Sunday 24 March 2024

மகத்தான அர்ஷின் அதிபதியே !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புடையவனே !
மகத்தான அர்ஷின் அதிபதியே !
பரக்கத்தான ரமளான் மாத ஜுமுஆ நாளில் அதிகாலையில் 
உன்னை வணங்கித் துதிக்கிறோம்.
எங்கள் கரங்களை உன்மேல்  உள்ள நம்பிக்கையில் உன் பால் உயர்த்தி விட்டோம்.

நீ மிகவும் சங்கைக்குரியவன்.
எங்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்கமாட்டாய் என நம்புகிறோம்.
எங்கள்தேவைகளை நிறைவேற்றுவாயாக !

துன்பங்களைப் போக்குபவனே !
கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவோரின்
கவலைகளைப் போக்குவாயாக !
அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களின் மீது கருணை கொள்வாயாக !

திருமண வயதில் இருப்போருக்கு நல்ல சாலிஹான வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுப்பாயாக !
குழந்தைப் பேறுக்காக ஏங்குவோருக்கு
நல்ல வாரிசைத் தருவாயாக !
ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளிடம் பாசத்தோடும் நேசத்தோடும் பரிவுடன் நடந்திடச் செய்வாயாக !

எங்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக !
எங்களின் பாவங்களை பொருட்படுத்தாமல் மன்னித்து எங்களின் ஏட்டிலிருந்து அழித்து விடுவாயாக !

எங்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பு செலுத்துபவர்களாக ஆக்கி வைப்பாயாக ! அவர்கள் சந்ததிகளும் எங்களின்மீது பாசம் நிறைந்தவர்களாக மாற்றி வைப்பாயாக !
எங்கள் உள்ளங்களை விரிவாக்குவாயாக ! எங்க நிலைமைகளை சிறந்த நிலைமைக்கு மாற்றுவாயாக ! எங்களின்எதிர்பார்ப்புகளை நிதர்சனமாக்குவாயக !
எங்களின் நோய்களை குணப்படுத்துவாயாக ! 
நோய் நொடிகளை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக !
பூரணசுகத்தை எங்களுக்கு வழங்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment