Thursday 14 March 2024

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

யா அல்லாஹ் !
எங்களது தாய் தந்தை இவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக !
யா ரஹ்மானே !
எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரிகள், அன்பானவர்கள், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது உறவுகளை கொண்டோ செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே !

யா ரஹ்மானே !
பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக !

யா ரஹ்மானே !
நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ
வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட
பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ரமலான் உடைய அருட்கொடைகளையும், பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
இந்த ரமளானில் லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக !
யா அல்லாஹ் !
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக ! மேலும் ஹலாலான ரிஜ்க்கை தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக !

யா அல்லாஹ் !
நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக !

யா ரஹ்மானே !
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிளிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்டஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராதமரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக !
யா ரஹ்மானே !
பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான பர்தா எனும் ஹிஜாப் அணிந்திடும் முறையில் பெண்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
உள்ளங்களை புரட்டக் கூடியவனே ! எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக ! கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே !

யா அல்லாஹ் !
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை நீ தோற்கடிப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக மாற்றுவாயாக !
யா ரஹ்மானே !
உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களின் கபுர்களில் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத்_நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
கியாமத் நாளின் இழிவுகளை விட்டு என்னையும், மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக !

யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக !

யா ரஹ்மானே !
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக !
யா அல்லாஹ் !
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக !
யா அல்லாஹ் !
மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்குவாயாக !

யா ரஹ்மானே !
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக !
யா அல்லாஹ் !
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக ! யா ரஹ்மானே !
ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !


No comments:

Post a Comment