Sunday 24 March 2024

எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத் !

யா அல்லாஹ் ! 
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !
நீ விதித்த கடமைமைகளை நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளை பேணுபவர்களாக !
ஜகாத்தை கொடுப்பவர்களாக !
உன்னிடம் இருப்பவைகளைத்  தேடுபவர்களாக !
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக !
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக !
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக !
இவ்வுலகின் மீது பற்றற்றவர்களாக !
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக !
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக !

அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக !
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக !
மறுமை நாளில் உன்னுடைய நபியும், தூதரும்,
தூய்மையான நண்பரும், நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம் வருபவர்களாக !
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக !
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக !
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக !
பாலையும், சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்திக்கீன்கள் சத்தியவான்கள் ஷுஹதாக்கள் உயிர்த்தியாகிகள் ஸாலிஹீன்கள் நற்கருமங்கள் செய்தவர்கள் ஆகியோருடன் உடன் இருப்பவர்களாக ஆக்குவாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment