Showing posts with label காவி. Show all posts
Showing posts with label காவி. Show all posts

Monday 16 September 2024

நீதிபதி சந்திரசூட் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளதா?


நீதிபதி சந்திரசூட் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளதா? 

இந்த அணுகுமுறை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? 

அந்த விளைவுகள் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் என்ன? நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசுக்கு எதிரான வழக்குகளின் கதி என்னவாகும்….? 

மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதிமன்றங்களின் மாண்பு இனி  என்னாகும்? 

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட்  இல்லத்தில் செப்டம்பர் 11 அன்று செய்யப்பட்ட விநாயகர் பூஜை வீடியோவானது  மிகப்பெரும் பேசு பொருளாகவும், பெரும் சர்ச்சையாகவும் ஆகி உள்ளது. 
காரணம் , அதில் கலந்து கொண்டவர் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். அவரைத் தவிர வேறு எவரையும் தலைமை நீதிபதி அழைக்கவில்லை போலும்.

அந்த வீடியோவில் பிரதமர் தலைமை நீதிபதி, தலைமை நீதிபதியின் மனைவி மற்றும் இருவர் மட்டுமே உள்ளனர். அந்த இருவரும் தலைமை நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் போல உள்ளது. 
விநாயகர் பூசைக்கு சென்ற பிரதமர் அந்த பூசையில் பூசாரியாக செயல்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதி அவர்கள் பிரதமர் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் அவரது இல்ல விநாயகர் பூஜைக்கு அழைத்து இருந்தால்  கூட,  அதுவும் முறையற்றது தான்.

தலைமை நீதிபதி தனது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்வது பற்றி எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. அதே போல பிரதமரும் அவரது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்து இருப்பினும் அதில் ஏதும் ஆட்சேபனை இருக்க முடியாது.

*மக்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை அளிப்பதாக நீதிமன்றங்கள் –அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் -இருக்கின்றன. காரணம், அவைகள் சுயேச்சையாக அரசின் நிர்பந்தங்கள் ஏதும் இன்றி இயங்குகின்றன என மக்கள் நினைக்கின்றனர்.

தலைமை நீதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் அவரது வீட்டில் நடக்கும் பூஜைக்கு பிரதமரை அழைப்பது நீதி துறையின் சுதந்திரத்திற்கும் மற்றும் அதன் மாண்பிற்கும் விரோதமானது ஆகும்.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 50 , நிர்வாகத் துறையில் இருந்து பிரிந்து தனியாக சுயேச்சையாக நீதித்துறை இயங்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.

எனவேதான், இதுவரையில் எந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது தலைமை நீதிபதிகளோ எவரும் தங்களது இல்லத்தில் நடைபெறும் தனிப்பட்ட பூசை போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதமரை அழைத்தது இல்லை.

மேலும் மிக முக்கியமாக,அரசாங்கம் தான்  மிக அதிக அளவில் வழக்குகளை தினம் தினம் உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நடத்தி வருகிறது. எனவே, பிரதமரோ அல்லது மந்திரிகளோ நீதிபதிகளின் வீட்டுக்கு தனிப்பட்ட முறையில் இது போன்ற பூசைகளுக்கு  அல்லது நிகழ்வுகளுக்கு செல்வது நீதித்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தை உண்டாக்கும்.

குறிப்பாக தலைமை நீதிபதிக்கு ஒரு சிறப்பான அதிகாரம் உள்ளது. அவர் தான்  நீதிபதிகளின் அமர்வுகளை தீர்மானிப்பவர். அதாவது மூன்று நீதிபதிகள் அமர்வு என்றால் எந்த எந்த மூன்று நீதிபதிகள் அந்த அமர்வில் இருப்பார்கள் என்பதை தீர்மானிப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான். அது மட்டுமின்றி எந்த எந்த அமர்வுகள் எந்த எந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான்.

ஒன்றுக்கும் மேற்பட்ட முதலமைச்சர்களும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும்  ED-யால், மற்றும் சிபிஐ -ஆல் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர்; அடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கும் வழக்குகள் எந்த அமர்வில் வருவது என்பதை தீர்மானிப்பது தலைமை நீதிபதி தான். அல்லது அவரது அமர்விலேயே கூட அந்த  வழக்குகளை விசாரிக்கலாம்.

தினம் தினம்  எண்ணற்ற மிக முக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதை தினமும் அச்சு ஊடகமும் மற்ற ஊடகங்களும் தெரிவிக்கின்றன. அந்த  வழக்குகள் எந்த அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் தலைமை நீதிபதி தான்.

அது மட்டுமன்றி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும்  கொலேஜியத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவரும் தலைமை நீதிபதி அவர்கள் தான்.

எனவேதான் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தவிர்த்து அவருக்கு அடுத்த நிலையில் இருந்த நான்கு மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதி அமைக்கும் அமர்வுகள் மற்றும் அந்த அமர்வுகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகள்  ஒன்றிய அரசிற்கு அனுகூலமாக இருப்பதாக ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை பொது வெளியில் சுமத்தினர். அதாவது அவர்கள் ஊடகங்களை சந்தித்து மேற் சொன்ன குற்றச்சாட்டை வெளிப்படையாக சுமத்தினர்.

இப்போதும் கூட சிவ சேனா கட்சி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  சஞ்சய் ராவுத் அவர்கள், சிவசேனா பிளவுண்டது பற்றியும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவியது பற்றியும் ஆன வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார். எனவே இந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் தனியாக பிரதமர் தலைமை நீதிபதியின் இல்லத்திற்கு செல்வது சரியல்ல என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் போன்ற சில மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர், தலைமை நீதிபதி அவர்கள் பிரதமரை அவரின் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் அழைத்தது கண்டிக்கத்தக்கது என்று  அறிக்கைகள் மூலம் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

நீதித்துறையின் சுயேச்சை தன்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மக்களுக்கும், குறிப்பாக வழக்குரைஞர் சமுதாயத்திற்கும் உண்டு. ஆனால் வழக்குரைஞர் சங்கங்களும் பார் கவுன்சில்களும் நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பாற்ற தவறிவிட்டனர் என்று என்ன தோன்றுகிறது.
 ஏனெனில் 
எந்த வழக்குரைஞர் சங்கமும் பார் கவுன்சிலும் இதனை கண்டித்து பேசாமல் மௌனம் காத்து வருவதே மிகுந்த கவலையை தருகிறது.

ஆளும் பிஜேபி தரப்பிலிருந்து ,பிரதமர் அவர்கள் தலைமை நீதிபதியின்  வீட்டு விநாயகர் பூசையில் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறுவது பாசிசத்தின் அறிகுறிகள் ஆகும்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அப்போதைய தலைமை நீதிபதி , பிரதமர் அளித்த ரம்ஜான் விருந்தில் கலந்து கொண்டார் என்றும், எனவே பிரதமர் மோடி தலைமை  நீதிபதியின் வீட்டு பூஜையில் கலந்து கொண்டது சரிதான் என்றும் பிஜேபி தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

ஒரு தவறு மற்றொரு தவறுக்கு பதிலாகாது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த ரம்ஜான் விருந்துக்கு பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் அப்போதைய தலைமை நீதிபதி. அந்த நிகழ்ச்சிக்கு கூட தலைமை நீதிபதி செல்லாமல் தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும். காரணம் , மதம் சம்பந்தப்பட்ட எந்த பொது நிகழ்ச்சியிலும் நீதிபதிகள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அரசின் நிகழ்ச்சிகள் மற்றும் தலைமை நீதிபதியின் வீட்டு திருமணம் போன்ற நிகழ்வுகளில் பலர் கலந்து கொள்ளும் போது, அவர்களில் ஒருவராக பிரதமர் இருப்பின் அதில் ஆட்சேபனை செய்வதற்கில்லை.

நீதிபதிகள் வீட்டு திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கூட பிரதமரையோ அல்லது மற்ற மந்திரிகளையோ அழைப்பதை தவிர்த்தால் மிகவும் நல்லது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யதேவ் என்ற ஒரு மாமனிதர்  நீதிபதியாக பணியாற்றினார். அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் நான் வழக்குரைஞராக இருந்தேன். அவரது மகனின் திருமணத்திற்கு அவர் எந்த மந்திரியையும் அழைக்காதது மட்டுமின்றி, உடன் பணி புரியும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கூட அவருடைய வகுப்புத் தோழர்களாக இருந்த மூவரைத்தான் அழைத்தார் என்றும், திருமணம் முடிந்ததும் காலையில் நீதிமன்றத்திற்கு வந்து பணி செய்தார் என்றும் கூறுவர். அது போன்ற  செயல் அல்லவா மிகப்பெரிய நம்பிக்கையை மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது ஊட்டும்.

மிகச் சமீபத்தில் பங்களாதேசில், அந்த நாட்டின் பிரதமரை நாட்டை விட்டு விரட்டிய மக்களின் போராட்டம் ,அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியும் அவரது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறி அதில் வெற்றியும் பெற்றது சுட்டி காட்டப்பட வேண்டும்.

அது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெறாமல் இருக்க இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் .அதுவே ஜனநாயகத்திற்கும் நல்லது .சுதந்திரமான நீதித்துறைக்கும் உத்தரவாதம் அளிக்கும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
ஒய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்

Tuesday 10 September 2024

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்
➖➖➖➖
 சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து - 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு!
➖➖➖➖
 அஸ்ஸாம் சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் விடப்படும் 2 மணிநேர இடைவேளையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.

காலனித்துவ கால நடைமுறைகளை கைவிடுவதாகவும், நாடாளுமன்றத்தின் திறனை (Productivity) அதிகரிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக, விளக்கமளித்துள்ளார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு, பின்னர் மதிய உணவுக்குப் பிறகு விவாதங்களைத் தொடங்குவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்த நடைமுறை 1937-ல் முஸ்லிம் லீக் கட்சியின் சையது சாதுல்லாவால் ( பிரிட்டிஷ் இந்தியாவின் அஸ்ஸாம் மாகாண பிரதமராக இருந்தவர்) அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை 'வரலாற்று சிறப்புமிக்க முடிவு' எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024' நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ததுள்ளது.
➖➖➖➖
30.08.2024

https://www.vikatan.com/government-and-politics/assam-assembly-ends-87-year-old-practice-of-2-hour-jumma-break

Sunday 19 May 2024

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்? புயலை கிளப்பிய வீடியோ.. உ.பி.யில் ஷாக்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்? புயலை கிளப்பிய வீடியோ.. உ.பி.யில் ஷாக்

https://chat.whatsapp.com/BMbs20f3cxS4aP5uswKk8n1


டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் இளைஞர் ஒருவர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

லோக்சபா தேர்தல் 2024
தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள்
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.


இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் முறைகேடு சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

8 முறை: அதில் இளைஞர் ஒருவரே பல முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். அந்த வீடியோவை அவரே எடுத்துள்ள நிலையில், இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மொத்தம் 8 முறை அந்த நபர் பாஜகவுக்கு வாக்களித்தாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பலரும் இதுபோன்ற தேர்தல் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடி வருகின்றனர்.

ஃபரூகாபாத் லோக்சபா தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது போலத் தெரிகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

கொந்தளித்த காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையமே, இந்த நபர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். இப்போதாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் தாக்கு: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவும் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில்... பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

"ராகுல் காந்தி பிரதமராக எல்லா தகுதியும் இருக்கு, ஆனா.." கடைசியில் ட்விஸ்ட் வைத்த பிரியங்கா காந்தி
ஃபரூகாபாத் தொகுதி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் தொகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஃபரூகாபாத் தொகுதியில் இடைத்தேர்தல்கள் சேர்ந்து மொத்தம் 18 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகபட்சமாக 8 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. கடைசியாக 2009இல் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றி இருந்தது. அதன் பிறகு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜகவே இங்கு வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019இல் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட், பகுஜுன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணியில் பகுஜுன் சமாஜ் சார்பில் மனோஜ் அகர்வால், காங்கிரஸின் சல்மான் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பாஜகவின் முகேஷ் 5.69 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பகுஜுன் சமாஜின் மனோஜ் அகர்வால் 3.48 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். காங்கிரஸின் சல்மான் 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்று டெபாசிட் கூட இழந்தார்.

Tuesday 12 March 2024

CAA / சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மனு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#BREAKING |

சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மனு

Monday 11 March 2024

மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அதிமுக எம்பிக்கள்:

01. SR பாலசுப்பிரமணியன்
02. N சந்திரசேகரன்
03. A முகமது ஜான்
04. AK முத்துக்கருப்பன்
05. A நவநீதகிருஷ்ணன்
06. R சசிகலா புஷ்பா
07. AK செல்வராஜ்
08. R. வைத்திலிங்கம்
09. A. விஜயகுமார்
10. விஜிலா சத்யநாத்

பாமக எம்பி:

11. அன்புமணி ராமதாஸ்

சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அதிமுகவினரால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

மக்களவையில் திமுகவினர் எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தில் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது.

மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

திமுக எம்பிக்கள்:

1. R.S. பாரதி
2. TKS இளங்கோவன்
3. M சண்முகம்
4. திருச்சி சிவா
5. P வில்சன்

மதிமுக எம்பி:

6. வைகோ

காங்கிரஸ் எம்பி:

7. P சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி

8. TK ரங்கராஜன்

வாக்குபதிவு ஆதாரம் படங்களாக இணைக்கப்பட்டிருக்கிறது.

Ayes - 125
Noes - 105

அன்புமணி மற்றும் அந்த 10 அதிமுக எம்பிக்களின் ஓட்டுதான் CAA சட்டம் நிறைவேற காரணம்.

அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்

ஆதரவு 125-11=114
எதிர்ப்பு 105+11=116

116-114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

.    நாட்டு  ⚖️  நடப்பு

Tuesday 4 March 2014

இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம். இன்று - இது உதாரணம் .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறு திரும்புகிறது ...குஜராத்தில், 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான இனப்படுகொலையில் கையில் இரும்புத் தடியுடன் வெறிபிடித்துக் கத்திய, பஜ்ரங் தள் என்ற இந்து மத வெறி அமைப்பைச் சேர்ந்த அஷோக் மோச்சி என்பவரும்,
” எங்களை விட்டுவிடுங்கள் “ என்று கெஞ்சிக் கதறும் குதுபுதின் அன்சாரியும்,
கேரளாவில் நேற்றுச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள் !

இதுபோன்ற சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு. தாயிப் மலைவாசிகள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அண்ணல் நபிகளாரை படு பயங்கரமாக துன்புறுத்தினார்கள். நபிகள் பிரார்த்தனை செய்திருந்தால் இறைவன் தாயிப் மலையை புரட்டி இருப்பான். அந்த மக்கள் அழிந்து போயிருப்பார்கள். ஆனால் நபிகளோ ... இன்றில்லாவிட்டால் நாளை.. இவர்களில்லாவிட்டால் இவர்களின் பிள்ளைகள் நேர்வழி பெறுவார்கள் என்றார்கள். அண்ணலாரின் கூற்றுப்படியே அந்த மக்கள் திருந்தி தங்கள் தவறுக்கு வருந்தினார்கள்.
அண்ணலாரின் கரம பிடித்து முஸ்லிம்களானார்கள் !
அதுபோல் இஸ்லாத்தின் பரம எதிரியான அபுசுப்யானின் மனைவி ஹிந்தா , உஹதுப் போர்க் களத்தில் அண்ணலாரின் சிறிய தந்தை ஹம்சாவைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தார். பின்னாளில் அபுசுப்யானின் குடும்பமே இஸ்லாத்தில் இணைந்தது.
இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம்.
இன்று - இது உதாரணம் .

Sunday 17 November 2013

வேட்டையாடும் காவி ஏவல்துறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



முஸ்லிமாக பிறந்த காரணத்தால் பள்ளி செல்லும் பாலகனையும் சோதனை என்ற பெயரில் வேட்டையாடும் காவி ஏவல்துறை

கொலைவெறியுடன் ஆயுதங்களுடன் அலையும் காவி வெறி நாய்களுக்கு காவலனாய் சேவகம் செய்யும் காக்கி கேவலத்துறை

வாழ்க ஜனநாயகம் (?) 28 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரிக்கு ஜாமீன்.....!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க ஜனநாயகம் (?) 28 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரிக்கு ஜாமீன்.....!!

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் 28 ஆண்டுகள் தண்டனை பெற்ற குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 3 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு குஜராத் அமைச்சரவையில் பெண்கள் மற்றும்
குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் மாயா கோட்னானி.

இவர் 2002 ஆம் ஆண்டு மோடியின் அரசில் எம்.எல்.ஏவாக
இருந்தார். அப்போது நடந்த இனப்படுகொலையில் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் 34 பெண்கள் 33 குழந்தைகள் உட்பட மொத்தம் 97 பேர்களின் படுகொலையில் முக்கிய பங்கு வகித்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால் 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையில் முன்னணியில் நின்று களப்பணியாற்றியதற்கு வெகுமதியாக 2007 அமைச்சரவையில் அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள்
நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது என மோடிக்கு எதிராக
விமர்சனங்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மாயா கோட்னானிக்கு 3 மாதம் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை சிறையிலிருந்து மாயா கோட்னானி ஜாமீல் வெளியாகிறார். இவர் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கை ரிதுவான் :

பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலைகாரிக்கு முறைப்படி மரண தண்டனை விதித்திருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல் 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்படியிருந்தும் அந்த கொலைகாரிக்கு ஜாமீன் வழங்கங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அப்துல் நாசர் மதானி மீது இன்றுவரை எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.

வெறும் சந்தேக கைதியாக இருக்கும் நிலையில்...

உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இருந்தும் கூட மருத்துவ சிகிச்சைக்காக கூட ஜாமீனில் விட மனமில்லை..

வாழ்க ஜனநாயகம்.

நன்றி : Ban RSS Save ou nation & முஹம்மது நிஹால்

Thursday 24 October 2013

மைல்கல்லை கூட கடவுள் என்று பெயர் வைக்கிறீர்கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இது இந்துக்கள் மனதை புண் படுத்தவற்க்காக இந்த பதிவு இல்லை மாறாக நீங்கள் சிந்திப்பதற்க்காக..

ஒரு கடவுள் தன்னுடைய படைப்புகளுக்கு சுத்தமான சுகமான காற்றை சுவாசிக்க விட வேண்டும் ஆனால் கடவுளின் நாள் என்று பட்டாசு வெடி பறக்கும் புகை மூலம் காற்றை மாசாக்கி விடுகின்றது.

இன்னும் உங்களுடைய கடவுளுகளை சிலையாக்கி வைக்கிறீர்கள் அதிலும்



மைல்கல்லை கூட கடவுள் என்று பெயர் வைக்கிறீர்கள்..

நீங்கள் சிந்தித்தால் உங்களுக்கே புரியும் நாம் செய்த கல்லுதானே இது இதற்க்கு எப்படி சக்தி உன்டாகும்? ?

சிந்தியுங்கள் மக்களே..


அன்புடன் அழைக்கிறோம் இஸ்லாத்தை நோக்கி

Wednesday 23 October 2013

மதம் கொண்டு அலையும் சிலருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதங்களை கடந்த மனிதர்கள் ..

மதம் கொண்டு அலையும் சிலருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!



Tuesday 8 October 2013

சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறுமியை சீரழித்துக் கைதான அறவழிச் சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலைசென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அச்சிறுமியை விபச்சாரக் கும்பலிடம் அனுப்பி கொடூரமான நிலைக்கு ஆளாக்க காரணமாகி கைதான வியாசர்பாடி அறவழிச்சித்தரின் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். 
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த எண்கணித சோதிடர் அறவழி சித்தர். 42 வயதாகும் இவரது மனைவி பெயர் தனலட்சுமி. இரவு நேர பூஜை, குளி சொல்வது என இருந்து வந்தார் அறவழி சித்தர். இரவு நேர பூஜையில் அவர் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி அருகே ஒரு சிறுமி போலீஸாரிடம் சிக்கினார். அந்த சிறுமி கொடுத்த தகவல் போலீஸாரை அதிர வைத்தது. வியாசர்பாடியைச் சேர்ந்த அந்த சிறுமி, அறவழிச் சித்தரால், சிறுமியின் தாயாரின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்டார். பின்னர் சுரேஷ் என்ற நபரிடம் சிறுமி விற்கப்பட்டுள்ளார். சுரேஷ், ஒரு விபச்சாரக் கும்பலிடம் சிறுமியை அனுப்பியுள்ளான். அங்கு பலரிடம் அந்த சிறுமி அனுப்பப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து சென்னை போலீஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அறவழி சித்தர், சுரேஷ் உள்ட 5 பெண்கள், 2 ஆண்களைக் கைது செய்தனர். 
இந்த நிலையில் அறவழிச் சித்தரின் மனைவி தனலட்சுமி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து விட்டார். வீட்டு பாத்ரூமில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. உடல் முழுவதும் எரிந்து போய் விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 Posted by: Sudha Published: Monday, October 7, 2013, 13:38 [IST] Ads by Google 

Sunday 6 October 2013

பெண்ணின் நிர்வாண நடனத்தை கண்டு ரசித்த பாஜ தலைவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கர்நாடகாவில் பெண்ணின் நிர்வாண நடனத்தை கண்டு ரசித்த பா.ஜ. தலைவர்கள் ரகசிய கேமராவில் பதிவு செய்து டிவி.யில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பீதர் நகரில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடனமாடிய நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று வெளியிடபட்டது. இந்த நடன நிகழ்ச்சியில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ முன்னாள் மாவட்ட செயலாளர் பாபுவாலி, பாஜ பிரமுகர் பி.எஸ். குதிரே, 4 பெண்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து ரசிப்பதுபோல் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி டிவி.யில் ஒளிபரப்பானதும் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாண நடனமாடிய பெண் தனது முகத்தை மூடியபடி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ��பீதரை சேர்ந்த பாஜ பிரமுகர்கள் பாபுவாலி, பி.எஸ்.குதிரே ஆகியோர் ஐதராபாத்துக்கு வந்து என்னை நிர்வாண நடனம் ஆட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினர். இதற்கு உம்னாபாத் தொகுதி எம்.எல்.ஏ. ராஜசேகர் பாட்டீலும் உடந்தையாக இருந்தார்என்று குற்றச்சாட்டினார். அவரின் பேட்டி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாஜவின் மாநில பொதுசெயலாளர் ரகுநாத்மால் காபூரே அளித்த பேட்டியில், “நிர்வாண நடன நிகழ்ச்சியில் பாஜ.வினர் பங்கேற்றுள்ள விவகாரம் கவனத்துக்கு வந்துள்ளது. 

பீதர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “நிர்வாண நடனம் குறித்து எனக்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இருந்தாலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை வரவழைத்து அதை தீவிரமாக ஆய்வு செய்து அதில் இடம் பெற்றுள்ளவர்கள் மற்றும் இதை தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும். அத்துடன், நிர்வாண நடனமாடியவர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கைது செய்யப்படுவார்என்றார்.




Saturday 1 January 2011

யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)

யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)

அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

யார் இந்த நிர்மோஹி அகரா?

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர்தான் நிர்மோகி அகரா. இவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனுமாரின் தீவிர பக்தர்கள். மொத்தம் வடஇந்தியாவில் 14-அகரா பிரிவுகள் உள்ளன இந்த பிரிவுகளைத்தான் அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்துள்ளது
அகரா என்றால் என்ன?
அகரா என்ற சமஸ்கிருத வார்த்தையை அகதா என்றும் அழைப்பார்கள் அதாவது சாதுக்களின் பிரிவில் தற்காப்பு படையினர் என்று பொருள்படும். ஆதாரம் இதோ
ஹிந்து சமயத்தில் சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள் என்றும் புளு பூச்சியை கூட கொல்லமாட்டார்கள் என்றும்தான் நாம் அறிவோம் ஆனால் அதே சாதுக்களின் அமைப்பில் தற்காப்புக்காக கொலை செய்வதும் உண்டு என்பது இந்த அகரா என்ற அமைப்பின் மூலம் தெரியவருகிறது! இந்த சாதுக்களின் அமைப்பில் மிக முக்கிய பிரிவான அகரா என்ற சாதுக்கள் அமைப்பு தந்திரமான அமைப்பாகும் அதாவது இவர்கள் சாதுக்கள் போல் காட்சியளித்தாலும் தாங்கள் கொண்ட கொள்கைக்காக எதிரணியில் இருப்பவர்களுடன் போர் தந்திரத்தாலும், குஷ்டி மோதல்களாலும் சண்டையிட்டு தாங்கள் மட்டும் வெற்றி பெறுவதாகும் இதன் மூலம் சாதுக்கள் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பாபர் மசூதியின் பிரச்சினையில் உண்மையாகிறது. அகரா எனப்படும் இவர்களை சாதுக்கள் என்று கூறுவதைவிட அசுர வர்க்கத்தினர் என்று கூறுவதுதான் சிறந்ததாகும் எனவே இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க அரங்கேற்றிய கூத்துக்களை இங்கு முன்வைக்கிறோம்!
அகரா பிரிவின் வரலாறு
இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர்களின் வரலாறுபடி இந்த ஆதி சங்கராச்சாரியார் 7 அகாரா பிரிவினரை தோற்றுவித்தவராகிறார் இவைகளின் பெயர்களாவான!
1.      மஹாநிர்வானி
2.      நிரஞ்சனி
3.      ஜுனா
4.      அடல்
5.      அவஹன்
6.      அக்னி
7.      அனந்த் அகரா
இந்த 7 அகரா பிரிவினர் பிற்காலத்தில் பல்கிப் பெருகி 14 பிரிவினராக மாறின இவைகளில் உள்ள பாபர் மசூதியை இடிக்க துணை நின்று பெயர் சம்பாதித்த ஒரு பிரிவுதான் நிர்மோகி அகரா!
சில அகாரா யோகிகள் தங்கள் அமைப்பை ஆதி சங்கராச்சாரியார் தோற்றுவிக்கவில்லை என்றும் தங்கள் மத குருவான கோரக்நாத் என்ற முனிவர்தான் தோற்றுவித்தார் என்று கூறுகின்றனர்.
அகரா பிரிவுகளின் பலம் மற்றும் பலவீனம்
கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)
மஹாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா ஆகிய அகரா சாதுக்களின் பிரிவுகள் மிகவும் பலமானதாகும். எனவே மற்ற பிரிவுகள் இந்த பலமான பிரிவுகளுடன் சமரசமாயின அவைகளாவன
  • அடல் அகரா என்ற பலவீனமான பிரிவு மஹாநிர்வாணி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
  • அனந்த அகரா என்ற பலவீனமான பிரிவு நிரஞ்சனி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது
  • அவஹன் என்ற பலவீனமான பிரிவு ஜுனா என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
இந்த பலவீனமான பிரிவுகள் பலமான அகராவுடன் இணைந்தாலும் சிற்சில நேரங்களில் தங்களுடைய எண்ணங்கள், வெற்றி தோல்விகள், தங்கள் குருதேவ் ஆகிய விஷயங்களில் வேறுபாடு கண்டு பொறாமை மனப்பாண்மையினால் உயர்வுதாழ்வு கொள்ளும்
அகராக்களின் வழிபாட்டு முறைகள்
அகராக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பதுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களின் முறைப்படியும் சண்டையிட்டு பிரிந்துவிடுவார்கள்
கடவுள் வழிபாட்டு முறையில் வேறுபாடு
சிவ அகராக்கள்சிவனை வழிபடுபவர்கள்
கல்பவஸிஷ் அகராக்கள்பிரம்மாவை வழிபடுபவர்கள்
வைராகி அகராக்கள்விஷ்ணுவை வழிபடுபவர்கள்
கடவுளுக்கு தவம் இருப்பதில் வேறுபாடு
ஒரு அகரா பிரிவு 8 வகை தவங்களை மேற்கொள்ளும் அந்த 8 தவங்களுக்கும் 52 வகையான மர்ஹிஸ்கள் (MARHIS நடுவன்) உள்ளது. ஒவ்வொரு மர்ஹிசும் மஹந்த் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்த நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பவர் ஸ்ரீ பஞ்ச் (பஞ்ச் என்ற ஐந்து தலைவர்கள் – பஞ்சாயத்து தலைவர் போன்று). இந்த ஸ்ரீ பஞ்ச் என்ற தலைவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவா, சக்தி, கணேசா ஆகிய கடவுள்களை பின்பற்று பவர்களாவர். இந்த ஸ்ரீபஞ்ச் என்ற 5 தலைவர்களையும் கும்ப மேளா என்ற விழாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கும்ப மேளா என்பது என்ன?
கும்பா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் இதற்கு PITCHER என்று ஆங்கிலத்தில் அழைப்பர் அதாவது கலசம் என்று கூறப்படும் கைப்பிடி இல்லாத மண் பானையாகும். அதாவது கும்ப ராசிக்காக காட்டப்படும் ஒரு வகை பானை. மேளா என்பது சந்திப்பு, கூட்டம் கூடுதல், சந்தை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள்.
இந்த கும்ப மேளாவின் ஆரம்பத்தை பற்றி கி.பி. 602-664ன் இடைப்பட்ட காலத்தின்படி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சீன துறவி (Huan Tsang or Xuanzang)யின் குறிப்பு படி ஹர்ஷவர்த்தனர் என்ற மன்னர்தான் இதை ஆரம்பித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய யோகி முனிபர்கள் இதை மறுக்கின்றனர்.
கும்ப மோளாவில் என்ற நடைபெறுகிறது
இங்குதான் அகரா பிரிவுகள் சங்கமிக்கிறார்கள். நிவாணமாக நடனமாடுகிறார்கள், நிர்வாணமாக வழிபடுகிறார்கள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக குஷ்டி மோதல்களில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை அகரா சாதுக்களின் தலைவர்கள் முன் காட்டுகிறார்கள். இறுதியாக நிர்வாணமாக அனைவரும் ஆற்றில் குளிக்கிறார்கள்.
இதோ இவர்கள்தான் நிர்மோஹி அகரா!
நீங்கள் மேலே கண்ட அகரா பிரிவுகளில் நிர்மோஹி அகராவும் ஒன்றாகும் இது பிற்காலத்தில் தோன்றிய 14 பிரிவுகளில் இந்த நிர்மோஹி அகரா என்ற பிரிவை அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்தது!
நிர்மோஹி அகராவின் நோக்கமும் உண்மை நிலையும்!
இந்த அமைப்பு வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் கடவுள் ஹனுமான் அதாவது ராமாயணம் என்ற இதிகாச கற்பனைக் கதையின் கதாநாயகனான ராமனுடை சேவகன் ஹனுமான்! இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் என்பவராவார்.  இந்த அமைப்பினுடைய பெயரான நிர்மோஹி அகார என்பதற்கு ஒரு பொருள் உள்ளது அதாவது யாருடனும் ஒன்றிப்போகாத குழு. (NIRMOHI AKHARA means GROUP WITHOUT ATTACHMENT) இதன் தலையயை கோட்பாடு யாருடனும் ஒத்துப்போகாமல் வாழ்வதே!
நிர்மோஹி அகராவின் ஆரம்பகால சதியும் தோல்வியும்!
இந்த நிர்மோஹி அகரா அமைப்பு 1949ம் ஆண்டுதான் பாபர் மசூதியுடன் தொடர்புடையது என்று அனைவராலும் பேசப்படுகிறது ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் இந்த அமைப்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு 1885ல் பாபர் மசூதியின் இடத்தை சொந்தம் கொண்டாடியது!
அடிமை இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் 1885ம் ஆண்டு ஃபைசாபாத் (FAIZABAD) ஒரு சூட் பைல் (நீதி மன்ற வழக்கு) ஒன்றை தாக்கல் செய்தது அந்த வழக்கில் இவர்கள் முன்வைத்த வாதம் இதோ ”அயோத்தி என்ற பகுதியில் ராமர் (ராம் சபுத்ரா) கோவில் இருந்ததாகும்  இது பாபர் மசூதிக்கு மிக அருகாமையில் இருந்ததாகும் கூறப்பட்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால் அன்றைய ஃபைசாபாத் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை வளர்க்கவிடாமலும் பிரச்சினை நீடித்தால் இனக்கலவரம் ஏற்பட்டு சமுதாயம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்றும் கருதி ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது! மேலும் கோவிலை கட்ட இந்த யோகி அமைப்பு முறையிட்ட பரிந்துரையின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இது நிர்மோஹி அகரா என்ற இந்த இந்துத்துவா அமைப்பின் மீது விழுந்த முதல் அடியாகும்!  இந்த பலமான இடியை தாங்கிக்கொள்ள இயலாத இந்த அமைப்பு 64 ஆண்டுகாலமாக பொங்கிக்கொண்டே இருந்தது! பின்னர் 1949ல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் தன் பழைய கதையை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது! இந்த நேரத்தில் இவர்கள் முன்வைத்த வாதம் பாபர் மசூதி அந்த பகுதியில் இல்லை என்பதே!
இறுதியாக இந்த நிர்மோஹி அமைப்பு 1989ல் உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் மீதே லாசூட் (LAWSUIT) என்ற வழக்கை தொடர்ந்தது. அதன்படி இவர்கள் நீதிமன்றத்தை அணுகி பாபர் மசூதியின் இடத்தை தங்களுக்கு வழங்கி ராமரை வழிபட வழிவகை செய்வதேயாகும். இந்த வழக்கு உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிறகு நடைபெற்றவை படங்களாக உங்கள் முன் இதோ

இப்போது நிர்மோஹி அகரா அமைப்பு தீவிரவாத அமைப்பா இல்லையா?

மாற்றுமத சகோதரர்களின் பார்வைக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறோம்!

யாரோ ஒருவன் ஆப்கானிஸ்தானி்ல் குண்டு வைத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பச்சை குத்துகிறீர்களே இன்று இந்த நிர்மோஹி அகரா என்பவர்கள் யார்? இவர்கள் காவி தீவிரவாதிகள் இல்லையா? முடிவு உங்கள் (மாற்றுமதத்தவர்கள்) கையில்!

காந்தியடிகள் பிறந்த இந்த நாட்டை சுடுகாடாக ஆக்கிவிடாதீர்கள்
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)

புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே!