Saturday 1 February 2020

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

*குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்று நிராசை அடையக் கூடியவர்களுக்கான ஒரு சிறிய பதிவு...*

அல்லாஹ் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.

மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருப்பதால்...

1. நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுப்படும்.

2.அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பெருகுகிறது.

3. உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆதரவையும் அறிந்து கொள்ள முடிகிறது.

4. இஸ்லாத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்புகிறது.

5. இந்துத்துவா என்பதை பற்றியும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் உலகமே அறிந்து கொள்கிறது.

6. இந்துத்துவா இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி கோரமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து அவர்களின் சுய ரூபத்தை உலக மக்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.

7. முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையை உலகமே புரிந்து கொண்டு நமக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை காணமுடிகிறது.

8. இந்துத்துவா கொள்கைக்கு இந்தியாவில் எவ்வளவு எதிர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.

9. இந்தியா மதசார்பற்ற நாடாக தொடர்வதையே உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்.

10. ஆளும் மத்திய பா.ஜ.க. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த அளவு விரோதமானது என்பதை அவர்களது தற்கால செயல்பாடுகளின் மூலம் அவர்களே நிரூபிக்க இதுவே ஒரு சந்தர்ப்பம் ஆகி விட்டது.

இப்படி எத்தனை எத்தனையோ பலன்கள் ஆளும் வர்க்கத்தின் இந்த பிடிவாத்தின் காரணமாக வெளிப்பட்டு கொண்டுள்ளது...

சிந்தியுங்கள். இனி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment