Thursday 23 July 2015

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள் 107

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
மக்கீ, வசனங்கள்: 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
107:1   اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏ 
107:1(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2   فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏ 
107:2பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3   وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏ 
107:3மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4   فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ 
107:4இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5   الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ 
107:5அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6   الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏ 
107:6அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7   وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ‏ 
107:7மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

No comments:

Post a Comment