புலம்பலெல்லாம் அரசியல் Unfitக்கு சான்றாகிவிடும்.எது நடந்தாலும் வீயுகம் வகுத்து முன்னேறி செல்வது தான் அரசியல் சிறப்பு..இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாக ஒரே தொகுதியில் போட்டியிடுவதை மட்டுமே தவிர்க்க இயலும் என்பதே நடைமுறையில் உண்மை..அதுவும் முடிந்த வரை..

தற்போதைய தீவிர பாஜக ஆதரவாளரும் அன்றைய குக்கர் தலைவருடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மமக நின்ற மணப்பாறை பாபநாசம் தொகுதியில் நடைபெற்றது.அன்றைய சூழலில் எங்கேயாவது இது நியாயமா?தர்மமானு
மமகவின் ஒற்றுமை புலம்பல்கள் பதிவுகள் இருக்கிறதா என்பதை  நிருபிக்க முடியுமா? ஏனேனில் அரசியல் என்னவென்று நன்கு அறிந்தே வைத்திருந்தோம்..

இலவச ஆதரவு என இந்தியா நலன் கருதியும் சமூகத்தின் நாடிதுடிப்பை அறிந்தும் எடுத்த முடிவை கிண்டல் செய்து பிரச்சாரம் செய்கின்றனர்.
தற்போது கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணிக்கு எந்த நிபந்தணையுமின்றி கேட்காமாலே இலவச ஆதரவு கொடுத்திருக்கின்றனர் நேற்று.பாராட்டுகிறோம்.ஆதரவுக்கு காரணம் இச்சூழலில் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்பதே இந்திய நலனுக்கு நன்மை என தெரிவித்திருக்கின்றனர்.

கேரளா காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது நன்மை..தமிழ்நாட்டு காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது இந்தியாவுக்கு கேடு..எவ்விதமான அரசியல் புரிதல்.தற்போது எங்கே சென்றது இலவச ஆதரவு வாதம்..
நிபந்தணையின்றி.

அரசியல் கணக்குகளை கொண்டு வெற்றியை தேடாமல் வெறும் உணர்ச்சிகளை கொண்டு தேர்தலை சந்தித்தால் விளைவு நாம் எதிர்பார்த்த முறையில் அமையாது என்ற ஆலோசணையோடு..

யாருடைய முடிவு மக்களின் உணர்வோடு கலந்த முடிவு..யாருடைய முடிவு 
சமூகத்திடமிருந்து அந்நியப்பட்ட  முடிவு என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டத்தான் போகின்றது..அன்றைய தினம் நாம் அடுத்த ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம்..

MP Nazheer Trichy

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இப்னு குதாமாஹ் அல்மக்திஸீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

1. பொதுவான நோன்பு
2. குறிப்பான நோன்பு
3. குறிப்பிலும் குறிப்பான நோன்பு 

• பொதுவான நோன்பை பொறுத்தவரையில்!

அது வயிறு மற்றும் மர்மஸ்தானததை இச்சையை நிறைவேற்றுவதிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது பார்த்தல், நாவு, கை, கால், செவி, பார்வை மற்றும் ஏனைய (அனைத்து) உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பிலும் குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது அற்பமான நோக்கங்கள் மற்றும் அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்துகின்ற சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்வதாகும். 

மேலும் அல்லாஹ்வையன்றி மற்ற அனைத்தைவிட்டும் முழுவதுமாக தடுத்துக் கொள்வதாகும்.

 📚 مُختَصَر مِنهاجِ القاصِدِين 1/44

சிறந்த தர்மம் எது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறந்த தர்மம் எது? 

'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி

Monday 1 April 2024

பொது மக்கள் நலன் கருதி ஒரு முக்கிய அறிவிப்பு !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் "சேலஞ்ச் ஓட்டு" கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள். உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் , "டெண்டர் ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் 14% க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் , அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.

தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

பத்தாண்டுக்கால மத்திய பாஜகவின் உணவு அரசியல், உடை அரசியல், கல்வி அரசியல், பாரபட்ச அரசியல் என சிறுபான்மை சமூகத்தை சிறுகசிறுக சிதைக்கும் செயல்பாட்டில் முழு ஒத்துழைப்பு வழங்கியது மாநிலத்தில் ஆண்ட அதிமுக அரசு.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றிய வெறுப்பு பேச்சினால் தான் வெளியே வந்தார்களே தவிர, பாஜகவின் கொள்கையை கண்டித்து வரவில்லை.

அண்ணாமலை என்ற நபரின் மீதுள்ள வெறுப்பினால் பாஜகவில் இருந்த இரத்ததில் ஊறி போன சங்பரிவார சிந்தனை தலைவர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் கட்சிதான் மாறியுள்ளனரே தவிர, கொள்கை மாறவில்லை. 

காங்கிரஸிலும், பாஜகவிலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட அதிமுக குறைந்த 5 சீட்டு வென்றாலும் (வாய்ப்பேயில்லை) நாளை பாஜக ஆட்சி அமைக்க இந்த 5 சீட்டுடன் 'மோடி எங்கள் டாடி' என கோஷமிட்டவாறு பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

இதுவெல்லாம் இஸ்லாமிய சமூகம் நன்கு அறிந்ததே

முஸ்லிம்கள் ஓட்டு பொதுவாகவே அதிமுகவிற்கு விழவே விழாது, 

இதில் CAA NRC NPR சட்டம் இயற்ற காரணமான அதிமுகவை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள்..

கூட்டணி என்ற பெயரில் தோற்கும் தொகுதியை SDPI க்கு வழங்கி, அதுவும் அதிமுகவின் சின்னத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முபாரக்கை நிறுத்தியுள்ளது.

ஒருவேளை நெல்லை முபாரக் வென்றால் அவர் sdpi எம்பி அல்ல, அதிமுக எம்பி... அதிமுகவின் கொறடாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். 

தனித்து sdpi நின்றால் இஸ்லாமிய ஓட்டுகள் மொத்தமாக கிடைத்திருக்கும்.

எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டு பாஜக ஆதரவு நிலை எடுக்கும் அதிமுகவை நம்பவே நம்பாது இஸ்லாமிய சமூகம்.

Spdi கட்சியும் நெல்லை முபாரக்கும் எப்படி குட்டிகரணம் அடித்தாலும், இஸ்லாமிய மக்களின் ஓட்டை வாங்கிட முடியாது. 

நேற்று வரை 'பாசிசத்தை எதிர்ப்போம்' என்று கோஷமிட்ட sdpi கட்சி.. 

உண்மையாக பாசித்தை நேரடியாகவும், கொள்கைரீதியாகவும் எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை எதிர்த்து நிற்கிறது.

நாளைக்கு திமுகவும் பாஜக ஆதரவு நிலை எடுக்கலாம் என்று sdpi கருதினால் திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி நின்றிருக்க வேண்டும்..

பாசிச எதிர்ப்பு கட்சியான இடது சாரி கட்சிகள் நிற்கும் தொகுதியை sdpi தேர்ந்தெடுத்திருக்க கூடாது.

ஆனால் sdpi க்கு நோக்கம் பாசிச எதிர்ப்பு அல்ல, ஒரே ஒரு MP யாவது வேண்டும் அதற்கு எந்த நிலையில் கீழறங்கி போகலாம் என்ற பேராசை தான்.. 

இந்த பேராசைக்கு இஸ்லாமிய சமுதாயம் இணங்காது.

சிறுபாண்மையினரின் காவலர் எடப்பாடியார், அம்மா வழியில் உயிரை அர்ப்பணம் செய்வேன் என உணர்ச்சி பொங்க முபாரக் பேசினாலும்..

அதிமுக கட்சியினர் உட்பட மாற்று மதமக்களின் ஓட்டு கூட திண்டுக்கல் மண்ணின் மைந்தன் இல்லை என்பதால் நெல்லை முபாரக்கிற்கு கிடைக்காது.

எனவே நெல்லை முபாரக்கிற்கு தோல்வி உறுதி...

* திண்டுக்கலில் நன்மதிப்போடு வலம் வரும் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 37 வருட முழு நேர அரசியல் வாழ்க்கை.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக 1996 - 2006 வரை இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

திண்டுக்கல் என்றாலே கம்னியூஸ்ட் கட்சிக்கு என தனி செல்வாக்கு உண்டு. 

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர்களும் ஆர்.சச்சிதானந்தம் பக்கபலமாக இருப்பவர்கள்.

பாசிசத்தை கொள்கை ரீதியாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 

குறைந்த பட்சம் 5 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்.

2 வது இடம் பாமக..
3 வது இடம் நெல்லை முபாரக்...

✍ தக்கலை ஆட்டோ கபீர்

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் Cஉங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் உரிமை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள்

உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம். அது உங்கள் உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம்.

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தன் ஊரைச் சேர்ந்த #பாண்டி வயது 45 என்பவர்  இடையார் வலசை NH சாலையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து
இரவு 11.30 மணிக்கு காவல்துறை உதவியிடன் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு
#தமுமுக_ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இறந்த உடலைக் கொண்டு  சேர்க்கப்பட்டது.

தகவல்...
தமுமுக மருத்துவ சேவை அணி,

இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.