Thursday 14 March 2024

மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

ஸலாமும் ஸலவாத்தும் 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக !

ஏகனே ! அல்லாஹ்வே !
எங்களுக்கு பிள்ளை செல்வத்தை வழங்கிய உனக்கு நன்றி !
" லகல் ஹம்து வலக்கஷ் ஷுக்ரு "

யா அல்லாஹ் ! 
எங்கள் பிள்ளைகளின்  எதிர்காலத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம்.
அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்து அதில் பரக்கத் செய்வாயாக !
அவர்களுக்கு தன்னிறைவான வாழ்வாதரங்களை வழங்கி அதில் பரக்கத் செய்வாயாக !

அவர்களை நல்லறங்களில் ஈடுபடுபவர்களாக ஆக்குவாயாக !
குர்ஆனை இதயத்தில் பாதுகாப்பவர்களாக ஆக்குவாயாக !
அவர்களுக்கு மகிழ்ச்சியான மன நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பாயாக !

இரட்சகனே ! 
அவர்களைப் பாதுகாப்பாயாக ! அவர்களின் குறைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பாயாக !
அவர்களுக்கு நேரிய  பாதையைக் காட்டுவாயாக !
அவர்களை கண்ணியமாக வாழ வைத்து, அவர்களின் மீது உன் அன்பைப் பொழிவாயாக !
அவர்களுடன் இருப்பாயாக !

கருணையாளனே !
எங்கள் உள்ளம் பதைபதைத்து எங்களை அழவைக்கும் எந்தத் தீங்கும் துன்பங்களும் விபத்துகளும் நோய்களும் அவர்களை அணுகாமல் பாதுகாப்பாயாக ! 
யா அல்லாஹ் ! அவர்கள் பெற்றோர்களாகிய எங்களின் மீது அன்பு செலுத்துபவர்களாக, முதுமையில் எங்களை பார்த்துக் கொள்ளக் கூடியவர்களாக, எங்கள் மீது பரிவு பாசம் காட்டக் கூடியவர்களாக, ஆக்கி அருள் புரிவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment