Sunday 10 March 2024

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 13, 2024 அன்று திருச்சியில் கூடுகிறது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 13, 2024 அன்று திருச்சியில் கூடுகிறது.

நாட்டு நலன், சமுதாய நலன், கட்சி நலன் ஆகியவற்றை முன்வைத்து செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு அக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சியின் நிலைப்பாட்டை எடுப்போம்
 
திமுக கூட்டணியில் நமக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்பது கட்சியை தாண்டி நமது ஆதரவாளர்கள் அனைவரின் விருப்பம்.

இதனையே கண்மணிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றீர்கள். 

ஆனால் இதில் சிலரது பதிவுகள் வரம்பு மீறியுள்ளன. இது நமது பண்பல்ல. இத்தகைய வரம்பு மீறிய பதிவுகளை பதிவிட வேண்டாமென கண்டிப்புடன் தெரிவிக்கிறேன்

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர் 
ம ம க

No comments:

Post a Comment