Tuesday 2 April 2024

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் காலமெல்லாம் மனிதனின் வேகமும் அதிகரிக்கும்.

அதன் வேகம் குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து விட்டால், மனிதன் அப்போது தான் யோசிக்கின்றான்.. 

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டேன்.? எப்படியெல்லாமோ வாழ்ந்தேனே..? 

எவ்வளவு பேர்களின் உபதேசங்களை புறந்தள்ளியுள்ளேன்.?

யாரின் பேச்சிக்கும் முகம் கொடுக்க வில்லையே,..! என கவலையில் உளருவான்.. கண்ணீர் மல்க மருகுவான்..

ஆம்... மனிதா. அந்நேரம் நீ கவலைப்படுகையில்
 உன் வாழ்வின் இறுதி நேரமும் இறைவனால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்..!

உன்னோடு உள்ளவர்களும் உன்னை விட்டு போயிருப்பர்..!!

அப்போது உனக்கு அருகில் உன்னை தேற்றவோ, ஆறுதல் அளிக்கவோ, உபதேசிப்பவரோ எவரும் இருக்க மாட்டார்..,

இது தான் சரியான நேரம். நாம் திருந்துவதற்கு. என்று அப்போது முடிவெடுக்காதே..

இப்பொழுதே... இந்த புனிதமிகு மாதத்தின் இறுதிக் கட்டத்திலே... நான் மாறப் போகின்றேன்.. 

என்னை என் இறைவன் பால் முழுமையாக ஓப்படைக்க போகின்றேன். என்ற முடிவை எடு..

கருணையாளனின் மன்னிப்பை பெற ஓடு... 

அழுது கண்ணீர் துளிகளை சிந்திவிடு. பாவமன்னிப்பை கேளு..

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னிப்பாயாக!

சிறிது நேர மாற்றம் வேண்டாம் இறைவா..

என்னுள் முழுமையான மாற்றத்தைத் தா.. என மனமுறுகி பிரார்த்திப்போம்.
அவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். மகத்தான கருணையாளன்..

No comments:

Post a Comment