Showing posts with label AAT. Show all posts
Showing posts with label AAT. Show all posts

Wednesday, 2 April 2025

வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் 

இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு சட்டரீதியான மற்றும் ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தலாம். இந்திய அரசியல் சட்டம் மத, மொழி, மற்றும் சமூக அடிப்படையில் யாருக்கும் ஊனமின்றி சமத்துவ உரிமைகளை வழங்குகிறது. எனவே, சட்டத்திற்குள் இருந்து எவ்வாறு போராடலாம் என்பதற்கான முக்கியமான வழிகள் இங்கே:


1. வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் சட்டரீதியான நடவடிக்கைகள்

(i) வக்ஃப் வாரியம் (Waqf Board) மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள்

  • மாநில மற்றும் தேசிய வக்ஃப் வாரியங்களுக்கு முறையிட்டு வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க மனு தாக்கல் செய்யலாம்.
  • The Waqf Act, 1995 ன் கீழ் வக்ஃப் சொத்துக்கள் தனிப்பட்ட அல்லது அரசாங்க கட்டுப்பாட்டிற்கு வராது என்பது சட்டத்தில் உள்ளது.
  • உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழியாக நியாயப்பூர்வமான வழக்கு தொடரலாம்.

(ii) சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு

  • முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மற்றும் வேறு மதத்தைச் சேர்ந்த நீதி உணர்வு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் இது குறித்து உரையாடலாம்.
  • வாக்களிக்க அதிகாரம் பயன்படுத்தி முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க முனையும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.

(iii) கல்லூரி மற்றும் பள்ளி நிலங்களை பாதுகாக்குதல்

  • பல வக்ஃப் நிலங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டவை.
  • அரசு மாறுபட்ட அடையாளங்கள் காட்டி தனியாருக்கு விற்கும் முயற்சி செய்தால், நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்.
  • RTI (Right to Information) சட்டத்தை பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளின் நிலைமை பற்றி தகவல் கோரலாம்.

2. அரசியல் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக வழிகள்

(i) வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பு (Voting Rights)

  • வாக்குச்சீட்டு ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். எந்த ஒரு கட்சியும் மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது.
  • முஸ்லிம்கள் அதிகமாக வாக்களிக்கும் பகுதிகளில் ஒருமித்த வாக்குகளை செலுத்த, அவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.
  • புதிய தலைமுறையை அரசியலில் ஈடுபடுத்த முஸ்லிம் இளைஞர்களை தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்க வேண்டும்.

(ii) சட்ட மற்றும் நீதிமன்ற வழிகள்

  • Article 14, 19, 25-30 ஆகிய சட்டங்கள் முஸ்லிம்களுக்கு சமத்துவ உரிமை, மதச்சார்பற்ற உரிமை, கல்வி நிறுவன உரிமை ஆகியவற்றை வழங்குகின்றன.
  • நீதிமன்ற வழிகளை சரியாக பயன்படுத்த, உச்ச நீதிமன்ற வழக்குகளை தொடர சட்ட ஆலோசனைக்குட்பட்டு அணுக வேண்டும்.
  • நீதி மற்றும் மனித உரிமை அமைப்புகளின் உதவியை பெறலாம்.

(iii) உரிமை பாதுகாப்பு மற்றும் சமூக செயற்பாடு

  • முஸ்லிம் அமைப்புகள், பள்ளிகள், தர்க்குகள் (Debates), போராட்டங்கள், சட்டக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • ஊடகங்களில் (Media) உரிமை மீறல் தொடர்பாக புகார் அளிக்க வேண்டும்.
  • அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்கத்துறை மீது கண்காணிப்பு வைத்து அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுப்பது முக்கியம்.

3. பண பலத்துடன் சமாளிக்க பொருளாதார முன்னேற்றம்

(i) கல்வி மற்றும் தொழில்நுட்பம்

  • முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறினால், அதிகாரத்திற்குள் சென்று தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
  • தொழில் முனைப்பை (Entrepreneurship) ஊக்குவித்து தனியார் நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

(ii) இஸ்லாமிய பொருளாதார அடிப்படைகள்

  • வங்கிப் பொறுப்பில் ரிபா (சலுகை வட்டி) தவிர்த்து, இஸ்லாமிய நிதி முறைகளை (Islamic Finance) வளர்த்தால், முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள்.
  • தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க சமூக வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை சட்டரீதியாக, அரசியல் மற்றும் சமூக ரீதியாக பாதுகாக்க முடியும். உண்மையான ஜனநாயக செயல்பாடுகளிலும், சட்டத்தின் நடைமுறையிலும் முழுமையாக ஈடுபட்டு, வக்ஃப் சொத்துக்களையும் அரசியல் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

Thursday, 9 January 2025

JOB - DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அரசு நிறுவனமான துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA)  கீழ்க்காணும் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவித்துள்ளது!! அமீரகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

09.01.2025  

உங்கள் CV களை hr.recruitment@dewa.gov.ae என்ற முகவரிக்கு அனுப்பவும் !

DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (PJSC)

DEWA (PJSC) INVITES QUALIFIED AND EXPERIENCED PROFESSIONALS TO APPLY FOR THE FOLLOWING VACANT POSITIONS- hr.recruitment@dewa.gov.ae

https://www.dewa.gov.ae/en/about-us/service-guide/consumer-services

https://www.dewa.gov.ae/en/

(சில சகோதரர்கள் வேலை தேடுகின்றனர் சில இடங்களில் வேலையும் உள்ளது முயற்சி செய்யுங்கள் இறைவன் நாடினால் சிறந்ததை அடைந்து கொள்வீர்கள)

Monday, 6 January 2025

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 59)

மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும்.

இச்சொல்லுக்கு போர்வை விசாலமான துணி கீழாடை நீளங்கி எனப் பல பொருள் உள்ளது.

இந்த வசனத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்று பொதுவாகத் தான் கூறப்படுகின்றது.

பெண்கள் முகம் மணிக்கட்டு வரை முன் கைப்பகுதி மற்றும் பாதம் ஆகிய குறிப்பிட்ட பாகங்களை வெளிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். எனவே இந்த பாகங்கள் உடலை மறைக்க வேண்டும் என மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட சட்டத்திலிருந்து விதிவிலக்கலானவை.

இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

அடுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து தனது முகத்தை மறைத்தார்கள் என்பதால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற வாதம் தவறனாது. ஏனெனில் இது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரிய ஹிஜாபின் சட்டமாகும்.

எனவே, நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. 

இதற்கு முன்னால், முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும், மறைப்பதற்கும் அனுமதி உண்டு என்று கூறியிருந்தோம்.  அதாவது, ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் முகத்தை மறைத்தால் அது குற்றமில்லை. அதே போன்று முகத்தை அவள் வெளிப்படுத்தினாலும் குற்றமில்லை. முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்று கூறியிருந்தோம்.  பிறகு இதனை மறு ஆய்வு செய்த போது, இந்த வாதம் தவறு என்று விளங்கிய காரணத்தினால், நபியின் மனைவிமார்களைத் தவிர, மற்ற பெண்கள் முகத்தை மறைப்பதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை என்பதே நமது தற்போதைய இறுதி நிலைப்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

“அடமானமாய் என்ன தருவீங்க"

வங்கி மேலாளரிம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.
“எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த பெண் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும்.
அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…”
அந்த பெண் சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு…
ரெண்டு குதிரை இருக்கு.. எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…”.
மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த பெண் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது…
பொட்டில போட்டு வச்சிருக்கேன்…”.
மேலாளர் யோசித்தார். இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள் …’ என்று நினைத்தபடியே,
”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றார்.
அந்த பெண் கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்….”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க"

Tuesday, 2 April 2024

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்கால வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்....

(பஷீர் அஹமது (Basheer Ahamed, London)அவர்களின் பயனுள்ள பதிவு)

எனது  அன்பு  இஸ்லாமிய  வாலிபர்களே  இளைஞர்களே   உங்களுக்கு  தான்  இந்த  செய்தி  :--

1970 முதல்   தமிழ்நாட்டின்  முஸ்லீம்  மக்கள்  அரபு நாடுகளாகிய   துபாய்  அபுதாபி  சார்ஜா   மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் , சவூதிஅரேபியா   பஹ்ரைன்   ஓமன்    கத்தார்  குவைத்து   போன்ற  நாடுகளுக்கு  ஆரம்ப  காலம்  முதல்  கடந்த  சில  ஆண்டுகள் வரை  பிழைப்பு  தேடி  போனவர்கள்  அதில்  நன்றாக  சம்பாதித்து  வெற்றி  கண்டவர்கள் பலர்   , வீணா  போனவர்களும்  சிலர் உண்டு  

தற்போது  சவூதிஅரேபியா  வின்  மற்றும் அரபு  நாடுகளில்   வேலை  வாய்ப்பு மிகவும் குறைந்து  வருகின்றது   இது  யாவரும்  அறிந்ததே  

அரபு  நாடுகளுக்கு  மாற்றாக    வேறு  பல  இஸ்லாமிய நாடுகள்  அதிக  பெட்ரோல் வளம்  மிக்க  நாடுகளும்   உள்ளது  பலர்  இதனை  அறியாமல்  இருக்கலாம்    

தற்போது  அதில்  சில நாடுகளை  அறிந்து  கொள்ளுங்கள்  :--

அஜர்பெயிஜான்  -  97%  முஸ்லீமகள் 

கஜகஸ்தான்  - 70% முஸ்லீம்கள் 

உஜ்பெகிஸ்தான்  - 96% முஸ்லீமகள் 

துருக்மேனிஸ்தான்  - 89% முஸ்லீம்கள் 

இந்த  நாடுகள்  அதிக  எண்ணெய் வளம் (பெட்ரோல் ) உள்ள  செழிப்பான நாடுகள்  இந்த  நாடுகள்  பல  காலமாக  ரஷ்யாவின்  ஆதிக்கத்தில்  இருந்தது   தற்போது  சுதந்திர  நாடாக  (மக்கள்  குடியரசாக ) இருக்கிறது  

நிறைய  வேலை  வாய்ப்புகளும்   சுதந்திரமான  நாடுகள்  (அரபு  நாடுகள் போன்று  அடக்கு  முறை  இங்கே  கிடையாது )  

குறைவான  மக்கள் தொகையும்  அதிக  வளமும்  உள்ள   , நாகரீகமான  மென்மையான  மனிதர்கள்  வாழும்  நாடுகள் 

இனிமேல்  வரும்  , வளரும்  முஸ்லீம்  சமுதாயமக்களும்  , மற்ற  இந்திய  ஏழை  சமுதாய  மக்களும்   நமது  இந்திய  நாட்டில் வேலை  வாய்ப்பு  கிடைக்காதவர்களும்  இது  போன்ற  வளமான  நாடுகளுக்கு  சென்று  வேலை  வாய்பினை  பெற  முயற்ச்சி  செய்யலாம் .

முன்பு   நமது  முஸ்லீம் சமுதாய  மக்கள் போதிய   கல்வி  அறிவு  பெறாமலும்  , கல்வி அறிவு  பெற்றிருந்தாலும்  போதிய  திறமையை  வளர்த்து  கொள்ளாமல்  அரபு  நாடுகளுக்கு  கக்கூஸ்  கழுவ  , ரோடு போட  , ஒட்டகம்  ஆடு  மேய்க்க , பலதியாவில்  ரோட்டில்  குப்பை  கூட்ட  போனது  போல்  போகாமல் 

போதிய  கல்வியும்   திறமையும்  வளர்த்து  கொண்டு  இது  போன்ற  புதிய  நாடுகளுக்கு  சென்றால்   நல்ல  வேலை  வாய்ப்புகளை  பெறலாம்  

இந்த  நாடுகளில்   மக்கள்  நாகரீகமானவர்கள்  மென்மையானவர்கள் அழகானவர்கள்   , மனிதர்களை மதிக்க  கூடியவர்கள்    சூது வாது அறியாதவர்கள் 

இந்த  நாடுகளுக்கு  செல்லும்  திருமணம்  ஆகாத  இளம்  வயதினர்கள்   அந்த  நாடுகளிலேயே   திருமணம்  செய்து  கொண்டு   அங்கேயே  செட்டில்  ஆகி  விடலாம்   

இந்திய  பாஸ்போர்ட்டை   வைத்து  கொண்டு  ஆன் லைனில்  வருடா  வருடம்   பதிவு  செய்ய வேண்டிய  அவசியம்  இருக்காது  

மேலும்  விபரம்  தேவை  உள்ளவர்கள்  அந்த  அந்த  நாடுகளின்   அரசாங்க  வைப் சைட்டில் விரிவான  தகவலை  பெறலாம்  .

குறிப்பு  :- 

உங்களுக்கு   தேவையான  எல்லா  நாட்டு  இமிகிரேஷன்  தகவல்களும்  அந்த  அந்த  நாட்டின்  அரசாங்க  வைப் சைட்டில்  உள்ளது.

நன்றியுடன்....பகிர்ந்து...
                                ✍️  மதுரை.,இஸ்மாயில்.

Tuesday, 19 March 2024

இக்லாஸ் IAS அகாடமி, சென்னை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,

இக்லாஸ் IAS அகாடமி, சென்னை. 

TNPSC குரூப்-4 தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது அதற்காக, சென்னை இக்லாஸ் IAS அகாடமி சார்பாக ஆன்லைன் தேர்வுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பதை உங்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 
 
எங்களது TNPSC குரூப்-4 ஆன்லைன் தேர்வுகளில் சேர ஒரே ஒரு நிபந்தனை! மாணவ மாணவிகள் உங்கள் முயற்சிகளில் நேர்மையாகவும் சீராகவும் இருக்க வேண்டும். 
 
பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

ஆண்கள்: [https://chat.whatsapp.com/GLxpIXKL8803gKlZYX4dba]

பெண்கள்: குழு விவரங்களுக்கு பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும்: 9840686562.

அட்டவணை மற்றும் தேர்வு முறைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் வாட்ஸ்அப் குழுவில் தெரிவிக்கப்படும்.


அன்புடன்,
இக்லாஸ் IAS அகாடமி,

தொடர்புக்கு: 9840686562
www.iklas.in

Sunday, 17 March 2024

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன.
தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.
நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை.

 1. தள்ளாத வயதினர் 

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர்காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.
ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.

صحيح البخاري
2839 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ، فَقَالَ: «إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ العُذْرُ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி 2839

அடியார்கள் விஷயத்தில் இறைவன் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. யாரேனும் முதுமையின் காரணமாக நோன்பை விட்டிருந்தால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர், எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

 2. நோயாளிகள் 

நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.
இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.
பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும்.  எனவே இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

 3. பயணிகள் 

பயணிகளுக்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184

இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.
பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது குறித்து விரிவான பல செய்திகள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், இன்னும் பலரையும் பயணிகள் பட்டியலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சேர்த்துள்ளார்கள்.
ஒருவர் சொந்த ஊரிலேயே இருக்கிறார். நாளை காலை பத்து மணிக்கு வெளியூர் செல்வதாகத் தீர்மானிக்கிறார். இவரும் பயணி என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்.

مسند أحمد
27233 – حَدَّثَنَا عَتَّابٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ كُلَيْبِ بْنِ ذُهْلٍ، عَنْ عُبَيْدِ بْنِ جَبْرٍ قَالَ: رَكِبْتُ مَعَ أَبِي بَصْرَةَ مِنَ الْفُسْطَاطِ إِلَى الْإِسْكَنْدَرِيَّةِ فِي سَفِينَةٍ، فَلَمَّا دَفَعْنَا مِنْ مَرْسَانَا أَمَرَ بِسُفْرَتِهِ فَقُرِّبَتْ، ثُمَّ دَعَانِي إِلَى الْغَدَاءِ وَذَلِكَ فِي رَمَضَانَ، فَقُلْتُ: يَا أَبَا بَصْرَةَ، وَاللَّهِ مَا تَغَيَّبَتْ عَنَّا مَنَازِلُنَا بَعْدُ؟ فَقَالَ: «أَتَرْغَبُ عَنْ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» قُلْتُ: لَا، قَالَ: فَكُلْ فَلَمْ نَزَلْ مُفْطِرِينَ حَتَّى بَلَغْنَا مَاحُوزَنَا،

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா என்ற நபித்தோழருடன் கப்பலில் ஏறினேன். அப்போது காலை உணவைக் கொண்டு வரச் செய்தார்கள். என்னையும் அருகில் வரச் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் ஊருக்குள் தானே இருக்கிறீர்கள்? (ஊரின் எல்லையைக் கடக்கவில்லையே) என்று கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நீர் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : உபைத் பின் ஜப்ர்
நூல் : அஹ்மத்

ஒருவர் ஊரின் எல்லையைத் தாண்டாவிட்டாலும், பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாலே அவரும் பயணியாகி விடுகின்றார். பயணிகளுக்குரிய சலுகையை அவரும் பெற்றுக் கொள்கிறார் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் நோன்பு நோற்றவராக இருக்கும் போது பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. வைத்த நோன்பை முறித்து விட இவருக்கு அனுமதி உண்டு. இதனால் எந்தக் குற்றமும் ஏற்படாது.

صحيح مسلم
2666 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ – يَعْنِى ابْنَ عَبْدِ الْمَجِيدِ – حَدَّثَنَا جَعْفَرٌ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ – رضى الله عنهما – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِى رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ فَصَامَ النَّاسُ ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ ثُمَّ شَرِبَ فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ فَقَالَ « أُولَئِكَ الْعُصَاةُ أُولَئِكَ الْعُصَاةُ ».

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் சென்ற மக்களும் நோன்பு நோற்றிருந்தார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்தார்கள். மக்கள் பார்க்கும் விதமாக அருந்தினார்கள். சிலர் மட்டும் நோன்பைத் தொடர்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது, அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம்

ரமளான் நோன்பை நோற்ற பின் பயணம் மேற்கொண்டால் அந்த நோன்பை முறிக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த ஹதீஸ் அவர்களின் கருத்துக்கு எதிராக நிற்கின்றது. இதனால் அவர்கள் இந்த ஹதீசுக்குப் புதுமையான ஒரு விளக்கம் தந்து தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட பின் பயணத்திலேயே நோன்பு நோற்றிருப்பார்கள். பயணத்தில் நோற்ற நோன்பு என்பதால் தான் முறித்தார்கள். மதீனாவிலேயே நோற்ற நோன்பு என்றால் அதை முறித்திருக்க மாட்டார்கள் என்பது தான் இவர்களின் விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் தவறாகும்.
ஹதீஸின் ஆரம்பத்தைக் கவனித்தால் நோன்பு வைத்தவர்களாகத் தான் புறப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில், வழியில் நோன்பு நோற்றார்கள் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸின் துவக்கம் இடம் தரவில்லை.
மேலும் குராவுல் கமீம் என்ற இடம் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாகும். மதீனாவிலிருந்து புறப்பட்டு இரவில் தங்கி விட்டு, மறுநாள் அடையும் தொலைவில் குராவுல் கமீம் என்ற இடம் அமைந்திருக்கவில்லை. காலையில் புறப்பட்டு அஸர் நேரத்தில் வந்து சேர்ந்து விடக் கூடிய அளவுக்கு அருகில் தான் உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளியாகத் தான் புறப்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாததாகும்.
எனவே பயணத்தில் நோற்ற நோன்பாக இருந்தாலும், அல்லது ஊரில் நோன்பு நோற்று விட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் இரண்டு நோன்பையும் முறித்து விட அனுமதி இருக்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
பயணத்தில் நோன்பை விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது கண்டிப்பாக விட்டு விட வேண்டுமா?
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில், நோன்பை முறிக்காத மக்களைப் பற்றி குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பயணத்தில் நோன்பைக் கட்டாயம் முறித்தாக வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதம் புரிவதற்கு ஏற்ற வகையில் அந்த ஹதீஸ் அமைந்திருப்பது உண்மை தான். ஆயினும் வேறு பல சான்றுகளைக் காணும் போது அவ்வாறு கருத முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري
1943 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، – زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -: أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَأَصُومُ فِي السَّفَرِ؟ – [ص:34] وَكَانَ كَثِيرَ الصِّيَامِ -، فَقَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»

நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 1943

صحيح مسلم
2680 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ رَبِيعَةَ قَالَ حَدَّثَنِى قَزَعَةُ قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ – رضى الله عنه – وَهُوَ مَكْثُورٌ عَلَيْهِ فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّى لاَ أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلاَءِ عَنْهُ. سَأَلْتُهُ عَنِ الصَّوْمِ فِى السَّفَرِ فَقَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَكَّةَ وَنَحْنُ صِيَامٌ قَالَ فَنَزَلْنَا مَنْزِلاً فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّكُمْ قَدْ دَنَوْتُمْ مِنْ عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ ». فَكَانَتْ رُخْصَةً فَمِنَّا مَنْ صَامَ وَمِنَّا مَنْ أَفْطَرَ ثُمَّ نَزَلْنَا مَنْزِلاً آخَرَ فَقَالَ « إِنَّكُمْ مُصَبِّحُو عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَأَفْطِرُوا ». وَكَانَتْ عَزْمَةً فَأَفْطَرْنَا ثُمَّ قَالَ لَقَدْ رَأَيْتُنَا نَصُومُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بَعْدَ ذَلِكَ فِى السَّفَرِ.

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் நோன்பு நோற்றவர்களாக மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். ஒரு இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் எதிரிகளை நெருங்கி விட்டீர்கள். எனவே நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலமாக இருக்கும் என்று கூறினார்கள். (விட்டு விடுங்கள் என்று கட்டளையாகக் கூறாததால்) இதைச் சலுகையாகக் கருதிக் கொண்டோம். சிலர் நோன்பு நோற்றோம். வேறு சிலர் நோன்பை விட்டு விட்டோம். பின்னர் மற்றோர் இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடிந்தால் நீங்கள் எதிரிகளைச் சந்திக்கவுள்ளீர்கள். நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலம் சேர்க்கும். எனவே நோன்பை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கட்டளையிட்டதால் இப்போது அனைவருமே நோன்பை விட்டு விட்டோம். இதன் பிறகு (பல சந்தர்ப்பங்களில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றவர்களாகப் பயணம் செய்துள்ளோம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : கஸ்ஆ
நூல் : முஸ்லிம்

நோன்பை முறிக்காதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பயணத்தின் போது கூறினார்களோ அதே பயணத்தின் தொடர்ச்சியைத் தான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) விளக்குகின்றார்கள். இதன் பிறகு பல பயணங்களில் நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள்.
பயணத்தில் நோன்பு நோற்பது குற்றமென்றால் இதன் பிறகு நபிகள் நாயகத்துடன் மேற்கொண்ட பயணங்களின் போது நபித்தோழர்கள் நோன்பு நோற்றிருக்க மாட்டார்கள். மேலும் இந்தப் பயணத்தின் தொடர்ச்சியிலேயே நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்றுள்ளனர் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.
பயணத்தில் நோன்பை விடுவது சலுகை தானே தவிர கட்டாயமில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
அப்படியானால் நோன்பை விடாதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூற வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் அதைக் காட்டி விட்டு அருந்தியுள்ளார்கள். இதைக் கண்ட பிறகு உடனே அதைப் பின்பற்றுவது தான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். நான் ஒரு செயலைச் செய்து காட்டிய பிறகும் அதற்கு மதிப்பளிக்காவிட்டால் அந்த வகையில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இப்படிக் கருதுவது தான் நாம் எடுத்துக் காட்டிய மற்ற ஹதீஸ்களுடன் மோதாமல் இருக்கும்.

صحيح مسلم
2685 – وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ وَهَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ – قَالَ هَارُونُ حَدَّثَنَا وَقَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِى الأَسْوَدِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِى مُرَاوِحٍ عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الأَسْلَمِىِّ – رضى الله عنه – أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَجِدُ بِى قُوَّةً عَلَى الصِّيَامِ فِى السَّفَرِ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هِىَ رُخْصَةٌ مِنَ اللَّهِ فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ »

பயணத்தின் போது நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே! யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹம்ஸா பின் அம்ரு (ரலி)
நூல்: முஸ்லிம்

பயணத்தில் நோன்பை விட்டு விடுவது தான் சிறப்பானது என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
பயணத்தில் நோன்பு நோற்கவே கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

صحيح البخاري
1946 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا وَرَجُلًا قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ: «مَا هَذَا؟»، فَقَالُوا: صَائِمٌ، فَقَالَ: «لَيْسَ مِنَ البِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்த போது ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டார்கள். அங்கே ஒரு மனிதருக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவர் நோன்பு வைத்திருக்கிறார் என்று மக்கள் விடையளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பயணத்தில் நோன்பு நோற்பது நல்ல காரியங்களில் அடங்காது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1946

பயணத்தில் இருக்கும் அந்த நபர் வெப்பத்தை தாங்கமுடியாமல் நிழல் பந்தல் அமைக்கும் நிலையில் இருக்கிறார். பயணத்தில் நோன்பு நோற்பதற்கு இவருக்கு சக்தியில்லாத போதும் பிடிவாதமாக நோன்பு வைக்கிறார். மேலும் பந்தல் அமைத்தாவது நோன்பு வைப்பது சிறந்தது என்று கருதியுள்ளார். இதுபோன்ற நிலையில் உள்ளவர் பயணத்தில் நோன்பு நோற்பது நல்லதல்ல என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாம் எடுத்துக் காட்டிய பல ஹதீஸ்களுடன் இது முரண்படும் நிலை ஏற்படும்.
ஒருவர் பயணம் மேற்கொண்டு வேறு ஊரில் சில நாட்கள் தங்குகிறார். தங்கும் காலத்தில் அவர் பயணத்தை மேற்கொள்ளாவிட்டாலும் வெளியூரில் இருப்பதால் அவரும் பயணிக்குரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

صحيح البخاري  4275 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا غَزْوَةَ الفَتْحِ فِي رَمَضَانَ»، قَالَ: وَسَمِعْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ مِثْلَ ذَلِكَ، وَعَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ [ص:146] عَنْهُمَا قَالَ: «صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا بَلَغَ الكَدِيدَ – المَاءَ الَّذِي بَيْنَ قُدَيْدٍ وَعُسْفَانَ – أَفْطَرَ، فَلَمْ يَزَلْ مُفْطِرًا حَتَّى انْسَلَخَ الشَّهْرُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்பு நோற்றவர்களாகப் போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமளான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 4275, 4276

ரமளான் மாதம் பிறை 20ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. எஞ்சிய பத்து அல்லது ஒன்பது நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்தும் நோன்பு நோற்கவில்லை. எனவே வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் வெளியூரில் இருக்கும் வரை நோன்பை விட்டு விடலாம். ஆனால் விடுபட்ட நோன்பைப் பின்னர் நோற்றுவிட வேண்டும்.

 4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் 

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

صحيح مسلم
789 – وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ مُعَاذَةَ قَالَتْ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِى الصَّوْمَ وَلاَ تَقْضِى الصَّلاَةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قُلْتُ لَسْتُ بِحَرُورِيَّةٍ وَلَكِنِّى أَسْأَلُ. قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاَةِ.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் நாங்கள் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 508

மாதவிடாய்க் காலம் என்பதைப் பற்றிப் பெரும்பாலான பெண்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். மாதவிடாய் என்பது உடற்கூறு, வாழ்கின்ற பிரதேசம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கணக்கில் மாதவிடாய் வெளிப்படாது.
சில பெண்களுக்கு ஓரிரு நாட்களிலேயே மாதவிடாய் ஏற்பட்டு நின்று விடும். இவர்கள் மாதவிடாய் நின்றவுடன் நோன்பு நோற்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் ஆகவில்லையே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
அது போல் சில பெண்களுக்குப் பதினைந்து நாட்கள் கூட மாதவிடாய் நீடிக்கலாம். அவர்கள் பதினைந்து நாட்களும் நோன்பை விட்டு விட வேண்டும். இந்த விஷயத்தில் பல பெண்கள் அறியாமையிலேயே உள்ளனர்.
மேலும் பெண்களிடம் இன்னொரு அறியாமையும் உள்ளது.
புனிதமிக்க ரமளான் மாதத்தில் நோன்பை விடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணி மாதவிடாயைத் தள்ளிப் போடச் செய்யும் மாத்திரைகளை சில பெண்கள் உட்கொள்கிறார்கள். ஹஜ்ஜின் போதும் இது போன்று நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் நோன்பு தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.

அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.
திருக்குர்ஆன் 10:44

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
திருக்குர்ஆன் 4:40

மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாததாகும்.

 5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் சலுகை உண்டு 

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.

سنن النسائي
2315 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الْحُبْلَى وَالْمُرْضِعِ»

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : நஸயீ 2276

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

Friday, 15 March 2024

வெள்ளிக்கிழமையன்று

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக)!

(அல்குர்ஆன் : 62:9)

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நுல்: புகாரீ (1904)

உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.❤

Thursday, 14 March 2024

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

யா அல்லாஹ் !
எங்களது தாய் தந்தை இவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக !
யா ரஹ்மானே !
எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரிகள், அன்பானவர்கள், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது உறவுகளை கொண்டோ செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே !

யா ரஹ்மானே !
பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக !

யா ரஹ்மானே !
நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ
வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட
பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ரமலான் உடைய அருட்கொடைகளையும், பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
இந்த ரமளானில் லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக !
யா அல்லாஹ் !
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக ! மேலும் ஹலாலான ரிஜ்க்கை தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக !

யா அல்லாஹ் !
நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக !

யா ரஹ்மானே !
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிளிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்டஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராதமரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக !
யா ரஹ்மானே !
பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான பர்தா எனும் ஹிஜாப் அணிந்திடும் முறையில் பெண்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
உள்ளங்களை புரட்டக் கூடியவனே ! எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக ! கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே !

யா அல்லாஹ் !
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை நீ தோற்கடிப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக மாற்றுவாயாக !
யா ரஹ்மானே !
உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களின் கபுர்களில் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத்_நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
கியாமத் நாளின் இழிவுகளை விட்டு என்னையும், மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக !

யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக !

யா ரஹ்மானே !
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக !
யா அல்லாஹ் !
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக !
யா அல்லாஹ் !
மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்குவாயாக !

யா ரஹ்மானே !
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக !
யா அல்லாஹ் !
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக ! யா ரஹ்மானே !
ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !


Sunday, 10 March 2024

யா ரஹ்மானே - துஆ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

யா ரஹ்மானே, எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர்கள், உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது உறவுகளை கொண்டோ, செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே!

யா ரஹ்மானே, பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால் அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, ரமலான் உடைய அருட் கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

யா ரஹ்மானே, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீயே பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிலிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராத மரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக!

யா ரஹ்மானே, முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, எம் பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, இஸ்லாமிய சட்டத்தை எல்லாத்துறைகளிலும் மேலோங்க செய்து அதன்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, முழுமையான பர்தா முறையில் எங்கள் பெண்களை வாழச்செய்வாயாக!

யா ரஹ்மானே, இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக, கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே!

யா ரஹ்மானே, மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக

யா ரஹ்மானே, எங்களை உனது நெருக்கமானவர்களாகவும், உனது பிரியமானவர்களாகவும் மாற்றுவாயாக!

யா ரஹ்மானே, உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

யா ரஹ்மானே, தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளின் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளின் இழிவுகளை விட்டும் மூமீனான ஆண்கள், பெண்கள் அனைவர்களையும் பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

யா ரஹ்மானே, கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுல் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

யா ரஹ்மானே, எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!

யா ரஹ்மானே, ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

யா ரஹ்மானே, மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக!

யா ரஹ்மானே, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

யா ரஹ்மானே, உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக!

யா ரஹ்மானே, உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக!

யா ரஹ்மானே, யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை உன்னுடைய அருளைக் கொண்டு கபூல் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

துஆவில் எங்களின் நலன்களுக்கும். துஆச் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்!!🤲🏻

Thursday, 7 March 2024

வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக - உன்னிடம் மட்டுமே கையேந்திக் கேட்கிறேன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

நான் மிக அருகே இருக்கிறேன் என சொல்லும் என் இரட்சகனே !
என் உள்ளத்தின் முனங்கல் சத்தத்தை செவிமெடுப்பாயாக !
அதைக் கேட்கின்ற ஆற்றல் உன்னையன்றி யாரிடமுமில்லை.

என் உள்ளத்தின் கனவுகளை நிதர்சனமாக்குவாயாக !
நீ விதித்ததைக் கொண்டு போதுமாக்கும் மன நிலையை ஏற்படுத்துவாயாக !

என் எதிரிகளும், என் மேல் பொறாமை கொண்டோரும் என்னை ஏளனம் செய்யும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே ! என் ரப்பே ! உன்னை மட்டுமே வணங்குகிறேன்.
உன்னிடம் மட்டுமே கையேந்திக் கேட்கிறேன்.

என் கடன்களை நிறைவேற்றுவாயாக !
வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக ! என் நோய்களைப் போக்கி பூரண ஆரோக்கியத்தை வழங்குவாயாக !

இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு அழகிய நன்மைகளையே விதித்தருள்வாயாக ! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்.
நீயே எங்களுக்குப் பாதுகாவலன்.
எல்லாப் புகழும், நன்றியும் உனக்கே !
அல்லாஹும்ம லக்கல் ஹம்து வலகஷ்ஷுக்ர் யா அல்லாஹ் ! யா ரஹ்மான் ! யா ரஹீம் ! யாரப்பல் ஆலமீன் ! அல்லாஹும்ம ஆமீன் !

இதய வலி, விரக்தி, மன அழுத்தம் - பாதுகாப்புத் தேடுகிறோம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் !
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே !

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் அருள் பொழியட்டுமாக !

அல்லாஹ்வே ! 
இதய வலி, விரக்தி, மன அழுத்தம் போன்றதுகள் எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்து நாங்கள் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.

நீ வழங்கும் நலன்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, நீ விதிப்பதின் மீது திருப்தி அடையபவர்களாக, உன்னுடைய திருப்பொருத்தத்தை  வென்றெடுப்பவர்களாக எங்களை உருவாக்குவாயாக !
ஒவ்வொரு நெருக்கடிகளில் இருந்தும் வெளியேறும் வழியை எங்களுக்கு உருவாக்குவாயாக !
சிரமங்களை இலகுவாக்குவாயாக !

எங்களைச் சுற்றி உருவாகும் நிகழ்வுகள் சூழல்கள் சூழ்ச்சிகள் போன்றவற்றினால் ஏற்படும் தாங்க முடியாத இன்னல்களை எங்களின்மீது சுமத்திவிடாதே !
எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் உன்னை ஐவேளை தொழுபவர்களாக ஆக்குவாயாக ! 

ரப்பனா ! எங்கள் இறைவனே ! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக ! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக ! இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக !

இறைவா ! ரப்பே !
உன்னையையே வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியையும் கேட்கிறோம். ஆமீன்! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

Wednesday, 6 March 2024

நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களா? / RIYAS IAS GUIDANCE CENTRE

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களா?

இதோ உங்களுக்கு உண்டான ஒரு அறிய வாய்ப்பு!


உங்கள் பிள்ளைகளை பெரிய நிர்வாக ரீதியான பணியில் அமர்த்த வேண்டுமா ?

பெரிய தலைவர்கள் வழியில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அமைத்திட வேண்டுமா?

 அதற்கு பெரிய தலைவர்களின் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

 அதாவது சிறு வயது முதலே   இலக்கை நிர்ணயித்து அதற்குண்டான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

 இதன் அடிப்படையில் உங்கள் குழந்தைகளை இந்திய குடிமையை பணி ஐஏஎஸ் ஐபிஎஸ்  (IAS IPS) போன்ற பெரிய பதவிகளில் அமர வைக்க இப்பொழுது இருந்தே திறனை மேம்படுத்த ஆயத்தமாக்குங்கள்.

இதோ RIYAS IAS GUIDANCE CENTRE  youtube 

 https://youtube.com/@riyasiasguidancecentre?si=7N7z75yRXliYNwB1 



சேனல் மூலம் JUNIOR IAS FOUNDATION COURSE  வகுப்பில் தினமும் பள்ளி மாணவர்களுக்கு எளிமையான முறையில்  IAS IPS ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுக்கு உண்டான அடிப்படை அறிவை தினமும் ஒரு மணி நேரம் ( 9pm - 10pm) வகுப்பில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

 இதில் மாதிரி காணொளிகள் எங்கள் youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

அதற்குண்டான LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Class 1

Benifits of becoming IAS OFFICER

 https://youtu.be/6cm1b1YWZdc?si=CW3CiBxGhfhHEMT4 


Class 2

Basics of physics

 https://youtu.be/JnAg8uCLMgU?si=HEjB9eQrvO6I5lhb 

Class 3

Basics of biology

 https://youtu.be/dnq8ETUdwmQ?si=bYCJ93sJUmYy-Xkg 

Class 4

Basics of chemistry

 https://youtu.be/AJ0aK2tbQXc 


Class 5

GK CLASS

 https://youtu.be/TS4LGv4ukKo 


 உங்கள் பிள்ளைகளை இந்த வகுப்பில் சேர்த்து அவர்கள் எதிர்காலத்தை நன்றாக அமைத்திட இப்பொழுது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Contact 

Er.RIYAS AHAMED J

 8015900483 

COIMBATORE .

Tuesday, 5 March 2024

பிள்ளைகளின் கடமை / பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பிள்ளைகளின் கடமை

                               (1)

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களை அரவணைக்க வேண்டும் என்று பல்வேறு போதனைகளை செய்கிறது.. அப்படிப்பட்ட போதனைகளை  காண்போம்..

பிள்ளைகளின் கடமை

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது 

‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:23,24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

(அல்குர்ஆன்: 31 : 14

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ‘என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’ என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 46:15)

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’ என்று கூறினார்கள். ‘அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு ‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டபோது, ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-138 

அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-5971 

மாபெரும் ஜிஹாத் (தியாகம்)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம் (உயிருடனிருக்கின்றனர்)’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)
நூல்: புகாரி-3004 

ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுதுவதற்கான வழிமுறை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுதுவதற்கான வழிமுறை!

நீட் (NEET) தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது "Do you intent to wear customary dress" என்ற கேள்விக்கு "Yes" என்று தேர்வு செய்பவர்கள் ஹிஜாபோ அல்லது வேறு ஏதேனும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளையோ அணிந்து கொண்டு நீட் (NEET) தேர்வு எழுதலாம். "Personal details" என்ற பகுதியில் கடைசி கேள்வியாக இந்த கேள்வி இருக்கும்..

ஆன்லைனில் இப்படி தேர்வு செய்பவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் வந்துவிட வேண்டும்.

NEET தேர்விற்கு இப்போது https://neet.ntaonline.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி மார்ச் 9. 

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

வீட்டிலிருந்தே செலவில்லாமல் இலவசமாக ஆன்லைனில் நீட் (NEET) தேர்விற்கு தயாராகும் வழிமுறையை இந்த பதிவில் https://www.facebook.com/siddique.mtech/posts/pfbid031FJ12bXhVswx3ZETFARimtSoTE5jhKa9PRTxpNrtHuHA7cALXctmQxLVeHKKKVG7l விளக்கியுள்ளேன். பார்க்கவும்!

பல்கலைக்கழங்களில் மாணவர் சேர உதவ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பல்கலைக்கழங்களில் மாணவர் சேர உதவு சியுஇடி தேர்வு அறிவிப்பு
பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு உதவும் சியுஇடி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://madrasmurasu.com/wp-content/uploads/2024/02/CUET-UG-2024-Notification.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.
பல்கலைக்கழங்களில் இளநிலை (டிகிரி - UG) படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம், நாடு முழுவதும் உள்ள 44 பல்கலைக்கழகங்களில் கலை & அறிவியல் இளநிலை படிப்புகளில் மாணவ, மாணவிகள் எளிதில் சேர சேர முடியும். பிப்ரவரி 27 - ஆம் தேதியில் இருந்து மார்ச் 26 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 28 ஆம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
மே இரண்டாவது வாரத்தில் தேர்வுக் கூடச் சீட்டினை பதிவுறக்கம் செய்து கொள்ளலாம். மே 15 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை பொதுத் நுழைவுத் தேர்வு நடைபெறும். ஜுன் 30 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு குறித்த அனைத்து தகவல்களுக்கும் www.nta.ac.in, https://exams.nta.ac.in/CUETUG/ என்ற தளத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
இத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவியர் தங்களது விரும்பும் பாடம், மொழி, பொது அறிவு என்று மூன்று பிரிவுகளில் தேர்வு பாடத்திட்டம் இருக்கும். மொழிகள் பிரிவில் 33 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 27 விருப்ப பாடங்கள் உள்ளன. இந்த இரண்டில் இருந்தும் 50 கேள்விகள் கொடுக்கப்படும். அதில், 40 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். பொது அறிவு பகுதியில் இருந்து 60 கேள்விகள் கேட்க்கப்படும். அதில் இருந்து 50 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு https://madrasmurasu.com/wp-content/uploads/2024/02/CUET-UG-2024-Notification.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம். 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட CUET (UG) நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் (CUs) அல்லது பிற பங்கேற்கும் நிறுவனங்களில் (மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட) சேர்க்கை கோரும் மாணவர்களுக்கு ஒற்றைச் சாளர வாய்ப்பை வழங்குகிறது. ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் 10 பாடங்களில் தோன்றும்போது முந்தைய பதிப்புகளைப் போலன்றி அதிகபட்சமாக ஆறு பாடங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் பாடத் தேர்வுகளைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று ஷிப்டுகளில் பல நாட்களில் நடத்தப்படும்.

தகவல்.
விழி-மனித வள மேம்பாட்டு அணி-தமுமுக வேலூர் மேற்கு மாவட்டம்

Monday, 4 March 2024

Preparation of Before Ramadan / ரமலானுக்கு முந்தைய தயாரிப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரமலானுக்கு முந்தைய தயாரிப்புகள்:
(நினைவுபடுத்தும் சிறுகுறிப்புகள்)

01. அனைத்து பள்ளிவாசல் மதரஸாக்களிலும் ஆண்டு விழா நடந்து முடிந்தது மற்றும் இன்னும் சில இடங்களில் நடைபெற இருக்கிறது.

02. புனித ரமலான் மாதம் ஆரம்பம் ஆக இன்னும் 6 நாட்களே உள்ளன. 

03. முதலில் வீட்டில் தேவையில்லாத பழைய துணிகள் குழந்தைகளின் ஆடைகள் எல்லாவற்றையும் எடுத்து துவைத்து அயன் செய்து தனி கவராக எடுத்து வைக்கவும். ரமலான் நாட்களில் யாசகம் கேட்டு வரும் நபருக்கு அல்லது அனாதை அசரமங்களுக்கு கொடுக்கலாம்.

04. இது போல் வீட்டில் பயன்படாமல் இருக்கும் பாத்திரங்கள், பொருட்களையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் .

05. ஜகாத் (தர்மம்) கொடுப்பவர்கள் லிஸ்ட் முன்பே எடுத்து தனி தனியாக பெயர் எழுதி நோன்பு ஆரம்பத்திலே உரியவர்களிடம் கொடுத்துவிடலாம்.

06. யாசகம் கேட்டு வருபவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் சில்லறை காசுகளை மாற்றி தனியாக எடுத்து வைத்துவிடவும்.

07. இரவு நேர தொழுகைக்கு செல்பவர்கள் முஸ்ஸல்லா, தொழுகை துணிகளை இப்போதே வாங்கி வைத்து கொள்ளலாம்.

08. பெருநாள் புது துணி எடுக்க சிலர் நோன்பின் கடைசி பத்தில் தான் செல்வார்கள். அந்த வேலையை முடிந்த வரை தவிர்த்துவிட்டு நோன்பு தொடங்கும் முன்பே வாங்கி வைத்துவிடவும்.

09. புதுத்துணி தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நம்மிடம் உள்ள உடையில் சிறந்த உடை ஒன்றை பெரு நாளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

10. முதலில் நோன்பின் சஹர் , இப்தார் நேரங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை லிஸ்ட் எடுத்து முன்னதாக வாங்கி அடுக்கி விடவும்.

11. நோன்பு நேரங்களில் பழங்கள், பழச்சாறு, தண்ணீர் முதற்கொண்டு உணவுகளை பிரிட்ஜில் வைப்பதால், பிரிட்ஜை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை எடுத்துவிடலாம்.

12. பேரீச்சம்பழம், ட்ரை ஃப்ருட்ஸ்களை எறும்புகள் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

13. நோன்பு நேரங்களில் அதிகம் சமையலில் பயன்படுத்துவதும் வெங்காயத்தினை தரையில் சாக்குபை அல்லது பேப்பர் போட்டு பரப்பி வைத்தால் நீண்ட நாள் அழுகாமல் இருக்கும். கொத்தமல்லி, புதினா , பச்சைமிளகாய் நுணிகளை நீக்கி சுத்தம் செய்து தனி தனியாக பேப்பரில் சுற்றி ப்ரிஜில் வைத்தால் அதிக நாள் வாடாமல் இருக்கும்.

14. இப்தார் நேரங்களில் சாப்பிடும் உளுந்த வடை, பருப்பு வடைக்கு அரைக்கும் மாவு, கட்லெட், சமோசா, முர்தபா, ஹல்வா, ரோல் வகைகளை அஸருக்கு முன்பே தேவைக்கு ரெடி செய்து வைக்கவும். இதற்காக மஃரிப் வரை யூடியூபில் சமையல் வீடியோக்களை பார்த்து இபாஃதத்தை விட்டு விட வேண்டாம்.

15. இப்தாருக்கு முன் ஒரு நோன்பின் கடைசி நேரம் தான்: துஆக்கள் ஏற்றுக்கொள்ளபட உகந்த நேரம்

16. சில இடங்களில் இப்தாருக்கு சுண்டல் வகைகளை சாப்பிடுவார்கள். அதுபோல, இயன்றவரை எண்ணெயில் பொறித்த உணவுகளை விட்டு விட்டு, தானிய உணவுகளை சாப்பிடலாம்.

17. பொறித்த எண்ணெயினை ஓரிரு நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அந்த எண்ணெயை முடிந்த வரை அன்றே சமையலில் பயன்படுத்திவிடவும்.

18. வெட்டிய பழங்கள், பாலுடா & கலர் கலராக கடல்பாசி இவற்றை உறைய வைக்க அதிக நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவேண்டாம். முடிந்தளவு குளிரூட்டப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

19. கடல் பாசியினை ஒரே மாதிரி பாலில் செய்யாமல் தினமும் சற்று வித்தியாசமாக இளநீர், எலுமிச்சை என்று வித்தியாசமாக செய்து சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

20. சிலருக்கு நோன்பின் ஆரம்பத்தில் தலைவலி அதிகம் வரும். அப்படி முதல் நாள் தலைவலி வருபவர்கள் முடிந்தவரை சஹர் உணவில் தயிர் சேர்த்து சாப்பிடவும். லஸ்ஸி அல்லது தண்ணீர் நிறைய குடிக்கவும். இஞ்சி ஏலக்காய் போட்ட பால் டீ அல்லது ப்ளேன் டீ குடிக்கலாம்.

21. நோன்பு திறக்கும் பொழுதும் தண்ணீர், ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தலைவலி தலைபாரம் குறையும்.

22. சஹர் நேர உணவுகளை மசாலா, எண்ணெய், நெய், காரம், புளிப்பு போன்றவை அதிகம் சேர்க்காமல் இருப்பதும், முடிந்தவரை சஹர் நேர உணவினை குறைவாகவும் சாப்பிடுவதும். ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

23. நோன்பு திறந்த பின்பு சிறுது நேரம் ஒய்வு எடுத்து, பின்பு இரவு நேர தொழுகையில் ஈடுபடவும் நேரத்தை ஒதுக்கி கொள்ளவும்.

24. என்ன தான் நாம் முன்பே வேலைகளை முடித்தாலும் அன்றாடம் செய்யும் வேலைகள் நம்மை பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வேலை செய்யும் பொழுது நாவில் திக்ரூ , கலிமா ஓதிக்கொண்டே இருக்க கிடைத்த இந்த ஷபான் மாதத்தில் பயிற்சி எடுக்கவும்.

25. அதிகமாக வீண் பேச்சுகளை தவிர்த்து, திருக்குர்ஆன் ஓதலாம். பயான், கிராத் கேட்கலாம். இறைவனிடம் அதிக பிராத்தனை செய்யலாம்.

26. இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் அழகான முறையில் ரமலான் நோன்புகளை நோற்கவும், அதிகமதிகமான நல்ல அமல்களை செய்து மறுமையில் அதன் முழு பலனை அடையவும் நல்லருள் புரியட்டும்...

#ramadan2024

Saturday, 18 October 2014

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகர் முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA புனித ஹஜ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகரம் மேலும் பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளையின் ஆலோசகரும்மான முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA அவர்கள் புனித ஹஜ் பயனத்தை இனிதே முடித்து இன்று காலை 18-10-2014 சென்னை வந்து அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்





அவர்களுடைய ஹஜ் அல்லாஹ் ஏற்றுக்கெள்வானாக. அனைவரும் துவா செய்யவும் .

சென்னையில் இருந்து பரமக்குடி யாசர்
துணை செயலாளர் - அன்னை ஆயிசா டிரஸ்ட்