Monday 11 November 2019

இறைநம்பிக்கையாளர்கள்* நரகத்திலிருந்து *தப்பி வரும்போது,

*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*


*இறைநம்பிக்கையாளர்கள்* நரகத்திலிருந்து *தப்பி வரும்போது,*

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் *இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.*


அப்போது *உலகில் வாழ்ந்த போது* அவர்களுக்கிடையே நடந்த *அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள்.*


இறுதியில், அவர்கள் *பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது* சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.


*முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!*


அவர்கள் *சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை,*


*உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.*


*நூல் - புகாரி : 2440*


☝🏿☝🏿☝🏿

No comments:

Post a Comment