Sunday 24 March 2024

வட்டி ஷைத்தானின் பிடியாகும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வட்டி ஷைத்தானின் பிடியாகும் 

 அல்லாஹ்வின் பெயரால் 

மக்கள் கஷ்டத்தில், பண உதவி என்ற பெயரில் நாள் வட்டியாகவோ, வார வட்டியாகவோ, மாத வட்டியாகவோ இன்னும் பல முறையில்
உதவி செய்வதைப் போல செய்து, கொடுத்த தொகையை மொத்தமாக  திருப்பி வாங்கும் வரை,
 கடன் வாங்கியவருக்கு அபராதமாக, கடன் கொடுத்தவருக்கு  ஆதாயமாக ஒரு சிறு தொகையை வாங்கி வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டனர் .

ஆதாரம்: அல்குர்ஆன் இது இறைவாக்கு 2 : 275 

"வட்டி வாங்கி சாப்பிடுபவர்கள், 
வாழும் காலத்தில் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக் கொண்டவரைப் போலவே அல்லாமல் வாழவில்லை. ஏனென்றால் நிச்சயமாக வட்டி வாங்கி சாப்பிடுவதும், வியாபாரம் செய்து சாப்பிடுவதைப் போன்றதுதான் என்று இவர்கள் சொன்னார்கள்.

 அல்லாஹ் வியாபாரத்தின் மூலமாக சாப்பிடுவதைத் தான் ஹலாலாக ( ஏற்றுக் கொள்ளப்பட்டதாக) ஆக்கி விட்டான் ஆனால் வட்டி வாங்கி சாப்பிடுவதை ஹராமாக ( விலக்கப்பட்டதாக) ஆக்கி விட்டான்.
இது இறைவனிடமிருந்துள்ள உபதேசமாகும். இதை யார் ஏற்று வட்டித் தொழிலை விட்டு விட்டாரோ, அவர் கொடுத்த மொத்த தொகையை மட்டும், கொடுத்தவரிடமிருந்து வாங்கிக் கொள்ளவும் இவ்வாறாக இவருடைய விஷயம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் யார் மீண்டும் வட்டித் தொழிலை விடாது செய்வாரோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதிலேயே நிரந்தரமாக வாழப் போகிறவர்கள்".

 அல்லாஹ் நம் அனைவரையும் நரக நெருப்பிற்குள் வாழ்வதிலிருந்து பாதுகாப்பானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .

 அல்லாஹ் 
நம் அனைவரையும் இன்று காற்றுக்குள் நிம்மதியாக வாழ வைப்பது போலவே சுவன வாழ்வில், பூஞ்சோலையில், நீர் வீழ்ச்சிக்கு அருகில் மகிழ்ச்சியாக  நிரந்தரமாக வாழ வைப்பானாக! ஆமீன்
 யா ரப்பல் ஆலமீன். 


இது இறைவாக்கு, மனித குலத்தின் வாழ்க்கைக்கான நிறைவாக்கு.

No comments:

Post a Comment