Saturday 15 February 2020

#வடசென்னை_சட்டம்ஒழுங்கு இணை ஆணையர் #கபில்குமார்சரத்கரை உடனே பணி நீக்கம் செய்க .. #கனிமொழி.

#வடசென்னை_சட்டம்ஒழுங்கு இணை ஆணையர் #கபில்குமார்சரத்கரை உடனே பணி நீக்கம் செய்க ..
#கனிமொழி.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று #CAA_NRCக்கு_எதிராக நடந்த #போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான #வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், #ஸ்டர்லைட்_எதிர்ப்பு_போராட்டத்தின்போது நடந்த #துப்பாக்கிச்_சூட்டில் #13உயிர்கள்_பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் #கபில்குமார்.

#தூத்துக்குடி_துப்பாக்கிச்சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அதிமுக அரசு. #வண்ணாரப்_பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, #கபில்குமார்சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. #கனிமொழி.

No comments:

Post a Comment