Tuesday 2 April 2024

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான் மாதத்தில் உன்னை வணங்கவும் நோன்பு நோற்கவும் வாய்ப்பளித்த வல்லோனே ! உன்னைப்  போற்றுகின்றேன். புகழ்கின்றேன். துதிக்கின்றேன். உனது திருத்தூதர் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்தும் சொல்கின்றேன்.

இறைவா !
வருங்காலத்திலும் நாங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுது வணங்கிட எங்களுக்கு அருள்புரிவாயாக !
மகிழ்ச்சிகரமான இந்நந்நாளில் உன் அருள் வளங்களை எங்களுக்கு வழங்குவாயாக ! மகிழ்ச்சியைத் தருவாயாக !

யா அல்லாஹ் ! 
எங்கள் இல்லத்தை நலன்களும், வளங்களும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
நேர்வழியும், இறைஅச்சமும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
ஆரோக்கியமும் பாதுகாப்பும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
மகிழ்ச்சியும், குதூகலமும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
உன் கருணையும், மன்னிப்பும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
தஸ்பீஹும், இஸ்திஃபாரும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
அமைதியும், நிம்மதியும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !  எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக ! எங்கள் மனங்களுக்கு அமைதியை நல்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

No comments:

Post a Comment