Thursday 15 August 2024

பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி



பரமக்குடியில் 78th சுதந்திர தின நிகழ்ச்சி: 15.08.2024 

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்ச்சி பரமக்குடி சிறுவர் பூங்கா அருகில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தக்வா மதரஸா சிறுவர்கள் தேசியக் கீதம் பாடினர். மேலும் மதரஸா சிறுவர்களின் சுதந்திர தின உரை மற்றும் சுதந்திர சிறப்பு பாடல்  ஆகியன நடந்தது.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் பொறியாளர் சாதிக் பாட்சா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்துல் காதர், நகர தலைவர் முகம்மது சஜித்,  நகர் தமுமுக செயலாளர் நல்ல இப்ராஹீம்,மமக செயலாளர் சர்க்கரைக் கனி, பொருளாளர் அப்துல்லா, MTS செயலாளர் அப்துல் அஜீஸ், தெற்கு பள்ளி வார்டு செயலாளர் ரஹீம், இப்ராகிம் ஷா, நவாஸ் கான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தக்வா பள்ளிவாசல் இமாம் தாஹிர் சைஃபுதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment