Saturday 8 February 2020

RC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டது.

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது இந்தக் கணக்கெடுப்புகள் முடிவடைந்து, ஏறத்தாழ 19 லட்சம் மக்கள் குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் முஸ்லிம்கள். மற்ற மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும் எனக் குடியுரிமை சட்டத் திருத்தம் உறுதியளிப்பதால், இந்த ஏழு லட்சம் முஸ்லிம்களும் மத்திய அரசு புதிதாகக் கட்டிவரும் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவர்.
நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து இல்லை என மத்தியஅரசு தற்போது வலியுறுத்தி வந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குள், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.  

No comments:

Post a Comment