Saturday 8 February 2020

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான நியூரெம்பெர்க்கில் நாஜி கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஜெர்மனியின் 'தூய ரத்தத்தைப்' பாதுகாக்க, புதிய சட்டங்களை அமல்படுத்தியது ஹிட்லரின் அரசு. அதன்படி ஜெர்மன் ரத்தத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க, ஜெர்மானியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் எனவும், ஜெர்மானியர்கள் அல்லாத சமூகங்களான யூத, ஜிப்ஸி, ரோமானிய சமூகங்கள் குடியுரிமையற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு, இந்தியாவில் வெள்ளையர்கள் வெளியேறி, இந்திய அரசு உருவான போது, அப்போதைய தலைவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மிகக் கவனமாக உருவாக்கினர். மதம், சாதி, பொருளாதாரம், மொழி, இனம் எனப் பல வழிகளில் பிரிந்து கிடந்த தேசங்களை இந்திய ஒன்றியத்தின் கீழ் கூட்டமைப்பாக மாற்றினர். முடியாட்சி கால வழக்கங்கள் ஒழிக்கப்பட்டு, ஒரு குடிமகனை அரசு எந்த பேதமுமின்றி அணுகும் எனச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியா `மதச்சார்பற்ற' நாடாகப் பிறந்தது. 70 ஆண்டுகளில், நடைமுறைகளில் மாற்றங்கள் இருந்திருக்கலாம்; ஆனால் அரசியலமைப்பின்படி, இந்தியா மிகவும் வலுவான மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது; இந்திய அரசியலமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சமம் என்பதே கொள்கை.

No comments:

Post a Comment