Monday 18 March 2024

முஸ்லிம் பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியூர் நிகழ்ச்சிக்கு செல்வதை சில காலம் தவிர்க்கலாம் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம் பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியூர் நிகழ்ச்சிக்கு  செல்வதை சில காலம் தவிர்க்கலாம் !

வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வர இருக்கும் காரணத்தினால் தேர்தல் ஆணையம் ஐம்பதாயிரம் (50,000) ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் அது உங்கள் பணமாக இருப்பதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அதுமட்டுமின்றி கடந்த தேர்தலில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் நகை அணிந்து சென்று வெளியூர் நிகழ்ச்சிக்கு  செல்லும்போது  அவர்கள் பல இன்னல்களை சந்தித்து உள்ளார்கள். எனவே  இந்த தகவலை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிகமாக பகிர வேண்டும்.

50,000/ரூபாய்க்கு மேல்  தவிர்க்கமுடியாமல் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணம் ( Bank passbook) வைத்துக்கொள்ளுங்கள். ஆபரண நகைகளை அதிகமாக அணிந்துகொண்டு வெளியூர் செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்
அல்லாஹ் பாதுகாப்பானாக !

No comments:

Post a Comment