Tuesday 2 April 2024

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இப்னு குதாமாஹ் அல்மக்திஸீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

நோன்பில் மூன்று படித்தரங்கள் உள்ளள :

1. பொதுவான நோன்பு
2. குறிப்பான நோன்பு
3. குறிப்பிலும் குறிப்பான நோன்பு 

• பொதுவான நோன்பை பொறுத்தவரையில்!

அது வயிறு மற்றும் மர்மஸ்தானததை இச்சையை நிறைவேற்றுவதிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது பார்த்தல், நாவு, கை, கால், செவி, பார்வை மற்றும் ஏனைய (அனைத்து) உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்வதாகும்.

• குறிப்பிலும் குறிப்பான நோன்பை பொறுத்தவரையில்!

அது அற்பமான நோக்கங்கள் மற்றும் அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்துகின்ற சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்வதாகும். 

மேலும் அல்லாஹ்வையன்றி மற்ற அனைத்தைவிட்டும் முழுவதுமாக தடுத்துக் கொள்வதாகும்.

 📚 مُختَصَر مِنهاجِ القاصِدِين 1/44

No comments:

Post a Comment