Wednesday 23 September 2020

Salam rules

"உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க புகாரி 12, 28, 6236)

திருக்குர்ஆன் கற்றுத் தருகின்ற இந்த வாழ்த்து எல்லா நேரத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

உங்கள் மீது அமைதி ஏற்படட்டும், சாந்தி ஏற்படட்டும், நிம்மதி ஏற்படட்டும், கடவுளின் பாதுகாப்பு ஏற்படட்டும் என்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் உள்ளது.

இதனைத் திருமண வீடுகளில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் கூறலாம். இரு தரப்பினருக்கும் நிம்மதி அவசியமானது.

காலையிலும் கூறலாம். மாலையிலும் கூறலாம். இரவிலும் கூறலாம்.

பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் கூறலாம்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளுக்கும், நோயாளிகள் நோயற்றவர்களுக்கும் கூறலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம்.

எந்தவிதமான கேவலமோ, அவமரியாதையோ ஏற்படாமல் எல்லோருடைய மரியாதையையும் பேணும் சொல்லாக இந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொல் அமைந்துள்ளது.

வெவ்வேறு வாழ்த்து முறைகள் உலகத்தில் நடைமுறையில் உள்ளன. சில வாழ்த்து முறைகள் நல்ல காலைப் பொழுது என்று உள்ளது. இதனைச் சோகமான இடங்களில் சொல்ல முடியாது. இது அவர்களின் மனதிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். நல்ல காலைப் பொழுது என்பதை மாலையிலோ, இரவிலோ சொல்ல முடியாது.

அதே போன்று ஒருவரை ஒருவர் உயர்த்தி மதிப்பது போன்றும், கும்பிடுவது போன்றும், வணங்குவது போன்றும் கருதப்படுமானால் ஒரு மனிதரின் சுயமரியாதைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார் என்பது போன்ற சொற்களுக்கு உங்களை வணங்குகிறேன் என்று பொருள். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவது சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்தும்.

அவ்வாறில்லாமல் ஒருவருக்காக மற்றவர் கடவுளிடம் வேண்டுவது என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும்போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களையும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் சொற்களையும் கூறும் நிர்பந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர்.

திருக்குர்ஆனில் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78 ஆகிய வசனங்களில் இப்ராஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.
--
Thanks & Regards

மரணஅறிவிப்பு

மரணஅறிவிப்பு...

இன்ஷா அல்லாஹ்.


மனைவி படிக்க மறுக்கும் வரிகள்.

மற்றவர் படிக்க வேண்டிய வரிகள்.


அந்த நாள்

ஐம்புலன்களும் ஒடுங்கி..

ஜனாஸா நிலையில், நான் இறையடி சேர்ந்தவனாய்.


அந்த கணம் எப்படி இருந்தால், நன்றாக இருக்கும், என ஒரு சிறு சிந்தனை.

இவை நடந்தால், நான் நல்லவன் என்று உறுதியாக சொல்ல முடியாது,

ஆனாலும் ஓர் நப்பாசை.


ஒரு நல்ல தந்தையை இழந்த நிலையில் குழந்தைகள்..

நல்ல நினைவுகளோடு என் மனைவி.

சிறந்த நண்பனை பிரிந்தவர்களாக, என் நண்பர்கள்.

நன்றியோடு அண்டை வீட்டுக்காரன்

நல்ல பணியாளை இழந்த ஊழியர்கள்.

நல்ல முதலாளியை இழந்த தொழிலாளிகள்.

நான் கற்பித்த கல்வியோடு.. சுற்றும் பல மாணவர்கள்.

உண்மை துஆக்களோடு பல உறவுகள்

ஜனாஸாவில் எதிர்பார்த்திராத கூட்டம்.

மொத்தத்தில் எனைப்பற்றி கசப்பான அனுபவத்தை பேசாத மனிதர்கள்.


உலக மார்க்க கல்வியோடு மகன் மகள்கள்.

பொதுப் பணியோடு குடும்பம் பேணும் மனைவி.

பெற்றோரின் துஆவில் என்றும் நான்.

நல்ல தகவல்களோடு மிளிரும் எனது Website.

அழகிய போஸ்ட்களோடு என் facebook பக்கம்.

நல்ல வீடியோக்களோடு எனது youtube சேனல்.

நான் எழுதிய நல்ல புத்தகங்கள் உங்கள் வீடுகளில்.

மொத்தத்தில் அனைத்தும் நான் விட்டுச் சென்ற நிரந்தர கல்வியாக.


எந்த வங்கியிலும் லோன் இல்லை.

எந்த நபருக்கும் கடன் இல்லை.

என் பேர்ஸில் எந்த credit card உம் இல்லை.

பெரிய சொத்துக்கள் இல்லை.

குழந்தைகளிடம் சொத்தாசையும் சொத்து சண்டையும் இல்லை.

ஆனாலும் என் குடும்பம் யாரையும் தங்காது

இருக்க நிலையான வருமானம்.

அமானிதங்கள் கையில் இல்லை.

நிறைவேற்றாத எந்த வாக்குறுதியும் இல்லை.

நிலையான தர்மத்தில் என் கண்ணுக்குப் பிறகும் சந்தோஷப்படும் சில நல்லுள்ளங்கள்.

என்னால் இனிய மார்க்கத்தில் நுழைந்த குறைந்தது ஒரே ஒரு நபர்.


அன்றைய நாளில்...

எல்லா ஜமாத்தையும் பேணி இருக்க வேண்டும்.

குர்ஆனின் சில வரிகளை ஓதி இருக்க வேண்டும்.

தர்மம் செய்திருக்க வேண்டும்.

துஆ கேட்டிருக்க வேண்டும்.

அந்த இறுதி கணம் வரை, என் வேளையை நானே கவனித்து ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் கடமையையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


இறுதி கணம்..

அழுகையின் நடுவேயும் மன தைரியம் உடையவராக என் மனைவி மக்கள்.

ஆண்களும், பெண் மஹ்ரமிகளும் மட்டுமே பார்க்கும் என் ஜனஸா..

என்னை குளிப்பாட்டுவதும் என் உறவு.

எனக்காக தொழுகை நடத்துவதும் என் நெறுங்கிய உறவு.

நல்ல நறுமணத்தொடு

யாருக்காகவும் காத்திராமல்

சூட்டோடு வேகமாக எடுக்கப்படும் என் ஜனாஸா.

இறந்த ஊரிலேயே அடக்கம்.

பித்அத்துக்கு இடமில்லை.

கத்தம் சாப்பாடும் இல்லை.

சுன்னாஹ்வுக்கே முக்கியத்துவம்..

ஒப்பாரிகள் இல்லை.

அமைதியான சூழல்.

ஒரு கணம், முழு உள்ளத்தோடு எனக்காக இறைஞ்சும் உள்ளங்கள்.


மரணத்தின் பின்னும் நாம் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளது என கூறும் படியான வாழ்க்கை.


நப்பாசைதான்.... துஆ செய்யுங்கள்.

இன்ஷா அல்லாஹ், அவன் நாடினால் எதுவும் நடக்கும்...,



சார்பாக காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள்

*நமது Melapalayam Officers Academy (MOA) சார்பாக காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் மூலமாக*

*தமிழக காவல்துறை PC2020 தேர்வு & PC பணி குறித்த ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி*


*நாள்: 27/09/2020 ஞாயிற்றுக்கிழமை*

*நேரம்: 04:30 PM to 06:00PM (IST)*


விளக்கமளிப்பவர்கள்


*J. சாகுல் ஹமீது (காவல்துறை சிறப்பு பிரிவு)*


*M. மாசானமூர்த்தி (ஆயுதப்படை)*


*M. ஆலிமுத்து மெஹ்ராஜ் (தீயணைப்புத் துறை)*


*K.J. இஸ்மாயில் அபுபக்கர் (ஆயுதப்படை)*


*S.M. முஹம்மது சுஹைல் (காவல்துறை சிறப்பு பிரிவு)*


*ZOOM app* மூலம் விளக்கம் அளிக்கவுள்ளனர்.


Meeting ID: 5915998782

Passcode: moa5678


*குறிப்பு*


*MOA சார்பாக காவல்துறை PC2020க்கான இலவச பயிற்சிக்கான தகுதித்தேர்வு எதிர்வருகின்ற 04/10/2020 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும், இதில் கலந்துக்கொள்ள கீழ்கண்ட google form link ல் பதிவு செய்யவும்*


https://forms.gle/mVaLugNfv7frue288


*அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்விப்பணியில்* *Melapalayam Officers Academy* (MOA)

*Regd no. 44/2020*

பாஜக உள்ள வந்துரும் ப்ரோ

https://www.facebook.com/100004562077325/posts/1566339686861419/


#பாஜக உள்ள வந்துரும் ப்ரோ.....


அதிகமா இணையத்துல போன தேர்தலப்போ கேட்ட வார்த்தை இது....

ஆனா இங்க ஒரு வருஷத்துல....


வீட்டு பக்கத்துல 10 நாள் முன்னாடி வரை வெறும் கொடிக்கம்பமா இருந்ததுல இன்னிக்கு பாஜக கொடி பறக்குது....


சென்னைல ஏகப்பட்ட இடங்கள்ல இதுவரை பாக்காதளவு சுவர் விளம்பரங்கள்.... பாஜகவை விளம்பரப்படுத்தி....


பெரும்பாலான மெட்ரோ ரயில்வே தூண்கள் முழுக்க பாஜக சுவரொட்டிகள்....


சேரிக்குள்ள போகுறதுக்கு அதிகாரப்பகிர்வு வேணும்ன்னு ஒரு ப்ளான்.... ஜாதித்தெருக்குள்ள போக ஆண்டைப்பெருமை பேசிட்டு இன்னொரு ப்ளான்....


பார் கவுன்சில்ல அத்தனை பேரை வளைச்சி பிடிச்சிருக்கு.... ஏற்கனவே IAS மாதிரி தேர்வுகள்ல 60-70% RSS பின்புலத்தோட செலக்ட் ஆகிருக்காங்க.... இப்போ காவலர் தேர்வுலயும் அதே மாதிரி உள்ள நுழைக்க அத்தனை வேலைகள் நடக்குது.... குடுமி மன்றத்துல சொல்லவே தேவையில்ல... எல்லாமே அவங்க ஆளுங்க தான்....


பாஜகவில் சேர வந்த ரவுடிகள் தப்பியோட்டம்ன்னு வர்ற நியூஸ்லாம் பாக்றோம்.... சேர்ந்துக்கிட்ட ரவுடிங்க எண்ணிக்கை ரொம்பவே அதிகம்....


இதுவரை திறக்கப்படாத கோவில்கள்ல கூட கண்ட கண்ட பேர்ல யாகம் பூஜைன்னு ஆளை சேர்த்து பாஜக இந்துக்களுக்கான கட்சின்னு நிறுவிட்டு இருக்கு....


இன்னொரு பக்கம் 16-24 வயசு பசங்க கிட்ட அதிகப்படியான ஜாதி உணர்வை வாட்சப் பேஸ்புக்ன்னு முடிஞ்சவரை தினசரி அவ்ளோ விஷயங்கள் மூலமா பரப்புது....


100 பேர்க்கு தெருவுல தெரிஞ்ச ஆளா இருந்தாலும் காரும் தந்து டீசல் காசும் தரேன்... அப்பப்போ இதை பேசுன்னு ஆள் சேக்குது...


பாஜகவை எதிர்த்து பேசுற பல மீம் பேஜ்கள் ரிப்போர்ட் ஆகி ஒரு காலத்துல 1 மில்லியன் ரீச் இருந்தது இன்னிக்கு 100 ஷேர்க்கு முக்குது.... ஒரிஜினல் ஐடில பேசுறவங்க இன்பாக்ஸ்ல மிரட்டல்கள் குவியுது....


கார்த்திகை செல்வன் ஹசீப் குணசேகரன் மாதிரியான மக்கள் பிரச்சினைகளை பேசுற ஊடகவியலாளர்கள் கழுத்து நெறிக்கப்படுவதும் எல்லா ஊடகங்களிலும் பாஜக சார்பு செய்திகளே அதிகமா வர்றதும் ரீசன்ட் டைம்ல நிறைய நடக்குது...


கிடைக்கிற மேடைகள்ல பாஜகவை சூசகமா சீண்டுன விஜய் சேதுபதி 'ஓம்' ன்னு டிபி வைக்கிறாரு..... விஜய் மாதிரி ஆளுங்க எதுக்குடா வம்புன்னு அடக்கி வாசிக்க தொடங்குறாங்க... பேச ஆரம்பிச்ச சூர்யாவுக்கும் சரியான இடதுசாரி ஆதரவு இல்லாததால அரசுக்கு ஆதரவா இருக்க மாதிரி காட்டிக்க தொடங்கிக்கிறாரு....


எல்லா சீரியல்லயும் முன்ன இல்லாதளவு சாமிக்குத்தம் தெய்வவாக்குன்னு அவ்ளோ மோசமா இந்துத்துவ கருத்துக்கள் திணிக்கப்படுது....


குமுதம் ஆனந்தவிகடன்னு பல வாரப்பத்திரிக்கைகளும் தன்னோட சங்கி முகத்தை நல்லா காட்ட தொடங்கிருக்கு... நக்கீரன் மாதிரி பத்திரிக்கைகளும் மன்னிப்பு நோட்டீஸ்லாம் விடுது( ஆளுநர் விஷயத்துல)


சுத்தி நல்லா பாருங்க.... இங்க பாஜக முழுசா எல்லா பக்கமும் வந்தாச்சி.... முழுசா எதிர்க்கிறவங்களையும் தன்வசப்படுத்த அதிகாரம், பணம், பதவின்னு எதையாது கொடுத்து ஈர்க்குது.... இன்னொரு பக்கம் இருக்க நட்பு சக்திகளையும் சந்தேகப்படுறதும் எதிரி கூடாரத்துக்கும் தள்ளுற வேலையும் நடக்குது...


2000 வருஷத்துக்கு மேல வேரூன்றுன மரத்தை வெட்ட ஒரே ஒரு கோடாரி பத்தாது... எல்லா பக்கமும் வெட்டாமல் ஒழிய மரத்தை சாய்க்க முடியாது... புத்திசாலியா இருந்தா என் கோடாரியை மட்டுந்தான் வச்சி வெட்டணும்ன்னு சொல்ல மாட்டான்... ஊருக்கே கோடாரி கொடுக்க நினைப்பான்... இல்ல கோடாரி பிடிச்சிட்டு வர்றவங்களுக்கு தானும் சக ஆள்ன்னு காட்டிப்பான்...


இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்ல.... ஆனா இனியும் பாஜக உள்ள வந்துரும்ன்னு சொல்ல முடியாது.... அது அல்ரெடி உள்ள வந்தாச்சி.... இன்னிக்கு இல்லன்னாலும் 10 வருஷத்துல அது பண்ண வேலைக்கான அறுவடையை எடுக்கும்... அது உறுதி....