Sunday 24 March 2024

மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க  வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக !

அல்லாஹ் ! உள்ளங்களை மாற்றுபவனே ! எங்கள்  உள்ளத்தை
உன்னுடைய ஈமானின்பால் உறுதியாக்கி வைப்பாயாக !

நாங்கள் எதன் பால் ஆர்வமாக இருக்கிறேமோ அதிலிருந்து எங்களை  மீட்டெடுப்பாயாக !
நீ எதனை செய்வதின் பால் ஆர்வப்படுவாயோ அதன் பால் எங்களை  ஆர்வமடையச் செய்திடுவாயாக !

யா அல்லாஹ் ! இப்பூமி விசாலமாக இருந்தாலும் எனக்கு நெருக்கடி யாக மாறினால் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபிக்கு உதவியது போல் எனக்கு உதவுவாயாக !
 
எங்கள் இறைவனே ! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே ! 
நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாக இருக்கிறாய்.

பித்னாவும் ஃபஸாதும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்களுக்கு சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசாத்தியம் எனவும் தெளிவுறக் காட்டுவாயாக !

அதில் குழப்பமடையச் செய்துவிடாதே ! நாங்கள் வழி தவறிவிடுவோம்.
நேர்வழியிலேயே எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment