Thursday 14 March 2024

நாம் தமிழர் கட்சி வேண்டாம்! நடிகர் சீமானும் வேண்டாம்! மக்களே! வெளியேறுங்கள்! கட்சியை களைத்து விடுங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாம் தமிழர் கட்சி வேண்டாம்! நடிகர் சீமானும் வேண்டாம்! மக்களே! வெளியேறுங்கள்! கட்சியை களைத்து விடுங்கள்! 

 "காரணமும், ஆதாரமும்" 

 இறைவன் எங்கே! நிச்சயம் ஒருவன் இருக்கிறான், அவனை இந்த மனித குலம் தேடுகிறது, நம்புகிறது. 

 அந்த இறைவன்தான் சொல்கிறான் 

 168 . "ஓ மனித குலமே! நேர்மையான முறையில் சம்பாதித்த அழகிய உணவை ( உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை) இந்த பூமியிலிருந்து உண்ணுங்கள். அந்த ஷைத்தானின் அடிச்சுவடுகளை (அதாவது தகாத முறையில் சம்பாதித்த கெட்ட உணவை அதாவது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவை இந்த பூமியிலிருந்து உண்ணுவது, உண்ணச் செய்வது) இதை பின்பற்றாதீர்கள்.
 நிச்சயமாக அவனே உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். 

 169 . இவன் உங்களுக்கு கட்டளையிடுவதெல்லாம், கெட்ட பேச்சு, அறுவறுப்பான செயல் இன்னும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் அப்படியிருக்க, அந்த ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு எதிராக இல்லாத பொல்லாத தையெல்லாம் உங்களை பேச வைப்பான்.  

 170 . இதோ அல்லாஹ் இறக்கி வைத்துள்ள இந்த குர்ஆன் வேதத்தை பின்பற்றுங்கள் என்று இவர்களிடம் சொல்லப்பட்டால், நாங்கள் எங்கள் மூதாதையர்கள்  எப்படி வாழக் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்வார்கள். இவர்களுடைய மூதாதையர்கள் எதையும் சிந்திக்காதவர்களாக நேர்மையான முறையில் வாழாதவர்களாக இருந்தாலுமா ? பின்பற்றுவார்கள். 

 171 . இவ்வாறு ஒரே இறைவனின் வழிகாட்டுதலை நிராகரிப்பவர்களுக்கு உதாரணம் கால்நடைகளுக்கு அதை மேய்ப்பவன் என்னதான் உபதேசம் செய்தாலும் அவைகளுக்கு கூப்பிடுவதும், கத்துவதும் மட்டும்தான் கேட்கும் புரியும் அதைப் போலத்தான் இவர்களும்.
இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு  என்னதான் நல்ல உபதேசமும், நேர்மையான வாழ்வும் காட்டினாலும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும், குருடர்களாகவும்தான் இருப்பார்கள் அதாவது இவர்கள் சிந்தனை செய்யவே மாட்டார்கள்.

 இறைவேதம் குர்ஆன் 2 : 168 - 171). 

 இது 
 அழிக்க முடியாத, தீமைகளுக்கு அப்பாற்பட்ட  இறை பேச்சு, அதுவே நம் வாழ்வின் வெற்றிக்கான மூச்சு.

No comments:

Post a Comment