Sunday 10 March 2024

ரமலான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி! - கம்பம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரமலான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

கம்பம் நகர இஸ்லாமிய பிரச்சார பேரவை-தமுமுக சார்பாக ரமலானை வரவேற்போம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 10-3-2024





ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 - 8.30 மணிவரை கம்பம் நகர தமுமுக தலைவர் தமீமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் கம்பம் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாவட்ட ஐபிபி பொருளாளர் ஹக்கீம் கிராத் ஓதினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வாசிம் அக்ரம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் மௌலவி.முஹம்மது ஹனிபா பத்ரி அவர்கள் ரமலானின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சலீம் பாட்ஷா,தமுமுக நகர செயலாளர் நிஜாத் அஹமது,மமக நகர அப்பாஸ் மந்திரி, நகர துணை செயலாளர்கள் நூர் முகமது,முகமது ஆசிக், கிளை நிர்வாகிகள் காஜா மைதீன், ஹக்கீம்,  சிக்கந்தர், மருத்துவஅணி செயலாளர் முஜாஹித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஐபிபி செயலாளர் நியாஸ் அஹமது நன்றியுரை கூறி நிறைவு செய்தார்

தகவல்;
H.அப்பாஸ் மந்திரி
மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
தேனி தெற்கு மாவட்டம்.

No comments:

Post a Comment