Tuesday 2 April 2024

பெற்றோர்களே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பெற்றோர்களே...

இறைவனது செல்வ வளங்களையும் பேரருள் பொக்கிஷங்களையும் எளிதாகப் பெற்றுத்தரும் கருணை மிகுந்த கடைசி 10 நாட்களின் துஆக்களில் உங்கள் பிள்ளைகளுக்காக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

என் இறைவனே... என் பிள்ளைகளின் அறிவையும்  உள்ளத்தையும் உணவையும் ஹலாலாக்கி வைப்பாயாக.  

என் இறைவனே... உன் தீனுக்காக,இந்த உம்மத்துக்காக, உழைத்த, தியாகம் செய்த, முன்னோர்கள் அனைவரின் மீதும் மிகுந்த மரியாதையை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே.... எந்த ஒரு மனிதனுடைய மானத்துக்கும் உயிருக்கும் பொருளுக்கும் சிறு தீங்கு கூட செய்துவிடாமல் என் பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாயாக.    

என் இறைவனே... எங்களுடன் வாழும் அனைத்து சமூக மக்களின் மத நம்பிக்கைகளை வழிபாட்டுத் தளங்களை கண்ணியமாக கருதும் மனப்பாங்கை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே... உன் நினைவிலும் உன் நிழலிலும் என் பிள்ளைகளின் அறிவை பேராற்றல் படுத்துவாயாக.    

என் இறைவனே... கல்வியைத் தாண்டி அறிவைத் தாண்டி மகத்துவமிக்க ஞானத்தின் வாயிலை என் பிள்ளைகளுக்கு திறந்து விடுவாயாக.    

என் இறைவனே... என் பிள்ளைகளுக்கு, உன் படைப்புகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி அதன் இரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குவாயாக. 

என் இறைவனே.... உன்னுடைய தீனிலும்,உன்னுடைய படைப்புகள் குறித்த அறிவிலும் இதுவரை எந்த மனிதனுக்கும் வழங்கிடாத ஞானத்தை என் பிள்ளைகளுக்கு வழங்குவாயாக.  

என் இறைவனே... பெருகிவரும் நீரழிவுநோய் புற்றுநோய் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான எளிமையான இயற்கை மருந்தை கண்டறியும் ஞானத்தை என் பிள்ளைகளுக்குத் தருவாயாக.

No comments:

Post a Comment