Tuesday 2 April 2024

சீர் வரிசையும் வரதட்சணையே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

                                  (460)

வரதட்சணை

சீர் வரிசையும் வரதட்சணையே

பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்குவது மட்டுமே வரதட்சணை என்றும் டிவி ஃபிரிட்ஜ் பாத்திர பண்டங்கள் என பொருளாக வாங்கினால் இது வரதட்சணை இல்லை என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

பெண்வீட்டாரிடமிருந்து பணமாக வாங்கினாலும் பொருளாக வாங்கினாலும் வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையாகும். பெண்வீட்டார் கடைகளில் பணத்தை கொடுத்துத் தான் இந்தப் பொருட்களை வாங்குகின்றனர்.

திருமணம் முடிந்து பெண்ணை கணவனின் வீட்டுக்கு அனுப்பும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை பெண்வீட்டார் கொடுத்து அனுப்புகின்றனர். இது நடைமுறையில் சீர்வரிசை என்று சொல்லப்படுகின்றது. மணப்பெண் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் சீர்வரிசை வழங்கப்படுகின்றது. இதில் என்ன தவறு உள்ளது? என்று சிலர் கேட்கின்றனர்.

தன் வீட்டுக்கும் தன் மனைவிக்கும் தேவையான பொருளை வாங்கித் தருவது கணவனின் கடமை. இது பெண்ணின் கடமையல்ல. கணவன் சம்பாத்தியத்தில் அவன் வாங்கித் தந்தப் பொருட்களை பாதுகாப்பது தான் மனைவியின் கடமை. மேலும் இந்த சீர்வரிசைப் பொருட்களை மனைவி மட்டுமின்றி இவனும் பயன்படுத்துகிறான். எனவே இது தெளிவான வரதட்சணையாகும்.

No comments:

Post a Comment