Monday, 26 May 2025

பள்ளிவாசல்களுக்கும் ஒரே மாதிரியான துணை விதிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழகத்தில்  13000 
பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

அனைத்து 
பள்ளிவாசல்களுக்கும் ஒரே மாதிரியான துணை விதிகள் (Bylaws)
உருவாக்கிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு 
பள்ளிவாசலுக்கும் அதிகார வரம்பிற்கான வரைபடம் தயார் 
செய்து பள்ளிவாசலில் ஒட்ட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் முறையாக வக்ஃபு செய்யப்பட்டது இது அல்லாஹு வின் பள்ளிவாசல் என்கின்ற வாசகத்தை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும்  தன்னுடைய மொஹல்லா மக்களின் மொத்த எண்ணிக்கை அதில் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு 18 வயதிற்கு 
உட்பட்டவர்கள் எவ்வளவு என்கின்ற எண்ணிக்கையை வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் மொஹல்லா மக்களிடம் சந்தா வசூலித்து சந்தாதாரர்களின் பட்டியலை சரியாக
பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் தங்கள் மொஹல்லாவில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் விதவைகள் திருமணமாகாத ஏழை பெண்கள் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்திருக்க
வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டி தேர்தல் நடத்தும் நடைமுறையை
கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் தங்கள் மொஹல்லா மக்களின் ஜக்காத் தொகையை வசூலித்து அதை ஏழைகளுக்கு உதவ பைத்துல்மால் கமிட்டி ஒன்று உருவாக்கிட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் பள்ளிவாசல் இமாம் மற்றும் நிர்வாகிகள் மொஹல்லாவில் இருக்கும் வழக்கறிஞர் கொண்ட இஸ்லாமிய சமரச கமிட்டி ஒன்று உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் நிக்காஹ் நடத்தி வைக்கும் பொழுது நிக்காஹ் நாமாவில்  திருமணத்திற்கு பிறகு மனவாழ்க்கை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை வந்தால் அதை இஸ்லாமிய சமரச கமிட்டி மூலம் தீர்வு காண சம்மதம் தெரிவிப்பதாக
மணமக்களிடம் 
கையொப்பம் பெற வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் ஒரு பொதுமக்கள் ஹெல்ப் லைன் நம்பர் வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும் தங்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துகளின் பட்டியலை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் அதில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் சொத்து இருந்தால்
அதை குறிப்பிட்டு யாருடைய ஆக்கிரமிப்பில் உள்ளது என்று குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் தங்கள் பள்ளிவாசல் இமாம் மற்றும் மோதினார் 
இருவருக்கும் குடியிருக்க வீடு உத்தரவாதபடுத்திட வேண்டும். 

ஒவ்வொரு ஊரிலும் கட்டாயம் ஒரு ஐக்கிய ஜமாத் உருவாக்கிட வேண்டும் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஐக்கிய ஜமாத்திற்கும் ஒரே மாதிரியான துணை விதிகள் (Bylaws) உருவாக்கிட
வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் அந்தந்த ஊரில் உள்ள ஐக்கிய ஜமாத்தில் உறுப்பினராக  கட்டாயம் இணைய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஐக்கிய ஜமாத்தையும் உள்ளடக்கிய மாநில தலைமை ஐக்கிய ஜமாத் உருவாக்கிட
வேண்டும்.

மாநில ஐக்கிய ஜமாத்தின் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.

ஒரு ஊருக்கு ஒரு ஐக்கிய ஜமாத்தை மட்டுமே அங்கிகரிக்க வேண்டும்.

மாநில ஐக்கிய ஜமாத் மாநில அளவில் 
ஒரு பைத்துல் மால் மற்றும் மாநில இஸ்லாமிய சமரச கமிட்டியை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

மேற்கண்ட விஷயங்களில் அரசியல் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செயல்திட்டத்தை செயல்படுத்த நாம் இஸ்லாமிய மக்களிடம் ஒத்த கருத்தை உருவாக்கிட
வேண்டும்.

இதற்கு கட்டுப்படாத பள்ளிநிர்வாகங்களை இஸ்லாமிய சமூகம் புறக்கணிக்க வேண்டும்.

அனைத்து பள்ளிவாசல்களும்
சுன்னத்துல் ஜமாத் பள்ளிவாசல்களாக
மட்டுமே செயல்பட வேண்டும்.

தமிழ் நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில் சார்பாக ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் தங்கள் கருத்துக்களை கேட்டறிய தனித்தனியாக தபால் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம்.

---
M.Rahamathulla B A,B.L.,
Chairman 
Tamil Nadu Wakf And Personal Law Council 
8610496476

No comments:

Post a Comment