Tuesday 19 March 2024

நோன்பிருப்போம், உணவளிப்போம் - புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹித் பள்ளிவாசல் சார்பாக நோன்பு காலங்களில் ஏழை குடும்பங்களுக்கு உணவு தயார் செய்வதற்காக உணவுப் பொருட்களை நோன்பிருப்போம், உணவளிப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த வருடம் சுமார் 65 குடும்பங்களுக்கு 1,50,000 ரூபாய் மதிப்புள்ள பல சரக்கு சாமான்கள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மஸ்‌ஜிதுர் ரஹ்மான் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் சதாம் உசேன், துணைத் தலைவர் சமதானியா சாகுல், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, முகம்மது ரபீக், எம்.எஸ்.ஹமீது, இமாம் இப்னு தைமியா இஸ்லாமிய கல்லூரி தாளாளர் பொறியாளர் காஜா முஹைதீன் செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் தீன், மத்ரஸா பொறுப்பாளர் பஷீர் ஒலிEx.mc, தமுமுக நகர செயலாளர் அசன், பள்ளிவாசல் இமாம் மவுலவி அப்துல் மஜீத் பைஜி அட்மின் சுலைமான் உள்ளிட்டோர் இந்த பணியினை சிறப்பாக செய்தனர்.

No comments:

Post a Comment