Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday 1 May 2024

இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு - - பேராசிரியர் அருணன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு

 

மார்க்சியர்களாகிய நாங்கள் அடிப்படையில் நாத்திகர்களே! ஆனால் முரட்டு நாத்திகர்கள் அல்ல. மாறாகக் கடவுள் நம்பிக்கை மக்கள் நெஞ்சில் எப்படி உருவானது, ஏன் நீடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த நோக்கிலிருந்து நான் எழுதியதுதான் ‘கடவுளின் கதை’ எனும் ஐந்து பாகங்களைக் கொண்ட பெரு நூல், அது உலக மதங்களின், மதம்பற்றிய சிந்தனைகளின் வரலாறு.

அதை எழுதுவதற்காக இஸ்லாத்தையும் கற்கத் தொடங்கினேன். என்னை வியப்பூட்டிய விஷயம் உலகின் பெருமதங்களில் இஸ்லாம்தான் ஏகக் கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டு மறுப்பையும் உறுதியாகப் பற்றியிருக்கிறது. கிறித்தவம், இஸ்லாம், இந்துமதம், பவுத்தம் என்பவையே மக்கள் மத்தியில் இன்று பரவலாக உள்ள மதங்கள். இந்த நான்கில் இஸ்லாமே அந்த இரு விஷயங்களையும் தனது அடிப்படை இறையியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றது.

கத்தோலிக்கக் கிறித்தவத்தில் கர்த்தர், அவரது குமாரர் இயேசு, பரிசுத்த ஆவி என்று மும்மை வழிபாடு உண்டு. புராடஸ்டண்ட் பிரிவுகள் பலவற்றில் மும்மை வழிபாடு இல்லை என்றாலும் சிலுவை வழிபாடு உண்டு. பவுத்தம் வினோதமானது. கடவுள் மறுப்புப் பேசிய புத்தரையே கடவுளாக்கிக் கொண்டது மட்டுமல்லாது அவரது உருவத்தை வணங்கவும் தொடங்கியது. இந்து மதம் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. அதில் ஏகப்பட்ட தெய்வங்கள். ஒவ்வொன்றையும் வேறுபடுத்திக் காட்ட அந்த ஆண் பெண் உருவங்களில் சிற்சில மாற்றங்கள்.

இஸ்லாம் ஏகத்துவத்தை அழுத்தமாகப் பேசியது மட்டுமல்லாது அதற்காகவே சிலை வணக்கத்தையும் நிராகரித்தது. இரண்டுக்குமிடையே ஆழ்ந்த தொடர்பு உண்டு. பல கடவுள் வணக்கம் என்றாலே வேறுபடுத்திக்காட்ட பல்வேறு சிலைகள் தேவைப்படும். சிலை வணக்கம் என்று கிளம்பினாலே அது பல சிலைகள் வணக்கத்தில், பல கடவுள் வணக்கத்தில் முடியும் அபாயம் இருந்தது. எனவே இரண்டையும் கறாராக நிராகரித்தது இஸ்லாம். ஏகக்கடவுள் வணக்கமும் உருவ வழிபாட்டு மறுப்பும் ஏற்கனவே இருந்தவை என்றாலும் அவற்றை மக்கள் உறுதியாகப் பற்றியிருக்கவில்லை என்பது தான் அதன் வருத்தமாக இருந்தது.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமே அதைச் சொல்லியிருந்தார். நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட குர்ஆன் அதை மிகுந்த இலக்கிய அழகோடு இப்படி வருணிக்கிறது:

‘எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன் என்று உரைத்தார். பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன் என்று கூறினார்.

பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்’ என்று கூறினார் (திருக்குர்ஆன் 6:76-79)

ஆபிரகாம் இப்படியாக ஆதிகாலந்தொட்டு மனிதர்கள் வணங்கி வந்த சந்திர சூரியர்களை, நட்சத்திரக் கூட்டத்தை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை வன்மையாக நிராகரித்தார். அவற்றின் கடவுள் அந்தஸ்தைச் சர்வ சாதாரணமாகப் பறித்தார். ஏகக்கடவுளை ‘அல்லாஹ்’ என அழைத்தவர் அவருக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கக் கூடாது என்றார். எல்லாம் வல்ல கடவுளுக்குக் கூட்டாளி தேவை, குடும்பம் தேவை என்றால் அவர் எப்படி எல்லாம் வல்லவர் ஆவார் என்று கேட்காமல் கேட்டார்.

பல கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டையும் ஆங்காங்கே குர்ஆன் மறுத்துக் கொண்டே வந்தாலும் அத்தியாயம் 22 இதற்காகவே ஒதுக்கப்பட்டது போல உள்ளது. இந்த வசனங்களை (17-18) நோக்குங்கள்
‘இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரிடையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது. வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காண வில்லையா? ’ (திருக்குர்ஆன் 22 : 17,18)

பல கடவுள் வணக்கத்தை மட்டுமல்ல உருவ வழிபாட்டையும் இங்கே குர்ஆன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்து மதத்தை நினைத்துப் பாருங்கள். அங்கே சகல வஸ்துக்களும் சில மாமனிதர்களும் கடவுள்களாக வணங்கப்படுகிறார்கள். ஒருபுறம் உபநிஷத்துகளில் ஏகக்கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்பட்டாலும், பிந்திய அதன் தத்துவ நூல்களிலும் ஏக பரமாத்மா சிந்தனை வெளிப்பட்டாலும் நடைமுறையில் என்னவோ பலகடவுள் வழிபாடும் சிலைகள் வணக்கமும்தான் அங்கே கோலோச்சுகிறது.

இத்தகைய மதங்கள் பற்றி குர்ஆன் அறிந்திருந்து அவற்றை நிராகரித்தது, கூடவே உருவமற்ற ஒரே கடவுளை வணங்கச் சொன்னது இது இறையியல் நோக்கில் ஒரு முக்கியமான வளர்நிலை. இந்து மத ஆன்மிகவாதிகள் பலரும்கூட பல கடவுள் வணக்கமும் உருவ வழிபாடும் பாமரர்களுக்காக வடிவமைக்கப்பட்டவையே, ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஏகப் பரம்பொருளை மானசீகமாக வணங்குவார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமோ அதை சகலருக்குமாக ஆக்கி வைத்துள்ளது. இது ஆன்மிக நோக்கில் அபாரம் அன்றோ!

கறாரான ஏகக் கடவுள் வழிபாடு, சிலை வணக்கத்தைத் தவிர்த்தது என்றால் சிலை வணக்கத் தவிர்ப்பு பூசாரித் தனத்தை தவிர்த்தது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் தேவையில்லை, மானசீகமான நேரடி வழிபாடு போதும் என்றது இஸ்லாம். தனி, கூட்டுத் தொழுகையே அதன் அஸ்திவாரமான சம்பிரதாயமானது. இதற்கு மசூதி எனும் சிறிதும் பெரிதான கட்டடங்கள் எழுந்தன. அவை வழிபாட்டுத் தலங்களே என்றாலும் அங்கே பிற மதங்களைப் போல வழிபடு சிலையோ சின்னமோ புத்தகமோ ஏதுமில்லை. எனவே பூசாரிக்கோ, அலங்காரத்திற்கோ, பூசைக்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ வேலையில்லை. ஏகக் கடவுளோடு தொழுகையின் மூலம் ஒன்றுவது எனும் ஞானமார்க்கம் சகலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பூசாரிகள் இல்லாதது மனிதர்களிடையே மதரீதியாக பேதம் காட்டாத போக்கிற்கு வழிவகுத்தது என்றால், சமூக ரீதியாகப் பேதம் காட்டாத போக்கிற்கும் அடித்தளம் அமைத்தது. ஏழை பணக்காரன் எனும் வர்க்கரீதியான பேதம் உருவாவதை இது தடுக்கவில்லை என்றாலும் சித்தாந்த ரீதியாக மனித சமத்துவத்தை ஒப்புக்கொள்ள வைக்க இது உதவியது. அரேபியாவில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலும் பரவிய இஸ்லாம் அந்தந்த நாடுகளில் ஏற்கெனவே இருந்த மதங்களின் தாக்கத்திற்கு இயல்பாகவே ஆளானது. அதையும் தாண்டி அது தனது இந்த அடிப்படைக் கூறுகளை எந்த அளவு காப்பாற்றிக் கொண்டது என்பது தனித்த ஆய்வுக்குரியது.

இந்திய அனுபவம் இருக்கிறது இந்துமதத்தின் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இஸ்லாத்தின் மதரீதியான சமத்துவத்தால் பார்க்கப்பட்டார்கள். இலட்சக்கணக்கில். டில்லியை மையமாகக் கொண்டு சுல்தான்கள், முகலாயர்கள் ஆட்சி பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது அதற்கான மறைமுக ஊக்கமாக இருந்தது என்றாலும் மனமாற்றமே மத மாற்றத்திற்கு மூலகாரணமாக இருந்தது. இதை டில்லி அல்லாது மேற்குக் கோடியில் பஞ்சாபிலும் கிழக்குக் கோடியில் வங்காளத்திலும் பெருமளவிலான மதமாற்றம் நடந்தது உணர்த்தி நிற்கிறது.

அப்படி வந்த மக்கள் தங்களோடு பலகடவுள் வழிபாடு, சிலைவணக்கம், சாமியார்களைப் பூசிப்பது, சாதியம், இத்யாதிகளையும் நெஞ்சில் ஏந்தி வந்தார்கள். அவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கும் போராட்டம் ஒருபுறம் நடந்தது என்றாலும் மறுபுறம் அவற்றின் மிச்சசொச்சங்கள் இஸ்லாத்தில் தங்கிப்போனதும் நிகழ்ந்தது. வியப்பான விஷயம் என்னவென்றால், இவ்வளவிற்குப் பிறகும் இஸ்லாத்தின் அந்த அடிப்படைக் கூறுகளாகிய ஏகக் கடவுள் வணக்கம், உருவ வழிபாடு மறுப்பு, பூசாரித்தனம் இன்மை என்பவை அனேகமாக இன்னும் அங்கே கட்டிக் காக்கப்படுவது அதன் சித்தாந்த வலிமையை, அதற்கான ஈர்ப்பைக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் இந்த இறையியல் கோட்பாட்டைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்கள் ஏன் மனிதர்களைப் பார்த்து வணங்குவது இல்லை. அவர்கள் ஏன் ‘பாரத் மாதாகி ஜே’ என்றோ ‘தாய் மண்ணே வணக்கம்’ என்றோ சொல்லுவதில்லை. தொழுகையின்போது ஆரவார சத்தத்தை விரும்புவதில்லை போன் றவை இந்துக்களுக்கும் புரிந்து போகும் விஷயம். சகமனித மரியாதை பற்றியதோ தேசபக்தி பற்றியதோ அல்ல மாறாக அவர்களது இறையியல் கோட்பாடு பற்றியது.

பிற மதங்கள் பற்றிய புரிதல் இருந்தால் மதமாச்சரியங்கள் எழ வாய்ப்பில்லை. சிக்கல் என்னவென்றால் அந்தப் புரிதல் இல்லாததுதான் அல்லது அந்தப் புரிதல் வந்து விடக் கூடாது என்று சில சுயநல சக்திகள் வேலை பார்ப்பதுதான். அதையும் மீறி நல்ல புரிதலை நோக்கி நாடு நடைபயிலும் என நம்புவோம்.
 
# பேரா. அருணன் 
   ஒருங்கிணைப்பாளர் , 
   தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை .

Tuesday 2 April 2024

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் காலமெல்லாம் மனிதனின் வேகமும் அதிகரிக்கும்.

அதன் வேகம் குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து விட்டால், மனிதன் அப்போது தான் யோசிக்கின்றான்.. 

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டேன்.? எப்படியெல்லாமோ வாழ்ந்தேனே..? 

எவ்வளவு பேர்களின் உபதேசங்களை புறந்தள்ளியுள்ளேன்.?

யாரின் பேச்சிக்கும் முகம் கொடுக்க வில்லையே,..! என கவலையில் உளருவான்.. கண்ணீர் மல்க மருகுவான்..

ஆம்... மனிதா. அந்நேரம் நீ கவலைப்படுகையில்
 உன் வாழ்வின் இறுதி நேரமும் இறைவனால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்..!

உன்னோடு உள்ளவர்களும் உன்னை விட்டு போயிருப்பர்..!!

அப்போது உனக்கு அருகில் உன்னை தேற்றவோ, ஆறுதல் அளிக்கவோ, உபதேசிப்பவரோ எவரும் இருக்க மாட்டார்..,

இது தான் சரியான நேரம். நாம் திருந்துவதற்கு. என்று அப்போது முடிவெடுக்காதே..

இப்பொழுதே... இந்த புனிதமிகு மாதத்தின் இறுதிக் கட்டத்திலே... நான் மாறப் போகின்றேன்.. 

என்னை என் இறைவன் பால் முழுமையாக ஓப்படைக்க போகின்றேன். என்ற முடிவை எடு..

கருணையாளனின் மன்னிப்பை பெற ஓடு... 

அழுது கண்ணீர் துளிகளை சிந்திவிடு. பாவமன்னிப்பை கேளு..

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னிப்பாயாக!

சிறிது நேர மாற்றம் வேண்டாம் இறைவா..

என்னுள் முழுமையான மாற்றத்தைத் தா.. என மனமுறுகி பிரார்த்திப்போம்.
அவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். மகத்தான கருணையாளன்..

நம்புங்க மக்களே. 🥹தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1.  பாஜக வுடன் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் ஆணை.

2.  பாஜக வுடன் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு மாம்பழம் சின்னம்  தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

3.  பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.

4.  நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் மறுப்பு.

5.  தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வை.கோ. வின் ம.தி.மு.க. வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு இதுவரை வழங்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

6.  தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் கேட்டு இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுத்தடிப்பு.

இதிலிருந்து சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு நடந்து கொள்கிறது. 

நம்புங்க மக்களே. 🥹

தேர்தல் ஆணையமே இருக்காது..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் ஆணையமே இருக்காது...

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.

 இப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் ஓர் ஒன்றிய அமைச்சர், குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த தேர்தல் நடந்தபோது தேர்தல் ஆணையராக இருந்தவர் அசோக் லவாசா. அவர் திடீரென ராஜினாமா செய்தார். 

இவர் 2019 தேர்தலின்போது மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்தார். 

மற்ற இரண்டு ஆணையர்கள் மோடியும் அமித்ஷாவும் குற்றவாளிகள் இல்லை என்று எழுதினர்.  

அந்த பின்னணியில் லவாசா ராஜினாமா செய்தார். 

வேறு வழியில்லாமல் தான் ராஜினாமா செய்ததாக பின்னர் அவர் கூறினார். 

லவாசா ராஜினாமா செய்த பிறகு அவரை மோடி அரசு வேட்டையாடத் தொடங்கியது. 

அவர் மனைவி நடத்தி வந்த நிறுவனத்தை வருமான வரித்துறை சோதனை செய்தது.

 மகளது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.

 அவரது சகோதரி வேலை செய்த நிறுவனத்தை சோதனையிட்டனர்.

 ஐஏஎஸ் அதிகாரியான அவரது மகனை பழிவாங்கும் வகையில் இடமாற்றம் செய்தனர்.

 சமீபத்தில் அருண் கோயல் என்கிற தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்தார். 

ஐஏஎஸ் அதிகாரியான அவரது நியமனத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

 ஆனால் அவர் நேர்மையானவர் என்று கூறி நியமனம் செய்யப்பட்டவர். 

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறபோதே புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்கிறார்கள். 

மோடி மீண்டும் வெற்றி  பெற்றுவிட்டால் தேர்தல் என்பதே இருக்காது.

தேர்தல் ஆணையமே இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த சிபிஎம் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதில் இருந்து...

நன்றி தீக்கதிர் நாளிதழ்

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்....

(பஷீர் அஹமது (Basheer Ahamed, London)அவர்களின் பயனுள்ள பதிவு)

எனது  அன்பு  இஸ்லாமிய  வாலிபர்களே  இளைஞர்களே   உங்களுக்கு  தான்  இந்த  செய்தி  :--

1970 முதல்   தமிழ்நாட்டின்  முஸ்லீம்  மக்கள்  அரபு நாடுகளாகிய   துபாய்  அபுதாபி  சார்ஜா   மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா   பஹ்ரைன்   ஓமன்    கத்தார்  குவைத்து   போன்ற  நாடுகளுக்கு  ஆரம்ப  காலம்  முதல்  கடந்த  சில  ஆண்டுகள் வரை  பிழைப்பு  தேடி  போனவர்கள்  அதில்  நன்றாக  சம்பாதித்து  வெற்றி  கண்டவர்கள் பலர்   , வீணா  போனவர்களும்  சிலர் உண்டு  

தற்போது  சவூதிஅரேபியா  வின்  மற்றும் அரபு  நாடுகளில்   வேலை  வாய்ப்பு மிகவும் குறைந்து  வருகின்றது   இது  யாவரும்  அறிந்ததே  

அரபு  நாடுகளுக்கு  மாற்றாக    வேறு  பல  இஸ்லாமிய நாடுகள்  அதிக  பெட்ரோல் வளம்  மிக்க  நாடுகளும்   உள்ளது  பலர்  இதனை  அறியாமல்  இருக்கலாம்    

தற்போது  அதில்  சில நாடுகளை  அறிந்து  கொள்ளுங்கள்  :--

அஜர்பெயிஜான்  -  97%  முஸ்லீமகள் 

கஜகஸ்தான்  - 70% முஸ்லீம்கள் 

உஜ்பெகிஸ்தான்  - 96% முஸ்லீமகள் 

துருக்மேனிஸ்தான்  - 89% முஸ்லீம்கள் 

இந்த  நாடுகள்  அதிக  எண்ணெய் வளம் (பெட்ரோல் ) உள்ள  செழிப்பான நாடுகள்  இந்த  நாடுகள்  பல  காலமாக  ரஷ்யாவின்  ஆதிக்கத்தில்  இருந்தது   தற்போது  சுதந்திர  நாடாக  (மக்கள்  குடியரசாக ) இருக்கிறது  

நிறைய  வேலை  வாய்ப்புகளும்   சுதந்திரமான  நாடுகள்  (அரபு  நாடுகள் போன்று  அடக்கு  முறை  இங்கே  கிடையாது )  

குறைவான  மக்கள் தொகையும்  அதிக  வளமும்  உள்ள   , நாகரீகமான  மென்மையான  மனிதர்கள்  வாழும்  நாடுகள் 

இனிமேல்  வரும்  , வளரும்  முஸ்லீம்  சமுதாயமக்களும்  , மற்ற  இந்திய  ஏழை  சமுதாய  மக்களும்   நமது  இந்திய  நாட்டில் வேலை  வாய்ப்பு  கிடைக்காதவர்களும்  இது  போன்ற  வளமான  நாடுகளுக்கு  சென்று  வேலை  வாய்பினை  பெற  முயற்ச்சி  செய்யலாம் .

முன்பு   நமது  முஸ்லீம் சமுதாய  மக்கள் போதிய   கல்வி  அறிவு  பெறாமலும்  , கல்வி அறிவு  பெற்றிருந்தாலும்  போதிய  திறமையை  வளர்த்து  கொள்ளாமல்  அரபு  நாடுகளுக்கு  கக்கூஸ்  கழுவ  , ரோடு போட  , ஒட்டகம்  ஆடு  மேய்க்க , பலதியாவில்  ரோட்டில்  குப்பை  கூட்ட  போனது  போல்  போகாமல் 

போதிய  கல்வியும்   திறமையும்  வளர்த்து  கொண்டு  இது  போன்ற  புதிய  நாடுகளுக்கு  சென்றால்   நல்ல  வேலை  வாய்ப்புகளை  பெறலாம்  

இந்த  நாடுகளில்   மக்கள்  நாகரீகமானவர்கள்  மென்மையானவர்கள் அழகானவர்கள்   , மனிதர்களை மதிக்க  கூடியவர்கள்    சூது வாது அறியாதவர்கள் 

இந்த  நாடுகளுக்கு  செல்லும்  திருமணம்  ஆகாத  இளம்  வயதினர்கள்   அந்த  நாடுகளிலேயே   திருமணம்  செய்து  கொண்டு   அங்கேயே  செட்டில்  ஆகி  விடலாம்   

இந்திய  பாஸ்போர்ட்டை   வைத்து  கொண்டு  ஆன் லைனில்  வருடா  வருடம்   பதிவு  செய்ய வேண்டிய  அவசியம்  இருக்காது  

மேலும்  விபரம்  தேவை  உள்ளவர்கள்  அந்த  அந்த  நாடுகளின்   அரசாங்க  வைப் சைட்டில் விரிவான  தகவலை  பெறலாம்  .

குறிப்பு  :- 

உங்களுக்கு   தேவையான  எல்லா  நாட்டு  இமிகிரேஷன்  தகவல்களும்  அந்த  அந்த  நாட்டின்  அரசாங்க  வைப் சைட்டில்  உள்ளது.

நன்றியுடன்....பகிர்ந்து...
                                ✍️  மதுரை.,இஸ்மாயில்.

திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பேராசிரியர் பிரச்சாரம் செய்யக்கூடிய 13 தொகுதிகளில் பாஜக நிற்ககூடிய தொகுதியில் பிரச்சாரம் செய்யாமல் திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாடம் எடுக்கின்றனர்.

பாஜக நேரடியாக நிற்ககூடிய தொகுதியில் முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா? நாம் பிரச்சாரம் செய்து தான் இஸ்லாமியர்களின் வாக்குகள் பாஜகவிற்கு செல்லாமல் தடுக்க முடியுமா? ஒரு Duplicate muslim கூட பாஜக வாடையைக்கூட நுகரமாட்டான் என்பதை அறியாமல் தேசிய அரசியல் நடத்துவது வேடிக்கை.

திண்டுக்கல்லில் ஏன் பிரச்சாரம் செய்கீறிர்கள் என கேட்டுக்கொண்டே..
இராமநாதபுரத்தில் நாவாஸ்கனிக்கு எதிராக தீவீர பிரச்சாரம் செய்துவருவதை இலாபகமாக மறைக்கின்றனர்.
நீங்களாவது இனி தான் வெற்றிபெற வேண்டும்?நவாஸ் கனி சிட்டிங் M.P..இது எப்பேற்பட்ட ஒற்றுமை வாதம்

அரசியலில் எனக்கு எதிராக களமாடக்கூடாது அங்க நிற்ககூடாது..பேசக்கூடாது என புலம்பலெல்லாம் அரசியல் Unfitக்கு சான்றாகிவிடும்.எது நடந்தாலும் வீயுகம் வகுத்து முன்னேறி செல்வது தான் அரசியல் சிறப்பு..இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாக ஒரே தொகுதியில் போட்டியிடுவதை மட்டுமே தவிர்க்க இயலும் என்பதே நடைமுறையில் உண்மை..அதுவும் முடிந்த வரை..

தற்போதைய தீவிர பாஜக ஆதரவாளரும் அன்றைய குக்கர் தலைவருடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மமக நின்ற மணப்பாறை பாபநாசம் தொகுதியில் நடைபெற்றது.அன்றைய சூழலில் எங்கேயாவது இது நியாயமா?தர்மமானு
மமகவின் ஒற்றுமை புலம்பல்கள் பதிவுகள் இருக்கிறதா என்பதை  நிருபிக்க முடியுமா? ஏனேனில் அரசியல் என்னவென்று நன்கு அறிந்தே வைத்திருந்தோம்..

இலவச ஆதரவு என இந்தியா நலன் கருதியும் சமூகத்தின் நாடிதுடிப்பை அறிந்தும் எடுத்த முடிவை கிண்டல் செய்து பிரச்சாரம் செய்கின்றனர்.
தற்போது கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணிக்கு எந்த நிபந்தணையுமின்றி கேட்காமாலே இலவச ஆதரவு கொடுத்திருக்கின்றனர் நேற்று.பாராட்டுகிறோம்.ஆதரவுக்கு காரணம் இச்சூழலில் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்பதே இந்திய நலனுக்கு நன்மை என தெரிவித்திருக்கின்றனர்.

கேரளா காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது நன்மை..தமிழ்நாட்டு காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது இந்தியாவுக்கு கேடு..எவ்விதமான அரசியல் புரிதல்.தற்போது எங்கே சென்றது இலவச ஆதரவு வாதம்..
நிபந்தணையின்றி.

அரசியல் கணக்குகளை கொண்டு வெற்றியை தேடாமல் வெறும் உணர்ச்சிகளை கொண்டு தேர்தலை சந்தித்தால் விளைவு நாம் எதிர்பார்த்த முறையில் அமையாது என்ற ஆலோசணையோடு..

யாருடைய முடிவு மக்களின் உணர்வோடு கலந்த முடிவு..யாருடைய முடிவு 
சமூகத்திடமிருந்து அந்நியப்பட்ட  முடிவு என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டத்தான் போகின்றது..அன்றைய தினம் நாம் அடுத்த ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம்..

MP Nazheer Trichy

Monday 1 April 2024

பொது மக்கள் நலன் கருதி ஒரு முக்கிய அறிவிப்பு !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் "சேலஞ்ச் ஓட்டு" கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள். உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் , "டெண்டர் ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் 14% க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் , அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.

தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

பத்தாண்டுக்கால மத்திய பாஜகவின் உணவு அரசியல், உடை அரசியல், கல்வி அரசியல், பாரபட்ச அரசியல் என சிறுபான்மை சமூகத்தை சிறுகசிறுக சிதைக்கும் செயல்பாட்டில் முழு ஒத்துழைப்பு வழங்கியது மாநிலத்தில் ஆண்ட அதிமுக அரசு.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றிய வெறுப்பு பேச்சினால் தான் வெளியே வந்தார்களே தவிர, பாஜகவின் கொள்கையை கண்டித்து வரவில்லை.

அண்ணாமலை என்ற நபரின் மீதுள்ள வெறுப்பினால் பாஜகவில் இருந்த இரத்ததில் ஊறி போன சங்பரிவார சிந்தனை தலைவர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் கட்சிதான் மாறியுள்ளனரே தவிர, கொள்கை மாறவில்லை. 

காங்கிரஸிலும், பாஜகவிலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட அதிமுக குறைந்த 5 சீட்டு வென்றாலும் (வாய்ப்பேயில்லை) நாளை பாஜக ஆட்சி அமைக்க இந்த 5 சீட்டுடன் 'மோடி எங்கள் டாடி' என கோஷமிட்டவாறு பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

இதுவெல்லாம் இஸ்லாமிய சமூகம் நன்கு அறிந்ததே

முஸ்லிம்கள் ஓட்டு பொதுவாகவே அதிமுகவிற்கு விழவே விழாது, 

இதில் CAA NRC NPR சட்டம் இயற்ற காரணமான அதிமுகவை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள்..

கூட்டணி என்ற பெயரில் தோற்கும் தொகுதியை SDPI க்கு வழங்கி, அதுவும் அதிமுகவின் சின்னத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முபாரக்கை நிறுத்தியுள்ளது.

ஒருவேளை நெல்லை முபாரக் வென்றால் அவர் sdpi எம்பி அல்ல, அதிமுக எம்பி... அதிமுகவின் கொறடாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். 

தனித்து sdpi நின்றால் இஸ்லாமிய ஓட்டுகள் மொத்தமாக கிடைத்திருக்கும்.

எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டு பாஜக ஆதரவு நிலை எடுக்கும் அதிமுகவை நம்பவே நம்பாது இஸ்லாமிய சமூகம்.

Spdi கட்சியும் நெல்லை முபாரக்கும் எப்படி குட்டிகரணம் அடித்தாலும், இஸ்லாமிய மக்களின் ஓட்டை வாங்கிட முடியாது. 

நேற்று வரை 'பாசிசத்தை எதிர்ப்போம்' என்று கோஷமிட்ட sdpi கட்சி.. 

உண்மையாக பாசித்தை நேரடியாகவும், கொள்கைரீதியாகவும் எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை எதிர்த்து நிற்கிறது.

நாளைக்கு திமுகவும் பாஜக ஆதரவு நிலை எடுக்கலாம் என்று sdpi கருதினால் திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி நின்றிருக்க வேண்டும்..

பாசிச எதிர்ப்பு கட்சியான இடது சாரி கட்சிகள் நிற்கும் தொகுதியை sdpi தேர்ந்தெடுத்திருக்க கூடாது.

ஆனால் sdpi க்கு நோக்கம் பாசிச எதிர்ப்பு அல்ல, ஒரே ஒரு MP யாவது வேண்டும் அதற்கு எந்த நிலையில் கீழறங்கி போகலாம் என்ற பேராசை தான்.. 

இந்த பேராசைக்கு இஸ்லாமிய சமுதாயம் இணங்காது.

சிறுபாண்மையினரின் காவலர் எடப்பாடியார், அம்மா வழியில் உயிரை அர்ப்பணம் செய்வேன் என உணர்ச்சி பொங்க முபாரக் பேசினாலும்..

அதிமுக கட்சியினர் உட்பட மாற்று மதமக்களின் ஓட்டு கூட திண்டுக்கல் மண்ணின் மைந்தன் இல்லை என்பதால் நெல்லை முபாரக்கிற்கு கிடைக்காது.

எனவே நெல்லை முபாரக்கிற்கு தோல்வி உறுதி...

* திண்டுக்கலில் நன்மதிப்போடு வலம் வரும் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 37 வருட முழு நேர அரசியல் வாழ்க்கை.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக 1996 - 2006 வரை இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

திண்டுக்கல் என்றாலே கம்னியூஸ்ட் கட்சிக்கு என தனி செல்வாக்கு உண்டு. 

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர்களும் ஆர்.சச்சிதானந்தம் பக்கபலமாக இருப்பவர்கள்.

பாசிசத்தை கொள்கை ரீதியாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 

குறைந்த பட்சம் 5 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்.

2 வது இடம் பாமக..
3 வது இடம் நெல்லை முபாரக்...

✍ தக்கலை ஆட்டோ கபீர்

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் Cஉங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள் உரிமை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் ஓட்டை யாருக்கும் போடுங்கள் அது உங்கள்

உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம். அது உங்கள் உரிமை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை காப்பாற்ற மேலும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். அந்த ஐந்தாம் வருட முடிவில் ஒரு வேளை நமக்கான ஓட்டு உரிமையை நாம் இழந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அரசியல் சாணக்கியர்கள், வரலாற்று ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அத்துனை பேர் அறிவு கூற்றின்படி சொல்வதை நாம் கேற்காமல் உள்ளூர் கோடாங்கிகளின் பேச்சை கேட்டு உரிமை இழந்து உணர்வை இழக்க வேண்டாம்.

Thursday 28 March 2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

தொழிலாளி குடும்பத்துக்கு அரசு வேலையும் நிவாரணமும் தமிழக அரசு அளிக்க வேண்டும்..

மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோரிக்கை....


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகமாக கூட்டமாக இருக்கும் இடத்தில் அபாயகரமாக தாறுமாறாக பேருந்தை ஓட்டி வந்ததன் விளைவாக...

 தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற தொழிலாளி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்...

இந்நிகழ்வுஅந்தப் பகுதியில் மிகுந்த பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது மிகுந்த ஏழ்மையான கறிக்கடை  தொழிலாளியான இவரது வருமானத்தை நம்பி அவர் குடும்பம் இருந்துள்ளது. மிகுந்த கஷ்டமான குடும்பம்...

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள். 

பாராளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறைதான்.
 எல்லோரும் இந்திய நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், நம்மில்  545 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் நமக்காக, நம் அனைவரின் குரலாக , நம் அனைவரையும் பாதுகாக்கும் கேடயமாக , நாமே வாக்களித்து தேர்ந்தேடுத்து அனுப்பும் சக்தி, ஆற்றல், வாக்கு நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது. 

 கடந்த பத்தாண்டு காலம் பிஜேபியின் இருண்ட ஆட்சிக் காலம் .

முகலாயர்களை, ஆங்கிலேயர்களை எல்லாம் மிஞ்சி, நம் நாட்டை அடிமைப் படுத்த நினைத்த துரோகிகளின் ஆட்சிக் காலம்.

 வரலாற்றில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் பல மொழி, பல நிறம் உள்ள மக்கள் ஒற்றுமையாக உருவாக்கிய இந்த இந்திய தேசத்தை சுரண்டி, நம் ஒவ்வொரு இந்தியரையும் ஏமாற்றிய ஒரு அயோக்கிய, காமவெறி பிடித்த, பணத்தாசை கொண்ட ஒரு கும்பல்தான் ‌பிஜேபி கும்பல் .


 இவர்களை ஆட்சியிலிருந்து விரட்டா விட்டால் நம் தேசம் நாசமாகி விடும் .

 இந்திய தேசத்தின் ஒவ்வொரு மாநில மக்களும் இந்த பிஜேபியை, இந்த பெருமை பிடித்த மனிதப் பேய்களை அழிக்க, 

 வாக்களியுங்கள் இந்தியா கூட்டணிக்கு , இதுவே நம் இந்திய தேசம் காக்கும் கூட்டணி. 

 இதுவே நம் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் கூட்டணி. 

 வாக்களிப்பீர்! 

 நம் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது 

 எனவே இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வீர்! 

 நாம் இந்தியர்கள்! நாமே ரத்தம் சிந்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்கள்! 
 
பிஜேபி கூட்டணி துரோகிகளிடமிருந்து மீட்போம் நம் இந்திய தேசத்தை! 
 வளர்ப்போம் நம் தொப்புள் கொடி பாசத்தை! 
 
ஜெய் ஹிந்த்! 

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. 

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். 

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். 

ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. 

எனவே நண்பர்களே, 

1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 

எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
நடந்து செல்லுங்கள்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 எனவே, நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
தினமும் நடைபயிற்சி.
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
நடந்து செல்லுங்கள் 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 10,000 அடிகள் / நாள்
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. 

ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.

 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 நடங்கள்.

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள் 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

10,000 அடிகள் நடக்க
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

365 நாட்கள் நடைபயிற்சி 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
 

அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

 

நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

 

நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

Tuesday 26 March 2024

#2024_தேர்தல்.. சின்னதா ஒரு கணக்கு போடலாமா..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#2024_தேர்தல்..

சின்னதா ஒரு கணக்கு போடலாமா..

39  தமிழ்நாடு
1    பாண்டிச்சேரி
20  கேரளா
28  கர்நாடக
25  ஆந்திரா
17  தெலுங்கானா
21  ஒரிசா

தென்மாநிலம் மொத்தம் 151 சீட்டு ( பழைய மெட்ராஸ் பிரசிடண்சி ) இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 20 முதல் 30 பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 121 முதல் 131 பெறும்.

14  அசாம்
2    அருணாசலபிரதேசம்
2    மணிப்பூர்
1    சிக்கிம்
1    நாகாலேன்டு
1    மிசோரம்
2   திரிப்புரா 
2   மேகாலயா

வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 4 முதல் 5 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு  20 முதல் 21 பெறும்.

13  பஞ்சாப்
10  ஹரியானா
7    டெல்லி

மொத்தம் 30 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 5 முதல் 10 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 20 முதல் 25 பெரும்.

48  மஹாராஸ்டா
40  பீகார்
42  மேற்குவங்கம்

மொத்தம் 130 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேறும் ?

அதிகபட்சம் 30 முதல் 50 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 80 முதல் 100 சீட்டு பெறும்.

80  உத்திரபிரதேசம் 
29  மத்தியபிரதேசம்
25  ராஜஸ்தான்
26  குஜராத்ப

மொத்தம் 160 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 100 முதல் 120 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிககு 60 முதல் 80 சீட்டு பெறும்.

11  சட்டிஸ்கர்
14  ஜார்கண்ட்

மொத்தம் 25 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 10 முதல் 12 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 13 முதல் 15 சீட்டு பெறும்.

5  உத்திகான்ட்
4  ஹிமாசல்பிரதேசம்
6  ஜமு காஷ்மீர்

மொத்தம் 15 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 5 முதல் 7 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 8 முதல் 10 சீட்டு பெறும்.

கோவா மற்றும் யுனியன் பிரதேசங்கள் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி தவித்து   7 சீட்டு.

இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 4 முதல் 5 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 2 முதல் 3 சீட்டு பெறும்.

இதில் #பாஜக_கூட்டணி மொத்தம் 178 முதல் 239 வரை மட்டுமே வெற்றி பெறும்.

இதில் #இந்தியா_கூட்டணி மொத்தம் 324 முதல் 385 வரை வெற்றி பெறலாம்

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

கன்னியாகுமரி
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்

திருநெல்வேலி
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா

தென்காசி
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்

தூத்துக்குடி
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்

இராமநாதபுரம்
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்

விருதுநகர்
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்

தேனி
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்

மதுரை
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி

சிவகங்கை
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி

தஞ்சாவூர்
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்

நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா

மயிலாடுதுறை
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்

சிதம்பரம்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி

கடலூர்
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்

பெரம்பலூர்
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி

திருச்சிராப்பள்ளி
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்

கரூர்
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா

திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்

பொள்ளாச்சி
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்

கோயம்புத்தூர்
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்

நீலகிரி
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்

திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி

ஈரோடு
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்

நாமக்கல்
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி

சேலம்
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்

கள்ளக்குறிச்சி
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்

விழுப்புரம்
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்

ஆரணி
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி

திருவண்ணாமலை
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு

தருமபுரி
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா

கிருஷ்ணகிரி
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்

வேலூர்
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்

அரக்கோணம்
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்

காஞ்சிபுரம்
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்

மத்திய சென்னை
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்

தென் சென்னை
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி

வட சென்னை
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி

திருவள்ளூர்
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்

புதுச்சேரி
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா.  

Sunday 24 March 2024

2024 தேர்தல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு........

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் குறித்த ஒரு  முக்கிய அறிவிப்பு........

நமக்கு  தேவையான ஆட்சி இந்தியாவில்  வரவேண்டும். அதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது:

 🇮🇳 இந்திய தேசம்  மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது, இன்னும்  சுமார் 60 நாட்கள்...? இந்தியா  ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ? 

🙏தயவுசெய்து உங்கள் குழுக்கள், தெரிந்த மற்றும் தொடர்புடைய நபர்கள் அனைவருக்கும் அனுப்பவும். தயவு செய்து ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு பகிரவும்

🇮🇳ஒரு வாரத்தில் 1 கோடி பேரையும், மூன்று வாரங்களில் 10 கோடி மக்களையும், 60 நாட்களில் 100  கோடி  மக்களையும்  சென்றடையும் வகையில் அனுப்பி அதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

😥மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது,பல ஆயிரம்  வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும்...

🇮🇳உலக அளவில்  இந்தியாவை  தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிரவாதிகளை தேச நலனுக்காக, இந்த  தேர்தலில் தோற்பதை நாம்  உறுதி செய்ய வேண்டும். 

 🇮🇳 3வது முறையாக மோடி வெற்றி பெற்றால்  நிச்சயமாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கலைக்கப்பட்டு  ஒரே நாடு...ஒரே தேர்தல்...ஒரே அதிபர் ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

🇮🇳இலங்கையில்  ராஜபக்சே சர்வாதிகாரியாக ஆனது போல... பாகிஸ்தானில் முஷ்ரப் சர்வாதிகாரியாக  ஆனது போல மோடியும்   நிச்சயமாக  சர்வாதிகாரியாக மாறுவார் என்று  அரசியல் வல்லுனர்கள் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்

🇮🇳ஏன் ஏனென்றால்.... இன்றைய இந்தியாவின் நிலை, பொருளாதாரம் அதாள... பாதாளத்தில் உள்ளது, உதாரணம் :- 2014ல் 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா இந்த 9 வருடத்தில் 205 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரடைந்து 67 வருடங்கள் (1947 to 2014 வரை) 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா, மோடி ஆட்சியில்  இந்த 9 வருடத்தில்  மட்டும் 151 லட்சம் கோடி கடனில் உள்ளது (2014 to 2023 வரை)

 🇮🇳உலக  அரங்கில் ஐநா அங்கீகரித்த 193-ல் நாடுகளில் இந்தியா தான் அதிகமான கடன் உலக வங்கியில் 205 லட்சம் கோடி அதிக கடன் வாங்கி உள்ளது  என்று  உலக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது

🇮🇳 உலகில் மதசார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே...

🇮🇳 இன்று பாஜக அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது இதை மூடி மறைக்க  அப்பாவி மக்களை தூண்டி விட்டு, நாம் இந்து...ராமர் கோயில்....ஜெய் ஸ்ரீ ராம்...என்று  மதவாத அரசியல் செய்வது...

🇮🇳இந்தியாவின் செல்வத்தை அம்பானி, அதானி கையில் விற்றது  மற்றும்  குஜராத்தி பணக்கார முதலாளிகள்  கைகளில் மட்டுமே  குவித்தது...

🇮🇳நீதித்துறை,CBI, ED-அமலாக்கத்து றை மற்றும் தேர்தல் அதிகாரிகளை  விலைக்கு வாங்கியது,EVM மிஷின் கோல்மால்கள்...
 
🇮🇳  நேரு காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம்  உருவாக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை   எல்லாம் தனியார்  நிறுவனங்களுக்கு  விற்றது...

🇮🇳வேலையில்லா  திண்டாட்டம், வருடத்திற்கு 2 கோடி பேர்களுக்கு  வேலை என்று இந்திய மக்களை ஏமாற்றியது...

🇮🇳பெட்ரோல் விலை உயர்வு(Rs.58 இருந்து Rs.103), கேஸ் விலை உயர்வு (Rs.400  இருந்து Rs.1130), எல்லா பொருட்களின் விலையும் இந்த 10 வருடங்களில் பல  மடங்கு உயர்ந்து இருக்கிறது

🇮🇳தமிழகத்திற்கு தர வேண்டிய  நிதியை தராமல்... நாம் செலுத்திய வரிப்பணத்தை  எடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுப்பது... தமிழர்களை வஞ்சிப்பது...

🇮🇳கறுப்புப் பணத்தை மீட்டு  எல்லா  குடும்பத்துக்கும் 15 லட்சம்,  கொடுப்பேன் என்று பொய் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது...

 🇮🇳இந்தியாவை நாசமாக்கிது....

 🇮🇳ஊடகத்தை  கைப்பற்றியது....

🇮🇳பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை பறிப்பு...

🇮🇳ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக சீரழித்து,  ஹிட்லர்,சதாம், ராஜபக்சே போல் சர்வாதிகாரியாக செயல்படுவது... 

🇮🇳குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளால் நிரப்பப்பட்ட அரசியல்... 

🇮🇳காவிமயமாக்கப்பட்ட வரலாறு... காவிமயமாக்கப்பட்ட கல்வி...

🇮🇳திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு அடுத்தடுத்த குழப்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள்... 

🇮🇳திட்டமிடப்படாத லாக் டெளன், குழப்பங்கள்,  அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள்....
 
 🇮🇳சிறுபான்மை மக்கள் வீடுகள்  மற்றும், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது, சிறுபான்மை மக்களை தாக்குவது, வெறுப்பு பேச்சுகள, மதக் கலவரங்கள், கொலைகள்....

🇮🇳மகாத்மா காந்தி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வெளிப்படையாகப் புகழ்ந்து வணங்குதல்...

🇮🇳பெண் மல்யுத்த வீரர்களை  நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்து அவமானப்படுத்தப்பட்டது...

🇮🇳டெல்லியில் விவசாய மக்களை   போராட வைத்து... தற்கொலை செய்ய வைத்தது...  ஜிப் ஏற்றி  கொலை செய்தது...

 ஏனெனில்.... 

🇮🇳காந்தியவாதிகள்& அம்பேத்கர்வாதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳அரசியலமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳மதச்சார்பற்ற இந்தியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳தலித்துகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பட்டியலினத்தோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பழங்குடியினர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

 🇮🇳ஆதிவாசி மக்கள் பாஜக  தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳பிற்படுத்தப்பட்டோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳சீக்கியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳கிறிஸ்தவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று  விரும்புகிறார்கள்

🇮🇳இஸ்லாமியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது... 

🇮🇳உங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 10 பேருக்கு புரிதலை ஏற்படுத்தி, தேசியவாத வாக்காளர்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள் 

🤝அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நம் குழந்தைகள் பார்க்க வேண்டும்

👍நமது கடமையை நாம் செய்ய வேண்டும்

👍பாதுகாப்பான சமூகம் பாதுகாப்பான வாழ்க்கை பாதுகாப்பான எதிர்காலம் போன்றவற்றை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்

👉இதைப் புரிந்துகொண்டு வெவ்வேறு வட்டாரக் குழுவில் பகிரவும்🙏

✋தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து, அவசியத்தை விளக்கவும்🙏

 நன்றி! நன்றி! நன்றி🙏
 
இந்திய நலனின் அக்கறையோடு...  ஒரு  இந்திய குடிமகனாக...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' 

என்று ஓதுவார்கள். 

பொருள்:

கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) 
ஸஹீஹ் புகாரி : 6346

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்..?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


#சமுதாயமா..?
#சச்சிதானந்தமா..?

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து  ஏன் வெளியேறினார்..?

தமிழக நலனுக்கு எதிராக மோடி அரசு செயல் படுவதாலா..?

சிறுபான்மையினர் மீது  மோடி அரசு செய்துவரும்  வெறுப்பு நடவடிக்கைகளை கண்டித்தா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தா..?

முத்தாலக் தடை சட்டத்தை எதிர்த்தா..?

பொது சிவில் சட்டத்தை எதிர்த்தா..?

அவருக்கும் ,பாஜக விற்கும் என்ன கருத்து வேறுபாடு...?

2026 முதல்வர் வேட்பாளர் யார் என்பதே எடப்பாடிக்கும், பாஜக விற்குமான  மோதல்..

ஏதோ மோடியை கொள்கை ரீதியாக எடப்பாடி எதிர்தார் என இஸ்லாமிய  சமூகத்தை  நம்பவைக்க முயற்சி நடக்கிறது 

இஸ்லாமிய சமூக மக்கள் ஏமாந்து விடக்கூடாது...

இந்தியா கூட்டணியை 40/40 என்றவகையில் வெற்றிபெற செய்ய வேண்டும்...

இந்த சமூகம் குடியுரிமையை காப்பாற்ற வீதியில் நின்றபோது  நம்முடன் நின்றவர்கள் யார் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் நாடுமுழுவதும் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் சட்டம் இயற்றும் அதிகார அவையில் கேரள சட்டமன்றத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது..

உங்கள் வாக்கு யாருக்கு..?

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் வாக்களித்து  முஸ்லிம்கள் வாழ்வுரிமையை கேள்விக்குறி  ஆக்கிய இரட்டை இலைக்கா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கா..? 

எடப்பாடியால் நிறைவேறிய சட்டம் எடப்பாடியின் கூட்டணி முறிவால் ரத்தாகுமா..? 

சமுதாயமா..?
சச்சிதானந்தமா..? என பார்ப்பதற்கு இது சட்டமன்ற தேர்தல் அல்ல ...

பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் இணைத்து நடத்துகின்ற இரண்டாவது விடுதலை யுத்தம்..

இது வாக்குசதவிகிதம் காட்டும் தேர்தல் அல்ல 
 வாழ்வுரிமையை மீட்கும் தேர்தல் 
என்பதை புரிந்து,அனைத்து தரப்பு மக்களும் தோழர் #சச்சிதானந்தம் அவர்களுக்கு  அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்....

                  பழனி M.I. பாருக் 
       மாநில அமைப்பு செயலாளர்,
           மனிதநேய மக்கள் கட்சி

Wednesday 20 March 2024

காரைக்கால் மாவட்ட காவல்துறை புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

காரைக்கால் மாவட்ட காவல்துறை  புதுவை மாநில மக்களுக்கு அறிவிப்பு!

முத்தவல்லிகள், பஞ்சாயத்தார்கள், மற்றும் ஜமாத்தார்களுக்கு...

தெரிவிப்பது யாதெனில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்தும், இறைவழிபடுவது யாவரும் அறிந்ததே! அதேபோல இந்த வருடமும் ரமலான் மாதம் தாங்கள் நோன்பு இருந்து இறைவழிபாடு செய்வதற்கு ஆவலாக உள்ளீர்கள். அதே நேரத்தில் இரவில் கண் விழித்து இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இரவில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் வாலிபால் விளையாடுவதும், பேட்மிட்டன் விளையாடுவதும், ஃபுட்பால்
விளையாடுவதும் வாடிக்கையாக செய்து வருகிறார்கள். இது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.

மேலும் வாகனங்களில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் செல்கிறார்கள். சாலைகளிலும் தெருக்களிலும் அதிக சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது வயது முதிர்ந்தவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும் காலாவதியான பதிவு எண் கொண்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் செல்கின்றார்கள். இது போன்று 18.3.2024 அன்று இரவு T.R. பட்டினம் மாப்பிள்ளை தெருவில் சில இளைஞர்கள் PRANK என்ற பெயரால்  உயிருடன் உள்ளவரை, இறந்தது போல்  பைக்கில் வைத்து விளையாடி தெரு முழுவதும் சுற்றி வந்தது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் விரட்டிச் சென்று தகுந்த அறிவுரை கூறியது. இதுபோன்ற அறிவீனர்களை காரை மாவட்ட காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. மீறும் பட்சத்தில் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை  எடுக்கப்படும். இதற்கு பஞ்சாயத்தார்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 

இவன் காரைக்கால் மாவட்டம் காவல் துறை 

ந. ஜெகபர் ஷரிப்,
7810084829

மனசொலி ரிப்போர்ட்டர்

Tuesday 19 March 2024

ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை / இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம்களும், இஸ்லாமிய வாக்காள பெருமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ


பாராளுமன்ற தேர்தல் தேதி இன் ஷா அல்லாஹ் தமிழகத்தில் 
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை எனவும், கேரளத்தில் ஏப்ரல் 26 மறு வெள்ளிக்கிழமை
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இதுபோல வெள்ளிக்கிழமைநாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையே நாம் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும்.
 நமக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்றி விட வேண்டும். மறவாதீர்.

ஜும்மா தொழுகைக்கு முன்னதாகவே காலையில் இருந்து மதியம் 12 மணிக்குள் நமது வாக்குகளை பதிவு செய்வோம்.

மதியம் ஜும்மா தொழுகையை  வாக்களிப்பவர்கள் வசதிக்காக பயான் இல்லாமல் அரை மணி நேரத்தில் முடித்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் கூட இது போல் சுருக்கமாக நாம் தொழுது இருக்கின்றோம்.

இந்திய தேசத்தை விஷமிகளிடமிருந்து பாதுகாக்க இஸ்லாமியர்களாகிய நம்முடைய வாக்கு மிகவும் முக்கியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும். எனவே நாம் 
100 சதவீதம் கண்டிப்பாக வாக்களிப்போம்.

அதே போல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்போம்.
அதுபற்றி எல்லாம் கவலைப்பட இது சரியான நேரம் அல்ல.

நாம் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் மதவாத கட்சிக்கு எதிராக உங்கள் வாக்குகளை மொத்தமாக பதிவு செய்யவும்.

வெள்ளி கிழமை தேர்தல் வைத்து விட்டார்கள் என புலம்புவதை விட்டு விட்டு அதையே நமக்கு சாதகமாக துஆக்கள் ஏற்றுக்கொள்ளும் நாளாக சிறப்பான துஆவோடு  நாம் சென்று வாக்களித்தால் மதவாத சக்தியை வீட்டிற்கு அனுப்பி விட்டு நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தலாம்.

வல்ல இறைவன் அல்லாஹ் படித்ததன் பிரகாரம் அமல் செய்யக்கூடிய பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்து அருள் புரிவானாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.


இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உலக அரங்கில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதை பறைசாற்றுவோம்..

விழிப்புடன் வாக்களிப்பீர். நன்றி.